தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 118

மார்ச் 2, 2021

தேவன் மாம்சமாக மாறினார், ஏனென்றால் சாத்தானுடைய ஆவியோ அல்லது எந்தவொரு தொட்டுணரமுடியாத காரியமோ அவருடைய கிரியையின் இலக்கு அல்ல, மாம்சமானவனும் சாத்தானால் சீர்கெட்டுப்போனவனுமாகிய மனுஷனே அவருடைய கிரியையின் இலக்காக இருக்கிறான். மனுஷனுடைய மாம்சம் சீர்கெட்டுப் போயிருப்பதனாலே, தேவன் மாம்சமான மனுஷனைத் தமது கிரியையின் இலக்காக்கியுள்ளார்; மேலும், மனுஷனே சீர்கேட்டின் இலக்காக இருப்பதனால், தேவன் தமது இரட்சிப்பின் கிரியையின் அனைத்துக் கட்டங்களிலும் மனுஷனைத் தமது கிரியையின் ஒரே இலக்காக்கியுள்ளார். மனுஷன் மரணத்திற்கு ஏதுவானவனாக இருக்கிறான், மாம்சமாகவும் இரத்தமாகவும் இருக்கிறான், தேவன் ஒருவரால் மாத்திரமே மனுஷனை இரட்சிக்க முடியும். ஆகையால், தேவன் தமது கிரியையைச் செய்வதற்கு மனுஷனைப் போன்ற அதே இயற்பண்புகளைக் கொண்ட ஒரு மாம்சமாக மாற வேண்டும், இதன்மூலம் அவருடைய கிரியை சிறந்த பலன்களை அடையக்கூடும். மனுஷன் மாம்சமுள்ளவனாகவும், பாவத்தை மேற்கொள்ளவோ அல்லது மாம்சத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளவோ இயலாதவனாக இருப்பதனால், தேவன் தமது கிரியையைச் செய்ய மாம்சமாக மாறியாக வேண்டும். மாம்சமான தேவனுடைய சாராம்சமும் அடையாளமும் மனுஷனுடைய சாராம்சத்திலும் அடையாளத்திலும் இருந்து பெரிதும் வேறுபட்ட போதிலும், அவருடைய தோற்றம் மனுஷனுடைய தோற்றத்திற்கு ஒப்பாகவே உள்ளது. அவர் ஒரு சாதாரண மனுஷனுடைய தோற்றமுள்ளவராக இருக்கின்றார், ஒரு சாதாரண மனுஷனுடைய வாழ்க்கையை வாழ்கின்றார், அவரைக் காண்கிறவர்கள் ஒரு சாதாரண மனுஷனுக்கும் அவருக்கும் இடையில் எந்த வித்தியாசத்தையும் காண முடியாது. சாதாரண மனிதத்தன்மையில் தமது தெய்வீகக் கிரியையை செய்வதற்கு இந்த இயல்பான தோற்றமும் சாதாரண மனிதத்தன்மையும் அவருக்குப் போதுமானவையாக இருக்கின்றன. அவருடைய மாம்சமானது சாதாரண மனிதத்தன்மையில் அவருடைய கிரியையைச் செய்ய அவரை அனுமதிக்கின்றது. மேலும் மனுஷர் நடுவே தமது கிரியையைச் செய்யவும் அவருக்கு உதவுகின்றது. மேலும் அவருடைய சாதாரண மனிதத்தன்மையானது மனுஷர் நடுவே இரட்சிப்பின் கிரியையைச் செய்யவும் அவருக்கு உதவுகின்றது. அவருடைய சாதாரண மனிதத்தன்மையானது மனுஷர் நடுவே மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளபோதிலும், இதுபோன்ற குழப்பமானது அவருடைய கிரியையின் வழக்கமான பலன்களைப் பாதிக்கவில்லை. சுருக்கமாகக் கூறுவதென்றால், அவருடைய சாதாரண மாம்சத்தின் கிரியையானது மனுஷனுக்கு மிகப் பெரிய அளவில் பயனை அளிக்கிறதாக இருக்கின்றது. பெரும்பாலான ஜனங்கள் அவருடைய சாதாரணமான மனிதத்தன்மையை ஏற்றுக்கொள்ளாதபோதிலும், அவருடைய கிரியையால் இன்னும் முடிவுகளை அடைய முடியும். மேலும் இந்த முடிவுகள் அவருடைய சாதாரண மனிதத்தன்மை மூலமாகவே அடையப்படுகின்றன. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மாம்சத்தில் செய்யப்படும் அவருடைய கிரியையின் மூலம், மனுஷன் தனது சாதாரண மனிதத்தன்மையைப் பற்றி மனுஷர் நடுவே காணப்படும் கருத்துக்களை காட்டிலும் பத்து மடங்கு அல்லது டஜன் கணக்கான மடங்கு அதிகமான காரியங்களைப் பெறுகிறான். இத்தகைய கருத்துக்கள் எல்லாம் இறுதியில் அவருடைய கிரியையால் விழுங்கிப்போடப்படும். அவருடைய கிரியை அடைந்த பலன், அதாவது மனுஷனிடம் அவரைக் குறித்து காணப்படும் அறிவானது அவரைப் பற்றிய மனுஷனுடைய கருத்துக்களைக் காட்டிலும் மிகவும் அதிகமானதாகும். மாம்சத்தில் அவர் செய்யும் கிரியையைக் கற்பனை செய்யவோ அளவிடவோ வழியேதும் கிடையாது, ஏனென்றால் அவருடைய மாம்சம் எந்த மாம்சமான மனுஷனுக்கும் இருப்பது போன்றதல்ல. வெளிப்புறத் தோற்றம் ஒத்ததாக காணப்பட்டாலும், சாராம்சம் ஒப்பானது அல்ல. அவருடைய மாம்சம் தேவனைப் பற்றி மனுஷர் நடுவில் பல கருத்துக்களை உண்டாக்குகின்றது. ஆனாலும் அவருடைய மாம்சமானது மனுஷன் மிகுந்த அறிவை பெறுவதற்கும் உதவக்கூடும். மேலும் ஒத்த வெளிப்புறத் தோற்றத்தைக் கொண்டிருக்கும் எந்தவொரு நபரையும் ஜெயங்கொள்ள இயலும். அவர் வெறுமனே மனுஷராக மட்டுமல்லாமல், ஆனால் மனுஷனுடைய வெளிப்புறத் தோற்றத்துடன் தேவனாகக் காணப்படுவதனால், அவரை யாரும் முழுமையாக அறிந்துகொள்ளவோ அல்லது புரிந்துகொள்ளவோ முடியாது. அதரிசனமான மற்றும் தொட்டுணர முடியாத ஒரு தேவன் எல்லோராலும் நேசிக்கப்படுகிறார், மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார். தேவன் மனுஷனுடைய கண்ணுக்குத் தெரியாத ஒரு ஆவியாக மாத்திரம் இருப்பாரேயானால், தேவனை நம்புவது மனுஷனுக்கு மிகவும் எளிதான காரியமாகும். ஜனங்கள் தங்கள் கற்பனைகளைக் கட்டவிழ்த்து விடலாம், தங்களைத் தாங்களே மகிழ்விக்கவும், சந்தோஷமாக உணர வைக்கவும் தேவனுடைய உருவமாக அவர்கள் விரும்பும் எந்த உருவத்தையும் தேர்ந்தெடுக்கலாம். ஆகையால், ஜனங்கள் தங்கள் சொந்தத் தேவன் மிகவும் விரும்புவதையும், அவர்கள் செய்ய விரும்புவதையும் எவ்விதச் சந்தேகமும் இல்லாமல் செய்யலாம். மேலும் என்னவென்றால், ஜனங்கள் தாங்கள் தேவன் மீது வைத்துள்ள விசுவாசத்தையும் பக்தியையும் காட்டிலும் அதிகமாக யாரிடமும் இல்லை என்றும், மற்றவர்கள் எல்லோரும் புறஜாதி நாய்கள் என்றும், தேவனுக்கு விசுவாசமில்லாமல் இருக்கிறார்கள் என்றும் நம்புகின்றனர். தேவன் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்கள் தேடுவது தெளிவற்றதாகவும், கோட்பாட்டின் அடிப்படையிலும் இருப்பதாகக் கூறலாம். அவர்கள் தேடுவது எல்லாம் சிறிதளவு மாறுபாடு கொண்ட ஒரே மாதிரியான காரியமாகும். அவர்களின் கற்பனைகளில் மாத்திரமே தேவனுடைய உருவங்கள் வேறுபட்டவையாக இருக்கின்றனவே தவிர, அவர்களுடைய சாராம்சம் உண்மையில் ஒன்றுதான்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "சீர்கெட்ட மனுக்குலத்திற்கு மாம்சமான தேவனுடைய இரட்சிப்பு அதிகத் தேவையாயிருக்கிறது" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க