தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 114

மே 4, 2023

தேவன் யுகத்தை வழிநடத்துவதற்கும், புதிய கிரியையைத் தொடங்குவதற்கும் மட்டுமே மாம்சமாகிறார். இந்த விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்வது அவசியம். இது மனுஷனின் செயல்பாட்டிலிருந்து முற்றிலும் வேறுபட்டது, இரண்டையும் ஒருசேரக் குறிப்பிட முடியாது. கிரியை செய்ய மனுஷனைப் பயன்படுத்துவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அவனைப் பண்படுத்தி, பரிபூரணப்படுத்த வேண்டும், மேலும் அதற்குத் தேவைப்படும் மனுஷத்தன்மை குறிப்பாக உயர்ந்ததாக இருக்க வேண்டும். சாதாரண மனுஷத்தன்மையின் உணர்வை மனுஷன் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்லாமல், மற்றவர்களுடனான அவனது நடத்தையை நிர்வகிக்கும் பல கொள்கைகளையும் விதிகளையும் அவன் மேலும் புரிந்து கொள்ள வேண்டும், மேலும், மனுஷனின் ஞானம் மற்றும் நெறிமுறை அறிவு பற்றி மேலும் கற்பதிலும் அவன் ஈடுபட வேண்டும். இதுதான் மனுஷனுக்கு வழங்கப்பட வேண்டும். இருப்பினும், மாம்சமாகிய தேவனுக்கு இது அவ்வாறு இல்லை, ஏனென்றால் அவருடைய கிரியை மனுஷனைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, அது மனுஷனின் கிரியையும் இல்லை; மாறாக, அவர் இருப்பது ஒரு நேரடி வெளிப்பாடு மற்றும் அவர் செய்ய வேண்டிய கிரியையை நேரடியாகச் செயல்படுத்துதல் மட்டுமே ஆகும். (இயற்கையாகவே, அவருடைய கிரியை தற்செயலாகவோ அல்லது சீரற்ற முறையிலோ இல்லாமல், சரியான நேரத்தில் மேற்கொள்ளப்படுகிறது, அவருடைய ஊழியத்தை நிறைவேற்ற வேண்டிய நேரம் வரும்போது இது தொடங்கப்படுகிறது.) அவர் மனுஷனின் ஜீவிதத்திலோ அல்லது மனுஷனின் கிரியையிலோ பங்கேற்பதில்லை அதாவது, அவருடைய மனுஷத்தன்மை இவற்றில் எதையுமே கொண்டிருப்பதில்லை (இருப்பினும் இது அவருடைய கிரியையைப் பாதிக்காது). அவர் ஊழியம் செய்ய வேண்டிய நேரம் வரும்போது மட்டுமே அவர் தம்முடைய ஊழியத்தை நிறைவேற்றுகிறார்; அவருடைய நிலைப்பாடு என்னவாக இருந்தாலும், அவர் செய்ய வேண்டிய கிரியையை அவர் வெறுமனே முன்னெடுத்துச் செல்கிறார். மனுஷன் அவரைப் பற்றி என்ன அறிந்திருந்தாலும், அவரைப் பற்றி மனுஷனின் கருத்து எதுவாக இருந்தாலும், அவருடைய கிரியை முற்றிலும் பாதிக்கப்படாது. உதாரணமாக, இயேசு தம்முடைய கிரியையைச் செய்தபோது, அவர் யார் என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை, ஆனாலும் அவர் வெறுமனே தமது கிரியையில் முன்னேறினார். அவர் செய்ய வேண்டிய கிரியையைச் செய்வதில் இவை எதுவும் அவருக்குத் தடையாக இருக்கவில்லை. ஆகையால், அவர் முதலில் தமது சொந்த அடையாளத்தை ஒப்புக் கொள்ளவில்லை அல்லது அறிவிக்கவில்லை, ஆனாலும் மனுஷன் வெறுமனே அவரைப் பின்பற்றினான். இயற்கையாகவே இது தேவனின் தாழ்மை மட்டுமல்ல, தேவன் மாம்சத்தில் கிரியை செய்த முறையும் இதுதான். அவரால் இவ்வாறாக மட்டுமே கிரியை செய்ய முடியும், ஏனென்றால் மனுஷனுக்கு அவனது வெறும் கண்ணால் அவரை அடையாளம் காண வழியே இல்லை. மனுஷன் அவரைக் கண்டுணர்ந்திருந்தாலும், அவருடைய கிரியையில் அவனால் உதவ முடிந்திருக்காது. மேலும், மனுஷன் தமது மாம்சத்தை அறிந்து கொள்வதற்காக அவர் மாம்சத்தில் வரவில்லை; தமது கிரியையைச் செய்து, ஊழியத்தை நிறைவேற்றவே அவர் மாம்சத்தில் வந்தார். இந்தக் காரணத்திற்காக, அவர் தமது அடையாளத்தை வெளிப்படுத்த எந்த முக்கியத்துவத்தையும் கொடுக்கவில்லை. அவர் செய்ய வேண்டிய அனைத்துக் கிரியைகளையும் அவர் முடித்தவுடன், அவருடைய முழு அடையாளமும் நிலைப்பாடும் இயல்பாகவே மனுஷனுக்குத் தெரிய வந்தது. மாம்சமாகிய தேவன் மௌனமாக இருக்கிறார், எந்த அறிவிப்பும் செய்வதில்லை. அவர் மனுஷனுக்கோ அல்லது மனுஷன் அவரைப் பின்பற்றுவதில் எவ்வாறு ஈடுபடுகிறான் என்பதைக் கவனிக்கவோ கவனம் செலுத்துவதில்லை, ஆனால் அவருடைய ஊழியத்தை நிறைவேற்றுவதிலும், அவர் செய்ய வேண்டிய கிரியையைச் செய்வதிலும் மட்டுமே முன்னேறிச் செல்கிறார். அவருடைய கிரியையின் வழியில் குறுக்கே யாராலும் நிற்க முடியாது. அவர் தமது கிரியையை முடிக்க வேண்டிய நேரம் வரும்போது, அது நிச்சயமாக முடிவுக்கு வரும், அதற்கு எதிராக வேறு எவராலும் பேசிட முடியாது. அவர் தமது கிரியையை முடித்தவுடன் மனுஷனிடமிருந்து புறப்பட்டுச் சென்ற பின்னரே, அவர் செய்யும் கிரியையை மனுஷன் புரிந்துகொள்வான், இருப்பினும் முற்றிலுமாக தெளிவாகப் புரிந்துகொள்வதில்லை. அவர் கிரியையை மேற்கொண்ட நோக்கத்தை மனுஷன் முழுமையாகப் புரிந்துகொள்ள நீண்ட காலம் எடுக்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மாம்சமாகிய தேவனின் யுகத்திற்கான கிரியை இரண்டுப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் மாம்சமாகிய தேவன் அவராகவே செய்யும் கிரியையும், அவராகவே பேசும் வார்த்தைகளும் அடங்கும். அவருடைய மாம்சத்தின் ஊழியம் முழுமையாக நிறைவேறியதும், கிரியையின் இரண்டாவது பகுதி பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படுபவர்களால் செய்யப்பட உள்ளது. இந்த நேரத்தில்தான் மனுஷன் தன் செயல்பாட்டை நிறைவேற்ற வேண்டும், ஏனென்றால் தேவன் ஏற்கெனவே பாதையைத் திறந்துவிட்டார், அந்தப் பாதையில்தான் மனுஷன் நடந்துசெல்ல வேண்டும். அதாவது, மாம்சமாகிய தேவன் கிரியையின் ஒரு பகுதியை நிறைவேற்றுகிறார், பின்னர் பரிசுத்த ஆவியானவரும், பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்படுபவர்களும் இந்தக் கிரியையை தொடர்ந்து செய்வார்கள். ஆகையால், இந்தக் கட்டத்தில் மாம்சமாகிய தேவனால் முதன்மையாகச் செய்யப்பட வேண்டிய கிரியை பற்றி மனுஷன் அறிந்து கொள்ள வேண்டும், மேலும் மாம்சமாகிய தேவனின் முக்கியத்துவம் என்ன என்பதையும் அவர் செய்த கிரியை என்ன என்பதையும் அவன் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். மனுஷனின் கோரிக்கைகளுக்கு ஏற்ப தேவனிடம் கோரிக்கைகளைக் கேட்கக்கூடாது. இங்கேதான் மனுஷனின் பிழை, அவனது கருத்து மற்றும் அதற்கும் மேலாக அவனது கீழ்ப்படியாமை ஆகியவை இருக்கின்றன.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மாம்சமாகியதன் மறைபொருள் (3)" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க