தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 112

மே 4, 2023

யுகத்தை வழிநடத்துவதற்காக மட்டுமே தேவன் பூமியில் கிரியை செய்ய வருகிறார், ஒரு புதிய யுகத்தை ஆரம்பிப்பது, பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவருவது ஆகியவை மட்டுமே அவரது நோக்கமாகும். அவர் பூமியில் ஒரு மனுஷனின் ஜீவிதத்தை ஜீவிக்கவோ, மனுஷ உலக ஜீவிதத்தின் சந்தோஷங்களையும் துயரங்களையும் அனுபவிக்கவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நபரை தமது கையால் பரிபூரணப்படுத்தவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நபர் வளர்வதைத் தனிப்பட்ட முறையில் பார்க்கவோ வரவில்லை. இது அவருடைய கிரியை அல்ல; அவரது கிரியை புதிய யுகத்தைத் தொடங்குவதும் பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதும் மட்டுமே ஆகும். அதாவது, அவர் நேரடியாக ஒரு யுகத்தைத் தொடங்குவார், நேரடியாக மற்றொன்றை முடிவுக்குக் கொண்டுவருவார், மேலும் தமது கிரியையைச் செய்வதன் மூலம் அவர் நேரடியாகச் சாத்தானை தோற்கடிப்பார். ஒவ்வொரு முறையும் அவர் தமது கிரியையை நேரடியாகச் செய்யும்போது, அது அவர் யுத்தக்களத்தில் கால் வைப்பது போலாகும். முதலாவதாக, மாம்சத்தில் இருக்கும்போதே அவர் உலகை ஜெயங்கொண்டு, சாத்தானை விட மேலோங்கி நிற்கிறார்; அவர் எல்லா மகிமையையும் கைப்பற்றி, இரண்டாயிரம் ஆண்டுகாலக் கிரியையின் முழுமை மீது திரைச்சீலையை எழுப்புகிறார், இது பூமியிலுள்ள அனைவருக்கும் நடந்து செல்லச் சரியானப் பாதையை அமைக்கவும், அமைதி மற்றும் மகிழ்ச்சியான ஜீவிதத்தை ஜீவித்திருக்கவும் உதவுகிறது. இருப்பினும், தேவன் பூமியில் மனுஷனுடன் நீண்ட காலம் ஜீவித்திருக்க முடியாது, ஏனென்றால் தேவன் என்பவர் மனுஷன் அல்ல, தேவன். அவரால் ஒரு சாதாரண மனுஷனின் வாழ்நாளில் ஜீவித்திருக்க முடியாது, அதாவது சாதாரணமானதிலிருந்து வந்த ஒன்றுமில்லாத ஒரு நபராக அவரால் பூமியில் இருந்திருக்க முடியாது, ஏனென்றால் ஒரு சாதாரண மனுஷனின் சாதாரண மனுஷத் தன்மையின் குறைந்தபட்சப் பகுதியை மட்டுமே அவர் தமது மனுஷ ஜீவிதத்தில் நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனால் எப்படிப் பூமியில் ஒரு குடும்பத்தைத் தொடங்கி, ஒரு தொழில் செய்து, குழந்தைகளை வளர்க்க முடியும்? இது அவருக்கு அவமானமாக இருக்காதா? அவர் சாதாரண மனுஷத் தன்மையுடன் இருக்கிறார் என்பது ஒரு சாதாரண முறையில் கிரியை செய்வதற்கான நோக்கத்திற்காக மட்டும்தான், ஒரு சாதாரண மனுஷனைப் போல ஒரு குடும்பத்தையும் தொழிலையும் பெறுவதற்காக இல்லை. அவருக்கு ஒரு சாதாரண மனுஷத்தன்மை தான் இருக்கிறது என்பதை நிரூபிக்க அவருடைய இயல்பான உணர்வும், சாதாரணமான மனமும், அவரது மாம்சத்தின் சாதாரண புசிக்கும் மற்றும் உடை உடுத்தும் தன்மையும் போதுமானது; அவர் ஒரு சாதாரண மனுஷத் தன்மையுடன்தான் இருக்கிறார் என்பதை நிரூபிக்க அவருக்கு ஒரு குடும்பமோ அல்லது ஒரு தொழிலோ இருக்க வேண்டிய அவசியமில்லை. இது முற்றிலும் தேவையற்றதாக இருக்கும்! தேவன் பூமிக்கு வருவது தான் மாம்சமாகிய வார்த்தை என்பது; அவர் வெறுமனே மனுஷனை அவருடைய வார்த்தையைப் புரிந்துகொள்ளவும் அவருடைய வார்த்தையைக் காணவும் அனுமதிக்கிறார், அதாவது, மாம்சத்தால் செய்யப்படும் கிரியையைப் பார்க்க மனுஷனை அனுமதிக்கிறார். அவருடைய நோக்கம் ஜனங்கள் அவருடைய மாம்சத்தை ஒரு குறிப்பிட்ட வழியில் நடத்த வேண்டும் என்பதல்ல, ஆனால் மனுஷன் கடைசிவரை கீழ்ப்படிய வேண்டும் என்பதாகவே இருக்கிறது, அதாவது, மனுஷன் அவரது வாயிலிருந்து வெளிவரும் எல்லா வார்த்தைகளுக்கும் கீழ்ப்படிவதும், அவர் செய்யும் எல்லா கிரியைகளுக்கும் கீழ்ப்படிவதும் மட்டுமே அவரது நோக்கமாக இருக்கிறது. அவர் வெறுமனே மாம்சத்தில் கிரியை செய்கிறார்; அவர் வேண்டுமென்றே மனுஷனைத் தமது மாம்சத்தின் மகத்துவத்தையும் பரிசுத்தத்தையும் உயர்த்தும்படிக் கேட்கவில்லை, மாறாக மனுஷனுக்கு அவருடைய கிரியையின் ஞானத்தையும் அவர் பயன்படுத்தும் அனைத்து அதிகாரத்தையும் காட்டுகிறார். ஆகையால், அவர் ஒரு சிறந்த மனுஷத்தன்மையைக் கொண்டிருந்தாலும், அவர் எந்த அறிவிப்புகளையும் வெளியிடுவதில்லை, மேலும் அவர் செய்ய வேண்டிய கிரியையில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். தேவன் மாம்சத்தில் வந்தும், அவருடைய சாதாரண மனுஷத்தன்மையை விளம்பரப்படுத்தவோ அல்லது சாட்சிக் கொடுக்கவோ செய்யாமல், வெறுமனே தாம் செய்ய விரும்பும் கிரியையைச் செய்கிறார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆகையால், மாம்சமாகிய தேவனிடம் நீங்கள் காணக்கூடிய அனைத்தும் அவர் தெய்வீகமாக இருக்கிறார் என்பது மட்டுமேதான்; ஏனென்றால், மனுஷன் பின்பற்றுவதற்காக அவர் மனுஷனாக இருப்பதை அவர் ஒருபோதும் அறிவிக்க மாட்டார். மனுஷன் ஜனங்களை வழிநடத்தும்போதுதான், அவன் தனது மனுஷத்தன்மையைப் பற்றி பேசுகிறான். அவர்களுடைய போற்றுதலையும் நம்பிக்கையையும் பெற்று அதன் மூலம் மற்றவர்களைத் தலைமை தாங்குவதுதான் நல்லது. இதற்கு நேர்மாறாக, தேவன் தமது கிரியையின் மூலம் மட்டுமே மனுஷனை ஜெயங்கொள்கிறார் (அதாவது, மனுஷனால் அடைய முடியாத கிரியையை); அவர் மனுஷனால் போற்றப்படுவாரா அல்லது மனுஷனை வணங்க வைப்பாரா என்பது முக்கியமில்லை. அவர் செய்வதெல்லாம் மனுஷனுக்குள் அவரைப் பற்றிய பயபக்தியான உணர்வைச் செலுத்துவதோ அல்லது அவரைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியாத தன்மையை உணர்த்துவதோ மட்டுமே ஆகும். தேவனுக்கு மனுஷனைக் கவர வேண்டிய அவசியமில்லை; அவருடைய மனநிலையை நீ சாட்சி கூறியவுடன் நீ அவருக்குப் பயபக்தியாயிருக்கவேண்டும் என்பதே அவருக்குத் தேவை. தேவன் செய்யும் கிரியை அவருடையது; அதை அவருக்குப் பதிலாக மனுஷனால் செய்ய முடியாது, அதை மனுஷனால் அடையவும் முடியாது. தேவனால் மட்டுமே அவரது சொந்தக் கிரியையைச் செய்ய முடியும், மேலும் ஒரு புதிய யுகத்தைத் தொடங்கி மனுஷனைப் புதிய ஜீவிதங்களுக்கு அழைத்துச் செல்லவும் முடியும். அவர் செய்யும் கிரியை, ஒரு புதிய ஜீவிதத்தை மனுஷனுக்குள் கொண்டு வந்து, அவனை ஒரு புதிய யுகத்திற்குள் நுழையவைக்க உதவுகிறது. மீதமுள்ள கிரியைகள் மற்றவர்களால் போற்றப்படும் சாதாரண மனுஷத்தன்மை உள்ளவர்களுக்கு ஒப்படைக்கப்படுகின்றன. ஆகையால், கிருபையின் யுகத்தில், மாம்சத்தில் அவர் ஜீவித்திருந்த முப்பத்து மூன்று ஆண்டுகளில் தமது இரண்டாயிரம் ஆண்டுகாலக்கிரியையை வெறும் மூன்றரை ஆண்டுகளில் முடித்தார். தேவன் தமது கிரியையைச் செய்ய பூமிக்கு வரும்போது, இரண்டாயிரம் ஆண்டுகால அல்லது ஒரு முழு யுகத்தின் கிரியையை எப்போதும் ஒரு சில ஆண்டுகளுக்குள் முடிக்கிறார். அவர் காத்திருப்பதில்லை, அவர் தாமதிப்பதும் இல்லை; அவர் வெறுமனே பல ஆண்டுகளின் கிரியையைச் சுருக்குகிறார், இதனால் அந்தக் கிரியை ஒரு சில குறுகிய ஆண்டுகளில் முடிக்கப்படுகிறது. ஏனென்றால், அவர் நேரடியாகச் செய்யும் கிரியை, ஒரு புதிய பாதையைத் திறந்து ஒரு புதிய யுகத்தை வழிநடத்துவதற்காக மட்டுமே செய்யப்படுகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மாம்சமாகியதன் மறைபொருள் (2)" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க