தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 111

பிப்ரவரி 25, 2021

மாம்சமாகிய தேவன், தனிப்பட்ட முறையில் தமது கிரியையைச் செய்யும்போது அவரைப் பின்தொடரும் ஜனங்களில் ஒரு பகுதியினருக்கு மட்டுமே அவர் தம்மை வெளிப்படுத்துகிறார், சகல ஜீவன்களுக்கும் தம்மை வெளிப்படுத்துவதில்லை. அவர் தமது கிரியையின் ஒரு கட்டத்தை நிறைவு செய்வதற்காக மட்டுமே மாம்சமாக மாறினார், மனுஷனிடம் தம்முடைய உருவத்தைக் காண்பிப்பதற்காக மாறவில்லை. இருப்பினும், அவருடைய கிரியையை அவரே செய்ய வேண்டும், ஆகவே அவர் மாம்சத்தில் அவ்வாறு செய்வது அவசியமாகும். இந்தக் கிரியை நிறைவடைந்ததும், அவர் மனுஷ உலகத்திலிருந்துப் புறப்பட்டுச் செல்வார்; வரவிருக்கும் கிரியையின் வழியில் குறுக்கே நின்றிடுவோம் என்ற பயத்தால் அவர் மனுஷரிடையே நீண்ட காலம் தங்கியிருக்க மாட்டார். அவருடைய நீதியுள்ள மனநிலையையும், அவருடைய எல்லா கிரியைகளையும் மட்டுமே பெருந்திரளான ஜனங்களுக்கு அவர் வெளிப்படுத்துகிறார்; அவர் இரண்டு முறை மாம்சமாக வந்தபோது இருந்த உருவங்களை வெளிப்படுத்துவதில்லை, ஏனென்றால் தேவனின் உருவத்தை அவருடைய மனநிலையால் மட்டுமே காட்ட முடியும், அதை அவருடைய மாம்சமாகிய உருவத்தால் மாற்ற முடியாது. அவருடைய மாம்சத்தின் உருவம், அவர் மாம்சத்தில் செயல்படுவதால் அவரைப் பின்பற்றும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஜனங்களுக்கு மட்டுமே காட்டப்படுகிறது. இதனால்தான் இப்போது மேற்கொள்ளப்படும் கிரியைகள் இரகசியமாகச் செய்யப்படுகின்றன. அதேபோல், இயேசு தம்முடைய கிரியையைச் செய்தபோது அவர் யூதர்களுக்கு மட்டுமே தம்மை காட்டிக் கொண்டார், வேறு எந்த நாட்டிற்கும் பகிரங்கமாகத் தம்மைக் காட்டவில்லை. இவ்வாறு, அவர் தமது கிரியையை முடித்தவுடன், இங்கேயே தங்கிவிடாமல் உடனடியாக மனுஷ உலகத்திலிருந்துப் புறப்பட்டுச் சென்றார்; அதன் பின்னர், மனுஷனுக்குத் தம்மைக் காட்டிய இந்த மனுஷ உருவம் அவரல்ல, மாறாக, பரிசுத்த ஆவியானவரே நேரடியாகக் கிரியை செய்தார். மாம்சமாகிய தேவனின் கிரியை முற்றிலும் நிறைவடைந்தவுடன், அவர் மரணத்திற்குரிய உலகத்திலிருந்து புறப்பட்டுச் செல்வார், மேலும் அவர் மாம்சத்தில் இருந்தபோது அவர் செய்ததைப் போன்ற எந்த கிரியையையும் மீண்டும் ஒருபோதும் செய்ய மாட்டார். இதற்குப் பிறகு, கிரியைகள் அனைத்தும் நேரடியாகப் பரிசுத்த ஆவியானவரால் செய்யப்படுகின்றன. இந்தக் காலகட்டத்தில், மனுஷனால் தேவனின் மாம்ச சரீரத்தின் உருவத்தைக் காண முடியாது; அவர் மனுஷனுக்குத் தம்மைக் காட்டிக் கொள்ளாமல், ஆனால் என்றென்றும் மறைந்திருக்கிறார். மாம்சமாகிய தேவனின் கிரியைக்கான நேரம் குறைவாகவே உள்ளது. இது ஒரு குறிப்பிட்ட யுகம், காலம், தேசம் மற்றும் குறிப்பிட்ட நபர்களிடையே மேற்கொள்ளப்படுகிறது. இந்தக் கிரியை தேவன் மாம்சமாகிய காலகட்டத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது, மேலும் இது ஒரு யுகத்தின் பிரதிநிதித்துவமாக இருக்கிறது; இது ஒரு குறிப்பிட்ட யுகத்திற்கான தேவ ஆவியானவரின் கிரியையை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்துகிறது, அவருடைய முழு கிரியையையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. ஆகையால், மாம்சமாகிய தேவனின் உருவம் சகல ஜனங்களுக்கும் காட்டப்படாது. அவர் இரண்டு முறை மாம்சத்தில் வந்தபோது இருந்த அவருடைய உருவத்தை விட, தேவனின் நீதியும், அவருடைய மனநிலையுமே முழுவதுமாகப் பெருந்திரளான ஜனங்களுக்குக் காட்டப்படுகிறது. இது மனுஷனுக்குக் காட்டப்படும் ஒரே ஓர் உருவமோ, இரண்டு உருவங்கள் இணைக்கப்பட்ட ஓர் உருவமோ இல்லை. ஆகையால், மாம்சமாகிய தேவனின் மாம்சம், அவர் செய்ய வேண்டிய கிரியையை முடித்தவுடன் பூமியை விட்டுப் புறப்பட்டுச் செல்ல வேண்டியது அவசியமானதாகும், ஏனென்றால் அவர் செய்ய வேண்டிய கிரியையைச் செய்ய மட்டுமே அவர் வருகிறார், அவருடைய உருவத்தை ஜனங்களுக்கு காட்ட வரவில்லை. மாம்சமாகிய தேவனின் முக்கியத்துவம் தேவன் இரண்டு முறை மாம்சமாகியபோது நிறைவு செய்யப்பட்டிருந்தாலும், அவரை ஒருபோதும் பார்த்திராத எந்தவொரு தேசத்திற்கும் அவர் வெளிப்படையாக தம்மை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார். இயேசு மீண்டும் ஒருபோதும் யூதர்களுக்குத் தம்மை நீதியின் சூரியனாகக் காட்டிக்கொள்ள மாட்டார், ஒலிவ மலை உச்சியில் நின்று சகல ஜனங்களுக்கும் தோன்றமாட்டார்; இயேசு யூதேயாவில் இருந்தபோது இருந்த தோற்றத்தின் உருவப்படத்தைதான் சகல யூதர்களும் கண்டிருக்கிறார்கள். ஏனென்றால், இயேசு மாம்சமாகிய காலத்தில் அவர் செய்த கிரியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முடிந்தது; அவர் ஒரு யூதரின் சாயலில் யூதேயாவுக்குத் திரும்ப மாட்டார், எந்தவொரு புறஜாதி தேசங்களுக்கும் ஒரு யூதரின் உருவத்தில் தன்னைக் காட்டிக் கொள்ள மாட்டார், ஏனென்றால் மாம்சமாகிய இயேசுவின் உருவம் என்பது வெறும் யூதரின் உருவம்தான், யோவான் கண்ட மனுஷகுமாரனின் உருவம் அல்ல. தாம் மீண்டும் வருவேன் என்று இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு வாக்குறுதியளித்திருந்தாலும், புறஜாதி தேசங்களில் உள்ள அனைவருக்கும் வெறுமனே தம்மை யூதரின் சாயலில் காட்டமாட்டார். மாம்சமாகிய தேவனின் கிரியை ஒரு யுகத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கிரியை சில ஆண்டுகளுக்கென வரையறுக்கப்பட்டுள்ளது, மேலும் தேவ ஆவியின் எல்லா கிரியைகளையும் அவரால் முடிக்க முடியாது. யூதராக இயேசுவின் உருவமானது யூதேயாவில் அவர் கிரியை செய்த தேவனின் உருவத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்த முடியும், மேலும் அவரால் சிலுவையில் அறையப்படும் கிரியையை மட்டுமே செய்ய முடியும். இயேசு மாம்சத்தில் இருந்த காலகட்டத்தில், யுகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் அல்லது மனுஷகுலத்தை அழிக்கும் கிரியையை அவரால் செய்ய முடியவில்லை. ஆகையால், அவர் சிலுவையில் அறையப்பட்டு, அவருடைய கிரியையை முடித்தபின், அவர் மிகவும் உயர்ந்த இடத்தின் மீது ஏறி, மனுஷனிடமிருந்து தம்மை எப்போதும் மறைத்துக்கொண்டார். அப்போதிருந்து, புறஜாதி தேசங்களைச் சேர்ந்த உண்மையுள்ள விசுவாசிகள் இயேசுவாகிய கர்த்தரின் வெளிப்பாட்டைக் காண முடியவில்லை, ஆனால் சுவரில் ஒட்டப்பட்டிருந்த உருவப்படத்தை மட்டுமே அவர்கள் கண்டனர். இந்த உருவப்படம் மனுஷனால் வரையப்பட்ட ஒன்றாகும், ஆனால் தேவன் மனுஷனுக்குத் தம்மைக் காட்டிய உருவம் அல்ல. தேவன் இரண்டு முறை மாம்சத்தில் வந்தபோது இருந்த உருவத்திலேயே பெருந்திரளான ஜனங்களுக்குத் தன்னை வெளிப்படையாகக் காட்டவில்லை. மனுஷரிடையே அவர் செய்யும் கிரியை, அவருடைய மனநிலையைப் புரிந்துகொள்ள அவர்களை அனுமதிக்கிறது. இவை அனைத்தும் வெவ்வேறு யுகங்களின் கிரியைகள் மூலம் மனுஷனுக்குக் காட்டப்படுகின்றன; இயேசுவின் வெளிப்பாட்டின் மூலம் அல்லாமல், அவர் அறிந்த மனநிலை மற்றும் அவர் செய்த கிரியையின் மூலமே அது நிறைவேற்றப்படுகிறது. அதாவது, தேவனின் உருவம் மனுஷனுக்குத் தெரியவருவது மாம்சமாவதன் மூலம் அல்ல, மாறாக உருவமும் வடிவமும் கொண்ட மாம்சமாகிய தேவனால் மேற்கொள்ளப்படும் கிரியையின் மூலமாகவே மனுஷனுக்குத் தெரியவருகிறது; அவருடைய கிரியையின் மூலம், அவருடைய உருவம் காட்டப்பட்டு, அவருடைய மனநிலை அறியப்படுகிறது. அவர் மாம்சத்தில் செய்ய விரும்பும் கிரியையின் முக்கியத்துவம் இதுதான்.

தேவனுடைய இரண்டு மாம்சத் தோற்றங்களின் கிரியைகளும் முடிவடைந்தவுடன், அவர் அவிசுவாசிகளின் தேசங்கள் முழுவதும் தம்முடைய நீதியுள்ள மனநிலையைக் காட்டத் தொடங்குவார், மேலும் அவருடைய உருவத்தைக் காணப் பெருந்திரளான ஜனங்களை அவர் அனுமதிப்பார். அவர் தமது மனநிலையை வெளிப்படுத்துவார், மேலும் மனுஷனுடைய வெவ்வேறு வகைகளின் முடிவுகளையும் தெளிவுபடுத்துவார், இதன் மூலம் பழைய யுகத்தை முழுவதுமாக முடிவுக்குக் கொண்டுவருவார். மாம்சத்தில் அவர் செய்த கிரியை பெரியளவிற்கு விரிவடையாததன் காரணம் (இயேசு யூதேயாவில் மட்டுமே கிரியை செய்தது போல, இன்று நான் உங்களிடையே மட்டுமே கிரியை செய்கிறேன்) ஏனெனில், மாம்சத்தில் அவர் செய்த கிரியைக்கு எல்லைகளும் வரம்புகளும் உள்ளன. அவர் வெறுமனே ஒரு சாதாரண மற்றும் இயல்பான மாம்சத்தின் உருவத்தில் ஒரு குறுகிய காலக் கிரியையைச் செய்கிறார்; அவர் இந்த மாம்சத்தை நித்திய கிரியையையோ அல்லது அவிசுவாசிகளுடைய தேசங்களின் ஜனங்களுக்குத் தோன்றும் கிரியையையோ செய்யப் பயன்படுத்துவதில்லை. மாம்சத்தில் செய்த கிரியைகள் வரம்புக்குட்பட்டதாக (யூதேயாவில் மட்டுமே கிரியை செய்வது அல்லது உங்களிடையே மட்டுமே கிரியை செய்வது போல) மட்டுமே இருக்க முடியும், பின்னர், இந்த எல்லைகளுக்குள் மேற்கொள்ளப்படும் கிரியைகளின் மூலம், அதன் எல்லை விரிவாக்கப்படலாம். நிச்சயமாக, விரிவாக்கத்தின் கிரியை அவருடைய ஆவியால் நேரடியாக மேற்கொள்ளப்பட வேண்டும், அது இனியும் அவருடைய மாம்சத்தின் கிரியையாக இருக்காது. மாம்சத்தில் செய்த கிரியைக்கு எல்லைகள் உள்ளன, மேலும் இது பிரபஞ்சத்தின் எல்லா மூலைகளிலும் விரிவடையாது—இதை நிறைவேற்ற முடியாது. மாம்சத்தில் செய்த கிரியையின் மூலம், அவருடைய ஆவியானவர் அதற்குப் பின்வரும் கிரியையைச் செய்கிறார். ஆகையால், மாம்சத்தில் செய்யப்படும் கிரியையானது குறிப்பிட்ட எல்லைகளுக்குள் மேற்கொள்ளப்படும் துவக்கக் கிரியை ஆகும்; இதற்குப் பிறகு, அவருடைய ஆவியானவர் இந்தக் கிரியையைத் தொடர்கிறார், மேலும் அவர் இதனை ஒரு விரிவாக்கப்பட்ட எல்லையில் மேற்கொள்கிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மாம்சமாகியதன் மறைபொருள் (2)" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க