தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 109

மே 16, 2023

கிறிஸ்துவின் கிரியையும் வெளிப்பாடும் அவருடைய சாராம்சத்தைத் தீர்மானிக்கிறது. அவரிடம் ஒப்படைக்கப்பட்டதை அவர் உண்மையான இருதயத்தோடு செய்துமுடிக்க முடிகிறது. அவரால் உண்மையான இருதயத்தோடு பரலோகத்தில் உள்ள தேவனை தொழுதுகொள்ள முடிகிறது, உண்மையான இருதயத்தோடு பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நாட முடிகிறது. இவை அனைத்தும் அவருடைய சாராம்சத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. அப்படியே அவருடைய இயல்பான வெளிப்பாடும் அவருடைய சாராம்சத்தால் தீர்மானிக்கப்படுகிறது; இதை நான் அவருடைய "இயற்கையான வெளிப்பாடு" என்று அழைப்பதற்கான காரணம், அவருடைய வெளிப்பாடு பார்த்துப் பின்பற்றக்கூடிய ஒன்று அல்ல, அல்லது மனிதனுடைய படிப்பறிவின் விளைவோ அல்லது மனிதனால் பல ஆண்டுகளாகக் கடினமாக உழைத்த உழைப்பின் விளைவோ இல்லை. அவர் அதைக் கற்றுக்கொள்ளவுமில்லை அல்லது தம்மை அவ்வாறாக அலங்கரிக்கவுமில்லை; மாறாக, அது அவருக்குள் இயல்பாகவே இருக்கிறது. மனிதன் அவருடைய கிரியையையும், அவரது வெளிப்பாட்டையும், அவரது மனிதத்தன்மையையும், அவரது சாதாரண மனிதத்தன்மையின் முழு வாழ்க்கையையும் மறுக்கக்கூடும், ஆனால் அவர் உண்மையான இருதயத்தோடு பரலோகத்தில் உள்ள தேவனை தொழுதுகொள்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது; பரமபிதாவின் சித்தத்தை நிறைவேற்றவே அவர் வந்துள்ளார் என்பதை யாரும் மறுக்க முடியாது, மேலும் அவர் பிதாவாகிய தேவனைத் தேடும் நேர்மையையும் யாரும் மறுக்க முடியாது. அவருடைய உருவம் புலன்களுக்குப் பிரியமானதாக இல்லை என்றாலும், அவருடைய கலந்துரையாடல் ஒரு அசாதாரணமான காற்றைக் கொண்டிருக்கவில்லை, மற்றும் அவரது வேலை பூமியைத் தகர்ப்பதோ அல்லது மனிதன் கற்பனை செய்வது போல வானத்தை உலுக்குவதோ இல்லை, அவர் உண்மையில் பரமபிதாவிற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து, அவரது மரணம் வரை கீழ்ப்படிந்தவராகி பரமபிதாவின் சித்தத்தை உண்மையான இருதயத்துடன் நிறைவேற்றுகிற கிறிஸ்துவாக இருக்கிறார். ஏனென்றால், அவருடைய சாராம்சம் கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது. இந்த உண்மையை நம்புவது மனிதனுக்கு கடினமாக இருக்கிறது, ஆனால் இது ஒரு உண்மை. கிறிஸ்துவின் ஊழியம் முழுமையாக நிறைவேறியதும், மனிதன் அவருடைய கிரியையின் மூலம் அவருடைய மனநிலையும் அவருடைய பிரசன்னமும் மற்றும் பரலோகத்தில் உள்ள தேவனுடைய மனநிலையையும் பிரசன்னத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதைக் கண்டுகொள்ள முடியும். அந்த நேரத்தில், அவருடைய எல்லா கிரியைகளின் சுருக்கமும், அவர் மெய்யாகவே வார்த்தையானது மாம்சமாக மாறியதுதான் என்பதை உறுதிப்படுத்த முடியும், ஆனால் அது மனிதனுக்குள்ள ஒரு மாம்சமும் இரத்தமும் அல்ல. பூமியில் கிறிஸ்துவினுடைய கிரியையின் ஒவ்வொரு படியிலும் அதன் பிரதிநிதித்துவ முக்கியத்துவம் உள்ளது, ஆனால் ஒவ்வொரு படியின் உண்மையான கிரியையை அனுபவிக்கும் மனிதனுக்கு அவருடைய கிரியையின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. விசேஷமாக, தேவன் தமது இரண்டாவது அவதாரத்தில் மேற்கொண்ட பல கிரியைகளாய் இருக்கிறது. கிறிஸ்துவின் வார்த்தைகளை மட்டுமே கேட்டவர்களில் அல்லது பார்த்தவர்களில் பெரும்பாலோர் அவரைப் பார்த்ததில்லை, அவருடைய கிரியையைப் பற்றி அவர்களுக்கு எந்தக் கருத்தும் இல்லை; கிறிஸ்துவைக் கண்டவர்கள், அவருடைய வார்த்தைகளைக் கேட்டவர்கள், மற்றும் அவருடைய கிரியையை அனுபவித்தவர்களுக்கு, அவருடைய கிரியையை ஏற்றுக்கொள்வது கடினமாக இருக்கிறது. இது கிறிஸ்துவின் தோற்றமும் அவரது இயல்பான மனிதத்தன்மையும் மனிதனின் சுவைக்கு பொருந்தாததினால் தான் அல்லவா? கிறிஸ்து போன பிறகு அவருடைய கிரியையை ஏற்றுக்கொள்பவர்களுக்கு அத்தகையச் சிரமங்கள் இருக்காது, ஏனென்றால் அவர்கள் அவருடைய கிரியையை ஏற்றுக்கொள்கிறார்கள், கிறிஸ்துவினுடைய இயல்பான மனிதத்தன்மையுடன் ஐக்கியப்படுவதில்லை. மனிதன் தேவனைப் பற்றிய தனது கருத்துக்களை கைவிட முடியாதவனாக இருக்கிறான், அதற்குப் பதிலாக அவனை இன்னும் தீவிரமாக ஆராய்கிறான்; மனிதன் அவரது தோற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறான் என்பதும், அவருடைய கிரியை மற்றும் வார்த்தைகளின் அடிப்படையில் அவரது சாராம்சத்தை அடையாளம் காண முடியவில்லை என்பதும் தான் இதற்குக் காரணம். கிறிஸ்துவின் தோற்றத்திற்கு மனிதன் தன் கண்களை மூடிக்கொண்டால் அல்லது கிறிஸ்துவின் மனிதத்தன்மையைப் பற்றி விவாதிப்பதைத் தவிர்த்து, அவரது தெய்வீகத்தன்மையைப் பற்றி மட்டுமே பேசுகிறான் என்றால், அவருடைய கிரியையும் வார்த்தைகளும் எந்த மனிதனுக்கும் கிடைக்கவில்லை என்றால், மனிதனின் கருத்துக்கள் பாதியாகக் குறையும், மேலும் அந்த அளவிற்கு மனிதனின் அனைத்து சிரமங்களும் கூட தீர்க்கப்படும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "பரமபிதாவின் சித்தத்திற்கு கீழ்படிவதே கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க