தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனுஷ அவதரிப்பு | பகுதி 105

ஏப்ரல் 26, 2021

மாம்சத்தில் வந்த தேவன் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார், தேவனுடைய ஆவியால் அணிவிக்கப்பட்ட மாம்சமே கிறிஸ்து. இந்த மாம்சமானது மாம்சத்திலிருந்து வருகின்ற மற்றெந்த மனிதனையும் போல அல்ல. இந்த வித்தியாசம் எதற்காகவென்றால், கிறிஸ்து மாம்சம் மற்றும் இரத்தத்திற்குரியவர் அல்ல; அவர் மாம்சத்திலே வந்த ஆவியின் அவதாரம். அவர் ஒரு சாதாரண மனிதத்தன்மை மற்றும் முழுமையான தெய்வீகத்தன்மை கொண்டவர். அவரது தெய்வீகத்தன்மையானது எந்த மனிதனாலும் ஆட்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அவருடைய தெய்வீகத்தன்மை தேவனுடைய கிரியையைச் செய்து நிறைவேற்றுகிற அதே நேரத்தில் அவருடைய இயல்பான மனிதத்தன்மை அவரது இயல்பான அனைத்துச் செயல்களையும் மாம்சத்தில் நிலைநிறுத்துகிறது. அவருடைய மனிதத்தன்மையாக இருந்தாலும் அல்லது தெய்வீகத்தன்மையாக இருந்தாலும், இரண்டுமே பரமபிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிகின்றன. கிறிஸ்துவின் சாராம்சம் ஆவியானவர் ஆவார், அதாவது தெய்வீகத்தன்மையுள்ளவர் ஆவார். ஆகையால், அவருடைய சாராம்சம் தேவனாகவே இருக்கிறது; இந்தச் சாராம்சம் அவரது சொந்தக் கிரியைக்கு இடையூறு விளைவிக்காது, மேலும் அவரால் தனது சொந்தக் கிரியையை அழிக்கும் எதையும் செய்ய முடியாது, மேலும் அவர் தனது சொந்தச் சித்தத்திற்கு எதிரான எந்த வார்த்தைகளையும் உச்சரிக்கவும் மாட்டார். ஆகையால், மாம்சத்தில் வந்த தேவன் தனது சொந்த நிர்வாகத்தைக் குறுக்கிடும் எந்த செயலையும் ஒருபோதும் செய்ய மாட்டார். இதைத்தான் ஜனங்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் சாராம்சம் மனிதனை இரட்சிப்பதே ஆகும், இது தேவனுடைய சொந்த நிர்வாகத்தின் பொருட்டே செய்யப்படுகிறது. இதேபோல், கிறிஸ்துவின் கிரியை மனிதனை இரட்சிப்பதாகும், மேலும் அது தேவனுடைய சித்தத்திற்காகவே செய்யப்படுகிறது. தேவன் மாம்சமாக வந்ததனால், அவரது கிரியையைச் செய்ய அவருடைய மாம்சம் போதுமானதாக இருக்கிறது என்பதை அவர் தமது மாம்சத்திற்குள் தமது சாராம்சத்தை உணர்ந்துகொள்கிறார். ஆகையால், கிறிஸ்துவின் மனித அவதாரத்தின் போது தேவனுடைய ஆவியின் அனைத்துக் கிரியைகளுக்கும் பதிலாக கிறிஸ்துவின் கிரியை இடம்பெற்றுள்ளது, மேலும் இந்த மனித அவதாரக் காலம் முழுவதுமுள்ள அனைத்துக் கிரியைகளின் பிரதான மையமாக கிறிஸ்துவின் கிரியை இருக்கிறது. இதை வேறு எந்தக் காலத்தின் கிரியையோடும் ஒன்றாகச் சேர்க்க முடியாது. தேவன் மாம்சமாக மாறுவதால், அவர் தம்முடைய மாம்சத்தின் அடையாளத்தில் செயல்படுகிறவராயிருக்கிறார்; அவர் மாம்சத்தில் வருவதால், அவர் மாம்சத்தில் செய்ய வேண்டிய கிரியையை செய்து முடிக்கிறார். அது தேவனுடைய ஆவியாக இருந்தாலும் அல்லது கிறிஸ்துவாக இருந்தாலும், இருவரும் தேவனே, அவர் தாம் செய்ய வேண்டிய கிரியையைச் செய்கிறார், மற்றும் அவர் தாம் செய்ய வேண்டிய ஊழியத்தைச் செய்கிறார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “பரமபிதாவின் சித்தத்திற்கு கீழ்படிவதே கிறிஸ்துவின் சாராம்சமாக இருக்கிறது” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க