Christian Song | தேவனின் கால்தடங்களை எவ்வாறு தேடுவது (Tamil Subtitles)

மார்ச் 25, 2021

தேவனின் கால்தடங்களைத் தேடுவதில்,

“தேவனே சத்தியமும், வழியும், ஜீவனுமாயிருக்கிறார்” என்கிற சொற்களை நீங்கள் உதாசீனம் செய்துவிட்டீர்கள்.

எனவே, பலர், சத்தியத்தைப் பெற்றாலும்,

அவர்கள் தேவனின் கால்தடங்களைக் கண்டுபிடித்துவிட்டதை நம்புவதில்லை,

அதிலும் அவர்கள் தேவனின் தோன்றுதலை ஒப்புக்கொள்வதில்லை.

இது எவ்வளவு பெரிய தவறு!

தேவன் தோன்றுதலை மனிதனின் கருத்துகளுடன் தொடர்புப்படுத்த முடியாது,

அதிலும் தேவன் மனிதனின் கட்டளைப்படி தோன்ற மாட்டார்.

தேவன் தனது கிரியையைச் செய்யும்போது அவருடைய சொந்தத் தேர்வுகளையும்,

அவருடைய சொந்தத் திட்டங்களையும் வகுக்கிறார்;

நாம் தேவனின் கால்தடங்களைத் தேடுகிறோம் என்பதால்,

அவருடைய சித்தம் மற்றும் வார்த்தைகளைத் தேடவேண்டும்.

ஏனென்றால் எங்கெல்லாம் தேவனால் புதிய சொற்கள் பேசப்படுகிறதோ, அங்கு தேவனின் குரல் இருக்கும்,

தேவனின் அடிச்சுவடுகள் எங்கிருந்தாலும், அங்கு தேவனின் கிரியைகள் இருக்கும்.

தேவனின் வெளிப்பாடு எங்கிருந்தாலும், அங்கே தேவன் தோன்றுவார்,

தேவன் எங்கு தோன்றினாலும், அங்கே சத்தியம், வழி மற்றும் ஜீவன் இருக்கும்.

தேவன் அவர் செய்யும் கிரியையை,

மனிதனுடன் விவாதிக்கவோ அல்லது அவனுக்குத் தெரியப்படுத்தவோ வேண்டிய அவசியம் இல்லை.

இது தேவனுடைய இயல்பான பண்பாகும்,

மேலும், இது அனைவராலும் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

நீ தேவனின் தோன்றுதலைக் காணவும் தேவனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றவும் விரும்பினால்,

நீ முதலில் உன் சொந்த கருத்துக்களிலிருந்து வெளியேற வேண்டும்.

தேவன் இதைச் செய்ய வேண்டும் அல்லது அதைச் செய்ய வேண்டும் என்று நீ கேட்கக்கூடாது,

அல்லது உன்னுடைய கருத்துக்களைக் கொண்டு அவரைக் கட்டுப்படுத்தவோ கூடாது.

அதற்கு பதிலாக, நீ தேவனின் கால்தடங்களை எவ்வாறு தேட வேண்டும்,

நீ தேவனின் தோன்றுதலை எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும்,

தேவனின் புதிய கிரியைக்கு நீ எவ்வாறு அடிபணிய வேண்டும் என்று கேட்க வேண்டும்:

மனிதன் சத்தியம் அல்ல, சத்தியத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதால்,

அவன் அவரை நாட வேண்டும், ஏற்றுக்கொள்ள வேண்டும், மற்றும் அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

நாம் தேவனின் கால்தடங்களைத் தேடுகிறோம் என்பதால்,

அவருடைய சித்தம் மற்றும் வார்த்தைகளைத் தேடவேண்டும்.

ஏனென்றால் எங்கெல்லாம் தேவனால் புதிய சொற்கள் பேசப்படுகிறதோ, அங்கு தேவனின் குரல் இருக்கும்,

தேவனின் அடிச்சுவடுகள் எங்கிருந்தாலும், அங்கு தேவனின் கிரியைகள் இருக்கும்.

தேவனின் வெளிப்பாடு எங்கிருந்தாலும், அங்கே தேவன் தோன்றுவார்,

தேவன் எங்கு தோன்றினாலும், அங்கே சத்தியம், வழி மற்றும் ஜீவன் இருக்கும்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க