தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 214

ஜனவரி 29, 2023

தேவன் மனிதனை எப்படிப் பரிபூரணப்படுத்துகிறார்? தேவனின் மனநிலை என்ன? அவருடைய மனநிலையில் என்ன அடங்கியுள்ளது? இந்தக் காரியங்கள் அனைத்தையும் தெளிவுபடுத்த, ஒருவன் அதை தேவனின் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவதாக அழைக்கிறான், ஒருவன் அதை தேவனுக்குச் சாட்சிப் பகர்வதாக அழைக்கிறான், ஒருவன் அதை தேவனை உயர்த்துவதாக அழைக்கிறான். மனிதன், தேவனை அறியும் அஸ்திபாரத்தை அடிப்படையாகக் கொண்டு, அவனது வாழ்க்கை மனநிலையில் இறுதியாக மறுரூபமடைகிறான். மனிதன் எவ்வளவு அதிகமாகக் கையாளப்பட்டுச் சுத்திகரிக்கப்படுவதற்கு ஆளாகிறானோ, அவன் அவ்வளவு அதிகமாய் ஊக்குவிக்கப்படுகிறான். தேவனின் கிரியையின் படிகள் எவ்வளவு அதிகமாக இருக்கின்றனவோ, அவ்வளவு அதிகமாக மனிதன் பரிபூரணமாக்கப்படுகிறான். இன்று, மனிதனின் அனுபவத்தில், அவனது கருத்துக்களை தேவனின் கிரியையின் ஒவ்வொரு நடவடிக்கையும் தாக்குகிறது, மேலும் இவை எல்லாம் மனிதனின் புத்திக்கு அப்பாற்பட்டவை மற்றும் அவனது எதிர்பார்ப்புகளுக்குப் புறம்பானவை. மனிதனுக்குத் தேவையான எல்லாவற்றையும் தேவன் வழங்குகிறார், ஒவ்வொரு காரியத்திலும் இது அவனுடைய கருத்துக்களுடன் முரண்படுகிறது. உன் பலவீன நேரத்தில் தேவன் தம்முடைய வார்த்தைகளை உச்சரிக்கிறார். இவ்வழியில் மட்டுமே அவர் உன்னுடைய ஜீவனை அளிக்க முடியும். உன் கருத்துக்களைத் திரும்பத் தாக்குவதன் மூலம், தேவன் கையாள்வதை நீ ஏற்றுக்கொள்ளும்படி அவர் செய்கிறார். இவ்வழியில் மட்டுமே உன் சீர்கேடுகளிலிருந்து உன்னை விடுவிக்க முடியும். இன்று, மனுவுருவான தேவன் ஒரு விதமாக தெய்வீக நிலையிலேயே கிரியை செய்கிறார், ஆனால் மற்றோர் நிலையில் அவர் சாதாரண மனிதத்தன்மையில் கிரியை செய்கிறார். உன்னால் தேவனின் எந்தக் கிரியையையும் மறுக்க முடியாமல் போகும்போது, தேவன் சாதாரண மனிதத்தன்மையில் என்ன சொன்னாலும் அல்லது செய்தாலும் உன்னால் கீழ்ப்படிய முடிந்து, அவர் எந்த வகையான இயல்பான தன்மையை வெளிப்படுத்தினாலும் உன்னால் கீழ்ப்படிந்து புரிந்து கொள்ள முடிந்து, நீ உண்மையான அனுபவத்தைப் பெறும்போது மட்டும் தான், உன்னால் அவர் தேவன் என்று உறுதியாக நம்ப முடியும், அதன்பின்தான் நீ கருத்துக்களைப் பிறப்பிப்பதை நிறுத்துவாய், அதன்பின்தான் உன்னால் இறுதிவரை அவரைப் பின்பற்ற முடியும். தேவனின் கிரியைக்கு ஞானம் உண்டு, மேலும் மனிதன் அவருக்குச் சாட்சியாக எப்படி நிலையாக நிற்க முடியும் என்பதை அவர் அறிவார். அவர் மனிதனின் முக்கியமான பலவீனம் எங்குள்ளது என்பதை அறிவார், மேலும் அவர் பேசும் வார்த்தைகள் உன் முக்கியமான பலவீனத்தில் உன்னைத் தாக்கும், ஆனால் தம்முடைய மாட்சிமையான மற்றும் ஞானமான வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தி, உன்னை தமக்குச் சாட்சியாக நிலைநிற்கச் செய்கிறார். தேவனின் அற்புதமான கிரியைகள் இத்தகையதாய் இருக்கின்றன. தேவன் செய்யும் கிரியை மனிதனின் புத்திக்கு எட்ட முடியாதது. மாம்சமாயிருக்கும் மனிதன் எவ்வகையான சீர்கேட்டைக் கொண்டிருக்கிறான், எது மனிதனின் சாராம்சத்தை உண்டாக்குகிறது, இவை எல்லாம் தேவனின் நியாயத்தீர்ப்பின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன, இது மனிதனைத் தன் அவமானத்திலிருந்து மறைத்துக் கொள்ள இடமில்லாமல் செய்கிறது.

தேவன் நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கிரியையை, மனிதன் அவரைப் பற்றிய அறிவைப் பெறுவதற்காகவும், அவருடைய சாட்சியின் பொருட்டும் செய்கிறார். மனிதனின் சீர்கேடான மனநிலை குறித்து அவர் நியாயத்தீர்ப்பு செய்யாமல், மனிதனால் எந்தக் குற்றத்தையும் ஏற்றுக்கொள்ளாத அவரது நீதியான மனநிலையை அறிந்துகொள்வதற்கு சாத்தியமில்லை, மேலும் தேவனைப் பற்றிய தனது பழைய அறிவைப் புதிதாக மாற்ற முடியாது. அவருடைய சாட்சியின் பொருட்டு, மற்றும் அவரது நிர்வகித்தலின் பொருட்டு, அவர் தம்மை முழுவதுமாக வெளியரங்கமாக்கி, இதனால் மனிதனை, அவரது பொது காட்சிப்படுத்துதலின் மூலம், தேவனைப் பற்றிய அறிவைப் பெறவும், அவனுடைய மனநிலையில் மறுரூபமடையவும், மற்றும் தேவனுக்கு நற்சாட்சி அளிக்கவும் இயன்றவனாக்குகிறார். மனிதனின் மனநிலை மாற்றம் தேவனின் பல வகைப்பட்ட கிரியையின் மூலம் செய்து முடிக்கப்படுகிறது. இதுபோன்ற மாற்றங்கள் அவனது மனநிலையில் இல்லாமல், மனிதனால் தேவனுக்குச் சாட்சிப் பகரவும், தேவனின் இருதயத்திற்குப் பிரியமானவனாக இருக்கவும் முடியாது. மனிதன் தன்னைச் சாத்தானின் கட்டுகளிலிருந்தும் இருளின் ஆதிக்கத்திலிருந்தும் விடுவித்திருப்பதை மனிதனின் மனநிலையின் மாற்றம் குறிக்கிறது, மேலும் உண்மையிலேயே தேவனின் கிரியையின் சான்றாகவும், மாதிரியாகவும், தேவனின் சாட்சியாகவும், தேவனின் இருதயத்திற்குப் பிரியமானவனாகவும் மாறியிருக்கிறான். இன்று, மனுவுருவான தேவன் பூமியில் தமது கிரியையைச் செய்ய வந்திருக்கிறார், மனிதன் அவரைப் பற்றிய அறிவையும், அவருக்குக் கீழ்ப்படிவதையும், அவருக்குச் சாட்சி பகிர்வதையும், அவருடைய நடைமுறையான மற்றும் இயல்பான கிரியைகளை அறிந்து கொள்ளவும், அவருடைய எல்லா வார்த்தைகளுக்கும் அவர் செய்யும் எல்லா மனிதனின் கருத்துக்களுக்கு உடன்படாத கிரியைகளுக்கும் கீழ்ப்படியவும், மனிதனை இரட்சிக்க அவர் செய்யும் அனைத்துக் கிரியைகளுக்கும் சாட்சி அளிக்கவும், அத்துடன் மனிதனை ஜெயங்கொள்ள அவர் நிறைவேற்றும் எல்லாச் செயல்களும் அவருக்குத் தேவையாயிருக்கிறது. தேவனுக்குச் சாட்சி அளிப்பவர்கள் தேவனைக் குறித்த அறிவைப் பெற்றிருக்க வேண்டும். இவ்வகையான சாட்சிகள் மட்டுமே துல்லியமும், உண்மையுமானவை, இவ்வகையான சாட்சிகளால் மட்டுமே சாத்தானை வெட்கப்படுத்த முடியும். தேவன் தம்முடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சை, கையாள்தல் மற்றும் கிளைநறுக்குதல் மூலமாய் தம்மை தெரிந்துகொண்டவர்களை அவருக்குச் சாட்சிப் பகரப் பயன்படுத்துகிறார். சாத்தானால் சீர்கெட்டவர்களை அவருக்குச் சாட்சி அளிக்க அவர் பயன்படுத்துகிறார், அதேபோல், தங்கள் மனநிலையில் மாறியவர்களையும், அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றவர்களையும் அவர் தம்முடைய சாட்சியைப் பகர பயன்படுத்துகிறார். மனிதன் அவரை வாயால் புகழ்வது அவருக்குத் தேவையில்லை, அவரால் இரட்சிக்கப்படாத சாத்தானின் வகையானோரின் துதியும் சாட்சியும் அவருக்குத் தேவையில்லை. தேவனை அறிந்தவர்கள் மட்டுமே அவருக்குச் சாட்சிப் பகர தகுதியானவர்கள், மற்றும் தங்கள் மனநிலையில் மாற்றம் பெற்றவர்கள் மட்டுமே அவருக்குச் சாட்சிப் பகரத் தகுதியானவர்கள். மனிதன் வேண்டுமென்றே தமது பெயருக்கு அவமானத்தை ஏற்படுத்துவதைத் தேவன் அனுமதிக்க மாட்டார்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனை அறிந்தவர்களால் மட்டுமே தேவனுக்கு சாட்சிப் பகர முடியும்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க