தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 161

மார்ச் 17, 2023

கிருபையின் யுகத்தில், இயேசுவும் பல வார்த்தைகளைப் பேசினார், அதிகக் கிரியைகள் செய்தார். அவர் ஏசாயாவை விட எவ்வாறு வேறுபட்டவர்? அவர் தானியேலை விட எவ்வாறு வேறுபட்டவர்? அவர் ஒரு தீர்க்கதரிசியா? அவர் ஏன் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார்? அவர்களுக்கு இடையிலான வேறுபாடுகள் என்ன? அவர்கள் அனைவரும் வார்த்தைகளைப் பேசிய மனுஷர், அவர்களுடைய வார்த்தைகள் மனுஷனுக்குக் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் தோன்றின. அவர்கள் அனைவரும் வார்த்தைகளைப் பேசினர், கிரியைகள் செய்தனர். பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனங்களைப் பேசினார்கள், அதே விஷயத்தை இயேசுவினாலும் செய்திருக்க முடியும். இது ஏன் அப்படி? இங்கே வேறுபாடானது கிரியையின் தன்மையை அடிப்படையாகக் கொண்டது. இந்த விஷயத்தை அறிய, நீ மாம்சத்தின் தன்மையை கருத்தில் கொள்ளக்கூடாது, அல்லது அவர்களின் சொற்களின் ஆழத்தையோ அல்லது மேலோட்டமான சாரத்தையோ நீ கருத்தில் கொள்ளக்கூடாது. எப்போதும் நீ முதலில் அவர்களின் கிரியைகளையும், அந்தக் கிரியைகள் மனுஷனில் ஏற்படுத்தும் விளைவுகளையுமே கருத்தில் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் தீர்க்கதரிசிகள் பேசிய தீர்க்கதரிசனங்கள் மனுஷனுக்கான ஜீவனை வழங்கவில்லை, மேலும் ஏசாயா, தானியேல் போன்றவர்களால் பெறப்பட்ட உத்வேகங்கள் வெறும் தீர்க்கதரிசனங்களாக மட்டுமே இருந்தன, ஜீவவழியாக இருக்கவில்லை. யேகோவாவின் நேரடி வெளிப்பாடு இல்லாவிட்டால், மனுஷருக்குச் சாத்தியமில்லாத அந்தக் கிரியையை யாராலும் செய்திருக்க முடியாது. இயேசுவும் பல வார்த்தைகளைப் பேசினார், ஆனால் அத்தகைய வார்த்தைகள் மனுஷனால் கடைப்பிடிக்கக் கூடிய ஜீவவழிக்கானப் பாதையை கண்டுபிடிக்க உதவும்படி இருந்தன. அதாவது, முதலாவதாக, அவரால் மனுஷனுக்கான ஜீவனை அவனுக்கு வழங்க முடியும், ஏனென்றால் இயேசு ஜீவனாக இருக்கிறார்; இரண்டாவதாக, அவரால் மனுஷனின் வழிவிலகல்களை மாற்றியமைக்க முடியும்; மூன்றாவதாக, யுகத்தைத் தொடர யேகோவாவின் கிரியைகளைப் பின்பற்றி அவரது கிரியைகள் செயல்படக்கூடும்; நான்காவதாக, அவரால் மனுஷனுக்குள் இருக்கும் தேவைகளையும், மனுஷனிடம் இல்லாததைப் புரிந்துகொள்ளவும் முடியும்; ஐந்தாவதாக, அவரால் ஒரு புதிய யுகத்தில் நுழைந்து பழையதை முடித்துவைக்க முடியும். அதனால்தான் அவர் தேவன் என்றும், கிறிஸ்து என்றும் அழைக்கப்படுகிறார்; அவர் ஏசாயாவிடமிருந்து மட்டுமல்ல, மற்ற எல்லா தீர்க்கதரிசிகளிடமிருந்தும் வேறுபட்டவர். ஏசாயாவை தீர்க்கதரிசிகளின் கிரியைகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். முதலாவதாக, அவனால் மனுஷனுக்கான ஜீவனை வழங்க முடியவில்லை; இரண்டாவதாக, அவனால் ஒரு புதிய யுகத்தைத் தொடங்க முடியவில்லை. அவன் யேகோவாவின் தலைமையில் பணிபுரிந்து கொண்டிருந்தான், ஆனால் ஒரு புதிய யுகத்தை தொடங்கவில்லை. மூன்றாவதாக, அவன் பேசிய வார்த்தைகள் அவனுக்கு அப்பாற்பட்டவையாக இருந்தன. அவன் தேவனுடைய ஆவியிலிருந்து நேரடியாக வெளிப்பாடுகளைப் பெற்றுவந்தான், மற்றவர்கள் அவற்றைக் கேட்டாலும் கூட அவர்களுக்குப் புரியாது. அவனுடைய வார்த்தைகள் தீர்க்கதரிசனங்களை விடவும், யேகோவாவின் இடத்தில் செய்யப்படும் கிரியையின் அம்சத்தை விடவும் பெரியது இல்லை என்பதை நிரூபிக்க இந்த சில விஷயங்கள் மட்டுமே போதுமானவை. ஆயினும், அவனால் யேகோவாவை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை. அவன் யேகோவாவின் ஊழியனாக இருந்தான், யேகோவாவின் கிரியையில் ஒரு கருவியாக இருந்தான். அவன் நியாயப்பிரமாணத்தின் யுகத்திற்குள்ளும், யேகோவாவின் கிரியையின் எல்லைக்குள்ளும் மட்டுமே கிரியை செய்து கொண்டிருந்தான்; அவன் நியாயப்பிரமாணத்தின் காலத்தைத் தாண்டி கிரியை செய்யவில்லை. இதற்கு மாறாக, இயேசுவின் கிரியை வேறுபட்டதாக இருந்தது. அவர் யேகோவாவின் கிரியையின் வரம்பை மிஞ்சினார்; சகல மனுஷரையும் மீட்பதற்காக அவர் மனுஷனாக அவதரித்த தேவனாகக் கிரியை செய்தார், மேலும் சிலுவையிலும் அறையப்பட்டார். அதாவது, யேகோவா செய்த கிரியைக்கு வெளியே அவர் புதிய கிரியையைச் செய்தார். இது ஒரு புதிய யுகத்தை அறிமுகப்படுத்தியது. மேலும், மனுஷனால் அடைய முடியாததைப் பற்றி அவரால் பேச முடிந்தது. அவருடைய கிரியை தேவனின் நிர்வாகத்திற்குட்பட்ட கிரியையாக இருந்தது, இது மனுஷகுலம் முழுவதையும் உள்ளடக்கியிருந்தது. அவர் ஒரு சில மனுஷருக்காக மட்டும் கிரியை செய்யவில்லை, அவரது கிரியை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மனுஷரை மட்டும் வழிநடத்துவதாக இருக்கவில்லை. தேவன் ஒரு மனுஷனாக எப்படி அவதரித்தார், அந்த நேரத்தில் ஆவியானவர் எவ்வாறு வெளிப்பாடுகளைக் கொடுத்தார், ஆவியானவர் எவ்வாறு ஒரு மனுஷன் மீது இறங்கி கிரியை செய்யத் தொடங்கினார்—இவை மனுஷரால் பார்க்கவோ தொடவோ முடியாத விஷயங்கள். அவர் மனுஷனாக அவதரித்த தேவன் என்பதற்கு இந்த உண்மைகள் சான்றாக செயல்படுவது முற்றிலும் சாத்தியமற்றது. எனவே, மனுஷனுக்குத் தெளிவாகத் தெரியக்கூடிய தேவனின் வார்த்தைகள் மற்றும் கிரியைகளில் மட்டுமே அவனால் வேறுபாடு காண முடியும். இது மட்டுமே உண்மையானது. ஏனென்றால், ஆவியானவரின் விஷயங்கள் உனக்குப் புலப்படாது, அவை தேவனால் மட்டுமே தெளிவாக அறியப்படுகின்றன, மேலும் மனுஷனாக அவதரித்த தேவனின் மாம்சத்தால் கூட அவற்றை அறிய முடியாது; அவர் செய்த கிரியைகளிலிருந்து மட்டுமே அவர் தேவன்தானா என்பதை உன்னால் சரிபார்க்க முடியும். அவருடைய கிரியையிலிருந்து, முதலில், அவரால் ஒரு புதிய யுகத்தைத் தொடங்க முடிகிறது என்பதைக் காணலாம்; இரண்டாவதாக, அவரால் மனுஷனுக்கான ஜீவனை வழங்கவும், மனுஷன் பின்பற்றுவதற்கான வழியைக் காட்டவும் முடியும். அவர் தான் தேவன் என்பதை நிரூபிக்க இது போதுமானது. குறைந்தபட்சம், அவர் செய்யும் கிரியையால் தேவ ஆவியானவரை முழுமையாக பிரதிநிதித்துவப்படுத்த முடியும், மேலும் அத்தகைய கிரியையிலிருந்து தேவ ஆவி அவருக்குள் இருப்பதைக் காணலாம். மனுஷனாக அவதரித்த தேவனின் கிரியைகள் முக்கியமாக ஒரு புதிய யுகத்தைத் தொடங்குவதற்கும், புதியக் கிரியைகளை வழிநடத்துவதற்கும் மற்றும் ஒரு புதிய சாம்ராஜ்யத்தைத் தொடங்குவதற்குமாக இருந்ததால், அவர் மட்டுமே தேவன் என்பதை உறுதிப்படுத்த இவை மட்டுமே போதுமானவையாக இருக்கின்றன. இது அவரை ஏசாயா, தானியேல் மற்றும் பிற பெரிய தீர்க்கதரிசிகளிடமிருந்து வேறுபடுத்துகிறது. ஏசாயா, தானியேல் மற்றும் மற்றவர்கள் அனைவரும் மிகவும் படித்த மற்றும் பண்பட்ட மனுஷ வர்க்கமாக இருந்தனர்; அவர்கள் யேகோவாவின் தலைமையில் அசாதாரண மனுஷராக இருந்தனர். மனுஷனாக அவதரித்த தேவனின் மாம்சமும் அறிவுமிக்கதாக இருந்தது, அதில் எந்தவிதமான குறையும் இல்லை, ஆனால் அவருடைய மனுஷத்தன்மையானது குறிப்பிடும்படிக்கு சாதாரணமானதுதான். அவர் ஒரு சாதாரண மனுஷன், வெறும் கண்களால் அவரைப் பற்றிய எந்தவொரு சிறப்பு மனுஷத்தன்மையையும் உணரவோ அல்லது மற்றவர்களைப் போலல்லாத அவருடைய மனுஷத்தன்மையில் எதையும் கண்டறியவோ முடியவில்லை. அவர் இயற்கைக்கு அப்பாற்பட்டவராகவோ அல்லது தனித்துவமானவராகவோ இல்லை, மேலும் அவருக்கு உயர் கல்வி, அறிவு அல்லது கோட்பாடு என எதுவும் இருக்கவில்லை. அவர் பேசிய ஜீவனையும், அவர் வழிநடத்திய பாதையையும் கோட்பாட்டின் மூலமாகவோ, அறிவின் மூலமாகவோ, ஜீவித அனுபவத்தின் மூலமாகவோ அல்லது குடும்ப வளர்ப்பின் மூலமாகவோ பெறப்படவில்லை. மாறாக, அவை ஆவியானவரின் நேரடி கிரியைகளாக இருந்தன, இது மாம்சத்தில் அவதரித்தவர் செய்த கிரியை. மனுஷனுக்குத் தேவனைக் குறித்துப் பெரிய கருத்துக்கள் இருப்பதால், குறிப்பாக இந்தக் கருத்துக்கள் பல தெளிவற்ற மற்றும் இயற்கைக்கு அப்பாற்பட்ட கூறுகளால் ஆனவை என்பதால், மனுஷனின் பார்வையில், அறிகுறிகளையும் அதிசயங்களையும் செய்ய முடியாத, மனுஷனுக்குரிய பலவீனத்துடன் கூடிய சாதாரண தேவன், நிச்சயமாக தேவன் இல்லை. இவை மனுஷனின் தவறான கருத்துக்கள் அல்லவா? மனுஷனாக அவதரித்த தேவனின் மாம்சம் ஒரு சாதாரண மனுஷனாக இல்லையென்றால், அவர் எப்படி மாம்சமாக மாறினார் என்று சொல்ல முடியும்? மாம்சத்தில் இருப்பது என்பது ஒரு வழக்கமான, சாதாரண மனுஷனாக இருக்க வேண்டும்; அவர் தலைசிறந்த ஒருவராக இருந்திருந்தால், அவர் மாம்சத்திலிருந்து வந்திருக்க மாட்டார். அவர் மாம்சத்திலிருந்து வந்தவர் என்பதை நிரூபிக்க, சாதாரண மாம்சத்தை மனுஷனாக அவதரித்த தேவன் கொண்டிருக்க வேண்டியிருந்தது. இது வெறுமனே மனுஷ அவதாரத்தின் முக்கியத்துவத்தை நிறைவு செய்வதற்காக இருந்தது. இருப்பினும், தீர்க்கதரிசிகள் மற்றும் மனுஷகுமாரர்களுக்கு இது பொருந்தாது. அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் பயன்படுத்தப்பட்ட ஆசீர்வதிக்கப்பட்ட மனுஷர்; மனுஷனின் பார்வையில், அவர்களின் மனுஷத்தன்மை குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாக இருந்தது, மேலும் அவர்கள் சாதாரண மனுஷத்தன்மையை விஞ்சும் பல செயல்களைச் செய்தனர். இந்த காரணத்திற்காக, மனுஷன் அவர்களை தேவர்களாகக் கருதினான். இப்போது நீங்கள் அனைவரும் இதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் இது கடந்த காலங்களில் உள்ள எல்லா மனுஷராலும் மிக எளிதாகக் குழப்பிக்கொள்ளப்பட்ட பிரச்சனையாக இருக்கிறது. மேலும், மனுஷ அவதாரம் எல்லாவற்றைக் காட்டிலும் மறைபொருள் மிக்கதாக இருந்து, மேலும் தேவன் மனுஷனாக அவதரித்ததை மனுஷன் ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம். நான் சொல்வது உங்கள் செயல்பாட்டை நிறைவேற்றுவதற்கும் மனுஷ அவதாரத்தின் மறைபொருளை நீங்கள் புரிந்துகொள்வதற்கும் உகந்ததாகும். இவை அனைத்தும் தேவனின் நிர்வாகத்துடன், தரிசனங்களுடன் தொடர்புடையவை ஆகும். இதைப் பற்றிய உங்கள் புரிதல் தரிசனங்களைப் பற்றிய அறிவை, அதாவது தேவனின் நிர்வாகக் கிரியை பற்றிய அறிவைப் பெறுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனால், நீங்கள் பல்வேறு வகையான ஜனங்கள் செய்ய வேண்டிய கடமையைப் பற்றியும் அதிகப் புரிதலைப் பெறுவீர்கள். இந்த வார்த்தைகள் உங்களுக்கு வழியை நேரடியாக காட்டவில்லை என்றாலும், அவை உங்கள் பிரவேசத்திற்குப் பெரிதும் உதவுகின்றன, ஏனென்றால் உங்களது தற்போதைய ஜீவிதங்களில் தரிசனங்கள் அதிகம் இருப்பதில்லை, இப்படியிருந்தால் அது உங்கள் பிரவேசத்தைத் தடுக்கும் குறிப்பிடத்தக்க தடையாக மாறிவிடும். இந்தச் சிக்கல்களை உங்களால் புரிந்து கொள்ள முடியாவிட்டால், உங்கள் பிரவேசத்தைத் துரிதப்படுத்த எந்த உந்துதலும் இருக்காது. இதுபோன்ற ஒரு நோக்கம் உங்கள் கடமையை எவ்வாறு சிறப்பாகச் செய்ய உதவும்?

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியத்திற்கும் மனுஷனின் கடமைக்கும் இடையேயான வேறுபாடு" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க