தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 159

மார்ச் 17, 2023

நீங்கள் தேவனுடைய கிரியையைக் குறித்த தரிசனங்களை அறிந்துகொள்ள வேண்டும், மேலும் அவருடைய கிரியை செல்லும் பொதுவான திசையையும் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் நேர்மறையான பிரவேசமாகும். தரிசனங்களைக் குறித்த சத்தியத்தை நீ துல்லியமாக அறிந்துகொண்டவுடன், உனது பிரவேசம் பாதுகாக்கப்படும்; தேவனின் கிரியை எவ்வாறு மாறினாலும், உனது இருதயத்தில் நீ உறுதியாக இருப்பாய், தரிசனங்களைப் பற்றி தெளிவாக இருப்பாய், மேலும் உனது பிரவேசம் மற்றும் உன் நாட்டத்திற்கான ஒரு இலக்கையும் வைத்திருப்பாய். இவ்வாறு, உனக்குள் உள்ள அனைத்து அனுபவங்களும் அறிவும் ஆழமாகி மேலும் விரிவடையும். இதன் சாராம்சத்தை நீ முழுவதுமாகப் புரிந்துகொண்டதும், நீ உன் ஜீவிதத்தில் எந்த இழப்பையும் சந்திக்க மாட்டாய், நீ வழிதவறவும் மாட்டாய். இந்தக் கிரியையின் படிகளை நீ அறிந்து கொள்ளாவிட்டால், ஒவ்வொரு படியிலும் நீ இழப்பை சந்திக்க நேரிடும், மேலும் இழப்பிலிருந்து மீள சில நாட்களுக்கு மேல் ஆகும், அல்லது இரண்டு வாரங்கள் ஆனால் கூட உன்னால் சரியான பாதைக்குத் திரும்ப முடியாது. இது தாமதத்தை ஏற்படுத்தாதா? நேர்மறையாகப் பிரவேசிக்கும் வழி மற்றும் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டிய நடைமுறை ஆகியவற்றில் ஏராளமானவை உள்ளன. தேவனுடைய கிரியைகளைக் குறித்த தரிசனங்களைப் பொறுத்தவரை, நீ பின்வரும் விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்: அவரது ஜெயங்கொள்ளும் கிரியையின் முக்கியத்துவம், பரிபூரணப்படுத்தப்படுவதற்கான எதிர்காலப் பாதை, சோதனைகள் மற்றும் உபத்திரவங்களை அனுபவிப்பதன் மூலம் எதை அடைய வேண்டும், நியாயத்தீர்ப்பு மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் முக்கியத்துவம், பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்குப் பின்னால் உள்ள கொள்கைகள், மற்றும் பரிபூரணப்படுத்துதல் மற்றும் ஜெயங்கொள்ளுதல் ஆகியவற்றிற்குப் பின்னால் உள்ள கொள்கைகள். இவை அனைத்தும் தரிசனங்களைக் குறித்த சத்தியத்தைச் சேர்ந்தவை. மீதமுள்ளவை நியாயப்பிரமாணத்தின் யுகம், கிருபையின் யுகம், மற்றும் ராஜ்யத்தின் யுகம் ஆகிய மூன்று கட்டக் கிரியைகள், அத்துடன் எதிர்கால சாட்சி ஆகியவை ஆகும். இவையும் தரிசனங்களைக் குறித்த சத்தியம்தான், மேலும் இவை மிக அடிப்படையானவையாகவும், மிக முக்கியமானவையாகவும் இருக்கின்றன. தற்போது நீங்கள் பிரவேசித்து, கடைப்பிடிக்க வேண்டியவை நிறைய உள்ளன, அது இப்போது அதிக அடுக்குகள் கொண்டதாகவும் மற்றும் மிக விபரமாகவும் இருக்கிறது. இந்தச் சத்தியங்களைப் பற்றி உனக்கு எந்த அறிவும் இல்லை என்றால், நீ இன்னும் பிரவேசித்தலை அடையவில்லை என்பதை இது நிரூபிக்கிறது. அநேக நேரங்களில், சத்தியத்தைப் பற்றிய ஜனங்களின் அறிவு மிகவும் ஆழமற்றதாக இருக்கிறது; அவர்களால் சில அடிப்படைச் சத்தியங்களைக் கூட கடைப்பிடிக்க முடியவில்லை, மேலும் அற்ப விஷயங்களைக் கூட எவ்வாறு கையாள்வது என்று தெரியவில்லை. ஜனங்கள் சத்தியத்தைக் கடைப்பிடிக்க முடியாததற்குக் காரணம், அவர்களின் மனநிலை கலகத்தனமாக இருப்பதாலும், இன்றைய கிரியையைப் பற்றிய அவர்களின் அறிவு மிகவும் மேலோட்டமானதாகவும், ஒருதலைப்பட்சமாகவும் இருப்பதுதான். எனவே, ஜனங்களைப் பரிபூரணமாக்குவது எளிதான காரியமல்ல. நீ மிகவும் கலகக்காரனாக இருக்கிறாய், மேலும் நீ உன் பழைய தன்மையையே இன்னும் அதிகமாகக் கொண்டிருக்கிறாய்; உன்னால் சத்தியத்திற்கு அருகில் நிற்க முடியாது, மேலும் மிகவும் தெளிவான சத்தியங்களைக் கூட உன்னால் கடைப்பிடிக்க முடிவதில்லை. அத்தகையவர்களை இரட்சிக்க முடியாது, மேலும் அவர்கள் ஜெயங்கொள்ளப்படாதவர்களாக இருப்பார்கள். உனது பிரவேசத்திற்கு விபரங்களோ அல்லது குறிக்கோள்களோ இல்லை என்றால், வளர்ச்சி உன்னிடம் மெதுவாகத்தான் வரும். உன் பிரவேசத்திற்கு சிறிதளவும் யதார்த்தம் இல்லை என்றால், உன் நோக்கம் வீணாகிவிடும். சத்தியத்தின் சாராம்சம் உனக்குத் தெரியாவிட்டால், நீ மாறாமல் இருப்பாய். மனுஷனின் ஜீவிதத்தில் வளர்ச்சியும், அவனது மனநிலையின் மாற்றங்களும் யதார்த்தத்திற்குள் நுழைவதன் மூலமும், மேலும், விரிவான அனுபவங்களுக்குள் நுழைவதன் மூலமும் அடையப்படுகின்றன. உனது பிரவேசத்தின் போது உனக்குப் பல விரிவான அனுபவங்கள் இருந்தால், உன்னிடம் உண்மையான அறிவும் பிரவேசமும் இருந்தால், உன் மனநிலை விரைவாக மாறலாம். தற்போது, உனக்கு நடைமுறையைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை என்றாலும், தேவனின் கிரியையைக் குறித்த தரிசனங்களைப் பற்றி நீ குறைந்தபட்சத் தெளிவுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். இல்லையென்றால், உன்னால் பிரவேசிக்க இயலாது; சத்தியத்தைப் பற்றி அறிந்த பின்னரே நீ பிரவேசிப்பது சாத்தியமாகும். பரிசுத்த ஆவியானவர் உன் அனுபவத்தில் உன்னைத் தெளிவூட்டினால் மட்டுமே நீ சத்தியத்தைப் பற்றிய ஆழமான புரிதலையும், ஆழமாகப் பிரவேசிப்பது பற்றிய புரிதலையும் பெறுவாய். நீங்கள் நிச்சயம் தேவனின் கிரியை பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "மனுஷனாக அவதரித்த தேவனின் ஊழியத்திற்கும் மனுஷனின் கடமைக்கும் இடையேயான வேறுபாடு" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க