தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 156

ஏப்ரல் 30, 2023

தரிசனங்களை உள்ளடக்கியது முக்கியமாக தேவன் தாமே செய்கின்ற கிரியையைக் குறிக்கின்றது, மற்றும் நடைமுறை தொடர்பானது மனுஷனால் செய்யப்பட வேண்டும், மற்றும் தேவனுடன் இதற்கு எவ்விதத்தொடர்பும் இல்லை. தேவனுடைய கிரியை தேவனாலேயே முடிக்கப்படுகின்றது, மற்றும் மனுஷனின் நடைமுறை மனிதனாலேயே அடையப்படுகிறது. தேவனால் செய்யப்பட வேண்டியது மனுஷனால் செய்யப்பட வேண்டிய அவசியமில்லை, மனுஷனால் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது தேவனுடன் தொடர்பில்லாததாக இருக்கிறது. தேவனுடைய கிரியை அவருடைய சொந்த ஊழியமாகும், மற்றும் அது மனுஷனுடன் எந்த தொடர்பும் கொண்டிருப்பதில்லை. இந்தக் கிரியை மனுஷனால் செய்யப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை, மேலும் தேவனால் செய்யப்பட வேண்டிய கிரியையை மனுஷன் செய்ய இயாலாதவனாக இருப்பான். மனுஷன் நடைமுறைப்படுத்தத் தேவையானது எதுவோ, அது மனுஷனால் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட வேண்டும், அது அவனுடைய ஜீவனின் தியாகமாக இருந்தாலும், அல்லது சாட்சியாக நிற்க அவனைச் சாத்தானிடம் ஒப்படைத்தாலும்—இவை அனைத்தும் மனுஷனால் வெற்றிகரமாகச் செய்துமுடிக்கப்பட வேண்டும். தேவன் செய்ய வேண்டியதாக உள்ள கிரியை எல்லாவற்றையும் தேவன் தாமே செய்து முடிக்கின்றார், மனுஷன் செய்ய வேண்டியது எதுவோ அது மனுஷனுக்குக் காட்டப்படுகின்றது, மற்றும் எஞ்சியுள்ள கிரியை மனுஷன் செய்வதற்கு விடப்படுகிறது. தேவன் கூடுதல் கிரியை செய்கிறதில்லை. அவர் தம்முடைய ஊழியத்திற்குள் இருக்கும் கிரியையை மாத்திரம் செய்கின்றார், மற்றும் மனுஷனுக்கு வழியை மாத்திரம் காட்டுகின்றார், மற்றும் வழியைத் திறக்கும் கிரியையை மாத்திரம் செய்கின்றார், வழியை ஆயத்தப்படுத்தும் கிரியையைச் செய்வதில்லை; இது அனைவராலும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவருவது என்பது தேவனுடைய வார்த்தைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதாகும், மற்றும் இவை அனைத்தும் மனுஷனின் கடமையாகும், இது மனுஷனால் செய்யப்பட வேண்டும், மற்றும் இதில் தேவன் செய்வதற்கு ஒன்றும் இருப்பதில்லை. மனுஷனைப் போலவே, தேவனும் சத்தியத்தில் துன்பத்தை அனுபவித்து மற்றும் சுத்திகரிப்படைய வேண்டும் என்று மனிதன் கோரினால், பின்பு மனுஷன் கீழ்ப்படியாதவனாக இருக்கிறான். தேவனுடைய கிரியை அவருடைய ஊழியத்தைச் செய்வதேயாகும், மற்றும் தேவனின் வழிகாட்டுதல்கள் எல்லாவற்றிற்கும், எந்த எதிர்ப்பும் இன்றிக் கீழ்ப்படிவதே மனுஷனின் கடமையாக இருக்கிறது. தேவன் எவற்றில் எவ்விதம் கிரியை செய்கின்றார் அல்லது ஜீவிக்கின்றார் என்பதைப் பொருட்படுத்தாமல், மனுஷன் அடைவதற்கு கடமைப்பட்டிருக்கிறவற்றை அவன் அடைந்தே தீர வேண்டும். தேவன் மாத்திரமே மனுஷனிடம் கோரிக்கைகளை வைக்க முடியும், அதாவது இது தேவன் மாத்திரமே மனுஷனிடம் கோரிக்கைகளை வைக்க தகுதி வாய்ந்தவராய் இருக்கின்றார். மனுஷன் தன்னை முழுமையாகக் கீழ்ப்படுத்தி மற்றும் நடைமுறைப் படுத்துதலைத் தவிர வேறு எந்த விருப்பத்தையும் கொண்டிருக்கக் கூடாது மற்றும் வேறு எதுவும் செய்யக் கூடாது; இது மனிதன் கொண்டிருக்க வேண்டிய உணர்வாக இருக்கிறது. தேவனால் செய்யப்பட வேண்டிய கிரியை முடிந்தவுடன், மனுஷன் அதைப் படிப்படியாக அனுபவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறான். முடிவில், தேவனுடைய நிர்வகித்தல் எல்லாம் நிறைவடைந்து இருக்கும்போது, மனுஷன் செய்யும்படிக்கு தேவன் கேட்டுக்கொண்டவற்றை அவன் இன்னமும் செய்திருக்கவில்லை என்றால், மனுஷன் தண்டிக்கப்பட வேண்டும். தேவனுடைய கோரிக்கைகளை மனுஷன் நிறைவேற்றாதிருக்கிறான் என்றால், இது மனுஷனின் கீழ்ப்படியாமையினால் ஆனதாக இருக்கிறது; இது தேவன் தமது கிரியையில் எல்லா வகையிலும் முழுமையானவராக இருந்திருக்கவில்லை என்று அர்த்தப்படுகிறதில்லை. தேவனுடைய வார்த்தைகளை நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் அனைவரும், தேவனுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாதவர்கள், மற்றும் தங்களது விசுவாசத்தைக் கொடுக்க முடியாதவர்கள் மற்றும் தங்களது கடமையை நிறைவேற்ற முடியாதவர்கள் ஆகிய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். இன்று, நீங்கள் அடைய வேண்டியவை கூடுதலான கோரிக்கைகள் அல்ல, ஆனால் மனுஷனின் கடமையாகவும் மற்றும் அனைத்து மக்களாலும் செய்ய வேண்டியவையாகவும் இருக்கின்றன. நீங்கள் உங்கள் கடமையைச் செய்யவோ அல்லது அதை நன்றாகச் செய்யவோ இயலாதவர்களாய் இருக்கிறீர்கள் என்றால், பின்பு நீங்கள் உங்கள் மீது தொல்லையைக் கொண்டுவரவில்லையா? நீங்கள் மரணத்தோடு ஊடாடுவதில்லையா? எதிர்காலத்தையும் வாய்ப்புகளையும் பெறுவோம் என்று நீங்கள் இன்னமும் எப்படி எதிர்பார்க்க முடியும்? தேவனுடைய கிரியை மனிதகுலத்தின் நிமித்தமாகச் செய்யப்படுகின்றது, மற்றும் மனுஷனின் ஒத்துழைப்பு தேவனின் நிர்வகித்தலின் நிமித்தமாக வழங்கப்படுகிறது. தேவன் தாம் செய்ய வேண்டிய எல்லாவற்றையும் செய்தபின், மனுஷன் தனது நடைமுறையில் விருப்பத்துடன் இருக்க வேண்டும், மற்றும் தேவனுடன் ஒத்துழைக்க வேண்டும். தேவனுடைய கிரியையில், மனுஷன் எந்த முயற்சியையும் இடையூறாக விட்டுவைக்கக் கூடாது, அவன் தனது விசுவாசத்தை அளிக்க வேண்டும், மற்றும் எண்ணற்ற கருத்துக்களில் ஈடுபடாமல், அல்லது செயலற்று அமராமல் மற்றும் மரணத்திற்குக் காத்திராமல் இருக்க வேண்டும். தேவன் தம்மையே மனுஷனுக்காகத் தியாகம் பண்ணக் கூடும், எனவே மனுஷன் தன் விசுவாசத்தை தேவனுக்கு ஏன் வழங்கக் கூடாது? மனுஷனை நோக்கி தேவன் ஒரே இருதயமும் சிந்தையும் கொண்டிருக்கின்றார், எனவே மனுஷன் ஏன் ஒரு சிறிய ஒத்துழைப்பை வழங்கக் கூடாது? தேவன் மனிதகுலத்திற்காகக் கிரியை செய்கின்றார், எனவே தேவனின் நிர்வகித்தலினிமித்தம் மனிதன் தனது கடமையில் சிலவற்றை ஏன் செய்யக் கூடாது? தேவனுடைய கிரியை இவ்வளவு தூரம் வந்திருக்கின்றது, இருப்பினும் இன்னமும் நீங்கள் பார்க்கிறீர்கள், ஆனால் செயல்படுவதில்லை, நீங்கள் கேட்கிறீர்கள், ஆனால் நகருவதில்லை. இப்படிப்பட்ட ஜனங்கள் அழிவின் இலக்குகளாக இருப்பதில்லையா? தேவன் ஏற்கெனவே தமக்குரிய எல்லாவற்றையும் மனிதனுக்காக அர்ப்பணித்துள்ளார், ஆகவே, இன்று, மனிதன் தன் கடமையை ஆர்வத்துடன் செய்ய இயலாதவனாக இருப்பது ஏன்? தேவனைப் பொறுத்த மட்டில், அவருடைய கிரியையே அவருடைய முதல் முன்னுரிமையாக இருக்கின்றது, அவருடைய நிர்வாகக் கிரியை மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. மனுஷனைப் பொறுத்தவரை, தேவனுடைய வார்த்தைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவதும், தேவனுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதும், பூர்த்தி செய்வதும் அவனுடைய முதல் முன்னுரிமையாக இருக்கின்றது. இதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடன் பேசப்பட்ட வார்த்தைகள் உங்கள் சாராம்சத்தின் மையப்பகுதியை எட்டியுள்ளன, மற்றும் தேவனுடைய கிரியையானது முன்னெப்போதும் நுழைந்திராத பிரதேசத்திற்குள் பிரவேசித்துள்ளது. இந்த வழியின் உண்மை அல்லது தவறான தன்மையை ஜனங்களில் பலர் இன்னமும் புரிந்து கொள்ளுகிறதில்லை; அவர்கள் இன்னும் காத்திருக்கிறார்கள் மற்றும் காணுகிறார்கள், மற்றும் தங்கள் கடமையைச் செய்வது இல்லை. அதற்கு பதிலாக, அவர்கள் தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையையும் மற்றும் கிரியையையும் ஆராய்கிறார்கள், அவர் என்ன சாப்பிடுகின்றார், எதை அணிகின்றார் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள், மற்றும் அவர்களின் கருத்துக்கள் இன்னும் அதிகத் துன்பம் தருபவையாகின்றன. அப்படிப்பட்ட ஜனங்கள் ஒன்றுமில்லாததைப் பற்றி அமளி செய்து கொண்டிருப்பதில்லையா? அப்படிப்பட்ட ஜனங்கள் தேவனை நாடுபவர்களாக இருக்கக் கூடுவது எப்படி? மேலும் அவர்களால் எப்படி தேவனுக்கு அடிபணிய நோக்கம் கொண்டிருக்க முடியும்? அவர்கள் தங்கள் விசுவாசத்தையும் கடமையையும் தங்கள் மனதின் பின்புறத்தில் வைத்து, அதற்குப் பதிலாகத் தேவன் எங்கிருக்கின்றார் என்பதின் மீது கவனம் செலுத்துகின்றார்கள். அவர்கள் அட்டூழியக்காரராய் இருக்கிறார்கள்! மனுஷன் தான் புரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் புரிந்து கொண்டு, அவன் நடைமுறைப்படுத்த வேண்டிய அனைத்தையும் நடைமுறைக்குக் கொண்டுவந்திருந்தால், பின்பு தேவன் நிச்சயமாக மனுஷன்மீது அவருடைய ஆசீர்வாதங்களைப் பொழிந்தருளியிருப்பார், ஏனென்றால் மனுஷனின் கடமையையும், மனுஷனால் செய்யப்பட வேண்டியவற்றையும் தான் தேவன் மனுஷனிடம் கேட்கிறார். மனுஷன் புரிந்துகொள்ள வேண்டியவற்றைப் புரிந்துகொள்ள இயலாமலும், நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டியவற்றை நடைமுறைக்குக் கொண்டுவர இயலாமலும் இருந்தால், மனுஷன் தண்டிக்கப்படுவான். தேவனுடன் ஒத்துழைக்காதவர்கள் தேவனிடத்தில் பகைமை உடையவர்களாக இருக்கிறார்கள், புதிய கிரியையை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அதற்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள், இப்படிப்பட்ட ஜனங்கள் வெளிப்படையாக எதிர்க்கும் எதையும் செய்யாவிட்டாலும் கூட, அதற்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள் என்பது தெளிவானதாக இருக்கிறது. தேவனால் கோரும் சத்தியத்தை நடைமுறைக்குக் கொண்டுவராத எல்லோருமே, பரிசுத்த ஆவியானவரின் கிரியையில் சிறப்புக் கவனம் செலுத்தினாலும், வேண்டுமென்றே எதிர்க்கிறவர்களாக மற்றும் தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாதவர்களாக இருக்கிறார்கள். தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாதவர்கள் மற்றும் தேவனுக்கு அடிபணியாதவர்கள் கலகக்காரர்களாக இருக்கிறார்கள், அவர்கள் தேவனுக்கு எதிரானவர்களாக இருக்கிறார்கள். தங்கள் கடமையைச் செய்யாதவர்கள் தேவனுடன் ஒத்துழைக்காதவர்களாக இருக்கிறார்கள், தேவனுடன் ஒத்துழைக்காதவர்கள் பரிசுத்த ஆவியின் கிரியையை ஏற்றுக்கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க