தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 155

ஏப்ரல் 30, 2023

நிர்வாகக் கிரியையானது மனிதகுலத்தின் நிமித்தமாக மட்டுமே வந்தது, அதாவது மனிதகுலத்தின் இருப்பின் நிமித்தமாக மட்டுமே அது எழுந்தது. மனிதகுலத்திற்கு முன்னதாகவோ அல்லது ஆதியில் வானங்களும் பூமியும் மற்றும் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டபோதோ நிர்வகித்தல் இருந்ததில்லை. தேவனுடைய சகல கிரியையிலும், மனுஷனுக்கு நன்மை பயக்கும் எந்தவொரு நடைமுறையும் இருந்ததில்லை என்றால், அதாவது, மோசம்போன மனுக்குலத்திற்குப் பொருத்தமான தேவைகளைத் தேவன் ஏற்படுத்தாதிருந்தால் (தேவனால் செய்யப்பட்ட கிரியையில், மனுஷனின் நடைமுறைக்குப் பொருத்தமான பாதை இருந்ததில்லை என்றால்), பின்பு இந்தக் கிரியை தேவனுடைய நிர்வகித்தல் என்று அழைக்கப்பட்டிருக்க முடியாது. தேவனுடைய கிரியை முழுமையும், மோசம் போன மனுஷர்களிடம் அவர்களின் நடைமுறையை எவ்வாறு ஆரம்பிப்பது என்பது பற்றிக் கூறிவதில் மாத்திரம் ஈடுபட்டிருந்தால், மற்றும் தேவன் தமது சொந்தக் கிரியையை மேற்கொள்ளாது இருந்தால், மற்றும் தமது சர்வவல்லமை அல்லது ஞானத்தைக் காட்சிப்படுத்தாதிருந்தால், பின்பு தேவன் மனுஷனிடம் செய்யும்படி கேட்டுக்கொள்ளுபவை எவ்வளவு உயர்ந்தவையாக இருப்பினும், மனுஷன் மத்தியில் தேவன் எவ்வளவு காலம் வாழ்ந்தாலும், மனுஷன் தேவனுடைய மனநிலை பற்றி எதையும் அறியமாட்டான்; விஷயம் இப்படியிருந்தால், பின்பு இவ்வகையான கிரியை தேவனுடைய நிர்வகித்தல் என்று அழைக்கப்படக் குறைவான தகுதியுடையதாகவே இருக்கும். எளிமையாகச் சொன்னால், தேவனுடைய நிர்வாகக் கிரியையானது தேவனால் செய்யப்பட்ட கிரியையாக இருக்கின்றது, மற்றும் எல்லாக் கிரியையும் தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டவர்களினால் தேவனுடைய வழிநடத்துதலின் கீழ் செயல்படுத்தப்படுகின்றது. இப்படிப்பட்ட கிரியையை நிர்வகித்தல் என்று சுருக்கமாகக் கூறலாம். வேறுவார்த்தைகளில் சொல்லுவதென்றால், மனிதர்களிடையே தேவனுடைய கிரியை, அதேபோல் அவரைப் பின்தொடரும் அனைவரும் அவருடன் ஒத்துழைத்தல் ஆகியவை ஒட்டுமொத்தமாக நிர்வகித்தல் என்று அழைக்கப்படுகின்றன. இங்கு, தேவனுடைய கிரியை தரிசனங்கள் என்று அழைக்கப்படுகின்றது, மற்றும் மனிதனின் ஒத்துழைப்பு நடைமுறை என்று அழைக்கப்படுகிறது. தேவனுடைய கிரியை எவ்வளவு உயர்வாக உள்ளதோ (அதாவது, தரிசனங்கள் எவ்வளவு உயர்வாக உள்ளதோ), அவ்வளவுக்குத் தேவனுடைய மனநிலை மனுஷனுக்குத் தெளிவாக்கப்படுகிறது, அது மனுஷனின் கருத்துக்களுடன் எவ்வளவு அதிகமாய் முரண்படுகிறதோ, அவ்வளவுக்கு மனுஷனின் நடைமுறையும் ஒத்துழைப்பும் உயர்வாகிறது. மனுஷன் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுபவை எவ்வளவு உயர்வாகிறதோ, அவ்வளவாய்த் தேவனுடைய கிரியை மனுஷனின் கருத்துக்களில் இருந்து முரண்படுகின்றது, இதன் விளைவாக மனுஷனின் சோதனைகள், மற்றும் அவன் பூர்த்தி செய்யவேண்டிய தரங்களும் உயர்வாகின்றன. இந்தக் கிரியையின் முடிவில், எல்லாத் தரிசனங்களும் முழுமை அடைந்திருக்கும், மற்றும் மனுஷன் நடைமுறைப்படுத்த வேண்டியவை பரிபூரணத்தின் உச்சத்தை அடைந்திருக்கும். இது ஒவ்வொருவரும் அவரவருடைய வகையின்படியே வகைப்படுத்தப்படும் நேரமாகவும் இது இருக்கும், ஏனெனில் மனிதன் தெரிந்துகொள்ளவேண்டியது மனிதனுக்குக் காண்பிக்கப்படும். எனவே, தரிசனங்கள் அவற்றின் உச்சத்தை அடையும்போது, அதற்கேற்ற வகையில் கிரியையானது அதன் முடிவை நெருங்கும், மற்றும் மனுஷனின் நடைமுறையும் அதன் உச்சத்தை எட்டியிருக்கும். மனுஷனின் நடைமுறையானது தேவனுடைய கிரியையை அடிப்படையாகக் கொண்டுள்ளது, மற்றும் மனுஷனின் நடைமுறை மற்றும் ஒத்துழைப்பினால் மட்டுமே தேவனின் நிர்வகித்தல் முழுமையாக வெளிப்படுத்தப்படுகின்றன. மனுஷன் என்பவன் தேவனுடைய கிரியையின் காட்சிப்பொருளாய் இருக்கிறான், மற்றும் தேவனின் அனைத்து நிர்வாகக் கிரியையின் இலக்காக இருக்கிறான், மற்றும் தேவனுடைய அனைத்து நிர்வகித்தலின் பலனாகவும் இருக்கின்றான். மனுஷனின் ஒத்துழைப்பின்றி தேவன் தனியாகக் கிரியை செய்தால், அவருடைய முழுக்கிரியையின் தெளிவான பலனாகச் செயல்பட ஒன்றும் இருக்க முடியாது, பின்னர் தேவனுடைய நிர்வகித்தலுக்குச் சிறிதளவு முக்கியத்துவமும் இருக்காது. தேவனின் கிரியையைத் தவிர, தேவன் தமது கிரியையை வெளிப்படுத்தவும், அதன் சர்வவல்லமையையும் ஞானத்தையும் நிரூபிக்கவும் பொருத்தமான இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மட்டுமே தேவன் தமது நிர்வகித்தலின் நோக்கத்தை அடையமுடியும், மற்றும் சாத்தானை முற்றிலுமாகத் தோற்கடிக்க இந்தக் கிரியை அனைத்தையும் பயன்படுத்தி இலக்கை அடையமுடியும். ஆகையால், மனுஷன் தேவனுடைய நிர்வகித்தலின் இன்றியமையாத ஒரு பகுதியாக இருக்கிறான், மற்றும் மனுஷனால் மட்டுமே தேவனின் நிர்வகித்தலைக் கனிகொடுக்கிறதாக மாற்றவும், அதன் இறுதிநோக்கத்தை அடையவும் முடியும்; மனுஷனைத் தவிர, வேறு எந்த சிருஷ்டியாலும் அத்தகைய கிரியையை மேற்கொள்ள முடியாது. மனுஷன் தேவனுடைய நிர்வாகக் கிரியையினுடைய உண்மையான இலக்காக வேண்டுமென்றால், மோசம்போன மனிதகுலத்தின் கீழ்ப்படியாமை முற்றிலுமாக அகற்றப்பட வேண்டும். இது மனுஷனுக்கு வேறுபட்ட காலங்களுக்குப் பொருத்தமான பயிற்சி அளிக்கப்பட வேண்டியதிருக்கின்றது, மற்றும் தேவன் அதற்கு ஒத்திசைவான கிரியையை மனுஷர் மத்தியில் செயல்படுத்த வேண்டும். இந்த வழியில் மட்டுமே இறுதியில் தேவனுடைய நிர்வாகக் கிரியையினுடைய பலனாக உள்ள ஒரு குழுவினரான ஜனங்கள் ஆதாயப்படுத்தப்பட முடியும். மனுஷர் மத்தியில் தேவனுடைய கிரியையானது, வெறுமனே தேவனுடைய கிரியையின் மூலமாக மட்டுமே தேவன் தமக்குத்தாமே சாட்சி கொடுக்க முடியாது; இதை அடைய, அவருடைய கிரியைக்குப் பொருத்தமான உயிருள்ள மனுஷர்களும் அப்படிப்பட்ட சாட்சியத்திற்குத் தேவைப்படுகின்றனர். தேவன் இந்த மக்கள் மீது முதலில் கிரியை செய்வார், பின்பு இவர்கள் மூலம் அவரது கிரியை வெளிப்படுத்தப்படும், மற்றும் இவ்வாறு அவரது சித்தம் பற்றிய சாட்சியம் சிருஷ்டிகளின் மத்தியில் கொடுக்கப்படும், மற்றும் இதில், தேவன் தம்முடைய கிரியையின் இலக்கை அடைய வேண்டியதிருக்கும். சாத்தானைத் தோற்கடிக்கத் தேவன் தாம் மட்டும் தனியாகக் கிரியை செய்கிறதில்லை, ஏனென்றால் எல்லாச் சிருஷ்டிகளின் மத்தியிலும் அவர் தாமே தமக்கு நேரடியான சாட்சியம் கொடுக்க முடியாது. அவர் அவ்வாறு செய்வதாயிருந்தால், மனுஷனை முற்றிலுமாக இணங்கச் செய்வது சாத்தியமற்றதாகும், எனவே அவனைத் தோற்கடிக்க மனிதன் மீது தேவன் கிரியை செய்யவேண்டும், அப்போது மட்டுமே அவர் எல்லாச் சிருஷ்டிகளின் மத்தியில் சாட்சியத்தைப் பெற முடியும். மனுஷனின் ஒத்துழைப்பு இல்லாமல், தேவன் மாத்திரமே கிரியை செய்திருந்தால் அல்லது மனுஷன் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படாமல் இருந்திருந்தால், மனுஷன் ஒருக்காலும் தேவனின் மனநிலையை அறிந்துகொள்ள இயலாதவனாக இருந்திருப்பான், மற்றும் அவன் தேவனுடைய சித்தத்தை என்றென்றைக்கும் அறியாதவனாக இருந்திருப்பான்; பின்பு தேவனுடைய கிரியையானது தேவனுடைய நிர்வாகக் கிரியை என்று அழைக்கப்பட்டிருக்க முடியாது. தேவனுடைய கிரியையைப் புரிந்துகொள்ளாமல், மனுஷன் தான் மட்டுமே கடும்முயற்சி செய்வதும், மற்றும் தேடுவதும், மற்றும் கடினமாக உழைப்பதுமாக இருந்தான் என்றால், குறும்புகளைச் செய்கிறவனாயிருப்பான். பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாமல், மனுஷன் செய்கிறது என்னவோ, அது சாத்தானுடைய கிரியையாக இருக்கிறது, அவன் கலகக்காரனாகவும், பொல்லாங்கு செய்கிறவனாகவும் இருக்கிறான்; மோசம்போன மனிதகுலத்தினால் செய்யப்படும் எல்லாவற்றிலும் சாத்தான் காட்சிப்படுத்தப்படுகிறான், மற்றும் தேவனுடன் இணக்கமாகும் எதுவும் அங்கு இருப்பதில்லை, மற்றும் மனுஷன் செய்கிற யாவும் சாத்தானின் வெளிக்காட்டுதலாக இருக்கின்றது. பேசப்பட்ட எல்லாவற்றிலும், தரிசனங்களையும் மற்றும் நடைமுறையையும் தவிர எதுவும் இல்லை. தரிசனங்களின் அடிப்படையில், நடைமுறையையும் கீழ்ப்படிதலின் பாதையையும் மனுஷன் கண்டறிகின்றான், இதனால் அவன் தன் கருத்துக்களை ஒதுக்கிவைக்கலாம், மற்றும் கடந்தகாலங்களில் அவன் கொண்டிராத அந்த விஷயங்களை ஆதாயப்படுத்தலாம். மனுஷன் தேவனுடன் ஒத்துழைக்கவேண்டும் என்று தேவன் கேட்கின்றார், அதாவது மனுஷன் தேவனுடைய கோரிக்கைகளுக்கு முழுமையாக அடிபணியவேண்டும் என்று தேவன் கோருகின்றார், மற்றும் தேவன் செய்த கிரியையை மனுஷன் பார்க்கும்படியாகவும், தேவனுடைய சர்வவல்லமையை அனுபவிக்கும்படியாகவும், மற்றும் தேவனுடைய மனநிலையை அறிந்துகொள்ளும் படியாகவும் கேட்டுக்கொள்கிறார். சுருக்கமாகக் கூறுவதென்றால், இவை தேவனுடைய நிர்வகித்தலாக இருக்கின்றது. மனுஷனுடனான தேவனின் ஒன்றிணைவு என்பது நிர்வகித்தலாக இருக்கின்றது, மற்றும் இது மிகப்பெரிய நிர்வகித்தலாக இருக்கின்றது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க