தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 154

ஏப்ரல் 30, 2023

நடைமுறைப்படுத்தும் பலபாதைகளைத் தரிசனங்கள் கொண்டுள்ளன. மனிதனால் ஏற்படுத்தப்பட வேண்டிய நடைமுறைக் கோரிக்கைகளும் தரிசனங்களுக்குள் இருக்கின்றன, அதேபோன்று மனுஷனால் அறிந்திருக்கப்பட வேண்டிய தேவனின் கிரியையும் இதில் இருக்கின்றது. கடந்தகாலத்தில், சிறப்புக் கூட்டங்கள் அல்லது பல்வேறு இடங்களில் நடைபெற்ற மாபெரும் கூட்டங்களின்போது, நடைமுறைப்பாதையினுடைய ஓர் அம்சம் மட்டுமே பேசப்பட்டது. இப்படிப்பட்ட நடைமுறை கிருபையின் காலத்தின் போது நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது, மற்றும் அது தேவனுடைய அறிவுடன் அரிதாகவே எந்தத் தொடர்பையும் கொண்டிருந்தது, ஏனெனில் கிருபையின் காலத்தினுடைய தரிசனம், இயேசு சிலுவையில் அறையப்பட்டதின் தரிசனமாக மட்டும் இருந்தது, மற்றும் வேறு எந்தப் பெரிய தரிசனங்களும் இருந்ததில்லை. சிலுவையில் அறையப்படுவதன் மூலம் மனிதகுலத்தை அவர் மீட்பதற்கான ஊழியத்தைக்காட்டிலும் அதிகமான எதையும் மனுஷன் அறிந்திருக்க வேண்டியதில்லை, மற்றும், கிருபையின் யுகத்தின்போது மனிதன் தெரிந்து கொள்ளுவதற்கு வேறு எந்தத் தரிசனங்களும் இருந்ததில்லை. இதனால், மனுஷன் தேவனைப் பற்றிக் குறைவான அறிவு மட்டுமே கொண்டிருந்தான், இயேசுவின் அன்பு மற்றும் பரிவிரக்கம் ஆகியவை பற்றிய அறிவைத்தவிர, நடைமுறைப்படுத்துவதற்கு எளிய மற்றும் இரக்கம் உண்டுபண்ணுகிற ஒரு சில விஷயங்கள் மாத்திரமே இருந்தன, அவை இன்றைய விஷயங்களிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்தன. கடந்த காலங்களில், மனுஷனின் சபை கூடுகை எந்தவிதத்தில் நடைபெற்றிருந்தாலும், அவன் தேவனுடைய கிரியையின் நடைமுறை அறிவைப்பற்றிப் பேச இயலாதவனாக இருந்தான், மனுஷன் பிரவேசிப்பதற்கு மிகவும் பொருத்தமான நடைமுறைப் பாதை எதுவாக இருந்தது என்பதை எவரொருவராலும் தெளிவாகக் கூற இயலாததாகவே இருந்தது. மனுஷன் சகிப்புத்தன்மை மற்றும் பொறுமையின் அடித்தளத்திற்குச் சில எளிய விவரங்களை மட்டுமே பேசினான்; அவனது நடைமுறையின் சாராம்சத்தில் எந்த மாற்றமும் இல்லை, ஏனென்றால் அதே யுகத்தில் தேவன் எந்தப் புதிய கிரியையும் செய்யவில்லை, மற்றும் மனுஷன் செய்யும்படிக்கு அவனிடத்தில் அவர் கேட்டுக்கொண்டவை சகிப்புத்தன்மை மற்றும் பொறுமை, அல்லது சிலுவையைச் சுமத்தல் என்பவையாக மாத்திரம் இருந்தன. இத்தகைய நடைமுறைகளைத் தவிர, இயேசு சிலுவையில் அறையப்பட்டதைவிட உயர்ந்த தரிசனங்கள் எதுவும் இல்லை. கடந்த காலத்தில், மற்ற தரிசனங்களைப்பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை, ஏனென்றால் தேவன் ஒருபெரிய அளவிலான கிரியையைச் செய்யவில்லை, மேலும் அவர் மனுஷனிடத்தில் குறைவான கோரிக்கைகளை மட்டுமே வைத்தார். இதனால், மனுஷன் என்ன செய்தாலும், அவன் இந்த எல்லைகளை மீற இயலாதிருந்தான், இவை மனுஷனால் நடைமுறைப் படுத்தப்படக்கூடிய ஒருசில எளிய மற்றும் ஆழமற்ற விஷயங்களின் எல்லைகளாகவே இருந்தன. இன்று நான் மற்ற தரிசனங்களைப்பற்றிப் பேசுகின்றேன், ஏனென்றால் இன்று, அதிகமான கிரியைகள் செய்யப்பட்டுள்ளன, இவை நியாயப்பிரமாணத்தின் யுகம் மற்றும் கிருபையின் யுகம் ஆகியவற்றைக் காட்டிலும் பல மடங்குகள் அதிகமான கிரியையாக இருக்கின்றன. மனுஷன் செய்ய வேண்டியவைகளும் கடந்துபோன யுகங்களைக் காட்டிலும் பல மடங்குகள் அதிகமானவையாக இருக்கின்றன. மனுஷன் இப்படிப்பட்ட கிரியையை முழுமையாக அறிய இயலாமல் இருக்கின்றான் என்றால், அது முக்கியத்துவம் எதையும் கொண்டிராது; மனுஷன் தன் வாழ்நாள் முழுவதுமானப் பிரயாசத்தை இதற்கு அர்ப்பணிக்கவில்லை என்றால், இப்படிப்பட்ட கிரியையை முழுமையாக அறிவதில் மனுஷன் சிரமம் கொண்டிருப்பான் என்று கூறப்பட முடியும். ஜெயங்கொள்ளுதலின் கிரியையில், நடைமுறைப் பாதையைப் பற்றி மட்டுமே பேசுவது என்பது மனுஷனின் ஜெயங்கொள்ளுதலைச் சாத்தியமற்றதாக்கும். மனுஷன் செய்ய வேண்டியவை எதையும் செய்யாமல், தரிசனங்கள் பற்றி வெறுமனே பேசுதலும்கூட மனுஷனின் ஜெயங்கொள்ளுதலைச் சாத்தியமற்றதாக்கும். நடைமுறைப் பாதை தவிர வேறு எதைப்பற்றியும் பேசப்பட்டிருந்ததில்லை என்றால், மனுஷனின் குணத்தில் உள்ள பலவீனத்தைத் தாக்குவது, அல்லது மனுஷனின் கருத்துக்களை அகற்றுவது சாத்தியமற்றதாக இருக்கும், மற்றும் அதுபோன்றே மனுஷனை முற்றிலுமாக ஜெயங்கொள்ளுதலும் சாத்தியமற்றதாக இருக்கும். தரிசனங்கள் மனுஷனுடைய ஜெயங்கொள்ளுதலின் முக்கியமான கருவிகளாக இருக்கின்றன, இருப்பினும் தரிசனங்கள் நீங்கலாக நடைமுறைப் பாதை இருந்ததில்லை என்றால், பின்பு மனிதன் பின்பற்ற வழி எதையும் கொண்டிருக்கமாட்டான், அவன் பிரவேசிப்பதற்கான வழிகள் எதையும் கொண்டிருக்கமாட்டான். இது தொடக்கத்தில் இருந்து முடிவுவரை தேவனுடைய கிரியையின் கொள்கையாக இருந்துள்ளது: நடைமுறைப் படுத்தக்கூடியது தரிசனங்களில் இருக்கின்றது, மற்றும் நடைமுறைக்குக் கூடுதலானவைகளும் தரிசனங்களில் இருக்கின்றன. மனுஷனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களின் அளவு, மற்றும் அவனது மனநிலை ஆகிய இரண்டுமே தரிசனங்களில் மாற்றங்களுடன் இணைகின்றன. மனுஷன் தனது சொந்த முயற்சிகளை மட்டுமே நம்பியிருந்தால், எந்தவொரு பெரிய அளவிலான மாற்றத்தையும் சாதித்தல் அவனுக்குச் சாத்தியமற்றதாயிருக்கும். தரிசனங்கள் தேவனுடைய கிரியை மற்றும் தேவனுடைய நிர்வகித்தல் பற்றிப் பேசுகின்றன. நடைமுறை என்பது மனுஷனுடைய நடைமுறைப் பாதையையும், மனுஷனின் வாழ்வதற்கான வழியையும் குறிக்கிறது; தேவனுடைய நிர்வகித்தல் அனைத்திலும், தரிசனங்களுக்கும் நடைமுறைக்கும் இடையிலான உறவு என்பது தேவனுக்கும் மனுஷனுக்கும் இடையிலான உறவாக இருக்கின்றது. தரிசனங்கள் நீக்கப்பட்டிருந்தால், அல்லது அவை நடைமுறைப் பேச்சு இன்றி பேசப்பட்டிருந்தன என்றால், அல்லது தரிசனங்கள் மட்டுமே இருந்தன மற்றும் மனிதனின் நடைமுறை அழிக்கப்பட்டிருந்தது என்றால், பின்பு இதுபோன்ற விஷயங்களை தேவனுடைய நிர்வகித்தலாகக் கருதமுடியாது, தேவனுடைய கிரியையானது மனுக்குலத்தினிமித்தமாகச் செய்யப்பட்டு இருக்கின்றது என்று கூறவும் முடியாது; இதனால், மனுஷனுடைய கடமை நீக்கப்பட்டிருக்கும் என்பது மாத்திரம் அல்ல, இது தேவனுடைய கிரியையின் நோக்கத்தை மறுதலித்தலாகவும் இருக்கும். தொடக்கத்தில் இருந்து முடிவு வரை, தேவனுடைய கிரியையின் ஈடுபாடு இல்லாமல், மனிதன் வெறுமனே நடைமுறைப்படுத்தும்படி மாத்திரம் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தால், மற்றும் இதற்கும் அதிகமாக, மனிதன் தேவனுடைய கிரியையை அறியும்படிக் கேட்டுக்கொள்ளப்படாதிருந்தால், பின்பு அப்படிப்பட்ட கிரியையானது தேவனுடைய நிர்வகித்தல் என்று அழைக்கப்பட்டிருந்திருக்காது. மனுஷன் தேவனை அறிந்திராமல், மற்றும் தேவனுடைய சித்தத்தைப் பற்றி அறியாமையில் இருந்து, மற்றும் தனது நடைமுறையைத் துல்லியமற்ற மற்றும் புலப்படாத வகையில் கண்மூடித்தனமாக செயல்படுத்தியிருந்தால், பின்பு அவன் ஒருபோதும் முற்றிலும் தகுதியான சிருஷ்டியாக மாட்டான். எனவே, இந்த இரண்டு விஷயங்களுமே இன்றியமையாதவையாக உள்ளன. தேவனுடைய கிரியை மட்டுமே இருந்திருந்தால், அதாவது, தரிசனங்கள் மட்டுமே இருந்திருந்து, மனிதனின் ஒத்துழைப்பும் நடைமுறையும் இல்லாதிருந்தால், இதுபோன்ற விஷயங்கள் தேவனுடைய நிர்வகித்தல் என்று அழைக்க முடியாது. மனிதனின் நடைமுறை மற்றும் பிரவேசம் மட்டுமே இருந்திருந்தால், பின்பு மனிதன் எவ்வளவு உயர்வான பாதையில் பிரவேசித்தாலும், இதுவும்கூட ஏற்றுக்கொள்ள முடியாததாகவே இருக்கும். மனிதனின் பிரவேசம் படிப்படியாகக் கிரியை மற்றும் தரிசனங்கள் ஆகியவற்றின் சுவட்டில் மாற வேண்டும்; அது ஒரு கணப்பொழுதில் திடீரென்று மாறமுடியாது. மனிதனுடைய நடைமுறைக் கொள்கைகள் சுயாதீனமானவைகளாக மற்றும் கட்டுப்பாடற்றவைகளாக இருப்பதில்லை, ஆனால் அவை குறிப்பிட்ட சில எல்லைகளுக்குள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இப்படிப்பட்ட கொள்கைகள் கிரியையின் தரிசனங்களுக்கு இணங்க மாறுகின்றன. எனவே, தேவனுடைய நிர்வகித்தலானது இறுதியில் தேவனுடைய கிரியையாகவும் மனுஷனின் நடைமுறையாகவும் இறங்கி வருகிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனுடைய கிரியையும் மனுஷனின் நடைமுறையும்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க