தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 149

மார்ச் 24, 2023

தேவன் மாம்சமாக மாறும்போது, அவருடைய ஆவி ஒரு மனுஷனின் மீது இறங்குகிறது; வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனின் ஆவி தன்னை ஒரு சரீரத்தால் அலங்கரிக்கிறது. சில வரையறுக்கப்பட்ட படிகளைத் தன்னுடன் கொண்டு வரக்கூடாது என்பதற்காக அவர் பூமியில் தனது கிரியையைச் செய்ய வருகிறார்; அவரது கிரியை முற்றிலும் வரம்பற்றது. பரிசுத்த ஆவியானவர் மாம்சத்தில் மேற்கொள்ளும் கிரியையானது அவரது கிரியையின் முடிவுகளால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது, மேலும் அவர் மாம்சத்தில் எவ்வளவு காலத்திற்குக் கிரியை செய்வார் என்பதை தீர்மானிக்க இதுபோன்றவற்றைப் பயன்படுத்துகிறார். பரிசுத்த ஆவியானவர் தன் கிரியையின் ஒவ்வொரு படியையும் நேரடியாக வெளிப்படுத்துகிறார், அவர் முன்னேறிச் செல்லச் செல்லத் தன் கிரியையை ஆராய்கிறார்; இந்தக் கிரியை மனுஷக் கற்பனையின் வரம்புகளை நீட்டிக்கும் அளவுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல. இது வானங்களையும், பூமியையும் மற்றும் சகலத்தையும் சிருஷ்டிப்பதில் யேகோவாவின் கிரியை போன்றது; அவர் ஒரே நேரத்தில் திட்டமிட்டு பணியாற்றினார். அவர் அந்தகாரத்தில் இருந்து வெளிச்சத்தைப் பிரித்தார், காலையும் மாலையும் உருவானது—இதற்கு ஒரு நாள் பிடித்தது. இரண்டாவது நாளில், அவர் வானத்தைச் சிருஷ்டித்தார், அதுவும் ஒரு நாள் எடுத்தது; பின்னர் அவர் பூமி, சமுத்திரங்கள் மற்றும் அவற்றில் வசிக்கும் அனைத்து ஜீவஜந்துக்களையும் சிருஷ்டித்தார், அதற்கு இன்னொரு நாள் தேவைப்பட்டது. ஆறாம் நாள் வரை இது தொடர்ந்தது, தேவன் மனுஷனைச் சிருஷ்டித்து பூமியில் உள்ள அனைத்தையும் நிர்வகிக்க அனுமதித்தார். பின்னர், ஏழாம் நாளில், அவர் எல்லாவற்றையும் சிருஷ்டித்து முடித்ததும், அவர் ஓய்வெடுத்தார். தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து அதை ஒரு புனித நாளாக நியமித்தார். இந்தப் புனித நாளை அவர் மற்ற அனைத்தையும் சிருஷ்டித்தப் பிறகுதான் நிறுவ முடிவு செய்திருந்தார், அவற்றை உருவாக்குவதற்கு முன்பு அல்ல. இந்தக் கிரியையும் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டது; சகலத்தையும் சிருஷ்டிப்பதற்கு முன்பு, அவர் ஆறு நாட்களில் உலகையும், ஏழாம் நாளில் ஓய்வையும் சிருஷ்டிக்க முடிவு செய்திருக்கவில்லை; அது உண்மைகளுக்கு ஏற்ப இல்லை. அவர் அப்படி ஒரு விஷயத்திற்குக் குரல் கொடுக்கவும் இல்லை, அதைத் திட்டமிடவும் இல்லை. சகலத்தையும் சிருஷ்டிப்பது ஆறாம் நாளில் நிறைவடையும் என்றும் ஏழாம் நாள் ஓய்வெடுப்பார் என்றும் அவர் சொல்லவில்லை; மாறாக, அந்த நேரத்தில் அவருக்கு நல்லதாகத் தோன்றியதைப் பொறுத்து அவர் சிருஷ்டித்தார். அவர் சகலத்தையும் சிருஷ்டித்து முடித்ததும், அது ஏற்கனவே ஆறாவது நாளாக இருந்தது. அவர் சகலத்தையும் சிருஷ்டித்து முடித்தது ஐந்தாவது நாளாக இருந்திருந்தால், அவர் ஆறாவது நாளை ஒரு புனித நாளாக நியமித்திருப்பார். ஆனால், அவர் ஆறாவது நாளில்தான் சகலத்தையும் சிருஷ்டித்து முடித்தார், இதனால் ஏழாம் நாள் ஒரு புனித நாளாக மாறியது, தற்போதுவரை இந்நாளே அப்படியாக இருந்து வருகிறது. ஆதலால், அவரது தற்போதைய பணிகள் இதே முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. உங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உங்கள் தேவைகளுக்கு அவர் பேசவும், வழங்கவும் செய்கிறார். அதாவது, ஆவியானவர் ஜனங்களின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப பேசுகிறார், செயல்படுகிறார்; அவர் சகலத்தையும் கண்காணித்து, எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் கிரியை செய்கிறார். நான் செய்வது, சொல்வது, உங்கள் மீது வைப்பது, உங்களுக்கு வழங்குவது, இவை அனைத்தும் விதிவிலக்கு இல்லாமல், உங்களுக்கு தேவையானது மட்டுமே ஆகும். ஆகவே, எனது கிரியை எதுவும் யதார்த்தத்திலிருந்து பிரிக்கப்பட்டதல்ல; அவை அனைத்தும் உண்மையானது தான், ஏனென்றால் "தேவனின் ஆவி அனைவரையும் கண்காணிக்கிறது," என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இவை அனைத்தும் காலத்திற்கு முன்பே தீர்மானிக்கப்பட்டிருந்தால், இவை மிகவும் துல்லியமாக இருந்திருக்காதா? ஆறாயிரம் ஆண்டுகள் முழுமைக்குமான திட்டங்களை தேவன் வகுத்ததாகவும், பின்னர் மனுஷகுலத்தைக் கலகக்காரர்களாக, எதிர்ப்பவர்களாக, வக்கிரமும் வஞ்சகமும் கொண்டவர்களாக, மாம்சத்தின் சீர்கேட்டினைக் கொண்டவர்களாக, சாத்தானின் மனநிலையைக் கொண்டவர்களாக, கண்களில் ஆசை கொண்டவர்களாக மற்றும் தனிப்பட்ட இன்பங்களைக் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்று அவர் முன்னரே முன்குறிக்கப்பட்டுவிட்டதாக நீங்கள் நினைப்பது போலாகும். இவை எதுவும் தேவனால் முன்னரே முன்குறிக்கப்படவில்லை, மாறாகச் சாத்தானின் சீர்கேட்டின் முடிவாகவே இவை அனைத்தும் நிகழ்ந்திருக்கின்றன. "சாத்தானும் தேவனின் பிடியில் இருந்திருக்கவில்லையா? சாத்தான் இவ்விதத்தில் மனுஷனைச் சீரழிப்பான் என்று தேவன் முன்னரே தீர்மானித்திருந்தார், அதன் பிறகு, தேவன் தம்முடைய கிரியையை மனுஷர்களிடையே செயல்படுத்தினார்," என்று சிலர் பேசுவர். மனுஷகுலத்தைச் சீரழிக்க தேவன் உண்மையிலேயே சாத்தானை முன்குறித்திருப்பாரா? மனுஷகுலத்தை இயல்பாக வாழ அனுமதிக்கவே தேவன் மிகவும் ஆர்வமாக உள்ளார், எனவே அவர் உண்மையில் அவர்களது ஜீவிதங்களில் தலையிடுவாரா? அப்படியானால், சாத்தானைத் தோற்கடித்து மனுஷகுலத்தை இரட்சிப்பது ஒரு பயனுள்ள முயற்சியாக இருந்திருக்காதா? மனுஷகுலத்தின் கலகத்தன்மை எவ்வாறு முன்னரே முன்குறிக்கப்பட்டிருக்க முடியும்? அது சாத்தானின் குறுக்கீட்டால் நிகழ்ந்த ஒன்று, எனவே அதை தேவனால் எவ்வாறு முன்னரே முன்குறிக்கப்பட்டிருக்க முடியும்? நீங்கள் பேசும் தேவனின் பிடியில் உள்ள சாத்தான், நான் பேசும் தேவனின் பிடியில் உள்ள சாத்தானிடமிருந்து மிகவும் வித்தியாசமானவன். "தேவன், சர்வவல்லவர். சாத்தான் அவரது கைகளுக்குள் இருக்கிறான்," என்ற உங்களது கூற்றுகளின்படி பார்த்தால், சாத்தானால் ஒருபோதும் அவருக்குத் துரோகமிழைத்திருக்க முடியாது. தேவன் சர்வவல்லமை கொண்டவர் என்று நீங்கள் சொல்லவில்லையா? உங்கள் அறிவு மிகவும் சிறியதாக இருக்கிறது, மேலும் அது மெய்மையுடன் தொடர்பில் இல்லை; மனுஷனால் ஒருபோதும் தேவனின் எண்ணங்களையும் புரிந்து கொள்ள முடியாது, மனுஷனால் ஒருபோதும் அவருடைய ஞானத்தையும் புரிந்து கொள்ள முடியாது! தேவன் சர்வவல்லமை உள்ளவர்; இது ஒரு பொய்யே அல்ல. பிரதான தூதன் தேவனுக்கு துரோகமிழைத்தான், ஏனென்றால் தேவன் ஆரம்பத்தில் அவனுக்கு அதிகாரத்தின் ஒரு பங்கைக் கொடுத்திருந்தார். நிச்சயமாக, ஏவாள் சர்ப்பத்தின் சோதனையில் வீழ்ந்ததைப் போல இதுவும் ஓர் எதிர்பாராத நிகழ்வுதான். இருப்பினும், சாத்தான் தனது துரோகத்தை எப்படி நிகழ்த்தினாலும், அவனால் இன்னும் தேவனைப் போல சர்வவல்லமை கொள்ள முடியவில்லை. நீங்கள் கூறியது போல், சாத்தான் வெறும் வலிமைமிக்கவன்தான்; அவன் என்ன செய்தாலும், தேவனின் அதிகாரம் எப்போதும் அவனைத் தோற்கடிக்கும். "தேவன் சர்வவல்லமையுள்ளவர், சாத்தான் அவருடைய கைகளுக்குள் இருக்கிறான்," என்ற கூற்றின் பின்னணியில் உள்ள உண்மையான அர்த்தம் இதுதான். எனவே, சாத்தானுடனான போர் ஒரு நேரத்தில் ஓர் அடியெடுத்து வைப்பதாக மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், சாத்தானின் தந்திரங்களுக்குப் பதிலளிக்கும் விதமாகவே தேவன் தனது கிரியையைத் திட்டமிடுகிறார்—அதாவது, அவர் மனுஷகுலத்திற்கு இரட்சிப்பைக் கொண்டுவந்து, காலத்திற்கு ஏற்றவாறு அவருடைய சர்வவல்லமையையும் ஞானத்தையும் வெளிப்படுத்துகிறார். அதேபோல், கடைசி நாட்களுக்கான கிரியை ஆரம்ப காலத்திலேயே, கிருபையின் யுகத்திற்கு முன்பே முன்குறிக்கப்படவில்லை; பின்வருவனவற்றை போல முன்குறித்தல்கள் ஒழுங்கான முறையில் செய்யப்படவில்லை: முதலாவதாக, மனுஷனின் வெளிப்புற மனநிலையை மாற்றுதல்; இரண்டாவதாக, மனுஷனை அவனுக்கான சிட்சைக்கும் சோதனைகளுக்கும் உட்படுத்துதல்; மூன்றாவதாக, மனுஷன் மரண விசாரணைக்கு உட்படுத்தப்படுதல்; நான்காவதாக, மனுஷன் தேவனை நேசிக்கும் நேரத்தை அனுபவிக்க வைத்தல் மற்றும் அவனை ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனாக தீர்மானத்தை வெளிப்படுத்த வைத்தல்; ஐந்தாவது, தேவனின் விருப்பத்தைக் காணவும் அவரை முழுமையாக அறிந்து கொள்ளவும் மனுஷனை அனுமதித்தல், இறுதியாக மனுஷனை பரிபூரணப்படுத்துதல். அவர் கிருபை யுகத்தில் இவை அனைத்தையும் திட்டமிடவில்லை; மாறாக, அவர் தற்போதைய காலத்தில் அவற்றைத் திட்டமிடத் தொடங்கினார். தேவனைப் போலவே சாத்தானும் தன் கிரியையைச் செய்கிறான். சாத்தான் அவனது சீர்கெட்ட மனநிலையை வெளிப்படுத்துகிறான், அதேசமயம் தேவன் நேரடியாகப் பேசி, சில இன்றியமையாத விஷயங்களை வெளிப்படுத்துகிறார். இதுதான் இன்று செய்யப்படும் கிரியை, மேலும், உலகத்தைச் சிருஷ்டித்த பின்னர், நீண்ட காலத்திற்கு முன்பே இதேபோன்று செயல்படும் கிரியைதான் பயன்படுத்தப்பட்டது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "இன்றைய நாள் வரை மனிதகுலம் முழுவதும் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க