தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனுடைய கிரியையை அறிதல் | பகுதி 141

டிசம்பர் 19, 2022

இந்தக் காலங்களில் தேவன் செய்யும் கிரியையை அறிந்து கொள்வது, அநேகமாக, கடைசி நாட்களில் மாம்சமாகிய தேவனுடைய பிரதான ஊழியம் என்ன, மற்றும் அவர் பூமியில் என்ன செய்ய வந்திருக்கிறார் என்பதை அறிந்து கொள்வதுமாகும். தேவன் புறப்பட்டுச் செல்வதற்கு முன்பு ஒரு முன்மாதிரியை அமைப்பதற்காக (கடைசி நாட்களின் போது) பூமிக்கு வந்திருக்கிறார் என்று நான் முன்பு என் வார்த்தைகளில் குறிப்பிட்டுள்ளேன். தேவன் இந்த முன்மாதிரியை எவ்வாறு அமைக்கிறார்? அவர் தாம் பேசுகிற வார்த்தைகள் மூலமும், செய்கிற கிரியையின் மூலமும் மற்றும் தேசம் முழுவதும் பேசுவதன் மூலமுமாக அவ்வாறு செய்கிறார். கடைசி நாட்களில் இது தேவனின் கிரியையாயிருக்கிறது; பூமியை வார்த்தைகளின் உலகமாக மாற்றுவதற்காக மட்டுமே அவர் பேசுகிறார், இதனால் ஒவ்வொரு நபரும் அவருடைய வார்த்தைகளால் வழங்கப்படுகிறான் மற்றும் ஒளியூட்டப்படுகிறான், அதனால் மனிதனின் ஆவி விழித்தெழுகிறது மற்றும் அவன் தரிசனங்களைக் குறித்தத் தெளிவையும் பெறுகிறான். கடைசி நாட்களின் போது, மாம்சமாகிய தேவன் வார்த்தைகளைப் பேசுவதற்காக பூமிக்கு பிரதானமாக வந்திருக்கிறார். இயேசு வந்தபோது, அவர் பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்பினார், மேலும் தாம் சிலுவையில் அறையப்பட்டதன் மூலம் மீட்பின் கிரியையை அவர் நிறைவேற்றினார். அவர் நியாயப்பிரமாண யுகத்திற்கு ஒரு முடிவைக் கொண்டுவந்து பழையவை அனைத்தையும் ஒழித்தார். இயேசுவின் வருகை நியாயப்பிரமாண யுகத்தை முடித்து, கிருபையின் யுகத்தை அறிமுகப்படுத்தியது; கடைசி நாட்களில் மாம்சமாகிய தேவனின் வருகை கிருபையின் யுகத்திற்கு ஒரு முடிவைக் கொண்டு வந்திருக்கிறது. அவர் பிரதானமாக அவருடைய வார்த்தைகளைப் பேசுவதற்கும், மனிதனை பரிபூரணமாக்குவதற்கும், ஒளியூட்டி மனிதனை பிரகாசிப்பிக்கச் செய்வதற்கும், மற்றும் மனிதனின் இருதயத்திற்குள் உள்ள கற்பனை தேவர்களின் இடத்தை அகற்றுவதற்குமே வந்திருக்கிறார். இயேசு வந்தபோது அவர் செய்த கிரியையின் கட்டம் இதுவல்ல. இயேசு வந்தபோது, அவர் பல அற்புதங்களைச் செய்தார், பிணியாளிகளைக் குணப்படுத்தினார், பிசாசுகளைத் துரத்தினார், மற்றும் சிலுவையில் அறையப்படுதல் என்னும் மீட்பின் கிரியையைச் செய்தார். இதன் விளைவாக, ஜனங்களின் கருத்துக்களில் தேவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள். இயேசு வந்தபோது, மனிதனின் இதயத்திலிருந்து கற்பனை தேவர்களுடைய உருவத்தை அகற்றும் கிரியையை அவர் செய்யவில்லை; அவர் வந்தபோது, பிணியாளிகளைக் குணப்படுத்தினார், பிசாசுகளைத் துரத்தினார், பரலோகராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பரப்பினார் மற்றும் அவர் சிலுவையில் அறையப்பட்டார். ஒருபுறம், கடைசி நாட்களின் போது தேவனுடைய மனித அவதாரமானது மனிதனின் கருத்துக்களில் கற்பனை தேவர்கள் வைத்திருந்த இடத்தை நீக்குகிறது, இதன் நிமித்தம் மனிதனின் இதயத்தில் கற்பனை தேவர்களின் உருவம் இனி இருக்காது. அவரது உண்மையான வார்த்தைகள் மற்றும் உண்மையான கிரியை, எல்லா தேசங்களிலுமுள்ள அவரது செயல்பாடு மற்றும் மனிதர்களிடையே அவர் செய்யும் மிகவும் உண்மையான மற்றும் இயல்பான கிரியை ஆகியவற்றின் மூலம், அவர் தேவனுடைய யதார்த்தத்தை மனிதனுக்குத் தெரியப்படுத்துகிறார், மேலும் மனிதனின் இதயத்தில் உள்ள கற்பனை தேவர்களின் இடத்தை நீக்குகிறார். மறுபுறம், மனிதனை முழுமையாக்குவதற்கும், எல்லாவற்றையும் நிறைவேற்றுவதற்கும் தேவன் தம்முடைய மாம்சத்தால் பேசப்படும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். கடைசி நாட்களின் போது தேவன் நிறைவேற்றும் கிரியை இதுதான்.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன:

1. தேவனுடைய கிரியையானது இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல, அதைப் பற்றிய கருத்துக்களை நீங்கள் வளர்த்துக்கொள்ளக்கூடாது.

2. மாம்சமாகிய தேவன் இந்த நேரத்தில் செய்ய வந்திருக்கிற முக்கியமான கிரியையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர் பிணியாளிகளைக் குணப்படுத்தவோ, அல்லது பிசாசுகளைத் துரத்தவோ, அல்லது அற்புதங்களைச் செய்யவோ வரவில்லை, மேலும் மனந்திரும்புதலின் சுவிசேஷத்தை பரப்பவோ, அல்லது மனிதனுக்கு மீட்பை வழங்கவோ அவர் வரவில்லை. ஏனெனில், இயேசு ஏற்கனவே இந்தக் கிரியையைச் செய்துவிட்டார், மேலும் தேவன் அதே கிரியையை மீண்டும் செய்வதில்லை. இன்று, கிருபையின் யுகத்தினை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவும், மற்றும் கிருபையின் யுகத்திலுள்ள அனைத்து நடைமுறைகளையும் துரத்தவுமே தேவன் வந்திருக்கிறார். நடைமுறை தேவன் அவர் உண்மையானவர் என்பதைக் காண்பிக்கவே முக்கியமாக வந்துள்ளார். இயேசு வந்தபோது, அவர் சில வார்த்தைகளைப் பேசினார்; அவர் முதன்மையாக அற்புதங்களைக் காண்பித்தார், அடையாளங்களையும் அதிசயங்களையும் செய்தார், பிணியாளிகளைக் குணப்படுத்தினார், பிசாசுகளைத் துரத்தினார், இல்லையெனில் ஜனங்களை நம்ப வைக்கவும், அவர் உண்மையிலேயே தேவன்தான் என்பதையும், அவர் ஒரு உணர்ச்சிவசப்படாத அமைதியான தேவன் என்பதையும் காணும்படிக்கு தீர்க்கதரிசனங்களை உரைத்தார். இறுதியில், அவர் சிலுவையில் அறையப்படுதல் என்னும் கிரியையையும் செய்து முடித்தார். இன்றைய தேவன் அடையாளங்களையும் அதிசயங்களையும் காண்பிப்பதில்லை, பிணியாளிகளைக் குணமாக்கி பிசாசுகளைத் துரத்துவதில்லை. இயேசு வந்தபோது, அவர் செய்த கிரியை தேவனின் ஒரு பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியது, ஆனால் இந்த நேரத்தில் அவர் செய்யவேண்டியதாயிருக்கிற கிரியையின் கட்டத்தைச் செய்யும்படிக்கு வந்திருக்கிறார், ஏனெனில் தேவன் அதே கிரியையை மீண்டும் செய்வதில்லை; அவர் எப்போதும் புதியவராக இருக்கிற தேவன், ஒருபோதும் பழையவர் அல்ல, ஆகவே இன்று நீ பார்ப்பது யாவும் நடைமுறை தேவனுடைய வார்த்தைகளும் கிரியையுமே ஆகும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனுடைய இன்றைய கிரியையை அறிந்துகொள்ளுதல்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க