தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 137

ஜூன் 8, 2022

தேவனை உன் தனித்துவமான எஜமானராக ஏற்றுக் கொள்வது இரட்சிப்பை அடைவதற்கான முதல் படியாகும்

தேவனுடைய அதிகாரம் தொடர்பான சத்தியங்கள் ஒவ்வொரு நபரும் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டிய, அனுபவிக்க வேண்டிய மற்றும் அவர்களுடைய இருதயத்துடன் புரிந்து கொள்ள வேண்டிய உண்மைகளாகும்; இந்த உண்மைகள் ஒவ்வொரு நபருடைய ஜீவிதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன; ஒவ்வொரு நபருடைய கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன; ஒவ்வொரு நபரும் ஜீவிதத்தில் கடந்து செல்ல வேண்டிய முக்கியமான சந்தர்ப்பங்களில்; தேவனுடைய ராஜரீகத்தைப் பற்றிய மனிதனின் அறிவு மற்றும் தேவனுடைய அதிகாரத்தை ஒருவர் எதிர்கொள்ளவேண்டிய மனப்பான்மையில்; மேலும் இயற்கையாகவே, ஒவ்வொரு நபரும் சென்று சேர்கின்ற இறுதியான இடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, அவற்றை அறிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் ஜீவ காலம் முழுமைக்குமான ஆற்றல் தேவை. தேவனுடைய அதிகாரத்தை நீ சரியாகப் பார்க்கும்போது, அவருடைய ராஜரீகத்தை நீ ஏற்றுக்கொள்ளும்போது, தேவனுடைய அதிகாரம் இருப்பதன் உண்மையை நீ படிப்படியாக உணர்ந்து புரிந்துக் கொள்வாய். ஆனால் நீ ஒருபோதும் தேவனுடைய அதிகாரத்தை அங்கீகரிக்கவில்லை, அவருடைய ராஜரீகத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நீ எத்தனை ஆண்டுகள் ஜீவித்தாலும், தேவனுடைய ராஜரீகத்தைப் பற்றிய சிறிதளவு அறிவையும் பெறமாட்டாய். தேவனுடைய அதிகாரத்தை நீ உண்மையிலேயே அறிந்திருக்கவில்லை, புரிந்து கொள்ளவில்லை என்றால், நீ ஜீவ பாதையின் முடிவை எட்டும்போது, நீ பல தசாப்தங்களாக தேவனை விசுவாசித்தாலும், உன் ஜீவிதத்துக்காக நீ காண்பிக்க எதுவும் இருக்காது, இயற்கையாகவே மனித விதியின் மீதுள்ள தேவனுடைய ராஜரீகத்தைப் பற்றி உனக்குச் சிறிதளவிலும் அறிவும் இருக்காது. இது மிகவும் துக்கமான விஷயம் அல்லவா? எனவே, நீ ஜீவிதத்தில் எவ்வளவு தூரம் நடந்து வந்தாலும், இப்போது உனக்கு எவ்வளவு வயதாகி இருந்தாலும், உன் பயணத்தின் எஞ்சிய காலம் எவ்வளவாக இருந்தாலும், முதலில் நீ தேவனுடைய அதிகாரத்தை அங்கீகரித்து அதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் தேவன் உனக்கே உனக்கான தனித்துவமான எஜமானர் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். மனித விதியின் மீதான தேவனுடைய ராஜரீகத்தைப் பற்றிய இந்த சத்தியங்களைப் பற்றிய தெளிவான, துல்லியமான அறிவையும் புரிதலையும் பெறுவது அனைவருக்குமான கட்டாயப் பாடமாகும்; இது மனித ஜீவிதத்தை அறிந்து கொள்வதற்கும் சத்தியத்தை அடைவதற்கும் முக்கியமாகும். தேவனை அறிந்து கொள்வதற்கான ஜீவிதமானது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்ளவேண்டிய, யாரும் தவிர்க்க முடியாத, அடிப்படை கல்வி ஆகும். இந்த இலக்கை அடைய யாராவது குறுக்கு வழிகளை எடுக்க விரும்பினால், நான் இப்போது உனக்கு சொல்கிறேன், அது சாத்தியமற்றது! நீ தேவனுடைய ராஜரீகத்திலிருந்து தப்பிக்க விரும்பினால், அதுவும் சாத்தியமற்றது! தேவன் மனிதனின் ஒரே கர்த்தர், தேவன் மட்டுமே மனித விதியின் எஜமானர். எனவே, மனிதன் தனது சொந்த விதியை ஆணையிடுவது சாத்தியமில்லாதது, தனது விதிக்கு அப்பால் காலடி எடுத்து வைப்பதும் சாத்தியமில்லாதது. ஒருவருடைய திறமைகள் எவ்வளவு பெரியவையாக இருந்தாலும், மற்றவர்களின் தலைவிதிகளை அவர் பாதிக்க முடியாது, திட்டமிடவோ, ஏற்படுத்தவோ, கட்டுப்படுத்தவோ அல்லது மாற்றவோ முடியாது. தனித்துவமான தேவன் மட்டுமே மனிதனுக்காக எல்லாவற்றையும் ஆணையிடுகிறார், ஏனென்றால் மனித விதியின் மீதான ராஜரீகத்தைக் கொண்டிருக்கும் தனித்துவமான அதிகாரம் அவரிடம் மட்டுமே உள்ளது, எனவே சிருஷ்டிகர் மட்டுமே மனிதனின் தனித்துவமான எஜமானர். தேவனுடைய அதிகாரம் சிருஷ்டிக்கப்பட்ட மனிதகுலத்தின் மீது மட்டுமல்ல, எந்தவொரு மனிதனும் பார்த்திராத, உருவாக்கப்படாத ஜீவன்கள் மீதும், நட்சத்திரங்கள் மீதும், பிரபஞ்சத்தின் மீதும் ராஜரீகத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு மறுக்கமுடியாத உண்மை, உண்மையாகவே இருக்கும் ஒரு உண்மை, எந்தவொரு நபரும் அல்லது விஷயமும் மாற்ற முடியாத ஒன்றாகும். இன்னும், உங்களில் ஒருவர், இந்த நிலையில் உள்ள விஷயங்கள் குறித்து அதிருப்தி அடைந்தால், உங்களுக்கு சில சிறப்புத் திறமை அல்லது திறன் இருப்பதாக நம்பினால் மற்றும் அதிர்ஷ்டத்தால் தங்களது தற்போதைய சூழ்நிலைகளை மாற்றலாம் அல்லது அவற்றிலிருந்து தப்பிக்கலாம் என்று நினைத்தால்; மனித முயற்சியின் மூலம் தங்களது சொந்த விதியை மாற்ற முயற்சித்தால், அதன் மூலம் தங்களது கூட்டாளர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி புகழ்ச்சி மற்றும் செல்வத்தை ஜெயிக்க நினைத்தால்; பின்னர் நான் உனக்குச் சொல்கிறேன், நீயே விஷயங்களைக் கடினமாக்குகிறாய், நீ பிரச்சனையை மட்டுமே உருவாக்குகிறாய், நீ உன் சொந்த கல்லறையைத் தோண்டிக் கொண்டிருக்கிறாய்! உடனடியாகவோ அல்லது பின்னரோ, ஒரு நாள், நீ தவறான தேர்வு செய்துள்ளாய், உன் முயற்சிகள் வீணாகி விட்டன என்பதைக் கண்டு கொள்வாய். உன் லட்சியம், விதியை எதிர்த்துப் போராடுவதற்கான உன் விருப்பம் மற்றும் உன் சொந்த அருவருப்பான நடத்தை ஆகியவை உன்னைத் திரும்ப முடியாத பாதையில் இட்டுச் செல்லும். இதற்காக ஒரு கசப்பான விலையை நீ செலுத்துவாய். பின்விளைவுகளின் தீவிரத்தை நீ தற்போது காணவில்லை என்றாலும், தேவன் மனித விதியின் எஜமானர் என்ற சத்தியத்தை நீ தொடர்ந்து அனுபவித்து, ஆழமாக உணர்கையில், இன்று நான் பேசுவதையும் அதன் உண்மையான தாக்கங்களையும் நீ மெதுவாக அறிந்து கொள்வாய். உன்னிடம் உண்மையிலேயே ஒரு இருதயமும் ஆவியும் இருக்கிறதா இல்லையா, நீ சத்தியத்தை நேசிக்கும் ஒரு நபரா இல்லையா என்பதெல்லம், தேவனுடைய ராஜரீகத்தையும் சத்தியத்தையும் குறித்து நீ எத்தகைய மனப்பான்மையைக் கொண்டிருக்கிறாய் என்பதைப் பொறுத்தது. இயற்கையாகவே, தேவனுடைய அதிகாரத்தை நீ உண்மையிலேயே அறிந்து கொள்ளவும் புரிந்துகொள்ளவும் முடியுமா என்பதை இது தீர்மானிக்கிறது. தேவனுடைய ராஜரீகத்தையும் அவருடைய ஏற்பாடுகளையும் உன் வாழ்வில் நீ ஒருபோதும் உணரவில்லை என்றால், தேவனுடைய அதிகாரத்தை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், நீ முற்றிலும் பயனற்றவனாக இருப்பாய் மற்றும் நீ மேற்கொண்ட பாதை மற்றும் நீ செய்த தேர்வு ஆகியவற்றின் காரணமாக, தேவனுடைய வெறுப்பு மற்றும் நிராகரிப்பின் பொருளாக நீ இருப்பாய் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், தேவனுடைய கிரியையில், அவருடைய சோதனையை ஏற்றுக் கொள்பவர்களும், அவருடைய ராஜரீகத்தை ஏற்றுக் கொள்பவர்களும், அவருடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்படிகிறவர்களும் மற்றும் படிப்படியாக அவருடைய வார்த்தைகளின் உண்மையான அனுபவத்தைப் பெறுபவர்களும், தேவனுடைய அதிகாரத்தைப் பற்றிய உண்மையான அறிவைப் பெறுவார்கள், அவருடைய ராஜரீகத்தைப் பற்றிய உண்மையான புரிதலைப் பெறுவார்கள் மற்றும் அவர்கள் உண்மையிலேயே சிருஷ்டிகருக்கு கீழ்ப்படிந்திருப்பார்கள். அத்தகையவர்கள் மட்டுமே உண்மையிலேயே இரட்சிக்கப்பட்டிருப்பார்கள். தேவனுடைய ராஜரீகத்தை அவர்கள் அறிந்திருப்பதால், அவர்கள் அதை ஏற்றுக் கொண்டதால், மனித விதியின் மீது தேவனுடைய ராஜரீகத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டதும், அதற்குக் கீழ்ப்படிந்திருப்பதும் உண்மையானது மற்றும் துல்லியமானது. அவர்கள் மரணத்தை எதிர்கொள்ளும்போது, அவர்கள் யோபுவைப் போலவே, மரணத்தால் ஆட்கொள்ளப்படாத மனம் கொண்டவர்களாக இருப்பார்கள் மற்றும் எல்லாவற்றிலும் தேவனுடைய திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும், எந்தவொரு தனிப்பட்ட தேர்வு இல்லாமலும் தனிப்பட்ட விருப்பம் இல்லாமலும் கீழ்ப்படிவார்கள். அத்தகைய நபர் மட்டுமே உண்மையான, சிருஷ்டிக்கப்பட்ட மனிதனாக சிருஷ்டிகரிடம் மீண்டும் செல்ல முடியும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க