தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 123

ஆகஸ்ட் 5, 2022

இரண்டாவது சந்தர்ப்பம்: வளர்ச்சி

மனிதர்கள் எந்த வகையான குடும்பத்தில் பிறந்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, அவர்கள் வெவ்வேறு வீட்டுச் சூழல்களில் வளர்ந்து தங்கள் பெற்றோரிடமிருந்து வெவ்வேறு படிப்பினைகளைக் கற்றுக்கொள்கிறார்கள். இந்த காரணிகளே ஒரு நபருடைய இளைஞராகும் நிலைமைகளைத் தீர்மானிக்கின்றன. மேலும் வளர்ச்சி ஒரு நபருடைய ஜீவிதத்தின் இரண்டாவது முக்கியமான சந்தர்ப்பத்தைக் குறிக்கிறது. இந்த நேரத்தில் ஜனங்களுக்கும் வேறு வழியில்லை என்று சொல்லத் தேவையில்லை. இதுவும் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றாகும்.

1. ஒருவர் வளரும் சூழ்நிலைகள் சிருஷ்டிகரால் தீர்மானிக்கப்படுகின்றன

ஒரு நபர் வளரும்போது ஜனங்கள், நிகழ்வுகள் அல்லது அவர்களை ஒழுக்கப்படுத்திய மற்றும் ஊக்குவித்த விஷயங்களைத் தேர்ந்தெடுக்க முடியாது. ஒருவர் பெறும் அறிவையோ அல்லது திறன்களையோ, ஒருவர் என்ன பழக்கத்தை உருவாக்குகிறார் என்பதையோ அவர் தேர்வு செய்யமுடியாது. ஒருவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் யார் என்பதில் அவர் எந்த முடிவும் செய்ய முடியாது. ஒருவர் எந்தவகையான சூழலில் வளர்கிறார்; மற்றவர்களுடனான உறவுகள், நிகழ்வுகள் மற்றும் ஒருவருடைய சூழலில் உள்ள விஷயங்கள் மற்றும் அவை ஒருவருடைய வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கிறது என்பது போன்ற அனைத்தும் ஒருவருடைய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை ஆகும். பின்னர், இந்த விஷயங்களை யார் தீர்மானிக்கிறார்கள்? அவற்றை யார் ஏற்பாடு செய்கிறார்கள்? இந்த விஷயத்தில் ஜனங்களுக்கு வேறு வழியில்லை என்பதால், அவர்களால் இந்த விஷயங்களைத் தீர்மானிக்க முடியாது என்பதால், அவை வெளிப்படையாக இயற்கையாகவே வடிவம் பெறாததால், ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்கள் என இவற்றின் உருவாக்கம் சிருஷ்டிகரின் கரங்களில் உள்ளது என்பதை வெளிப்படையாக் காட்டுகிறது. நிச்சயமாக, ஒவ்வொரு நபருடைய பிறப்பின் குறிப்பிட்ட சூழ்நிலைகளையும் சிருஷ்டிகர் ஏற்பாடு செய்வது போலவே, ஒருவர் வளரும் குறிப்பிட்ட சூழ்நிலைகளையும் அவர் ஏற்பாடு செய்கிறார். ஒரு நபருடைய பிறப்பானது ஜனங்கள், நிகழ்வுகள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள விஷயங்களில் மாற்றங்களைக் கொண்டு வந்தால், அந்த நபருடைய வளர்ச்சியும் முன்னேற்றமும் நிச்சயமாகவே அவற்றை பாதிக்கும். உதாரணமாக, சிலர் ஏழைக் குடும்பங்களில் பிறக்கிறார்கள், ஆனால் செல்வத்தால் சூழப்படுகிறார்கள்; மற்றவர்கள் வசதியான குடும்பங்களில் பிறக்கிறார்கள், ஆனால் அவர்களது குடும்பத்தின் செல்வம் குறைய காரணமாகிறார்கள், இதனால் அவர்கள் ஏழ்மைச் சூழலில் வளர்கிறார்கள். யாருடைய பிறப்பும் ஒரு நிலையான விதியால் நிர்வகிக்கப்படுவதில்லை, தவிர்க்க முடியாத, நிலையான சூழ்நிலைகளின்கீழ் யாரும் வளர்வதும் இல்லை. இவை ஒருநபர் கற்பனை செய்யக்கூடிய அல்லது கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்கள் அல்ல. அவை ஒருவருடைய தலைவிதியின் விளைவுகளாகும். மேலும் அவை ஒருவருடைய தலைவிதியால் தீர்மானிக்கப்படுகின்றன. நிச்சயமாக, அவற்றின் மூலம் யாதெனில், ஒவ்வொரு நபருக்கும் சிருஷ்டிகர் முன்னரே தீர்மானித்துள்ள விதியால் இந்த விஷயங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. அந்த நபருடைய தலைவிதி மீதான சிருஷ்டிகருடைய ராஜரீகத்தாலும், சிருஷ்டிகருடைய திட்டங்களாலும் அவை தீர்மானிக்கப்படுகின்றன.

2. ஜனங்கள் வளரும் பல்வேறு சூழ்நிலைகள் வெவ்வேறு பாத்திரங்களை உருவாக்குகின்றன

ஒரு நபருடைய பிறப்பின் சூழ்நிலைகள், ஒரு அடிப்படை மட்டத்தில் அவர்கள் வளரும் சூழல் மற்றும் சூழ்நிலைகளை உருவாக்குகிறது. மேலும், ஒரு நபரின் வளரும் சூழ்நிலைகள் இதைப்போலவே அவர்களுடைய பிறப்பின் சூழ்நிலைகளின் விளைவாக இருக்கிறது. இந்த நேரத்தில், ஒருவர் மொழியைக் கற்கத் தொடங்குகிறார், ஒருவருடைய மனம் பல புதிய விஷயங்களைச் சந்திக்கவும் உள்வாங்கவும் தொடங்குகிறது. இந்தச் செயல்முறையின் போது ஒருவர் தொடர்ந்து வளர்ந்து வருகிறார். ஒருவர் தன் காதுகளால் கேட்கும் விஷயங்கள், கண்களால் பார்க்கும் மற்றும் ஒருவருடைய மனதில் கொள்ளும் விஷயங்கள் படிப்படியாக ஒருவருடைய மனதுக்குள் உள்ள உலகத்தை நிரப்பி உயிரூட்டுகின்றன. ஒருவர் தொடர்பு கொள்ளும் நபர்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்கள்; ஒருவர் கற்றுக் கொள்ளும் பகுத்தறிவு, அறிவு மற்றும் திறன்கள்; மற்றும் ஒருவருக்குப் புகட்டப்பட்டு அல்லது கற்பிக்கப்பட்டு ஒருவரை வழிநடத்தும் சிந்தனை முறைகள், என இவை அனைத்தும் ஜீவிதத்தில் ஒரு நபருடைய தலைவிதியை வழிநடத்தும் மற்றும் தாக்கத்தை ஏற்படத்தும். ஒருவர் வளரும்போது அவர் கற்றுக்கொள்ளும் மொழி மற்றும் அவருடைய சிந்தனை முறையானது அவர் தனது இளமையைச் செலவழித்த சூழலில் இருந்து பிரிக்க முடியாதது. மேலும் அந்தச் சூழலில் பெற்றோர் மற்றும் உடன்பிறப்புகள் மற்றும் பிற நபர்கள், நிகழ்வுகள் மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள விஷயங்கள் ஆகியவை உள்ளன. எனவே, ஒரு நபருடைய வளர்ச்சியின் போக்கு, அவர் வளரும் சூழலால் தீர்மானிக்கப்படுகிறது, மேலும், அவர் வளரும் காலகட்டத்தில் அவர் தொடர்புகொள்ளும் நபர்கள், நிகழ்வுகள் மற்றும் விஷயங்களையும் சார்ந்துள்ளது. ஒரு நபர் வளரும் நிலைமைகள் நீண்ட காலத்திற்கு முன்பே முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருப்பதால், இந்த செயல்பாட்டின் போது அவர் வாழும் சூழலும் இயற்கையாகவே, முன்னரே தீர்மானிக்கப்பட்டதாக இருக்கிறது. இது ஒரு நபருடைய தேர்வுகள் மற்றும் விருப்பங்களால் தீர்மானிக்கப்படவில்லை, ஆனால் சிருஷ்டிகருடைய திட்டங்களின்படி, சிருஷ்டிகருடைய கவனமான ஏற்பாடுகள் மற்றும் ஜீவிதத்தில் ஒருநபருடைய தலைவிதியைப் பற்றிய அவரது ராஜரீகத்தால் தீர்மானிக்கப்படுகிறது. எனவே, வளர்ந்து வரும் காலத்தில் எந்தவொரு நபரும் சந்திக்கும் வேறு நபர்கள் மற்றும் அவர்கள் தொடர்பு கொள்ளும் விஷயங்கள் அனைத்தும் இயற்கையாகவே சிருஷ்டிகருடைய திட்டங்கள் மற்றும் ஏற்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த வகையான சிக்கலான தொடர்புகளை ஜனங்கள் முன்கூட்டியே பார்க்க முடியாது, அவற்றைக் கட்டுப்படுத்தவோ அல்லது புரிந்து கொள்ளவோ முடியாது. ஒரு நபர் வளரும் சூழலில் பலவிதமான விஷயங்களும் ஜனங்களும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர், மேலும் எந்தவொரு மனிதனும் அத்தகைய பரந்த இணைப்புகளை ஏற்பாடுசெய்யவோ அல்லது திட்டமிடவோ முடியாது. சிருஷ்டிகரைத் தவிர வேறு எந்த நபரோ அல்லது காரியமோ எல்லா மனிதர்களின் தோற்றத்தையும், விஷயங்களையும், நிகழ்வுகளையும் கட்டுப்படுத்த முடியாது. அவற்றைப் நிர்வகிக்கவோ அல்லது மறைந்து போவதைக் கட்டுப்படுத்தவோ முடியாது. மேலும், இது ஒரு பரந்த இணைப்பு மட்டுமே. இது சிருஷ்டிகர் முன்னரே தீர்மானித்தது போல, ஒரு நபருடைய வளர்ச்சியை வடிவமைத்து ஜனங்கள் வளரும் பல்வேறு சூழல்களை உருவாக்குகிறது. சிருஷ்டிகருடைய ஆளுகைப் பணிக்குத் தேவையான பல்வேறு பாத்திரங்களை உருவாக்குவதும், ஜனங்கள் தங்களது பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்ற உறுதியான, வலுவான அடித்தளங்களை அமைப்பதும் இதுதான்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. “தேவனே தனித்துவமானவர் III” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க