தேவனுடைய அனுதின வார்த்தைகள்: தேவனை அறிதல் | பகுதி 2

மே 11, 2023

தேவனுடைய உடைமைகள் மற்றும் ஜீவிதம், தேவனுடைய சாராம்சம், தேவனுடைய மனநிலை என இவை அனைத்தும் அவருடைய வார்த்தைகளில் மனிதகுலத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளன. தேவனுடைய வார்த்தைகளை அவன் அனுபவிக்கும் போது, மனிதன் அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரும் செயல்பாட்டில், தேவன் பேசும் வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள நோக்கத்தைப் புரிந்துகொள்வதற்கும், தேவனுடைய வார்த்தைகளின் மூலத்தையும் பின்னணியையும் புரிந்துகொள்வதற்கும், தேவனுடைய வார்த்தைகளின் நோக்க விளைவைப் புரிந்துகொள்வதற்கும் உணர்ந்துகொள்வதற்கும் தொடங்குவான். மனிதகுலத்தைப் பொறுத்தவரையில், இவை அனைத்தும் சத்தியத்தையும் ஜீவனையும் அடைவதற்கும், தேவனுடைய நோக்கங்களைப் புரிந்துகொள்வதற்கும், அவனுடைய மனநிலையில் மாற்றமடைவதற்கும், தேவனுடைய ராஜரீகம் மற்றும் ஏற்பாடுகளுக்குக் கீழ்ப்படிவதற்கும், மனிதன் அவற்றை அனுபவிக்க வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் மற்றும் அடைய வேண்டும். மனிதன் இவற்றை அனுபவிக்கும், புரிந்துகொள்ளும் மற்றும் அடையும் அதே நேரத்தில், அவன் படிப்படியாக தேவனைப் பற்றிய புரிதலைப் பெற்றிருப்பான். இந்த நேரத்தில் தன்னைப் பற்றியும் அவன் பல்வேறு அளவிலான அறிவைப் பெற்றிருப்பான். இந்த புரிதலும் அறிவும் மனிதன் கற்பனை செய்த அல்லது இயற்றிய ஒன்றிலிருந்து வெளிவருவதில்லை. மாறாக, அவன் தனக்குள்ளேயே புரிந்துகொள்ளும், அனுபவிக்கும், உணரும், உறுதிப்படுத்துகிறவற்றிலிருந்து வெளிவருகிறது. இவற்றைப் புரிதல், அனுபவித்தல், உணர்தல் மற்றும் உறுதிப்படுத்திய பின்னரே தேவனைப் பற்றிய மனிதனுடைய அறிவு உள்ளடக்கத்தைப் பெறுகிறது. இந்த நேரத்தில் மனிதன் பெறும் அறிவு மட்டுமே நிஜமானது, உண்மையானது மற்றும் துல்லியமானது. அவருடைய வார்த்தைகளைப் புரிந்துகொள்ளுதல், அனுபவித்தல், உணர்தல் மற்றும் உறுதிப்படுத்தல் ஆகியவற்றின் மூலம் தேவனைப் பற்றிய உண்மையான புரிதலையும் அறிவையும் அடைவதற்கான இந்த செயல்முறையானது மனிதனுக்கும் தேவனுக்கும் இடையேயான உண்மையான ஐக்கியமே தவிர வேறு ஒன்றும் இல்லை. இந்த வகையான ஐக்கியத்தின் மத்தியில், மனிதன் உண்மையிலேயே தேவனுடைய நோக்கங்களைப் புரிந்துகொள்வதற்கும் அறிந்துகொள்வதற்கும் தொடங்குகிறான். உண்மையிலேயே தேவனுடைய உடைமைகளையும் இருப்பையும் புரிந்துகொள்வதற்கும் அறிந்துகொள்வதற்கும் தொடங்குகிறான். தேவனுடைய சாரத்தைப் புரிந்துகொள்வதற்கும் அறிந்துகொள்வதற்கும் உண்மையிலேயே தொடங்குகிறான். படிப்படியாக தேவனுடைய மனநிலையைப் புரிந்துகொள்வதற்கும் அறிந்துகொள்வதற்கும் தொடங்குகிறான். எல்லா சிருஷ்டிப்புகளிலும் தேவனுடைய ஆதிக்கத்தின் உண்மை பற்றிய உண்மையான உறுதியையும், சரியான வரையறையையும், தேவனுடைய அடையாளம் மற்றும் நிலையைப் பற்றிய முக்கியமான தாக்கத்தையும் அறிவையும் பெறுகிறான். இந்த வகையான ஐக்கியத்தின் மத்தியில், தேவனைப் பற்றிய அவனது கருத்துக்கள், இனிமேல் ஒன்றும் இல்லாமையில் இருந்து அவரைக் கற்பனை செய்து கொள்ளுதல் அல்லது அவரைப் பற்றிய தனது சொந்தச் சந்தேகங்களுக்குக் கட்டுப்பாட்டைக் கொடுத்தல் அல்லது அவரைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல் அல்லது அவரை நிந்தித்தல் அல்லது விட்டுச் செல்லுதல் அவர்மீது நியாயத்தீர்ப்பு வழங்குதல் அல்லது அவரைச் சந்தேகித்தல் ஆகியவற்றை மனிதன் படிப்படியாக மாற்றுகிறான். இவ்வாறு, மனிதனுக்கு தேவனுடனான தகராறுகள் குறைவாகவே இருக்கும், அவனுக்கு தேவனுடனான மோதல்கள் குறைவாகவே இருக்கும் மற்றும் மனிதன் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்யும் சந்தர்ப்பங்களும் குறைவாகவே இருக்கும். அதற்கு மாறாக, தேவன் மீதான மனிதனுடைய அக்கறையும் தேவனுக்குக் கீழ்ப்படிதலும் பெரிதாக வளரும். தேவன் மீது அவன் கொண்டுள்ள மரியாதை மிகவும் உண்மையானதாகவும் ஆழமாகவும் மாறும். இத்தகைய ஐக்கியத்தின் மத்தியில், மனிதன் சத்தியத்தின் வழங்குதலையும் ஜீவனின் ஞானஸ்நானத்தையும் அடைவது மட்டுமல்லாமல், அதே நேரத்தில் தேவனைப் பற்றிய உண்மையான அறிவையும் அடைவான். இத்தகைய ஐக்கியத்தின் மத்தியில், மனிதன் தனது மனநிலையில் மாற்றம் பெற்று இரட்சிப்பைப் பெறுவது மட்டுமல்லாமல், அதே நேரத்தில் தேவனை நோக்கி ஒரு சிருஷ்டிக்கப்பட்ட உயிரினத்தின் உண்மையான பயபக்தியையும் வழிபாட்டையும் பெறுவான். இந்த வகையான ஐக்கியத்தைக் கொண்டிருந்ததால், தேவன் மீதான மனிதனுடைய விசுவாசம் இனி ஒரு வெற்று காகிதத் தாளாகவோ அல்லது உதட்டளவில் வழங்கப்படும் வாக்குறுதியாகவோ அல்லது குருட்டுத்தனமான நாட்டம் மற்றும் விக்கிரகாராதனையாகவோ இருக்காது. இந்த வகையான ஐக்கியத்தின் மூலமாக மட்டுமே மனிதனுடைய ஜீவிதம் நாளுக்கு நாள் முதிர்ச்சியை நோக்கி வளரும். அப்போதுதான் அவனது மனநிலை படிப்படியாக மாற்றப்படும். தேவன் மீதான அவனது விசுவாசம், படிப்படியாக, தெளிவற்ற மற்றும் நிச்சயமற்ற நம்பிக்கையிலிருந்து உண்மையான கீழ்ப்படிதலுக்கும் அக்கறைக்கும், உண்மையான பயபக்திக்கும், செல்லும். மனிதனும் தேவனைப் பின்பற்றும் செயல்பாட்டில், படிப்படியாக ஒரு செயலற்ற நிலையில் இருந்து செயல்திறன்மிக்க நிலைப்பாட்டிற்கும், எதிர்மறையிலிருந்து நேர்மறைக்கும் முன்னேறும். இந்த வகையான ஐக்கியத்துடன் மட்டுமே மனிதன் தேவனைப் பற்றிய உண்மையான புரிதலுக்கும், உணர்தலுக்கும், உண்மையான அறிவுக்கும் வருவான். பெரும்பான்மையான ஜனங்கள் ஒருபோதும் தேவனுடன் உண்மையான ஐக்கியத்திற்குள் நுழைந்ததில்லை என்பதால், தேவனைப் பற்றிய அவர்களின் அறிவு கோட்பாட்டின் மட்டத்திலும், எழுத்துக்கள் மற்றும் சித்தாந்தங்களின் மட்டத்திலும் நின்றுவிடுகிறது. அதாவது, பெரும்பான்மையான ஜனங்கள், அவர்கள் எத்தனை வருடங்கள் தேவனை நம்பினாலும், தேவனை அறிந்துகொள்வதைப் பொறுத்தவரையில், பாரம்பரிய வடிவிலான மரியாதை என்னும் அடிப்படையில் சிக்கி, அவற்றுடன் தொடர்புடைய நிலப்பிரபுத்துவ மூடநம்பிக்கைகள் மற்றும் கற்பனையுணர்வுச் சாயல்களுடன், அவர்கள் ஆரம்பித்த அதே இடத்திலேயே இருக்கிறார்கள். தேவனைப் பற்றிய மனிதனுடைய அறிவு அதன் தொடக்கக் கட்டத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்பது நடைமுறையில் இல்லாத ஒன்று என்பதாகும். தேவனுடைய நிலைப்பாடு மற்றும் அடையாளத்தை மனிதன் உறுதிப்படுத்தியதைத் தவிர, தேவன் மீது மனிதனுடைய விசுவாசம் இன்னும் தெளிவற்ற நிச்சயமற்ற நிலையில்தான் உள்ளது. இது அவ்வாறு இருப்பதால், மனிதன் தேவனுக்கு எவ்வளவாக உண்மையான பயபக்தியைக் கொண்டிருக்க முடியும்?

தேவன் உண்டென்பதை நீ எவ்வளவு உறுதியாக நம்பினாலும், அது தேவனைப் பற்றிய உன் அறிவையோ தேவன் மீதான உன் பயபக்தியையோ மாற்றாது. அவருடைய ஆசீர்வாதங்களையும் அவருடைய கிருபையையும் நீ எவ்வளவு அனுபவித்திருந்தாலும், தேவனைப் பற்றிய உன் அறிவை அதனால் மாற்ற முடியாது. உனக்குள்ள அனைத்தையும் பரிசுத்தப்படுத்தவும், உனக்குள்ள அனைத்தையும் அவருக்காக அர்ப்பணிக்கவும் ஈடுபடுத்திக்கொள்ளவும் நீ எவ்வளவு தயாராக இருந்தாலும், அதனால் தேவனைப் பற்றிய உன் அறிவை மாற்ற முடியாது. தேவன் பேசிய வார்த்தைகளை நீ நன்கு அறிந்திருக்கலாம், அல்லது நீ அவற்றை உன் இருதயத்திலும் அறிந்திருக்கலாம் மற்றும் அவற்றை உன்னால் விரைந்து கூறமுடியலாம், ஆனால் இதனால் தேவனைப் பற்றிய உன் அறிவை மாற்ற முடியாது. எவ்வாறாயினும், மனிதனின் நோக்கம் தேவனைப் பின்பற்றுவதாக இருந்தாலும், அவன் ஒருபோதும் தேவனுடன் உண்மையான ஐக்கியம் கொண்டிருக்கவில்லை அல்லது தேவனுடைய வார்த்தைகளில் உண்மையான அனுபவம் பெற்றிருக்கவில்லை என்றால், தேவனைப் பற்றிய அவனது அறிவு வெற்றுத் துண்டாகவோ அல்லது முடிவில்லாத மயக்கமாகவோ இருக்கும். நீ தேவனோடு தோள் உரச கடந்து சென்றிருக்கலாம் அல்லது அவரை நேருக்கு நேர் சந்தித்திருக்கலாம், எனினும் தேவனைப் பற்றிய உன் அறிவு இன்னும் பூஜ்ஜியமாகவே இருக்கும். தேவனைப் பற்றிய உன் மரியாதை வெற்று வார்த்தையாக அல்லது கற்பனையான கருத்தாக மட்டுமே இருக்கும்.

வார்த்தை, தொகுதி 2. தேவனை அறிதல் பற்றி. "முகவுரை" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க