Christian Testimony | தேவன்மேல இருக்கிற விசுவாசமும் வேதாகமத்தின் மேல் இருக்கிற விசுவாசமும் ஒன்றா?

பிப்ரவரி 12, 2021

முக்கிய கதாபாத்திரமான ஒரு பக்தியுள்ள விசுவாசியானவள் கர்த்தர் திரும்பி வருவதற்காக ஏங்குகிறாள். கர்த்தராகிய இயேசு திரும்பி வந்துவிட்டதாக சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை சாட்சியமளிப்பதை அவள் பின்னர் முகநூல் மூலம் அறிந்துகொள்கிறாள். அவள் அதை ஆராய்ந்து பார்க்க விரும்புகிறாள், ஆனால் சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபை பிரசங்கித்த வழி வேதாகமத்தைத் தாண்டிச் செல்வதாகவும், வேதாகமத்திற்கு வெளியே செல்லும் எதுவும் மதங்களுக்கு எதிரானது என்றும் அவளுடைய போதகர் சொல்வதனால், அவள் தயங்குகிறாள் மற்றும் அதை ஆராய்ந்து பார்க்கத் துணியவில்லை. அவள் ஜெபம் செய்த பிறகு, கர்த்தருடைய வருகை என்பது சிறிய காரியமல்ல, அவளால் வெறுமென கூட்டத்தை பின்பற்ற முடியாது என்பதை உணர்கிறாள். அதன்பிறகு அவள் தாமாகவே சர்வவல்லமையுள்ள தேவனுடைய திருச்சபையின் இணையதளத்தைப் பார்வையிடுகிறாள், அங்கு தேவனை சாட்சி பகரும் பலவகையான வீடியோக்களைப் பார்க்கிறாள். சத்தியத்தைக் குறித்த திருச்சபையின் ஐக்கியம் நடைமுறையானதாகவும் ஒளியூட்டுவதாகவும் உள்ளது, மேலும் அது பல ஆண்டுகளாக அவளுக்குள்ளிருந்த குழப்பங்களையும் சிரமங்களையும் தீர்த்து வைக்கிறது. தேவன் சிருஷ்டிப்பின் கர்த்தர் என்பதையும், அவருடைய கிரியையில் வேதாகமத்தைத் தாண்டிச் செல்ல அவருக்கு எல்லா உரிமைகளும் உள்ளன என்பதையும், வேதாகமத்தின் மீதான விசுவாசமானது தேவன்மீதான விசுவாசம் அல்ல என்பதையும் இந்த வீடியோக்கள் மூலமாக அவள் அறிந்துகொள்கிறாள். அவள் ஆராய்ந்து பார்த்ததன் மூலம், சர்வவல்லமையுள்ள தேவனே திரும்பி வந்துள்ள கர்த்தராகிய இயேசு என்று உறுதியாகிவிடுகிறாள், இதனால் அவள் கடைசி நாட்களின் தேவனுடைய கிரியையை ஏற்றுக்கொண்டு ஆட்டுக்குட்டியானவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறாள்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க