தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 349

செப்டம்பர் 8, 2023

மனிதகுலம் இன்று இருக்கும் இடத்தை அடைய பல்லாயிரக்கணக்கான ஆண்டுகால வரலாற்றைக் கடந்துள்ளது, ஆயினும் ஆரம்பத்தில் நான் சிருஷ்டித்த மனிதகுலம் சீரழிவில் மூழ்கி நீண்ட காலமாகிவிட்டது. மனிதகுலம் இனியும் நான் விரும்பும் மனிதகுலமாக இருப்பதில்லை, இதனால், என் பார்வையில், ஜனங்கள் இனி மனிதகுலம் என்ற பெயருக்குத் தகுதியற்றவர்கள் ஆகிறார்கள். மாறாக அவர்கள் சாத்தான் சிறைபிடித்து வைத்துள்ள மனிதகுலத்தின் அழுக்காக, சாத்தான் குடியிருக்கப் பயன்படுத்தும் அழுகிய நடைப்பிணங்களாக மற்றும் சாத்தான் தன்னையே உடுத்திக்கொள்ளப் பயன்படுத்துபவர்களாக உள்ளனர். நான் இருப்பதை ஜனங்கள் நம்பவில்லை, என் வருகையை அவர்கள் வரவேற்கவில்லை. என் கோரிக்கைகளுக்கு மனிதகுலம் அதிருப்தியான வகையிலேயே பதில் கொடுக்கிறது, அவற்றைத் தற்காலிகமாக ஏற்றுக்கொள்கிறது மற்றும் வாழ்வின் மகிழ்ச்சிகளையும் வருத்தங்களையும் என்னுடன் உண்மையாகப் பகிர்ந்து கொள்ளாதிருக்கிறது. ஜனங்கள் என்னை ஆராயப்படக் கூடாதவர் என்று காண்பதால், அவர்கள் எனக்கு வெறுப்பான புன்னகையைத் தருகிறார்கள், அவர்களின் முதலாம் அணுகுமுறை அதிகாரத்தில் இருக்கும் ஒருவரிடம் ஒத்துழைப்பதாக உள்ளது, ஏனென்றால் ஜனங்களுக்கு என் கிரியையைப் பற்றி எந்த அறிவும் இல்லை, தற்போது எனது சித்தம் பற்றி மிகக்குறைவாகவே அறிந்துள்ளனர். நான் உங்களுக்கு நேர்மையாக இருப்பேன்: நாள் வரும்போது, என்னைத் தொழுதுகொள்கிற எவர் ஒருவருடைய துன்பங்களும் சுமப்பதற்கு உங்களுடைய துன்பங்களைவிட எளிதாக இருக்கும். என்மீது நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தின் அளவு உண்மையில் யோபுவின் விசுவாசத்தைக்காட்டிலும் அதிகமில்லை—யூதப் பரிசேயர்களின் விசுவாசம் கூட உங்களுடையதை விட மிஞ்சியதாய் உள்ளது—எனவே, அக்கினி இறங்கும் நாளில், உங்கள் துன்பம், இயேசுவால் கண்டிக்கப்பட்ட பரிசேயர்களை விடவும், மோசேயை எதிர்த்த 250 தலைவர்களை விடவும், மற்றும் அக்கினிப் பிழம்புகளால் சுட்டெரித்து எரிக்கப்பட்ட சோதோமை விடவும் அதிக கடுமையானதாக இருக்கும். மோசே கன்மலையை அடித்தபோது, அவனது விசுவாசத்தினால் யேகோவா அருளிய தண்ணீர் வெளியே பாய்ந்தோடிற்று. தாவீது யேகோவாவாகிய என்னைப் புகழ்ந்து பாடலை இசைத்தபோது—அவனது விசுவாசத்தினால்—அவனது இருதயம் சந்தோஷத்தினால் நிரம்பிற்று. யோபு, மலைகளை நிரப்பின அவனது கால்நடைகளையும் மற்றும் சொல்லப்படாத அளவு ஏராளமான செல்வங்களையும் இழந்தபோது, மற்றும் அவனது உடலை எரிகிற கொப்புளங்கள் மூடியபோது, அது அவனுடைய விசுவாசத்தின் நிமித்தமாக இருந்தது. யேகோவாவாகிய என் குரலை அவன் கேட்க முடிந்து மற்றும் எனது மகிமையைக் காணமுடிந்தபோது, அது அவனது விசுவாசத்தின் நிமித்தமாக இருந்தது. பேதுரு தனது விசுவாசத்தின் நிமித்தமாகவே இயேசு கிறிஸ்துவைப் பின்பற்ற முடிந்தது. அவனது விசுவாசத்தினிமித்தமாகவே, எனக்காக அவன் சிலுவையில் அறையப்படவும் மகிமையான சாட்சியம் தரவும் முடிந்தது. யோவான் தனது விசுவாசத்தின் நிமித்தமாகவே மனுஷகுமாரனின் மகிமையான உருவத்தைக் கண்டான். கடைசி நாட்களின் தரிசனத்தை அவன் கண்டபோது, அவனுடைய விசுவாசத்தினாலேயே அது அதிகமாயிற்று. புறஜாதி ஜனங்களைச் சேர்ந்தவர்கள் என்று அழைக்கப்படுகிறவர்களில் திரளானவர்கள் என் வெளிப்பாட்டைப் பெற்றனர், மற்றும் மனிதனுக்கு மத்தியில் என் ஊழியத்தைச் செய்வதற்காக நான் மாம்சத்தில் திரும்ப வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் அறியவந்திருப்பதற்கான காரணமும், அவர்கள் விசுவாசம்தான். என் கடுமையான வார்த்தைகளால் பாதிக்கப்பட்டும் இன்னும் அவற்றினால் ஆறுதலுக்குக் கொண்டுவரப்பட்டு அவற்றினால் இரட்சிக்கப்பட்டிருக்க வேண்டியவர்கள்—அவர்கள் தங்களின் விசுவாசத்தின் காரணமாக இதைச் செய்யாதிருக்கிறார்களா? என்னில் விசுவாசம் கொண்டிருந்தும் இன்னும் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள், இந்த உலகத்தாலும் புறக்கணிக்கப் பட்டிருக்கவில்லையா? என் வார்த்தைக்குப் புறம்பே வாழ்பவர்கள், சோதனையின் துன்பத்திலிருந்து தப்பி ஓடுகிறார்கள், அவர்கள் அனைவரும் உலகம் முழுவதும் அதன்போக்கில் இழுக்கப்பட்டுச் செல்வதில்லையா? அவர்கள் இங்கும் அங்கும் பறக்கடிக்கப்படும் இலையுதிர்கால இலைகளைப்போல், இளைப்பாற இடமின்றி, ஆறுதல் அளிக்கும் என் வார்த்தைகளை மிகக்குறைவாகவே பெற்றவர்களாய் உள்ளனர். என் சிட்சையும் புடமிடுதலும் அவர்களைப் பின்தொடரவில்லை என்றாலும், அவர்கள் இடம்விட்டு இடம் நகர்கிற பிச்சைக்காரர்கள்போல் பரலோக ராஜ்யத்திற்குப் புறம்பே வீதிகளில் அலைந்து திரிவதில்லையா? உலகம் உண்மையில் உனக்கு இளைப்பாறும் இடமாக உள்ளதா? என் சிட்சையைத் தவிர்ப்பதனால், உன்னால் உண்மையிலேயே, உலகத்திலிருந்து மனநிறைவின் மயக்கமான புன்னகையைப் பெற்றுக்கொள்ள முடியுமா? உன் இருதயத்தில் உள்ள மறைக்க முடியாத வெறுமையை மூட, விரைந்தோடி வரும் உனது சந்தோஷத்தை நீ உண்மையிலேயே பயன்படுத்த முடியுமா? உன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் நீ முட்டாளாக்கலாம், ஆனால் உன்னால் என்னை முட்டாளாக்க ஒருக்காலும் முடியாது. உன் விசுவாசம் மிகவும் அற்பமானது என்பதால், நீ இந்தநாள் வரையிலும், வாழ்க்கை தருகிற மகிழ்ச்சி எதையும் கண்டறிய வல்லமையற்று இருக்கிறாய். நான் உன்னைக் கேட்டுக்கொள்வது: உன் முழு வாழ்வையும், மாம்சத்திற்காக இரண்டாந்தரமாக சுறுசுறுப்பாக செலவிடுவதைக் காட்டிலும், உன் வாழ்நாளில் பாதியை எனக்காக உண்மையுடன் செலவிட்டு, ஒரு மனிதன் அரிதாகவே சுமக்கக்கூடிய பாடுகளைச் சகித்திருத்தல் மேன்மையானது. இவ்வளவு அதிகமாய் உங்களைப் பாதுகாத்து எனது சிட்சையில் இருந்து விலகி ஓடுவதில் என்ன நோக்கம் இருக்கிறது? நித்திய வேதனையையும், நித்திய சிட்சையையும் மாத்திரமே அறுவடை செய்ய எனது கணநேரச் சிட்சிப்பிலிருந்து உன்னை ஒளித்துக்கொள்வதில் என்ன நோக்கம் இருக்கிறது? உண்மையில், நான் என் சித்தத்திற்கு ஏற்ப யாரையும் வளைக்கவில்லை. எனது எல்லா திட்டங்களுக்கும் யாராவது உண்மையிலேயே கீழ்ப்படிய விரும்பினால், நான் அவர்களை மோசமாக நடத்த மாட்டேன். ஆனால், யேகோவாவாகிய என்னை, யோபு விசுவாசித்தது போலவே எல்லா ஜனங்களும் விசுவாசிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் விசுவாசம் தோமாவின் விசுவாசத்தை விட அதிகமாக இருந்தால், உங்கள் விசுவாசம் எனது பாராட்டைப் பெறும், உங்கள் பற்றுறுதியில் நீங்கள் என் ஆனந்தத்தைக் காண்பீர்கள், மற்றும் உங்கள் நாட்களில் நீங்கள் நிச்சயமாக என் மகிமையைக் காண்பீர்கள். இருப்பினும், உலகத்தை நம்புகிற மற்றும் பிசாசை நம்புகிற ஜனங்கள், சோதோம் நகரத்தின் ஜனங்களைப் போலவே, காற்றினால் அடிக்கப்பட்ட மணல் துகள்களைத் தங்கள் கண்களிலும், பிசாசிடமிருந்து பெற்ற காணிக்கைகளைத் தங்கள் வாய்களிலும் கொண்டவர்களாய்த் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தியுள்ளனர், அவர்களின் மரத்துப்போன சிந்தைகள் உலகைக் கைப்பற்றிய பொல்லாங்கனால் நெடுங்காலத்திற்கு முன்பே ஆட்கொள்ளப்பட்டிருக்கிறது. அவர்களின் சிந்தனைகள் ஏறக்குறைய முற்றிலும், பழைய காலத்துப் பிசாசுக்கு அடிமைப்பட்டு விழுந்துள்ளன. எனவே, மனிதகுலத்தின் விசுவாசம் காற்றோடு போய்விட்டது, அவர்கள் என் கிரியையைக் கவனிக்கக்கூட இயலாதவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் செய்யக்கூடியது என்னவென்றால், எனது கிரியையைச் சரியான முறையில் நடத்துவதில் பலவீனமான முயற்சியை மேற்கொள்வது அல்லது தோராயமாகப் பகுப்பாய்வு செய்வதாகும், ஏனென்றால் அவர்கள் நெடுங்காலமாகவே சாத்தானின் விஷத்தினால் ஆட்கொள்ளப்பட்டுள்ளனர்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உண்மையான நபராக இருப்பதன் அர்த்தம் என்ன” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க