தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 348

செப்டம்பர் 8, 2023

மனிதனை நிர்வகிப்பது எப்போதுமே என் கடமையாக இருக்கிறது. மேலும், உலகத்தைச் சிருஷ்டித்தபோதே நான் மனிதனை ஜெயங்கொள்ளுவதற்கு உத்தரவிட்டேன். கடைசி நாட்களில் நான் மனிதனை முற்றிலுமாக ஜெயங்கொள்ளுவேன் என்பதையோ, அல்லது மனிதகுலத்தின் மத்தியிலுள்ள கலகக்காரர்களை ஜெயங்கொள்ளுவதே நான் சாத்தானைத் தோல்வியடையச் செய்வதற்கான சான்றாக உள்ளது என்பதையோ மக்கள் அறியாதிருக்கலாம். ஆனால், என் விரோதியானவன் என்னுடன் போரிட வந்தபோது, சாத்தான் சிறைப்படுத்தி, தனது பிள்ளைகளாக்கி தனது வீட்டைக் கவனித்துக்கொள்ள உண்மையுள்ள அடிமைகளாக வைத்திருப்பவர்களை ஜெயங்கொள்வேன் என்று ஏற்கனவே சொல்லியிருந்தேன். தோல்வியுறச் செய்வது, அவமானத்திற்கு ஆளாக்குவது என்பதே ஜெயங்கொள்ளுதல் என்பதன் மெய்யான அர்த்தமாக உள்ளது; இஸ்ரவேலரின் மொழியில், இது எனக்கு எதிரான முற்றிலுமான தோல்வி, அழிவு மற்றும் பிற எதிர்ப்பைக் காட்டக்கூடாதவனாக்குதல் என்று அர்த்தப்படுகிறது. ஆனால் இன்று, உங்களிடையே பயன்படுத்தப்படுகிறபோது, ஜெயங்கொள்ளுதல் என்பது இதன் அர்த்தமாக உள்ளது. மனிதகுலத்தின் பொல்லாங்கானவர்களை முழுவதுமாக முடிவுக்குக் கொண்டுவருதலும் அதைத் தோற்கடிப்பதுமே எப்பொழுதும் என் நோக்கமாக இருக்கின்றது என்பதை நீங்கள் அறிய வேண்டும், இதனால் அவர்கள் இனி எனக்கு எதிராகக் கலகம் செய்ய முடியாது, மேலும் என் கிரியையில் குறுக்கிடவோ அல்லது தொந்தரவு செய்யவோ முடியாது. இவ்வாறு, மனிதனைப் பொறுத்தவரை, இந்த வார்த்தையானது ஜெயங்கொள்ளுதல் என்று அர்த்தப்படலாயிற்று. இந்த வார்த்தையின் வெளிப்படையான அர்த்தங்கள் என்னவாக இருப்பினும், மனிதர்களைத் தோற்கடிப்பதே எனது கிரியையாக உள்ளது. ஏனெனில், மனிதகுலம் எனது ஆளுகையுடன் இணைந்திருக்கிறது என்பது உண்மையாக இருக்கிறது, இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால், மனிதர்கள் என் விரோதிகளே தவிர வேறில்லை. மனிதர்கள் என்னை எதிர்க்கிற மற்றும் எனக்குக் கீழ்ப்படியாதிருக்கிற பொல்லாதவர்களாவர். மனிதர்கள் வேறு யாருமல்லர், என்னால் சபிக்கப்பட்ட பொல்லாங்கின் சந்ததிதான் அது. மனிதர்கள் வேறு யாருமல்ல, என்னைக் காட்டிக் கொடுத்த பிரதான தூதனின் சந்ததியினர் தான். மனிதர்கள் வேறு யாருமல்லர், நீண்ட காலத்திற்கு முன்பு என்னால் முறியடிக்கப்பட்டவர்களும், அன்றிலிருந்து சரிசெய்யப்பட இயலாத எனது விரோதியாக இன்றும் இருக்கிற பிசாசின் மரபுவழி வந்தவர்களே. மனிதகுலம் யாவற்றிற்கும் மேலாக உள்ள வானம் கொந்தளிப்பாகவும் இருட்டாகவும், தெளிவின் அறிகுறி சிறிதும் இல்லாமலும் இருக்கிறது, மனித உலகம் கார் இருளில் மூழ்கியுள்ளது, இதனால் அதில் வாழும் ஒருவன் தனது தலையை உயர்த்தும்போது, முகத்திற்கு முன்னாக வெளிநீட்டப்பட்ட கையையோ அல்லது சூரியனையோ கூடக் காணக் கூடாதவனாக இருக்கிறான். அவனது பாதங்களுக்குக் கீழே உள்ள சாலை, சேறும் சகதியுமாகக் குழிகளுடன், கோணல்மாணலான வளைவுகள் கொண்டுள்ளது; முழு நிலமும் பிரேதங்களால் குப்பையாக்கப்பட்டுள்ளது. இருண்ட மூலைகள் மரித்தவர்களின் எச்சங்களால் நிரப்பப்பட்டுள்ளன, அத்துடன் குளிர்ந்த மற்றும் நிழலான மூலைகளை பிசாசுகளின் கூட்டங்கள் வாசம்பண்ணும் இடங்களாக்கிக் கொண்டுள்ளன. மனிதர்களுடைய உலகின் எல்லா இடங்களிலும் பிசாசுகள் சேனைகளாக வந்து போகின்றன. அசுத்தத்தால் மூடப்பட்ட எல்லா வகையான மிருகங்களின் சந்ததியும், களமிறக்கப்பட்ட யுத்தத்தில் பூட்டப்பட்டுள்ளன, அதன் இரைச்சலானது இருதயத்தைப் பயங்கரமாகத் தாக்குகிறது. இப்படிப்பட்ட வேளைகளில், இத்தகையதொரு உலகில், இப்படிப்பட்டதொரு "பூமிக்குரிய பரதீசில்" வாழ்வின் சந்தோஷங்களைத் தேட ஒருவன் எங்கே செல்வான்? அவனுடைய வாழ்வின் இலக்கைக் கண்டறிய ஒருவன் எங்கே செல்ல முடியும்? நெடுங்காலத்திற்கு முன் சாத்தானின் கால்களின்கீழ் மிதிக்கப்பட்ட நாளில் இருந்தே, மனிதகுலம், சாத்தானின் சாயலைப் பூண்டிருக்கும் ஒரு நடிகன் போலவே முதலாவது இருந்துள்ளது—இதற்கும் மேலாக, மனிதகுலமானது சாத்தானின் உருவகமாகவே ஆகி, சாத்தானுக்கு உரத்த குரலில் தெளிவாகச் சாட்சியளிக்கும் ஆதாரமாகவே பணியாற்றுகிறது. இத்தகையதொரு மனிதகுலம், இப்படிச் சீரழிந்த கறைபடிந்த ஒரு கும்பல், இவ்வாறு சீர்கேடு நிறைந்த மனிதக் குடும்பத்தின் சந்ததி, தேவனுக்கு எப்படி சாட்சியளிக்கக் கூடும்? என் மகிமை எங்கிருந்து வருகிறது? எங்கிருந்து என் சாட்சியைப் பற்றி ஒருவர் பேசத் தொடங்குவார்? மனிதகுலத்தைச் சீர்கெடுத்து எனக்கு எதிராக நிற்கும் விரோதியானவன், ஏற்கனவே மனிதகுலத்தை எடுத்துக்கொண்டு—அதாவது நீண்டகாலத்திற்கு முன்பே நான் சிருஷ்டித்ததும் எனது மகிமையாலும் எனது ஜீவனாலும் நிரப்பப்பட்டதுமாக இருக்கிற மனிதகுலத்தைக் கறைப்படுத்தினான். இது என் மகிமையைப் பறித்துவிட்டது, மற்றும் இவையெல்லாம் மனிதனைச் சாத்தானின் அவலட்சணத்துடன் பெரிதும் இணைக்கப்பட்ட விஷத்தினாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியிலிருந்து பெற்ற சாறினாலும் மனிதனை ஊக்குவித்துள்ளது. ஆதியிலே, நான் மனிதகுலத்தைச் சிருஷ்டித்தேன்; அதாவது, மனிதகுலத்தின் மூதாதையரான ஆதாமை நான் சிருஷ்டித்தேன். அவன் ஒரு சாயலும் ரூபமும் அருளப்பட்டவனான், பெலன் நிறைந்தவனாயிருந்தான், சத்துவம் நிறைந்தவனாயிருந்தான், மேலும் அவன் எனது மகிமையிலும் பங்கேற்றான். நான் மனிதனைச் சிருஷ்டித்தபோது அது மகிமையான நாளாக இருந்தது. அதன்பிறகு, ஆதாமின் சரீரத்தில் இருந்து ஏவாள் உருவாக்கப்பட்டாள், அவளும் மனிதனின் மூதாதையாக இருந்தாள், அதனால் நான் சிருஷ்டித்த ஜனங்கள் என் சுவாசத்தால் நிரப்பப்பட்டு எனது மகிமை பொங்கி வழிபவர்கள் ஆனார்கள். ஆதாம் ஆதியிலே எனது கரங்களிலிருந்து பிறந்தான் மற்றும் அவன் எனது சாயலின் பிரதிபலிப்பானான். இவ்வாறு, "ஆதாம்" என்பதன் மெய்யான பொருள் என்னால் சிருஷ்டிக்கப்பட்ட ஓர் உயிரினமாக, என் உயிர்நிலையான ஆற்றலைக்கொண்டு நிரப்பப்பட்ட, என் மகிமையைக்கொண்டு நிரப்பப்பட்ட, சாயலும் ரூபமும் கொண்ட, ஆவியும் சுவாசமும் உள்ளவனானான் என்பதாகும். ஆவியைக்கொண்ட, என்னைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற, எனது சாயலைத் தாங்கியிருக்கிற மற்றும் எனது சுவாசத்தைப் பெற்றிருக்கிறதான சிருஷ்டிக்கப்பட்ட ஒரே உயிரினம் அவன் மட்டுமே. ஆதியிலே, நான் சிருஷ்டித்த இரண்டாவது மனிதப் படைப்பாக ஏவாள் இருந்தாள், அந்த சிருஷ்டிக்கு நான் என் சுவாசத்தை வழங்கி நியமித்திருந்தேன், எனவே "ஏவாள்" என்பதன் மெய்யான அர்த்தம், எனது மகிமையைத் தொடருகிற ஒரு சிருஷ்டிக்கப்பட்ட சிருஷ்டியும், எனது ஜீவனால் நிரப்பப்பட்டவளும் மற்றும் எனது மகிமையைப் பெற்றுக்கொண்டவள் என்பதாகும். ஏவாள் ஆதாமிலிருந்து வந்தாள், அதனால் அவளும் என் சாயலைத் தரித்துள்ளாள், ஏனென்றால் அவள் என் சாயலில் சிருஷ்டிக்கப்பட்ட இரண்டாவது மனிதப் படைப்பு ஆவாள். "ஏவாள்" என்பதன் மெய்யான அர்த்தம் ஆவி, சதை மற்றும் எலும்பு ஆகியவற்றைக் கொண்ட, மனிதகுலத்திற்குள் எனது இரண்டாவது சாயலும் மற்றும் எனது இரண்டாவது சாட்சியுமாக இருக்கிற ஓர் உயிருள்ள மனுஷி என்பதாகும். இவர்களே மனிதகுலத்தின் மூதாதையர்கள், மனிதனின் தூய்மையான மற்றும் விலைமதிப்பற்ற பொக்கிஷமும், மற்றும் தொடக்கத்திலிருந்தே, ஆவி அருளப்பட்ட உயிரினங்களும் ஆவார்கள். இருப்பினும், பொல்லாங்கன், மனிதகுலத்தின் முன்னோர்களுடைய சந்ததியை மிதித்து சிறைப்பிடித்தான், மனித உலகத்தை முழுமையான அந்தகாரத்தில் மூழ்கடித்தான், மேலும் சந்ததியினர் நான் இருப்பதை இனியும் நம்பாதபடிக்குச் செய்தான். பொல்லாங்கன் ஜனங்களை சீர்கெடுத்து, அவர்கள் அனைவரையும் மிதிக்கிற நிலையிலும், அது என் மகிமையையும், என் சாட்சியத்தையும், நான் அவர்களுக்கு அளித்த உயிர் சக்தியையும், நான் அவர்களுக்குள் ஊதிய சுவாசம் மற்றும் ஜீவனையும், மனித உலகினுள் எனது மகிமையையும், நான் மனிதகுலத்தின் மீது செலவிட்ட எனது இருதயத்தின் இரத்தம் யாவற்றையும் கொடூரமாகப் பறிக்கிறான் என்பது இன்னும் அருவருப்பானதாக இருக்கிறது. மனிதகுலம் இனியும் வெளிச்சத்தில் இருப்பதில்லை, நான் அவர்களுக்கு அருளிய அனைத்தையும் ஜனங்கள் இழந்துவிட்டார்கள், நான் கொடுத்த மகிமையை அவர்கள் தூக்கி எறிந்துவிட்டார்கள். சிருஷ்டிக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் நானே கர்த்தராயிருக்கிறேன் என்பதை அவர்கள் எப்படி ஒப்புக்கொள்வார்கள்? பரலோகத்தில் நான் இருப்பதை அவர்கள் எப்படித் தொடர்ந்து நம்புவார்கள்? பூமியின்மீது என் மகிமையின் வெளிப்பாடுகளை அவர்கள் எவ்வாறு கண்டுபிடிப்பார்கள்? இந்தப் பேரன்கள் மற்றும் பேத்திகள், தங்கள் சொந்த முன்னோர்களைச் சிருஷ்டித்தவர் என்ற வகையில் அவர்கள் வணங்கிய தேவனை எவ்விதம் எடுத்துக்கொள்வார்கள்? இந்தப் பரிதாபமான பேரன்கள் மற்றும் பேத்திகள், பொல்லாங்கனுக்கு மகிமையையும், உருவத்தையும், ஆதாம் மற்றும் ஏவாளுக்கு நான் அருளிய சாட்சியத்தையும், மனிதகுலம் தங்கள் இருப்பிற்குச் சார்ந்துள்ளதான அவர்கள் மீது நான் அருளிய ஜீவனையும்கூட தாரளமாக "வழங்கி" இருக்கின்றனர்; மற்றும் இவர்கள் அந்தப் பொல்லாங்கன் இருத்தல் பற்றி முற்றிலும் கவலையற்றவர்களாய் இருக்கின்றனர் மற்றும் எனது மகிமையை அதற்குக் கொடுக்கின்றனர். இது "அழுக்கு" என்ற தலைப்பின் ஆதாரமாக இருக்கிறதல்லவா? அத்தகைய ஒரு மனிதகுலம், அத்தகைய பொல்லாத பிசாசுகள், அத்தகைய நடைப்பிணங்கள், அத்தகைய சாத்தானின் உருவங்கள், அத்தகைய என்னுடைய எதிரிகள் எப்படி என் மகிமையைக் கொண்டிருக்கக்கூடும்? நான் என் மகிமையை மீண்டும் மீட்டுக் கொள்ளுவேன், மனிதர்களிடையே இருக்கும் என் சாட்சியத்தை மறுபடியும் மீட்டுக்கொள்ளுவேன், மற்றும் ஒரு காலத்தில் எனக்குச் சொந்தமாயிருந்தவற்றையும், நீண்ட காலத்திற்கு முன்பே நான் மனிதகுலத்திற்குக் கொடுத்தவற்றையும்—மனிதகுலத்தையும் நான் முற்றிலுமாக ஜெயங்கொள்ளுவேன். இருப்பினும், நான் சிருஷ்டித்த மனிதர்கள் எனது சாயலையும் எனது மகிமையையும் பெற்றுக்கொண்ட பரிசுத்தவான்களாக இருந்தனர் என்பதை நீ அறிந்திருக்க வேண்டும். அவர்கள் சாத்தானுக்குரியவர்கள் அல்ல, அல்லது அதன் மிதித்தலுக்கு உட்பட்டவர்களும் அல்ல, ஆனால் அவர்கள் முற்றிலுமாக எனது வெளிப்பாடாயிருந்தனர், சாத்தானுடைய விஷத்தின் இலேசான தடயம்கூட இல்லாதவர்களாக இருந்தனர். எனது கரத்தினால் சிருஷ்டிக்கப்பட்ட, நான் நேசிக்கிற மற்றும் வேறு எவருக்கும் உரியவர்களாயிராத மனிதகுலத்தை மட்டுமே நான் விரும்புகிறேன் என்பதை மனிதகுலத்திற்கு நான் தெரிவிக்கிறேன். மேலும், அவர்களில் நான் சந்தோஷம் அடைந்து அவர்களை எனது மகிமையாகக் கருதுவேன். இருப்பினும், நான் விரும்புவது இன்றைய நாளில் சாத்தானால் சீர்கெடுக்கப்பட்டு, சாத்தானுக்குச் சொந்தமான, இனியும் எனது அசல் சிருஷ்டிப்பாயிராத மனிதகுலத்தை அல்ல. மனித உலகில் நிலவும் என் மகிமையை மீட்டெடுக்க நான் நோக்கம் கொண்டுள்ளதால், சாத்தானைத் தோற்கடிப்பதில் என் மகிமைக்குச் சான்றாக, மனிதர்களிடையே தப்பிப்பிழைத்தவர்களை நான் முழுமையாக ஜெயங்கொள்வேன். எனது சாட்சியை மட்டுமே எனது சுத்தத் தெளிவான தன்மையாக, எனது சந்தோஷத்தின் நோக்கமாக எடுத்துக்கொள்கிறேன். இதுவே என் சித்தமாக உள்ளது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “உண்மையான நபராக இருப்பதன் அர்த்தம் என்ன” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க