தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 323

மார்ச் 7, 2023

ஜனங்கள் நீண்ட காலமாக தேவனை விசுவாசிக்கிறார்கள், ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் "தேவன்" என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன என்று புரிந்துகொள்ளாமலே, வெறுமையாகக் கலக்கத்துடனே பின்பற்றுகிறார்கள். ஏன் மனிதன் தேவனை அவ்வாறு விசுவாசிக்க வேண்டும், அல்லது தேவன் என்றால் என்ன என்று அவர்கள் எந்த விவரமும் பெற்றிருக்கவில்லை. தேவனை விசுவாசிப்பதற்கும் பின்பற்றுவதற்கும் மட்டுமே ஜனங்களுக்குத் தெரியும், ஆனால் தேவன் என்றால் யாரென்று தெரியவில்லை, அவர்கள் தேவனை அறியவில்லை என்றால், இது ஒரு சிறந்த பெரிய நகைச்சுவை அல்லவா? இவ்வளவு தூரம் வந்திருந்து, ஜனங்கள் அநேக பரலோக மறைபொருட்களைக் கண்டிருந்தாலும், மனிதனால் முன்பு ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அதிக ஆழமான அறிவைக் கேட்டிருந்தாலும், மனிதனால் சிந்திக்கப்படாத மிக அடிப்படையான அநேக சத்தியங்களை அவர்கள் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். சிலர், "நாங்கள் பல ஆண்டுகளாக தேவனை விசுவாசிக்கிறோம். தேவன் என்றால் யார் என்று எங்களுக்கு எப்படித் தெரியாதிருக்கும்? இந்தக் கேள்வி எங்களைக் குறைத்து மதிப்பிடவில்லையா?" என்று சிலர் கூறலாம். இருப்பினும், உண்மையில், இன்று ஜனங்கள் என்னைப் பின்தொடர்ந்தாலும், இன்றைய எந்தக் கிரியையும் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது, மேலும் மிகத் தெளிவான மற்றும் எளிதான கேள்விகளைக் கூட கிரகித்துக் கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள், தேவனைப் பற்றிய மிகவும் சிக்கலான கேள்விகளை ஒருபுறம் தனியே விட்டு விடுகிறார்கள். நீ எந்த அக்கறையும் கொள்ளாத, நீ அடையாளம் காணாத கேள்விகளே நீ புரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்விகள் என்பதை அறிந்துகொள், ஏனென்றால் எதைக் கொண்டு உன்னையே ஆயத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில், நீ கவனம் செலுத்தாமலும், நீ அக்கறைக் கொள்ளாமலும், ஜனக்கூட்டத்தைப் பின்பற்ற மட்டுமே உனக்கு தெரிகிறது. நீ தேவன் மீது ஏன் விசுவாசம் வைக்க வேண்டும் என்பது உனக்கு உண்மையிலேயே தெரியுமா? தேவன் என்றால் யார் என்று உனக்கு உண்மையாகவே தெரியுமா? மனிதன் என்றால் யார் என்று உனக்கு உண்மையிலேயே தெரியுமா? தேவன் மீது விசுவாசம் கொண்ட ஒரு மனிதனாக, நீ இந்த காரியங்களைப் புரிந்துகொள்ளத் தவறினால், தேவனுடைய விசுவாசி என்ற மேன்மையை நீ இழக்கவில்லையா? இன்று எனது கிரியை இதுதான்: ஜனங்கள் அவர்களின் சாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், நான் செய்யும் அனைத்தையும் புரிந்துகொள்ள வேண்டும், தேவனின் உண்மையான முகத்தை அறிந்துகொள்ள வேண்டும். இது எனது ஆளுகைத் திட்டத்தின் இறுதி செயலும், இது எனது கிரியையின் கடைசிக் கட்டமுமாகும். அதனால்தான் வாழ்வின் இரகசியங்கள் அனைத்தையும் முன்கூட்டியே நான் உங்களுக்குச் சொல்கிறேன், இதன் மூலம் நீங்கள் என்னிடமிருந்து அவற்றை ஏற்றுக்கொள்ள முடியும். இது இறுதி யுகத்தின் கிரியை என்பதால், நீங்கள் இதற்கு முன்னர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத வாழ்வின் அனைத்துச் சத்தியங்களையும் நான் உங்களுக்கு கட்டாயமாகச் சொல்ல வேண்டும், நீங்கள் வெறுமனே மிகக் குறைபாடுள்ளவராகவும் மற்றும் மிக மோசமானவராகவும் இருப்பதால் அதைப் புரிந்துகொள்ளவோ அல்லது தாங்கவோ திறமையற்று இருக்கிறீர்கள். நான் என் கிரியையை முடிப்பேன்; நான் செய்ய வேண்டிய கிரியையை நான் முடிப்பேன், இருள் இறங்கும்போது நீங்கள் மீண்டும் வழிதவறி, தீய ஒருவரின் ஆலோசனைகளுக்குள் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக நான் உங்களுக்காக நியமிக்கப்பட்ட அனைத்தையும் உங்களுக்குச் சொல்வேன். இங்கு உங்களுக்குப் புரியாத பல வழிகள் உள்ளன, அவற்றில் நீங்கள் அறியாத பல விஷயங்கள் உள்ளன. நீங்கள் மிகவும் அறியாதவர்கள்; உங்கள் ஸ்தானமும் உங்கள் குறைகளும் எனக்கு முற்றிலும் நன்றாகத் தெரியும். ஆகையால், நீங்கள் புரிந்துகொள்ள இயலாத அநேக வார்த்தைகள் இருந்தாலும், நீங்கள் இதற்கு முன்னர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத இந்தச் சத்தியங்களை நான் உங்களுக்குச் சொல்ல இன்னும் ஆயத்தமாக இருக்கிறேன், ஏனென்றால் உங்கள் தற்போதைய ஸ்தானத்தில், நீங்கள் எனக்கு அளித்த சாட்சியத்தில் நீங்கள் உறுதியாக நிற்க முடியுமா என நான் கவலைப்படுகிறேன். இதை உங்களில் நான் சிறிதளவும் எண்ணவில்லை; நீங்கள் அனைவரும் எனது வழக்கமான பயிற்சிக்கு உட்படுத்தப்படாத மிருகங்கள், மேலும் உங்களுக்குள் எவ்வளவு மகிமை இருக்கிறது என்பதை என்னால் முற்றிலும் காண இயலாது. நான் உங்களிடம் அதிக ஆற்றலைச் செலவிட்டிருந்தாலும், உங்களில் உள்ள நேர்மறையான அம்சங்கள் வழக்கத்தில் இல்லை என்று தோன்றுகிறது, மேலும் எதிர்மறை அம்சங்களை ஒருவரின் விரல்களால் எண்ணி விடலாம், மற்றும் சாத்தானுக்கு வெட்கத்தைக் கொண்டுவரும் சாட்சியங்களாக மட்டுமே ஊழியம் செய்யுங்கள். உங்களில் உள்ள எல்லாவற்றிலும் சாத்தானின் விஷம் இருக்கிறது. நீங்கள் இரட்சிப்பிற்கு அப்பாற்பட்டவர் போல நீங்கள் என்னைப் பார்க்கிறீர்கள். விஷயங்களைப் பொருத்து, நான் உங்களின் பல்வேறு உணர்வுகளையும் மற்றும் நடத்தைகளையும் பார்க்கிறேன், இறுதியாக, உங்கள் உண்மையான ஸ்தானத்தை நான் அறிவேன். இதனால்தான் நான் எப்போதும் உங்கள் மீது வருத்தம் கொள்கிறேன்: தங்கள் சொந்த வாழ்க்கையை ஜீவிக்க விடப்பட்ட மனிதர்கள், அவர்கள் இன்று இருப்பதைக் காட்டிலும் உண்மையில் நல்லவர்களாக இருப்பார்களா அல்லது ஒப்பிடத்தக்கவர்களாக இருப்பார்களா? உங்களின் குழந்தைத்தனமான ஸ்தானம் உங்களைக் கவலையடையச் செய்யவில்லையா? தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேல் ஜனங்களைப் போல நீங்கள் உண்மையிலேயே எல்லா நேரங்களிலும், என்னில் மட்டுமே விசுவாசம் கொண்டவர்களாக இருக்க முடியுமா? உங்களிடமிருந்து வெளிப்படுவது தங்கள் பெற்றோரிடமிருந்து விலகிச் சென்ற பிள்ளைகளின் குறும்புத்தனம் அல்ல, ஆனால் அது எஜமானர்களின் சவுக்குகளை அடைய முடியாத விலங்குகளிடமிருந்து வெளிப்படும் மிருகத்தன்மையாக இருக்கிறது. நீங்கள் உங்களின் இயல்பை அறிந்துகொள்ள வேண்டும், இதுவும் நீங்கள் அனைத்தையும் பகிர்ந்துகொள்ளும் பலவீனமாக உள்ளது; இது உங்கள் அனைவருக்கும் பொதுவான ஒரு வியாதியாக உள்ளது. ஆகவே, இன்று நான் உங்களுக்கு அளிக்கும் ஒரே புத்திமதி என்னவென்றால், எனக்கு நீங்கள் அளித்த சாட்சியத்தில் உறுதியாக நிற்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும், பழைய வியாதியை மீண்டும் வெளி வர அனுமதிக்க வேண்டாம். சாட்சியத்தை ஏற்பது மிக முக்கியமானதாக உள்ளது—இது எனது கிரியையின் இருதயமாகும். ஒரு சொப்பனத்தில் தனக்கு வந்த யேகோவாவின் வெளிப்பாட்டை மரியாள் ஏற்றுக்கொண்டது போல நீங்களும் எனது வார்த்தைகளை விசுவாசிப்பதன் மூலமும் மற்றும் கீழ்ப்படிதலினாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இது மட்டுமே பரிசுத்தமானது என்ற தகுதியைப் பெறுகிறது. என் வார்த்தைகளை அதிகம் கேட்கும் நீங்கள் என்னால் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். என் விலையேறப்பெற்ற சொத்துக்கள் அனைத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன், எல்லாவற்றையும் நான் உங்களுக்கு வழங்கியுள்ளேன், ஆனால் நீங்கள் இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து மிகவும் வேறுபட்ட நிலையில் உள்ளீர்கள்; நீங்கள் சாதாரணமாகவே ஒருவருக்கொருவர் வேறுபட்டு உள்ளீர்கள். ஆனால் அவர்களுடன் ஒப்பிடும்போது, நீங்கள் அளவுக்கு அதிகமாகப் பெற்றுள்ளீர்கள்; அவர்கள் என் பிரசன்னத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும்போது, நீங்கள் என்னுடன் இனிமையான நாட்களைக் கழித்து, என் நன்மையைப் பகிர்ந்துகொள்கிறீர்கள். இந்த வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு, என்னோடு கத்தி வீண்சண்டையிடுவதற்கும், என் சொத்துக்களில் உங்கள் பங்கைக் கோருவதற்கும் உங்களுக்கு எது உரிமை கொடுக்கிறது? நீங்கள் அதிகம் பெற்றுக்கொள்ளவில்லையா? நான் உங்களுக்கு அளவுக்கு அதிகமாகத் தருகிறேன், ஆனால் அதற்குப் பதிலாக நீங்கள் எனக்கு மனதை உருக்கும் துக்கத்தையும் மற்றும் சஞ்சலத்தையும், அடக்கமுடியாத கோபத்தையும் மற்றும் அதிருப்தியையும் கொடுக்கிறீர்கள். நீங்கள் மிகவும் வெறுக்கத்தக்கவர்கள்—ஆனாலும் நீங்கள் பரிதாபகரமானவர்கள், அதனால் எனது அதிருப்தியை உட்கிரகித்துக்கொண்டு, என்னுடைய எதிர்ப்புகளை உங்களிடம் திரும்பத் திரும்பச் சொல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகாலக் கிரியைகளில், நான் ஒருபோதும் மனிதகுலத்திற்கு எதிராக நிற்கவில்லை, ஏனென்றால் மனிதகுலத்தின் வளர்ச்சியையே முழுவதும் கண்டறியப் பெற்றேன், பழங்காலத்தின் புகழ்பெற்ற மூதாதையர்களால் உங்களுக்கு எஞ்சியிருக்கும் விலைமதிப்பற்ற பரம்பரைச் சொத்துக்களைப் போல, உங்களிடையே உள்ள "புரளிகள்" மட்டுமே மிகவும் புகழ்பெற்றவையாக மாறிப்போயுள்ளன. அந்த மனிதநேயமற்ற பன்றிகளையும் நாய்களையும் எப்படி நான் வெறுக்கிறேன். உங்கள் மனசாட்சியில் அதிக குறைபாடு உள்ளது! நீங்கள் குணத்தில் மிகவும் இழிவானவர்! உங்கள் இருதயங்கள் மிகவும் கடுமையானவை! நான் இத்தகைய வார்த்தைகளை எடுத்து இஸ்ரவேல் புத்திரரிடம் கிரியைப் புரிந்திருந்தால், நான் வெகு காலத்திற்கு முன்பே மகிமை அடைந்திருப்பேன். ஆனால் உங்கள் நடுவில் இதனை அடைய முடியாததாக இருக்கிறது; உங்கள் நடுவில், தயவற்ற அலட்சியமும், உங்கள் புறக்கணிப்பும் மற்றும் உங்கள் சாக்குபோக்குகளும் மட்டுமே உள்ளன. நீங்கள் மிகவும் உணர்ச்சியற்றவராக, முற்றிலும் மதிப்பற்றவராக இருக்கிறீர்கள்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “தேவனைப் பற்றிய உன் புரிதல் என்ன?” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க