தேவனுடைய அனுதின வார்த்தைகள்: மனிதகுலத்தின் சீர்கேட்டினை அம்பலப்படுத்துதல் | பகுதி 306

மார்ச் 6, 2023

நான் பல வார்த்தைகளை வெளிப்படுத்தியுள்ளேன், மேலும் எனது சித்தத்தையும் மனநிலையையும் வெளிப்படுத்தியுள்ளேன், ஆனாலும்கூட, ஜனங்களால் என்னை அறிந்து கொள்ளவும் என்னை விசுவாசிக்கவும் இயலவில்லை. அல்லது, ஜனங்களால் இன்னும் எனக்குக் கீழ்ப்படிய இயலவில்லை என்று கூறலாம். வேதாகமத்திற்குள் வாழ்பவர்கள், நியாயப்பிரமாணத்திற்குள் வாழ்பவர்கள், சிலுவையில் வாழ்பவர்கள், கோட்பாட்டின்படி வாழ்பவர்கள், இன்று நான் புரியும் கிரியையின் மத்தியில் வாழ்பவர்கள் ஆகியோரில் யார் எனக்கு இணக்கமாய் இருக்கிறார்கள்? நீங்கள் ஆசீர்வாதங்களையும் வெகுமதிகளையும் பெறுவதைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறீர்கள், ஆனால் உண்மையில் என்னுடன் எவ்வாறு இணக்கமாய் இருக்க வேண்டும், அல்லது எனக்கு எதிராக இருப்பதிலிருந்து உங்களை நீங்களே எப்படித் தற்காத்துக் கொள்வது என்று சிந்தித்ததே இல்லை. நான் உங்களில் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன், ஏனென்றால் நான் உங்களுக்கு மிக அதிகமாகக் கொடுத்திருக்கிறேன், ஆனாலும் நான் உங்களிடமிருந்து மிகக் குறைவாகவே பெற்றிருக்கிறேன். உங்கள் மோசடி, உங்கள் ஆணவம், உங்கள் பேராசை, உங்கள் களியாட்ட ஆசைகள், உங்கள் துரோகம், உங்கள் கீழ்ப்படியாமை ஆகியவற்றில் எது எனது கவனத்திலிருந்து தப்பிக்க முடியும்? நீங்கள் என்னுடன் கவனக்குறைவாக இருக்கிறீர்கள், நீங்கள் என்னை முட்டாளாக்குகிறீர்கள், நீங்கள் என்னை அவமதிக்கிறீர்கள், நீங்கள் என்னை நயமாக ஏமாற்றுகிறீர்கள், நீங்கள் பலிகளைக் கொடுத்து நிர்ப்பந்திக்கிறீர்கள் மற்றும் என்னை மிரட்டுகிறீர்கள்—இதுபோன்ற தீமையால் நான் அளிக்கும் தண்டனையை எவ்வாறு தவிர்க்க முடியும்? இந்தத் தீமைகள் அனைத்தும் எனக்கு எதிரான உங்கள் பகைமைக்குச் சான்றாகும், மேலும் என்னுடன் நீங்கள் இணக்கமாய் இராத தன்மைக்குச் சான்றாகும். நீங்கள் ஒவ்வொருவரும் என்னுடன் மிகவும் இணக்கமாய் இருப்பதாக விசுவாசிக்கிறீர்கள், ஆனால் அப்படி இருந்தால், அத்தகைய மறுக்கமுடியாத சான்றுகள் யாருக்குப் பொருந்தும்? நீங்கள் என் மீது மிகுந்த நேர்மையையும் விசுவாசத்தையும் வைத்திருப்பதாக நீங்கள் நம்புகிறீர்கள். நீங்கள் மிகவும் கனிவானவர்கள், மிகவும் இரக்கமுள்ளவர்கள், எனக்காக இவ்வளவு அர்ப்பணித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் எனக்கு போதுமானதை விட அதிகமாகச் செய்துள்ளீர்கள் என்று நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் செயல்களுக்கு எதிரானதாக இதனை எப்போதாவது வைத்திருக்கிறீர்களா? நீங்கள் மிகவும் திமிர்பிடித்தவர்கள், ஏராளமாகப் பேராசை கொண்டவர்கள், ஏராளமாக அக்கறையற்றவர்கள் என்று நான் சொல்கிறேன்; நீங்கள் என்னை முட்டாளாக்கும் தந்திரங்கள் ஏராளமாக புத்திசாலித்தனமானவை, மேலும் உங்களிடம் ஏராளமான அற்பமான நோக்கங்களும் அற்பமான முறைகளும் உள்ளன. உங்கள் விசுவாசம் மிகக் குறைவு, உங்கள் உற்சாகம் மிகவும் அற்பமானது, உங்கள் மனசாட்சி இன்னும் குறைவு. உங்கள் இதயங்களில் அதிகப்படியான தீங்கிழைக்கும் தன்மை உள்ளது, மேலும் உங்கள் தீமையிலிருந்து யாரும் விடுபடவில்லை, நான்கூட இல்லை. உங்கள் பிள்ளைகளுக்காக, அல்லது உங்கள் கணவருக்காக அல்லது உங்கள் சுய பாதுகாப்பிற்காக நீங்கள் என்னை வெளியேற்றுகிறீர்கள். என் மீது அக்கறை காட்டுவதற்குப் பதிலாக, உங்கள் குடும்பம், உங்கள் குழந்தைகள், உங்கள் அந்தஸ்து, உங்கள் எதிர்காலம் மற்றும் உங்கள் சொந்த மனநிறைவைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள். நீங்கள் பேசியதைப் போல் அல்லது செயல்பட்டதைப் போல் என்னை நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? கடுங்குளிர் நாட்களில், உங்கள் சிந்தனை உங்கள் குழந்தைகள், உங்கள் கணவன், உங்கள் மனைவி அல்லது உங்கள் பெற்றோரிடம் திரும்பும். கடும்வெயில் நாட்களில், உங்கள் சிந்தனையில் எனக்கு இடமில்லை. நீ உன் கடமையைச் செய்யும்போது, நீ உன் சொந்த நலன்களைப் பற்றியும், உன் சொந்த பாதுகாப்பைப் பற்றியும், உன் குடும்ப உறுப்பினர்களைப் பற்றியும் சிந்திக்கிறாய். எனக்காக நீ இதுவரை என்ன செய்திருக்கிறாய்? நீ எப்போது என்னைப் பற்றி சிந்தித்திருக்கிறாய்? என்ன நடந்தாலும் எப்போது நீ என்னிடமும் எனது கிரியையிடமும் உன்னை அர்ப்பணித்திருக்கிறாய்? என்னுடன் நீ இணக்கமாய் இருப்பதற்கான சான்று எங்கே? நீ எனக்கு விசுவாசமாக இருப்பதன் நிதர்சனம் எங்கே? நீ எனக்குக் கீழ்ப்படிவதன் நிதர்சனம் எங்கே? உன் நோக்கங்கள் எனது ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காக என்று எப்போது இல்லாமல் இருந்தது? நீங்கள் என்னை முட்டாளாக்கி, ஏமாற்றுகிறீர்கள், நீங்கள் சத்தியத்துடன் விளையாடுகிறீர்கள், சத்தியத்தின் இருப்பை மறைக்கிறீர்கள், சத்தியத்தின் சாராம்சத்தைக் காட்டிக் கொடுக்கிறீர்கள். இந்த வழியில் எனக்கு எதிராகச் செல்வதனால் எதிர்காலத்தில் உங்களுக்கு என்ன காத்திருக்கிறது? நீங்கள் வெறுமனே கற்பனை தேவனுடன் இணக்கமாய் இருக்க நாடுகிறீர்கள், குழப்பமான நம்பிக்கையை நாடுகிறீர்கள், ஆயினும் நீங்கள் கிறிஸ்துவுடன் இணக்கமாய் இல்லை. துன்மார்க்கனுக்குக் கிடைக்க வேண்டிய அதே பதிலடியை உங்கள் குறைபாடு பெறவில்லையா? அந்த நேரத்தில், கிறிஸ்துவுக்கு இணக்கமாய் இராத எவரும் கோபாக்கினை நாளிலிருந்து தப்ப முடியாது என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள், மேலும் கிறிஸ்துவுக்கு எதிரானவர்கள் மீது என்ன வகையான பழிவாங்கல் உருவாக்கப்படும் என்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். அந்த நாள் வரும்போது, தேவன் மீது நீங்கள் வைத்துள்ள உங்கள் விசுவாசத்துக்காக ஆசீர்வதிக்கப்படுவது, பரலோகத்திற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவது குறித்த உங்கள் கனவுகள் அனைத்தும் சிதைந்துவிடும். ஆயினும், கிறிஸ்துவோடு இணக்கமாய் இருப்பவர்களுக்கு அது அவ்வாறு இருக்காது. அவர்கள் எவ்வளவு இழந்திருந்தாலும், அவர்கள் மிகவும் கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும், நான் மனுஷகுலத்திற்குக் கொடுக்கும் சுதந்தரம் அனைத்தையும் அவர்கள் பெறுவார்கள். இறுதியில், நான் மட்டுமே நீதியுள்ள தேவன் என்பதையும், மனுஷகுலத்தை அவனுடைய அழகான இலக்கை நோக்கி அழைத்துச் செல்ல என்னால் மட்டுமே கூடும் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீங்கள் கிறிஸ்துவுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியை நாட வேண்டும்” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க