தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 536

மே 18, 2023

தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் உயிருக்கு ஆபத்தான இடங்களில் ஓங்கி அடித்து, நம்மைக் காயப்படுத்தி, பயத்தினால் நிறைந்திருக்கச் செய்கிறது. அவர் நமது கருத்துகளையும், நமது கற்பனைகளையும், நமது கேடான மனநிலையையும் அம்பலப்படுத்துகிறார். நாம் சொல்லும் மற்றும் செய்யும் எல்லா காரியங்கள் முதற்கொண்டு, நம்முடைய எல்லா எண்ணங்கள் மற்றும் யோசனைகள் வரை, நம்முடைய சுபாவமும் சாராம்சமும் அவருடைய வார்த்தைகளில் வெளிப்பட்டு, நம்மை அச்ச நிலையில் ஆழ்த்தி, நமது அவமானத்தை மறைக்க இடமில்லாமல் நடுங்குகிறோம். நம்முடைய செயல்கள், நம்முடைய குறிக்கோள்கள், நோக்கங்கள் மற்றும் நாம் ஒருபொழுதும் கண்டுபிடிக்காத கேடான மனநிலை எல்லாவற்றையும் பற்றி அவர் ஒவ்வொன்றாக நம்மிடம் சொல்கிறார், நம்முடைய மோசமான குறைபாடு அனைத்தையும் அம்பலப்படுத்தியதாக உணரச் செய்து, நம்மை இன்னும் முழுமையாக ஆட்கொள்கிறார். நாம் அவரை எதிர்த்ததற்காக அவர் நம்மை நியாயந்தீர்க்கிறார், அவரை நிந்தித்ததற்காகவும், பழித்துரைத்ததற்காகவும் நம்மைத் தண்டிக்கிறார். அவருடைய பார்வையில், நாம் மீட்டுக்கொள்ளப்படும் ஓர் அம்சமாக இல்லாமல், நாம் வாழும் சாத்தானாக இருக்கிறோம் என்பதை நம்மை உணரச் செய்கிறார். நமது நம்பிக்கைகள் பாழாகிப்போய்விட்டன, அவரிடம் எந்தவொரு நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைக்கவோ அல்லது அவரைப் பற்றிய வடிவமைப்புகள் எதையும் பயன்படுத்தவோ நாம் இனிமேலும் துணிவதில்லை, நம்முடைய கனவுகள் கூட ஒரே இரவில் மாயமாகிவிடுகின்றன. இது நம்மில் யாராலும் கற்பனை செய்துபார்க்க முடியாத மற்றும் நம்மில் யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத ஓர் உண்மையாகும். ஒரு கணப்பொழுதில், நமது ஆழ்மனதின் சமநிலையை இழக்கிறோம், மேலும் முன்னால் உள்ள பாதையில் எவ்வாறு தொடர்ந்து பயணிக்கலாம் அல்லது நமது நம்பிக்கைகளில் எவ்வாறு தொடர்வது என்று நமக்குத் தெரிவதில்லை. நமது விசுவாசம் சதுக்கம் ஒன்றிற்கு திரும்பிச் சென்றுள்ளது போலவும், நாம் ஒருபொழுதும் கர்த்தராகிய இயேசுவைச் சந்தித்ததில்லை அல்லது அவரைத் தெரிந்துகொண்டதில்லை என்பது போலவும் தோன்றுகிறது. நமது கண்களுக்கு முன்னால் உள்ள அனைத்தும் நம்மைக் குழப்பத்தில் ஆழத்துகின்றன, மேலும் நம்மை உறுதியில்லாமல் அலைக்கழிக்கின்றன. நாம் திகைத்து நிற்கிறோம், நாம் விரக்தி அடைகிறோம், நமது இருதயங்களின் ஆழத்தில் கட்டுப்படுத்த இயலாத கோபமும் அவமானமும் உள்ளன. நாம் வெளியேறவும், வெளியேறுவதற்கான ஒரு வழியைக் கண்டுபிடிக்கவும் முயற்சி செய்கிறோம். மேலும் என்னவென்றால், நம்முடைய இருதயங்களை அவரிடம் ஊற்றுவதற்காக நம்முடைய இரட்சகராகிய இயேசுவுக்காகத் தொடர்ந்து காத்திருக்கிறோம். இறுமாப்போ அல்லது மனத்தாழ்மையோ இல்லாமல், ஒரு சமமான அடித்தளத்தில் இருக்க நாம் வெளிப்புறத்தில் தோன்றும் தருணங்களும் காணப்பட்டாலும், நாம் இதற்கு முன்பு உணராத இழப்பு உணர்வினால் நமது இருதயங்களில் வேதனைப்படுகிறோம். சில நேரங்களில் நாம் வெளிப்புறத்தில் அசாதாரணமாக அமைதியாக இருப்பது போலத் தோன்றினாலும், நமது மனமோ கொந்தளிக்கும் கடல் போல வேதனையுடன் சுழன்று கொண்டிருக்கிறது. அவருடைய நியாயத்தீர்ப்பும் ஆக்கினைத்தீர்ப்பும் நம்முடைய நம்பிக்கைகள் மற்றும் கனவுகள் அனைத்தையும் நம்மிடமிருந்து பறித்துக் கொண்டு, நம்முடைய பகட்டான ஆசைகளுக்கு முடிவுகட்டி, அவர் நம்முடைய இரட்சகர் என்றும், நம்மை இரட்சிக்க வல்லவர் என்றும் நம்புவதற்கு நம்மை விருப்பமற்றவராக்கியுள்ளன. அவருடைய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் நமக்கும் அவருக்கும் இடையில் யாரும் கடக்க விரும்பாத மிகவும் ஆழமான ஒரு பெரிய பள்ளத்தை திறந்துவைத்துள்ளன. அவருடைய நியாயத்தீர்ப்பினாலும் சிட்சையினாலும் நமது வாழ்வில் இதுபோன்றதொரு பெரிய பின்னடைவையும், இதுபோன்ற பெரிய அவமானத்தையும் அனுபவிப்பது இதுவே முதல் முறையாகும். அவருடைய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் தேவனுடைய கனத்தையும் மனுஷனின் குற்றத்தைச் சகித்துக்கொள்ள இயலாதத்தன்மையையும் உண்மையிலேயே பாராட்ட வைத்துள்ளன, இதனுடன் ஒப்பிடும்போது நாம் மிகவும் இழிவானவர்களாகவும், தூய்மையற்றவர்களாகவும் இருக்கிறோம். அவருடைய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் நாம் எவ்வளவு இறுமாப்புள்ளவர்களாகவும் பகட்டானவர்களாகவும் இருக்கிறோம் என்பதையும், மனுஷன் ஒருபொழுதும் தேவனுக்கு சமமாக மாட்டான் அல்லது தேவனுக்கு இணையாக மாட்டான் என்பதையும் நமக்கு முதன்முறையாக உணர வைத்துள்ளது. அவருடைய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் இனிமேலும் இதுபோன்றதொரு கேடான மனநிலையில் வாழாமலிருக்கவும், இந்த சுபாவத்தையும் சாராம்சத்தையும் நம்மிலிருந்து முடிந்தவரை சீக்கிரமே விரட்டவும், அவருக்கு இழிவாகவும் வெறுக்கத்தக்கதாகவும் இருப்பதை நிறுத்தவும் நம்மை ஏங்க வைத்துள்ளது. அவருடைய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதிலும், இனிமேலும் அவருடைய திட்டங்களுக்கும் ஏற்பாடுகளுக்கும் விரோதமாகக் கலகம் செய்யாமலிருப்பதிலும் நம்மைச் சந்தோஷப்படுத்தியுள்ளன. அவருடைய நியாயத்தீர்ப்பும் சிட்சையும் மீண்டும் ஒரு முறை உயிர்வாழும் ஆசையை நமக்குக் கொடுத்துள்ளன, மேலும் அவரை நம்முடைய இரட்சகராக ஏற்றுக்கொள்வதில் நமக்குச் சந்தோஷத்தை அளித்துள்ளன…. நாம் ஜெயத்தின் கிரியையிலிருந்து, நரகத்திலிருந்து, மரண இருளின் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறிவிட்டோம்…. சர்வவல்லமையுள்ள தேவன் இந்த ஜனக்கூட்டமாகிய நம்மை ஆதாயப்படுத்தியுள்ளார்! அவர் சாத்தானை ஜெயங்கொண்டிருக்கிறார், அவருடைய திரளான எதிரிகளைத் தோற்கடித்திருக்கிறார்!

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "பிற்சேர்க்கை 4: தேவனுடைய தோன்றுதலை அவருடைய நியாயத்தீர்ப்பிலும் சிட்சையிலும் காணுதல்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க