தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 416

நவம்பர் 16, 2020

உங்கள் அனுதின வாழ்க்கையில் நீங்கள் ஜெபத்திற்கு முக்கிய இடமளிப்பதில்லை. ஜெபக்காரியங்களை மனிதன் ஒதுக்கிவிடுகிறான். ஜெபமானது வெறுமனே தேவனுக்கு முன்பாகச் செல்லுகிற ஒரு இயக்கமாகவும், கடமைக்காகச் செய்யப்படுகிற ஒரு செயலாகவும் வழக்கமாகக் காணப்படுகின்றது. ஒருவனும் உண்மையான ஜெபத்தில் தேவனோடு இணைந்து, தன் இருதயத்தை முழுமையாக அர்ப்பணித்ததில்லை. பிரச்சனைகள் எழும்பியபோது மட்டுமே மனிதன் தேவனிடம் ஜெபத்தை ஏறெடுத்தான். இத்தனை காலத்தில், நீ எப்போதாவது தேவனிடம் உண்மையாகவே ஜெபித்ததுண்டா? நீ தேவனுக்கு முன்பாக வேதனையுடன் கண்ணீர் சிந்தி அழுத நேரம் என்று ஒன்று உண்டா? நீ தேவனுக்கு முன்பாக உன்னை நிதானித்து அறிந்த நேரம் என்று ஒன்று உண்டா? நீ எப்பொழுதாவது, தேவனுடைய இருதயத்தோடு இருதயமாக இணைந்து ஜெபித்து இருக்கிறாயா? ஜெபமானது பயிற்சியின் மூலமாக வருகிறது. ஒருவேளை நீங்கள் உங்கள் வீட்டில் வழக்கமாக ஜெபிக்கிற நபராக இல்லை என்றால், நீங்கள் சபையில் ஜெபிக்கும் வாய்ப்பைப் பெற வழியே இருக்காது; மேலும் உங்களுக்குச் சிறிய கூடுகைகளில் ஜெபிக்கிற பழக்கமில்லாதிருந்தால், நீங்கள் பெரிய அளவிலான கூட்டங்களில் ஜெபிக்கத் தகுதியற்றவர்களாகக் காணப்படுவீர்கள். நீங்கள் தேவனுக்கு அருகாமையில் செல்லாமலும், தேவனுடைய வார்த்தையைச் சிந்தித்து, அசை போடாமலும் தொடர்ந்து காணப்படும்போது, ஜெப நேரத்தில் தேவனோடு பேச உங்களுக்கு வார்த்தைகள் கிடைப்பதில்லை; அப்படியிருந்தும் நீங்கள் ஜெபிக்க முற்படும்பொழுது, நீங்கள் உதட்டளவில் ஜெபம் செய்கிறவர்களாக இருப்பீர்களே தவிர, உங்கள் ஜெபம் உண்மையான ஜெபமாக இருக்காது.

உண்மையான ஜெபம் என்றால் என்ன? உண்மையான ஜெபம் என்பது உங்கள் இருதயத்தில் உள்ளவற்றைத் தேவனிடத்தில் எடுத்துக் கூறுவதாகும், அவருடைய சித்தத்தைப் புரிந்துகொண்டு, தேவனோடு ஐக்கியப்படுவதாகும், தேவனுடைய வார்த்தையின் மூலமாக அவருடன் தொடர்பு கொள்வதாகும், குறிப்பாகத் தேவனுக்கு அருகில் இருப்பதை உணர்ந்து கொள்வதாகும், அவர் உங்களுக்கு முன் இருப்பதை உணர்ந்து, தேவனிடம் பேசுவதற்கு உங்களிடம் ஏதோ இருப்பதாக நம்புவதாகும். உங்கள் இருதயம் ஒளியால் நிறைந்திருப்பதை உணர்கிறது; மேலும், தேவன் எவ்வளவு அன்பானவர் என்பதையும் உணர்கிறீர்கள். நீ தேவனிடமாக ஈர்க்கப்படுவதாக உணர்கிறாய்; உன்னிடம் கேட்கிற உன் சகோதர, சகோதரிகளுக்கு உன் வார்த்தைகள் மனநிறைவைக் கொண்டு வருகின்றன. அவர்கள் சொல்ல விரும்பிய, அவர்களுடைய வார்த்தைகள் உன்னுடைய வார்த்தைகளுக்கு ஒத்ததாக இருப்பது போல, அவர்கள் தங்கள் மனதில் உள்ள வார்த்தைகளை நீயே பேசி வெளிப்படுத்துவதாக உணர்வார்கள். இதுவே உண்மையான ஜெபமாகும். உண்மையான ஜெபத்தில் நீ தரித்திருக்கும்பொழுது, உன் இருதயம் சமாதானத்துடன் காணப்பட்டு மனநிறைவை அறியும். தேவனை நேசிக்கும் பலம் அதிகரித்து, தேவனை நேசிப்பதைக் காட்டிலும் மிகவும் மதிக்கப்படத்தக்கவை அல்லது வாழ்க்கையில் குறிப்பிடத் தக்க சிறந்தவை எதுவுமில்லை என்று உணர்வாய். இவை அனைத்தும் உனது ஜெபம் வல்லமையுள்ளது என்பதை நிரூபிக்கின்றது. இதைப் போல், நீ எப்போதாவது ஜெபித்ததுண்டா?

ஜெபத்தின் உள்ளடக்கம் எப்படி இருக்க வேண்டும்? உன் இருதயத்தின் உண்மையான நிலை மற்றும் பரிசுத்த ஆவியானவருடைய கிரியைக்கு ஏற்றவாறு உன் ஜெபம் படிப்படியாக முன்னோக்கிச் செல்ல வேண்டும். அவர் மனிதனிடத்தில் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை அறியவும், அவருடைய சித்தத்திற்கு ஏற்றவாறு நடந்து கொள்ளவும், நீ தேவனோடு ஐக்கியம் கொள்ள வருகிறாய். ஜெபத்தை உங்கள் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தத் துவங்கும்பொழுது, முதலாவது உங்கள் இருதயத்தை தேவனுக்குக் கொடுங்கள். தேவ சித்தத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்காமல், உங்கள் இருதயத்தில் உள்ள வார்த்தைகளை மட்டும் தேவனிடம் பேச முயற்சி செய்யுங்கள். நீ தேவனுக்கு முன்பாக வரும்பொழுது இவ்விதமாகப் பேசு: "தேவனே, நான் உமக்குக் கீழ்ப்படியாமல் இருக்கிறதை இன்றைக்குத்தான் உணர்கிறேன். நான் உண்மையிலேயே குற்றம் உள்ளவனும் வெறுக்கப்படத்தக்கவனுமாய் இருக்கிறேன். நான் என் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறேன். இன்று முதல் நான் உமக்காக வாழ்வேன். நான் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து, நீர் திருப்தி அடையும்படி உம்முடைய சித்தத்தை நிறைவேற்றுவேன். உம்முடைய ஆவி என்னில் எப்பொழுதும் கிரியையை நடப்பித்து, தொடர்ந்து என்னை ஒளிரச் செய்து அறிவூட்டுவதாக. அதனால் நான் உமக்கு முன்பாக உறுதியான மற்றும் மாபெரும் சாட்சி பகருகிறவனாக விளங்கட்டும். எங்களில் வெளிப்படுத்தப்பட்டு இருக்கிற உம்முடைய மகிமை, உம்முடைய சாட்சி மற்றும் உம்முடைய வெற்றியின் ஆதாரங்களைச் சாத்தான் பார்ப்பானாக." இவ்விதமாக, நீ ஜெபிக்கும்பொழுது, உன் இருதயம் முழுமையாக விடுதலையைப் பெற்றிருக்கும். இவ்வாறாக ஜெபிக்கும் பொழுது, உன் இருதயம் தேவனுக்கு மிகவும் அருகாமையில் இருக்கும். இது போன்று அடிக்கடி ஜெபிக்கும்பொழுது, பரிசுத்த ஆவியானவர் நிச்சயமாக உன்னில் கிரியையை நடப்பிப்பார். இவ்விதமாக நீ எப்பொழுதும் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, உன் தீர்மானங்களை அவருக்கு முன்பாக வைக்கும்பொழுது, உன் தீர்மானங்கள் தேவனுக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்டு, உன் இருதயமும் உன் முழுமையும் தேவனால் சுதந்தரிக்கப்படும். இறுதியில் நீ அவராலே பரிபூரணமாக்கப்படுவாய். உங்களுக்கு ஜெபமானது மிகவும் இன்றியமையாதது ஆகும். நீங்கள் ஜெபித்து பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெற்றுக்கொள்ளும் பொழுது, உங்கள் இருதயம் தேவனால் அசைக்கப்படும், மேலும் தேவனை நேசிக்கும்படியான பெலன் உள்ளே இருந்து வெளிப்படும். நீ உன் முழு உள்ளத்தோடு ஜெபிக்காமலும் தேவனோடு ஐக்கியம் கொள்ளும்படி உன் உள்ளத்தைத் திறக்காமலும் இருந்தால், தேவன் உன்னில் கிரியை நடப்பிக்க இயலாது. உன் இருதயத்தில் உள்ள வார்த்தைகளைத் தேவனிடம் சொல்லி ஜெபித்த பின்பும் தேவ ஆவியானவர் தன் கிரியையை இன்னும் நடப்பிக்கத் தொடங்காமலும், நீ உணர்த்துதல்களைப் பெற்றுக் கொள்ளாமல் இருந்தால், அது உன் இருதயத்தில் நேர்மை குறைந்து இருப்பதையும், உன் வார்த்தையில் உண்மை இல்லாத தன்மையையும் மற்றும் இன்னும் தூய்மை இல்லாத தன்மையையும் காட்டுகிறது. ஒருவேளை, ஜெபித்த பின்பு நீ மனநிறைவு அடைந்ததை உணர்வாயேயானால், உன் ஜெபங்கள் தேவனுக்கு முன்பாக அங்கீகரிக்கப்பட்டதாய் காணப்படும். மேலும், தேவ ஆவியானவர் உன்னில் கிரியை செய்து கொண்டு இருக்கிறார். தேவனுக்கு முன்பாக ஊழியம் செய்கிற ஒருவனால் ஜெபிக்காமல் இருக்க முடியாது. உண்மையிலேயே நீ தேவனுடனான ஐக்கியத்தை அர்த்தமுள்ளதாகவும், விலைமதிப்புமிக்க ஒன்றாகவும் பார்த்தாயேயானால், நீ ஜெபத்தை கைவிட முடியுமா? தேவனுடனான ஐக்கியம் இல்லாமல் ஒருவனும் இருக்க முடியாது. நீ ஜெபிக்காமலிருந்தால் மாமிசத்தில் வாழ்ந்து, சாத்தானுடைய கட்டுகளில் இருப்பாய். உண்மையான ஜெபம் இல்லாத பட்சத்தில், நீ இருளின் ஆதிக்கத்தின் கீழ் வாழ்கிறாய். என் சகோதர, சகோதரிகளே, நீங்கள் ஒவ்வொரு நாளும் உண்மையான ஜெபத்தில் இணைந்திருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இது வெறுமனே விதிகளைக் கைக்கொள்வதைப் பற்றியது அல்ல; மாறாக, ஒரு குறிப்பிட்ட பலனை அடைந்து கொள்வதாகும். ஜெபத்திற்காக அதிகாலையில் எழுந்து, தேவனுடைய வார்த்தையை மகிழ்ச்சியோடு அனுபவிக்க, உங்களது சிறிது தூக்கத்தையும் சந்தோஷத்தையும் சற்று கைவிட நீங்கள் ஆயத்தமா? நீங்கள் சுத்த இருதயத்துடன் இவ்விதமாக ஜெபம் செய்து, தேவனுடைய வார்த்தையைப் புசித்து, அதைப் பருகும்பொழுது, நீங்கள் அவருக்கு மிகவும் உகந்தவர்களாகக் காணப்படுவீர்கள். தினமும் காலையிலும் நீ இப்படிச் செய்வாயேயானால், ஒவ்வொருநாளும் நீ உன் இருதயத்தைத் தேவனுக்கு அளிப்பதை வழக்கமாக்கிக் கொண்டும், அவருடன் தொடர்பு கொண்டும், அவரில் ஈடுபாடு கொண்டும் காணப்படுவாயேயானால் தேவனை குறித்ததான உன் அறிவு நிச்சயமாகவே அதிகரிப்பதோடு, நீ தேவ சித்தத்தை இன்னும் அதிகமாகப் புரிந்துகொள்ள முடியும். நீ தேவனிடம் இப்படியாகக் கூறு: "தேவனே, நான் எனது கடமையைச் செய்து முடிக்க விரும்புகிறேன். என்னை முழுவதும் உமக்காக மட்டுமே பரிசுத்தப்படுத்துகிறேன். அதனால், நீர் எங்களில் மகிமைப்படுவீராக; மற்றும், நீர் எங்கள் கூட்டத்தினால் உண்டான சாட்சியில் மகிழ்ச்சியடைவீராக. நீர் எங்களுக்குள் கிரியை நடப்பிக்கும்படியாகக் கெஞ்சி மன்றாடுகிறேன்; அதினிமித்தம் நான் உம்மை உண்மையாக நேசித்து, உம்மைத் திருப்திப்படுத்தி, உம்மை என் இலக்காக வைத்துப் பின்தொடரவும் இயலும்." இவ்வாறு பாரத்துடன் ஜெபிக்கும் பொழுது, தேவன் உன்னை நிச்சயமாகவே பரிபூரணப்படுத்துவார். நீ உனது சுய லாபத்திற்காக மட்டுமே ஜெபிக்கக் கூடாது. தேவனுடைய சித்தத்தை கைக்கொள்வதற்காகவும், அவரை நேசிப்பதற்காகவும் கூட நீ ஜெபிக்க வேண்டும். இதுவே, உண்மையான ஜெபம் ஆகும். தேவனுடைய சித்தத்தைக் கைக்கொள்ளும்படியாக ஜெபிக்கிற ஒருவராக நீ இருக்கிறாயா?

கடந்த காலங்களில் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று அறியாதிருந்ததினால், நீங்கள் ஜெபம் என்ற ஒன்றைப் புறக்கணித்தீர்கள். இப்பொழுதோ, ஜெபத்திற்கு உங்களையே பயிற்றுவிப்பதற்கு, நீங்கள் உங்களாலான மட்டும் சிறப்புடன் செயல்பட வேண்டும். தேவனை நேசிக்க உனக்குள் காணப்படுகிற பலத்தை உன்னால் வரவழைக்க முடியாவிட்டால், எப்படி ஜெபிக்க வேண்டும்? "தேவனே, உம்மை உண்மையாக நேசிக்க என் இருதயத்திற்கு இயலவில்லை. நான் உம்மை நேசிக்க விரும்புகிறேன். ஆனால், அதற்கு என்னில் பெலன் இல்லை. நான் என்ன செய்ய வேண்டும்? நீர் ஏன் ஆவிக்குரிய கண்களைத் திறப்பீராக. மேலும், உம்முடைய ஆவி என் இருதயத்தை அசைக்கட்டும். நான் உமக்கு முன்பாக வரும்பொழுது, எதிர்மறையான எல்லாவற்றையும் எறிந்துவிட்டு, எந்த ஒரு மனிதனாலோ, ஒரு விஷயத்தாலோ அல்லது ஒரு பொருளாலோ நான் ஆட்கொள்ளப்பட்டு இருப்பதிலிருந்து நீங்கலாகி, என் இருதயத்தை முற்றிலும் வெறுமையாக்கி, உமக்கு முன்பாக வைக்கிறேன்; என்னை முழுவதுமாக உமக்கு முன்பாக அர்ப்பணிக்கும்படி அப்படி செய்கிறேன். இருப்பினும், நீர் என்னைச் சோதிக்கலாம்; நான் ஆயத்தமாக இருக்கிறேன். இப்பொழுது நான் என் எதிர்கால வாய்ப்புகளைக் கருத்தில் கொள்வதில்லை; மரணத்தின் நுகத்தின் கீழ் நான் இருப்பதுமில்லை. உம்மை நேசிக்கும் இதயத்துடன் ஜீவ வழியைத் தேட விரும்புகிறேன். ஒவ்வொரு காரியமும் அல்லது எல்லா விஷயங்களும் உம்முடைய கரங்களில் இருக்கின்றன. என் வாழ்க்கையின் விதி உமது கரங்களில் இருக்கின்றது. என் ஜீவனையும் நீர் உமது கரங்களில் வைத்திருக்கிறீர். இப்பொழுதும் நான் உம்மை நேசிக்கிறேன். நான் உம்மை நேசிக்க, நீர் என்னை அனுமதிக்கிறீரோ இல்லையோ என்பதை பொருட்படுத்தாமல், சாத்தான் எவ்வாறு தலையிடுகிறான் என்பதையும் பொருட்படுத்தாமல், நான் உம்மை நேசிக்கத் தீர்மானித்திருக்கிறேன்." நீங்கள் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளும்போது, இப்படியாக ஜெபம் செய்யுங்கள். ஒவ்வொரு நாளும் நீ இப்படி ஜெபம் செய்தாயேயானால், தேவனை நேசிக்கும் வலிமை படிப்படியாக உயரும்.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “ஜெபத்தைப் பயிற்சி செய்வது குறித்து” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க