தேவனுடைய அனுதின வார்த்தைகள்: ஜீவனுக்குள் பிரவேசித்தல் | பகுதி 398

செப்டம்பர் 12, 2023

பரிசுத்த ஆவியானவரின் தற்போதைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியக்கூடிய அனைவரும் பாக்கியவான்கள். அவர்கள் எப்படி இருந்தார்கள் அல்லது பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள் எவ்வாறு கிரியை செய்தார் என்பது முக்கியமல்ல, தேவனுடைய சமீபத்திய கிரியையை அடைந்த அவர்கள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் ஆவர், மற்றும் இன்றைய சமீபத்திய கிரியையைப் பின்பற்ற முடியாதவர்கள் புறம்பாக்கப்படுகிறார்கள். புதிய ஒளியை ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களை தேவன் விரும்புகிறார், மேலும் அவருடைய சமீபத்திய கிரியைகளை ஏற்றுக்கொண்டு அறிந்தவர்களை அவர் விரும்புகிறார். நீங்கள் ஒரு கற்புள்ள கன்னிகையாக இருக்க வேண்டும் என்று ஏன் கூறப்படுகிறது? ஒரு கற்புள்ள கன்னிகையால் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தேடவும், புதிய விஷயங்களைப் புரிந்துகொள்ளவும், மேலும், பழைய கருத்துக்களை ஒதுக்கி வைத்து, இன்றைய தேவனுடைய கிரியைக்குக் கீழ்ப்படியவும் முடிகிறது. இன்றைய புதிய கிரியையை ஏற்றுக் கொள்ளும் இந்த ஜனக்கூட்டம், யுகங்களுக்கு முன்பே தேவனால் முன்னரே முன்குறிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் ஜனங்களுள் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். நீங்கள் தேவனுடைய சத்தத்தை நேரடியாகக் கேட்கிறீர்கள், தேவனுடைய தோற்றத்தைக் காண்கிறீர்கள். ஆகவே, வானம் பூமி முழுவதுமாக, யுகங்கள் முழுவதுமாக, இந்த ஜனக்கூட்டமான உங்களைவிட வேறு எவரும் ஆசீர்வதிக்கப்படவில்லை. இவை அனைத்தும் தேவனுடைய கிரியை காரணமாகவும், தேவனுடைய முன்குறித்தல் மற்றும் தேர்வு காரணமாகவும், தேவனுடைய கிருபையின் காரணமாகவும் இருக்கின்றன. தேவன் அவருடைய வார்த்தைகளைப் பேசவில்லை, சொல்லவில்லை என்றால், உங்கள் நிலைமைகள் இன்று இருப்பது போல் இருக்க முடியுமா? ஆகவே, எல்லா மகிமையும் துதியும் தேவனுக்கே உரியதாகட்டும், ஏனென்றால் இவை அனைத்தும் தேவன் உங்களை உயர்த்துவதால்தான். இந்த விஷயங்களை மனதில் கொண்ட பின்பும் உன்னால் செயலற்றவனாக இருக்க முடியுமா? இன்னும் உன் பெலனால் எழும்ப முடியவில்லையா?

தேவனுடைய வார்த்தைகளின் நியாயத்தீர்ப்பு, சிட்சை, அடி மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றை உன்னால் ஏற்றுக் கொள்ள முடிகிறது, மேலும், தேவனுடைய ஆணைகளை உன்னால் ஏற்றுக்கொள்ள முடிகிறது, இது நீ சிட்சிக்கப்படும்போது மிகவும் துன்பப்படக்கூடாது என்பதற்காக யுகங்களுக்கு முன்பே தேவனால் முன்னரே தீர்மானிக்கப்பட்டிருந்தது. உங்களில் செய்யப்பட்டுள்ள கிரியையையும், உங்களுக்கு வழங்கப்பட்ட ஆசீர்வாதங்களையும் யாராலும் பறிக்க முடியாது. உங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்தையும் எவரும் பறிக்க முடியாது. மத ஜனங்களுக்கும் உங்களுக்கும் எந்த ஒப்பீடும் இல்லை. நீங்கள் வேதாகமத்தில் பெரிய நிபுணத்துவம் பெற்றவர்கள் அல்லர், மதக் கோட்பாட்டில் வல்லவர்கள் அல்லர், ஆனால் தேவன் உங்களுக்குள் கிரியை செய்ததால், யுகங்கள் முழுவதிலும் உள்ள அனைவரையும்விட நீங்கள் அதிகமாக அடைந்திருக்கிறீர்கள்—ஆகவே இது உங்களுக்கான மிகப்பெரிய ஆசீர்வாதமாகும். இதன் காரணமாக, நீங்கள் தேவனிடம் இன்னும் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் தேவனிடம் இன்னும் விசுவாசத்துடன் இருக்க வேண்டும். தேவன் உன்னை எழுப்புவதால், நீ உன் முயற்சிகளை அதிகரிக்க வேண்டும் மற்றும் தேவனுடைய ஆணைகளை ஏற்றுக்கொள்ள உன் வளர்ச்சியை ஆயத்தம் செய்ய வேண்டும். தேவன் உங்களுக்குக் கொடுத்த நிலையில் நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும், தேவனுடைய ஜனங்களில் ஒருவராக மாறப் பின்தொடர வேண்டும், ராஜ்யத்தின் பயிற்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும், தேவனால் ஆதாயப்படுத்தப்பட வேண்டும் மற்றும் இறுதியில் தேவனுக்கு ஒரு மகிமையான சாட்சியாக மாற வேண்டும். இந்தத் தீர்மானங்கள் உன்னிடம் இருக்கின்றனவா? அத்தகைய தீர்மானங்கள் உன்னிடம் இருந்தால், இறுதியில் நீ தேவனால் நிச்சயமாக ஆதாயப்படுத்தப்படுவாய் மற்றும் தேவனுக்கு ஒரு மகிமையான சாட்சியாக மாறுவாய். பிரதானமான ஆணையானது தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டு தேவனுக்கு ஒரு மகிமையான சாட்சியாக மாறுவதே என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். இது தேவனுடைய சித்தமாக இருக்கிறது.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். "தேவனுடைய புத்தம்புதிய கிரியையை அறிந்து அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க