கிறிஸ்தவ பாடல் | தேவனின் நாமம் ஒருபோதும் மாறுவதில்லையென்று நீ தைரியமாக உறுதிபடச் சொல்கிறாயா?

செப்டம்பர் 20, 2020

தேவனின் நாமம் மாறுவதில்லையென்று சிலர் சொல்லுகிறார்கள்.

பின் ஏன் யேகோவா என்ற நாமம் இயேசு என்றானது?

மேசியா வருவார் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது,

பின் ஏன் இயேசு என்ற பெயர் கொண்ட ஒரு மனிதர் வந்தார்?

தேவனுடைய நாமம் ஏன் மாறியது?

இத்தகையக் கிரியை வெகு காலத்திற்கு முன்னர் செய்யப்படவில்லையா?

இன்று புதிய கிரியைகளை தேவன் செய்ய முடியாதவராக இருக்கிறாரா?

இன்று புதிய கிரியைகளை தேவன் செய்ய முடியாதவராக இருக்கிறாரா?

நேற்றைய கிரியையை மாற்ற முடியும்,

யேகோவாவின் கிரியையிலிருந்து இயேசுவின் கிரியை தொடர முடியும்.

முடியாதென்றால், இயேசுவின் கிரியையின் இடத்தில் அதற்குப் பதிலாக பிற கிரியைகளால் நடைபெறுமா?

முடியாதென்றால், இயேசுவின் கிரியையின் இடத்தில் அதற்குப் பதிலாக பிற கிரியைகளால் நடைபெறுமா?

யேகோவாவின் நாமம் இயேசு என்று மாற்றப்பட்டால்,

பின் ஏன் இயேசு என்ற நாமமும் மாற்றப்படக்கூடாது?

இவற்றில் ஒன்றும் புதுமையானது அல்ல;

மக்கள் மிகவும் அறிவுத்திறன் குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.

தேவன் எப்போதும் தேவனாகவே இருக்கிறார்.

அவருடைய கிரியை எவ்வாறு மாறினாலும் சரி, அவருடைய நாமம் எவ்வாறு மாறினாலும் சரி,

அவருடைய மனநிலையும் ஞானமும் ஒருபோதும் மாறாது.

தேவனை இயேசு என்ற நாமத்தினால் மட்டுமே அழைக்க வேண்டும் என்று நீ நம்பினால்,

உனது அறிவு மிகவும் குறைந்தது என்றுதான் பொருள்.

இயேசு என்பதுதான் தேவனுடைய நாமமாக எப்போதும் இருக்கும் என்றும்

தேவன் என்றென்றும் எப்போதும் இயேசு என்ற நாமத்தையே கொண்டிருப்பார் என்றும்

இது ஒருபோதும் மாறாது என்றும் நீ தைரியமாக உறுதிபடச் சொல்கிறாயா?

இயேசு என்ற நாமமே நியாயப்பிரமாணத்தின் காலத்தை முடித்துவைத்தது என்றும்

இறுதி காலத்தை முடிக்கும் என்றும் உன்னால் தைரியமாக உறுதிபடச் சொல்ல முடியுமா?

இயேசுவின் கிருபை காலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் என்று யாரால் கூற முடியும்?

தேவன் எப்போதும் தேவனாகவே இருக்கிறார்.

அவருடைய கிரியை எவ்வாறு மாறினாலும் சரி, அவருடைய நாமம் எவ்வாறு மாறினாலும் சரி,

அவருடைய மனநிலையும் ஞானமும் ஒருபோதும் மாறாது.

அவருடைய மனநிலையும் ஞானமும் ஒருபோதும் மாறாது.

அவருடைய மனநிலையும் ஞானமும் ஒருபோதும் மாறாது.

ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள் என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க