தேவனுடைய அனுதின வார்த்தைகள்: போய்ச் சேருமிடம் மற்றும் முடிவுகள் | பகுதி 585

டிசம்பர் 23, 2022

ஒவ்வொரு மனிதனின் முடிவையும் நான் தீர்மானிக்கும் நேரமாக இருக்கிறது. இது நான் மனிதனிடத்தில் கிரியையைத் தொடங்கும் காலம் இல்லை. நான் என் பதிவுப் புத்தகத்தில் ஒவ்வொரு நபருடைய வார்த்தைகளையும், செயல்களையும் என்னைப் பின் தொடர்ந்து வந்தப் பாதைகளையும், அவர்களுடைய உள்ளார்ந்த சுபாவங்களையும், அவர்கள் எப்படி முடிவில் தங்களை ஒழுங்குபடுத்திக்கொண்டார்கள் என்பதையும் ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இவ்விதமாக அவர்கள் எப்படிப்பட்ட நபராக இருந்தாலும், ஒருவரும் என் கையிலிருந்து தப்புவதில்லை, அனைவரும் நான் ஒதுக்கும் தங்கள் வகையுடன் சேர்க்கப்படுவார்கள். நான் ஒவ்வொருவருடைய சேருமிடத்தையும் தீர்மானிக்க அவர்களுடைய வயது, அனுபவம், அவர்கள் பட்ட பாடுகளின் அளவு மற்றும் இவை எல்லாவற்றிலும் குறைவாக அவர்கள் பெற்றுக்கொண்ட இரக்கத்தின் அளவு போன்றவற்றை நான் அடிப்படையாகக் கொள்ளாமல், அவர்கள் சத்தியத்தைக் கைக்கொண்டிருக்கிறார்களா என்பதை அடிப்படையாகக் கொள்கிறேன். இது தவிர நீங்கள் வேறு எதையும் தேர்ந்தெடுக்க முடியாது. தேவனுடைய சித்தத்தின் வழி நடக்காதவர்களும் கூடத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் கட்டாயம் உணர்ந்துகொள்ள வேண்டும். இது மாற்றப்படமுடியாத உண்மை. எனவே, தண்டிக்கப்படுகிறவர்கள் எல்லாம் தேவனுடைய நீதியின் நிமித்தமும் மற்றும் தங்கள் பொல்லாத கிரியைகளின் தகுந்த பிரதிபலனாகவும் தண்டிக்கப்படுகிறார்கள். எனது திட்டத்தை அதன் ஆரம்பத்திலிருந்து நான் ஒரு மாற்றம்கூட செய்யவில்லை. எளிமையாகக் கூறப்போனால், மனிதனைப் பொறுத்தவரை, நான் உண்மையாக ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் குறைந்துவிட்டது போல என் வார்த்தைகளை நான் கற்பிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. ஆனாலும், என் திட்டம் ஒருபோதும் மாறாதபடிக்கு அதைப் பேணிக்காப்பேன். மாறாக மனிதனுடைய அன்பும், விசுவாசமும் எப்பொழுதும் மாறிக்கொண்டும், எப்பொழுதும் தேய்ந்துகொண்டும்வருகிறது, எந்த அளவுக்கென்றால் வெளிவேஷத்திலிருந்து குளிர்ந்தநிலைக்குச் சென்று முற்றிலுமாக என்னை புறந்தள்ளும் நிலைக்கும் கூடச் சென்றுவிடுகிறது. நான் வெறுப்பையும், அருவருப்பையும் உணர்ந்து முடிவாகத் தண்டனையை அனுப்பும்வரை உங்களைக் குறித்த என் மனப்பான்மை அனலும், குளிரும் அற்றதாக இருக்கும். எனினும் உங்கள் தண்டனையின் நாளில் நான் உங்களைப் பார்த்துக்கொண்டிருப்பேன், ஆனால் உங்களால் என்னைக் காண முடியாது. உங்கள் மத்தியில் வாழ்வது எனக்கு ஏற்கனவே நீண்டதும், மந்தமானதுமாக மாறிவிட்டதால், உங்கள் தீமையான வார்த்தைகளைத் தவிர்க்கும்படியாகவும், தாங்கமுடியாத அளவு நீசமான உங்கள் நடத்தைகளிலிருந்து தெளிவை நோக்கியும், நீங்கள் இனிமேலும் என்னை முட்டாளாக்காதபடிக்கு அல்லது சிரத்தையற்ற முறையில் நடத்தாதபடிக்கு நான் வசிப்பதற்கு வேறு சூழலைத் தெரிந்துகொண்டேன். உங்களை விட்டு விலகும் முன் சத்தியத்திற்கு ஒவ்வாத உங்கள் நடத்தைகளைத் தவிர்க்கும்படி உங்களுக்குக் கட்டாயமாக இன்னும் அதிகமாய்ப் புத்தி சொல்லுவேன். மாறாக, எல்லோருக்கும் பிரியமானது எதுவோ, எல்லோருக்கும் பலன் தருவது எதுவோ, உங்களுடைய சொந்த இலக்கிற்குப் பிரயோஜனமானது எதுவோ அதையே செய்ய வேண்டும். இல்லையெனில் பேரழிவின் மத்தியில் பாடுபடப்போவது வேறு யாருமல்ல நீங்கள் மாத்திரமே.

வார்த்தை, தொகுதி 1. தேவனுடைய தோற்றமும் கிரியையும். “நீ போய்ச்சேருமிடத்திற்காக போதுமான நற்செயல்களை ஆயத்தப்படுத்து” என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க