கிறிஸ்தவ பாடல் | தேவனின் நீதியான நியாயத்தீர்ப்பு முழு பிரபஞ்சத்தையும் நெருங்குகிறது

செப்டம்பர் 20, 2020

பிரபஞ்சத்துக்கு நீதியான நியாயத்தீர்ப்பு நெருங்குகிறது.

எல்லா மனிதர்களும் அஞ்சி நடுங்கி பயம் கொள்கிறார்கள்,

ஏனென்றால் எல்லா மனிதர்களும் வாழும் இந்த உலகானது

இந்த நீதியைக் கேள்விப்படாத உலகாகும்.

நீதியின் சூரியன் தோன்றும்போது,

கிழக்கு வெளிச்சமடையும், பின்னர் முழு பிரபஞ்சமும் வெளிச்சம் பெறும்.

தேவனுடைய நீதியை மனிதன் நிறைவேற்றினால்,

பயப்படுவதற்கு எதுவும் இல்லை.

இறுதியில் அதற்கான நேரம் வந்துவிட்டது!

தேவனின் கிரியைகளை அவர் நடத்தத் தொடங்குவார், மனிதர்களிடையே அவர் ராஜாவாக ஆட்சி செய்வார்!

தேவன் திரும்பி வரும் கட்டத்தில் இருக்கிறார், அவர் இப்போது புறப்படவிருக்கிறார்!

இதைத்தான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள், அவர்கள் விரும்புவது இதுதான்.

தேவன் தனது நாளின் வருகையை அனைவரும் காணச் செய்வார்,

அவர்கள் அனைவரும் அந்த நாளை மகிழ்ச்சியுடன் வரவேற்கட்டும்.

தேவனுடைய மக்கள் அனைவரும் அவரது நாளின் வருகைக்காக ஏங்குகிறார்கள்.

தேவன் எல்லோரையும் பழிவாங்கவேண்டும் என்று அவர்கள் காத்திருக்கிறார்கள்,

ஆம், நீதியின் சூரியன் என்ற அவரது பங்குப்பணியில்

மனிதர்களின் முடிவை ஏற்பாடு செய்யவேண்டும் என்று அவர்கள் காத்திருக்கிறார்கள்.

தேவனுடைய ராஜ்யம் முழு பிரபஞ்சத்திற்கும் மேலாக வடிவம் பெறுகிறது,

அவரது சிங்காசனம் கோடானு கோடி மக்களின் இருதயங்களை ஆளுகை செய்கிறது.

தேவதூதர்களின் உதவியுடன், தேவனுடைய மாபெரும் கிரியை விரைவில் பலனளிக்கத் தொடங்கும்.

இறுதியில் அதற்கான நேரம் வந்துவிட்டது!

தேவனின் கிரியைகளை அவர் நடத்தத் தொடங்குவார், மனிதர்களிடையே அவர் ராஜாவாக ஆட்சி செய்வார்!

தேவன் திரும்பி வரும் கட்டத்தில் இருக்கிறார், அவர் இப்போது புறப்படவிருக்கிறார்!

இதைத்தான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள், அவர்கள் விரும்புவது இதுதான்.

தேவன் தனது நாளின் வருகையை அனைவரும் காணச் செய்வார்,

அவர்கள் அனைவரும் அந்த நாளை மகிழ்ச்சியுடன் வரவேற்கட்டும்.

தேவனின் மகன்கள் மற்றும் தேவனின் மக்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்,

அவர் அவர்களுடன் ஒன்றிணைய வேண்டும் என்று ஏங்குகிறார்கள்.

மீண்டும் ஒருபோதும் பிரிக்கப்படாதவாறு ஒன்றிணைய

அவரது வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

தேவன் அவர்களுடன் ஒன்றாக இருப்பதால் தேவனுடைய ராஜ்யத்தின் மிகப் பெரிய திரளான மக்கள்

மகிழ்ச்சியைக் கொண்டாடுவதில் ஒருவருக்கொருவர் போட்டி போடமாட்டார்களா?

கிரயம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத ஒரு மறு ஐக்கியமாக இருக்க முடியுமா?

இறுதியில் அதற்கான நேரம் வந்துவிட்டது!

தேவனின் கிரியைகளை அவர் நடத்தத் தொடங்குவார், மனிதர்களிடையே அவர் ராஜாவாக ஆட்சி செய்வார்!

தேவன் திரும்பி வரும் கட்டத்தில் இருக்கிறார், அவர் இப்போது புறப்படவிருக்கிறார்!

இதைத்தான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள், அவர்கள் விரும்புவது இதுதான்.

தேவன் தனது நாளின் வருகையை அனைவரும் காணச் செய்வார்,

அவர்கள் அனைவரும் அந்த நாளை மகிழ்ச்சியுடன் வரவேற்கட்டும்.

எல்லா மனிதர்களின் பார்வையிலும் தேவன் நற்குணசாலி,

அனைவரின் வார்த்தைகளிலும் இவ்வாறு அவர் அறிவிக்கப்படுகிறார்.

மேலும், தேவன் திரும்பி வரும்போது, எல்லா சத்துரு படைகளையும் அவர் வெல்வார்.

இறுதியில் அதற்கான நேரம் வந்துவிட்டது!

தேவனின் கிரியைகளை அவர் நடத்தத் தொடங்குவார், மனிதர்களிடையே அவர் ராஜாவாக ஆட்சி செய்வார்!

தேவன் திரும்பி வரும் கட்டத்தில் இருக்கிறார், அவர் இப்போது புறப்படவிருக்கிறார்!

இதைத்தான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள், அவர்கள் விரும்புவது இதுதான்.

தேவன் தனது நாளின் வருகையை அனைவரும் காணச் செய்வார்,

அவர்கள் அனைவரும் அந்த நாளை மகிழ்ச்சியுடன் வரவேற்கட்டும்.

அவர்கள் அனைவரும் அந்த நாளின் வருகையை மகிழ்ச்சியுடன் வரவேற்கட்டும்.

ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள் என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க