கிறிஸ்தவ பாடல் | தேவன் உங்கள் இருதயத்தையும் உங்கள் ஆவியையும் தேடுகிறார் (Tamil Subtitles)

மார்ச் 21, 2021

சர்வவல்லவர் வழங்கிய ஜீவனைவிட்டு விலகிய மனுக்குலம்,

ஜீவனின் நோக்கத்தைக் குறித்து அறியாமல், மரணத்தைக்குறித்து அஞ்சுகிறது.

அவர்கள் உதவியோ, ஆதரவோ இல்லாமல் தவிக்கின்றார்கள்.

ஆனாலும் தங்கள் கண்களை மூடத் தயங்குகிறார்கள்.

மேலும் தங்கள் சொந்த ஆத்துமாக்களைக் குறித்து உணர்வில்லாதவர்களாய், நடைபிணங்களாய்,

இந்த உலகத்தில் இழிவான வாழ்க்கையை வாழ, தங்களையே வருத்திக்கொள்கின்றனர்.

நோக்கமில்லாமல் வாழ்கின்ற மற்றவர்களைப் போலவே நீயும்,

நம்பிக்கை இல்லாமல் வாழ்கின்றாய்.

ஆதிமுதல் இருக்கும் பரிசுத்தர் மட்டுமே தங்கள் துன்பங்களின் நடுவே வாழ்ந்துகொண்டிருக்கும்,

அவருடைய வருகைக்காக அதிக எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கும்

ஜனங்களை இரட்சிக்க முடியும்.

உணர்வில்லாமல் இருப்பவர்களிடம் அப்படிப்பட்ட நம்பிக்கை

இதுவரை காணப்படவில்லை.

ஆனாலும் ஜனங்கள் அதற்காக இன்னும் ஏங்குகின்றனர்.

பெருந்துன்பத்திற்குள்ளான இந்த ஜனங்களின்மேல் சர்வவல்லவர் இரக்கமுள்ளவராய் இருக்கின்றார்.

அதே நேரத்தில், வெகுகாலமாய் மனிதகுலத்திடமிருந்து பதில் வர நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதிருந்ததினால்,

உணர்வில்லாமல் இருக்கும் இந்த ஜனங்களின்மேல் அவர் சலிப்படைந்திருக்கின்றார்.

நீ இனிமேலும் பசியோடும், தாகத்தோடும் இருக்காதபடி, உன்னை உணர்வடையச்செய்ய,

உனக்குத் தண்ணீரையும், ஆகாரத்தையும் கொண்டுவர,

உன் இருதயத்தையும், உன் ஆவியையும் தேட அவர் விரும்புகின்றார்.

நீ தளர்வடைந்திருக்கும்போது,

இந்த உலகத்தின் நம்பிக்கையின்மையை நீ உணர ஆரம்பிக்கும்போது,

நீ நம்பிக்கையை இழக்கவோ அழவோ வேண்டாம்.

கண்காணிப்பாளரான சர்வவல்லவர் நீ வரும்போது உன்னை அணைத்துக்கொள்வார்.

அவர் உன் பக்கத்திலேயே இருந்து உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்,

நீ அவரிடம் திரும்புவதற்காகக் காத்துக்கொண்டிருக்கின்றார்.

உன் நினைவு திரும்பும் நாளுக்காக அவர் காத்துக்கொண்டிருக்கின்றார்.

நீ அவரிடமிருந்து உருவானவன் என்று நீ உணர்ந்திட,

என்றோ ஒரு நாள் நீ திசை தவறிப் போனாய் என்றும்,

என்றோ ஒருநாள் நீ உன் உணர்வை இழந்தாய் என்றும்,

ஒரு நாள் உன் தகப்பனைக் கண்டடைந்தாய் என்றும் நீ அறிந்திட,

சர்வவல்லவர் உனக்காக, நீ அவரிடம் திரும்பும் நாளுக்காக

வெகுகாலமாய்க் காத்துக்கொண்டிருக்கின்றார்.

உன்னுடைய திரும்புதலுக்காக மிக நீண்ட காலமாய் காத்திருக்கிறார்,

உன்னுடைய திரும்புதலுக்காக மிக நீண்ட காலமாய் காத்திருக்கிறார்.

உருக்கமான ஏக்கத்தோடு அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார்,

உன்னுடைய பதிலுக்காக அவர் காத்துக்கொண்டிருக்கின்றார்.

அவருடைய நீடிய பொறுமை விலைமதிக்கமுடியாதது.

மனிதனின் இருதயத்திற்காகவும் ஆவிக்காகவுமே அவர் காத்திருக்கின்றார்.

ஒருவேளை அவர் முடிவில்லாமல் காத்திருக்கலாம்,

அல்லது அவர் சீக்கிரத்தில் காத்திருப்பை முடித்துக் கொள்ளலாம்.

ஆனால், உன் இருதயமும்,

ஆவியும் இப்பொழுது எங்குள்ளன என்பதை நீ நிச்சயமாய் அறிந்துகொள்ளவேண்டும்.

ஒருவேளை அவர் முடிவில்லாமல் காத்திருக்கலாம்,

அல்லது அவர் சீக்கிரத்தில் காத்திருப்பை முடித்துக் கொள்ளலாம்.

ஆனால், உன் இருதயமும்,

ஆவியும் இப்பொழுது எங்குள்ளன என்பதை நீ நிச்சயமாய் அறிந்துகொள்ளவேண்டும்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க