Tamil Christian Testimony | தேவனுடைய நாமம் உண்மையாகவே இரகசியமானது

மார்ச் 26, 2023

முக்கிய கதாபாத்திரம் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். அவர் சிறிய பையனாக இருந்த போதிலிருந்து, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறவர்கள் மட்டுமே பரலோக ராஜ்யத்திற்குள் நுழைய முடியும் என்று அவரின் குடும்பம் சொன்னதைக் கேட்டிருக்கிறார். இறையியல் பள்ளியிலிருந்து பட்டம் பெற்ற பின் அவர் உள்ளூர் விசுவாசிகளை வழிநடத்த ஆரம்பிக்கிறார். ஆனால் பின்னர் திருச்சபைக்கு ஜனங்கள் வராததினால் அதிக அதிகமாய் காலியா இருந்தது, அவர் எவ்வளவு அதிகமாக ஜெபித்தும், வேதம் வாசித்தும், உபவாசித்தும் கூட, அவரால் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையை உணர முடியவில்லை. அவர் ஆவிக்குரிய இருளிலும் வேதனையிலும் விழுகிறார். குழப்பத்துடன், தான் கர்த்தரின் நாமத்தில் ஜெபித்துக் கொண்டிருக்கும்போதும், முற்றிலுமாக கர்த்தருடைய பிரசன்னத்தைத் தன்னால் ஏன் உணர முடியவில்லை என்று தன்னிடமே கேட்டுக்கொள்கிறார். எதேச்சையாக, ஒரு நாள், யூட்யூபில், தேவனுடைய நாமம் மாறிவிட்டதோ?! என்ற படத்தை அவர் பார்க்கிறார். அதைப் பார்த்ததால அவருடைய குழப்பங்கள் தீர்கிறது, தேவனுடைய நாமங்களின் இரகசியங்களை அவர் புரிந்து கொள்கிறார், தேவனுடைய திரும்ப வருதலை வரவேற்கிறார், ஆட்டுக்குட்டியானவருடைய விருந்தில் பங்கேற்கிறார்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க