கிறிஸ்தவ பாடல் | உலகின் கிழக்குப் பகுதியில் தேவன் மகிமையுடன் தோன்றியிருக்கிறார் (Tamil Subtitles)

மார்ச் 25, 2021

பிரபஞ்சம் முழுவதும் தேவன் அவரது கிரியையைச் செய்கிறார்,

கிழக்கில், இடிமுழக்கங்கள் முடிவில்லாமல் தோன்றி,

எல்லா நாடுகளையும் மதப்பிரிவுகளையும் அசைக்கின்றன.

எல்லா மனிதர்களையும் நிகழ்காலத்திற்கு இட்டுச் சென்றது தேவனுடைய சத்தம்.

எல்லா மனிதர்களையும் தேவன் அவருடைய சத்தத்தால் ஜெயங்கொண்டு,

இந்தப் பிரவாகத்திற்குள் விழச் செய்வார். அவருக்கு முன்பாக கீழ்ப்படியச் செய்வார்.

ஏனென்றால், தேவன் நீண்ட காலமாக அவரது மகிமையை பூமியெங்கிலும் இருந்து மீட்டெடுத்து

கிழக்கில் புதிதாக வெளியிட்டார்.

தேவனுடைய மகிமையைக் காண விரும்பாதோர் யார்?

தேவனுடைய வருகையை ஆவலுடன் எதிர்பார்க்காதோர் யார்?

தேவன் மீண்டும் தோன்றுவதற்கு தாகம் கொள்ளாதோர் யார்?

தேவனுடைய அன்புக்காக ஏங்காதோர் யார்?

வெளிச்சத்திற்கு வராதோர் யார்?

கானானின் செழுமையை நோக்காதோர் யார்?

மீட்பர் திரும்புவதற்கு ஏங்காதோர் யார்?

மகா சர்வ வல்லவரை போற்றாதோர் யார்?

தேவனின் சத்தம் பூமியெங்கும் பரவுகிறது.

தேவன் தேர்ந்தெடுத்த ஜனங்களை எதிர்கொண்டு, அவர்களிடம் அதிக வார்த்தைகளைப் பேச விரும்புகிறார்.

மலைகளையும் ஆறுகளையும் உலுக்கும் வலிமையான இடியைப் போல,

தேவன் முழுப் பிரபஞ்சத்துக்கும் மனிதகுலத்துக்கும் அவரது வார்த்தைகளைப் பேசுகிறார்.

எனவே, தேவனுடைய வாயின் வார்த்தைகள் மனிதனின் பொக்கிஷமாகிவிட்டன.

எல்லா மனிதர்களும் அவருடைய வார்த்தைகளை மதிக்கிறார்கள்.

கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மின்னல் ஒளிர்கிறது.

தேவனுடைய வார்த்தைகளை, மனிதன் விட்டுகொடுக்க வெறுக்கிறான்,

அதே நேரத்தில் அவற்றை புரிந்துகொள்ள முடியாதவனாகவும் இருக்கிறான்.

எனினும், அவற்றில் இன்னும் அதிகமாகச் சந்தோஷப்படுகிறான்.

ஒரு புதிதாய் பிறந்த குழந்தையைப் போல,

எல்லா மனிதர்களும் தேவனின் வருகையை கொண்டாடுவதில்

ஆனந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனர்.

அவரின் சத்தம் மூலம், தேவன் எல்லா மனிதர்களையும் அவர் முன்பாக கொண்டு வருவார்.

அதன்பின்னர், தேவன் மனித இனத்திற்குள் முறையாக நுழைவார்,

அதனால் அவர்கள் அவரைத் தொழுதுகொள்ள வருவார்கள்.

எல்லா மனிதர்களும் அவருக்கு முன்பாக வந்து, மின்னல் கிழக்கிலிருந்து ஒளிர்வதையும்,

தேவன் கிழக்கிலுள்ள "ஒலிவ மலையில்" இறங்கியிருப்பதையும்

அவர் மகிமையின் பிரகாசம் மற்றும் அவருடைய வாயின் வார்த்தைகள்

ஆகியவற்றைக் கொண்டு காணச் செய்வார்.

கிழக்கிலுள்ள் "ஒலிவ மலையில்" தேவன் இறங்கியிருப்பதை அவர்கள் காண்பார்கள்,

யூதர்களின் குமாரனாக அல்லாமல் கிழக்கின் மின்னலாக

தேவன் ஏற்கனவே நீண்ட காலமாகப் பூமியில் இருப்பதை அவர்கள் காண்பார்கள்.

நீண்ட காலமாக மனிதகுலத்தின் மத்தியிலிருந்து புறப்பட்டுச் சென்று,

பின்னர் மனிதர்களிடையே மகிமையுடன் மீண்டும் தோன்றியுள்ளார்.

எண்ணற்ற யுகங்களுக்கு முன்பே வணங்கப்பட்டவர் தேவனே.

இஸ்ரவேலர்களால் எண்ணற்ற யுகங்களுக்கு முன்பே கைவிடப்பட்ட குழந்தை அவரே.

அதுமட்டுமல்லாமல், தற்போதைய யுகத்தின் எல்லா மகிமையும் உள்ள,

சர்வவல்லமையுள்ள தேவன் அவரே!

அதுமட்டுமல்லாமல், தற்போதைய யுகத்தின் எல்லா மகிமையும் உள்ள,

சர்வவல்லமையுள்ள தேவன் அவரே!

அனைவரும் தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக வந்து அவரது மகிமையின் முகத்தைக் காணட்டும்,

அவரது சத்தத்தைக் கேட்கட்டும், அவரது கிரியைகளைப் பார்க்கட்டும்.

இதுதான் அவரது முழுமையான சித்தமாகும்.

இது அவரது திட்டத்தின் முடிவு, உச்சக்கட்டம்

மற்றும் அவரது ஆளுகையின் நோக்கமாகும்.

ஒவ்வொரு தேசமும் தேவனை வணங்கட்டும், ஒவ்வொரு நாவும் தேவனை அறிக்கை செய்யட்டும்,

ஒவ்வொரு மனிதனும் அவரில் அவனுடைய விசுவாசத்தை வைத்துக்கொள்ளட்டும்,

ஒவ்வொரு ஜனமும் தேவனுக்குக் கீழ்ப்படியட்டும்!

ஒவ்வொரு மனிதனும் தேவன் மீது விசுவாசம் வைத்துக்கொள்ளட்டும்,

ஒவ்வொரு ஜனமும் தேவனுக்குக் கீழ்ப்படியட்டும்!

ஒவ்வொரு ஜனமும் தேவனுக்குக் கீழ்ப்படியட்டும்!

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க