Christian Testimony | தேவன் சீனாவில் தோன்றி கிரியை செய்வது மிகவும் முக்கியமானது (Tamil Subtitles)

ஜனவரி 1, 2021

கதையின் நாயகி எப்பொழுதும் உற்சாகமாக தேவனுக்காக தன்னை செலவழித்து, தேவன் திரும்புவதற்காக காத்திருக்கிறார். பின்னர் தற்செயலாக, தேவன் ஏற்கனவே திரும்பிவந்து சீனாவில் அவதரித்திருப்பதை அவர் அறிந்திருக்கிறார். அவர் ஆச்சரியப்படுகிறார், மகிழ்ச்சியடைகிறார், ஆனால் ஒரு கேள்வி இன்னும் அவரைத் திணறடிக்கிறது: பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளின் காலங்களில், தேவன் எப்போதும் இஸ்ரவேலில் தனது கிரியையைச் செய்தார், எனவே கர்த்தர் மீண்டும் திரும்பும்போது, அவர் இஸ்ரவேலில் தானே திரும்பிவந்திருக்க வேண்டும் என்ற கேள்விதான் அது. அப்படியானால், அவர் எவ்வாறு சீனாவில் தோன்றி தனது கிரியையைச் செய்ய முடியும்? தேடுவதன் மூலமாகவும் ஐக்கியத்தின் மூலமாகவும், தேவன், எல்லா மனுஷர்களுக்கும் தேவன் என்பதையும், தேவன் தோன்றுவதற்கும் அவருடைய கிரியையைச் செய்வதற்கும் அவர் தேர்ந்தெடுக்கும் தேசத்திற்கு எப்போதும் ஒரு குறிப்பிட்ட அர்த்தம் இருப்பதையும் அவர் புரிந்துகொள்கிறார். மனுஷகுலத்திற்கு சிறப்பாக வழிகாட்டவும், அதை இரட்சிக்கவும் அனுமதிக்கும் ஒரு இடத்தையே அவர் எப்போதும் தேர்ந்தெடுக்கிறார். கடைசிக் காலத்தில் தேவன் ஏன் சீனாவில் தனது கிரியையைச் செய்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு தன் குழப்பத்தை தீர்த்துக்கொள்கிறார். ஆராய்வதன் மூலம், சர்வவல்லமையுள்ள தேவனை, திரும்பிவந்த கர்த்தராகிய இயேசு என்று அவர் அங்கீகரிக்கிறார், மேலும் கடைசிக் காலத்தில் சர்வவல்லமையுள்ள தேவனின் கிரியையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்.

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க