1கர்த்தர் திரும்பி வருவதைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் மெய்யாகவே நிறைவேறி, கடைசி நாட்களின் எச்சரிக்கையைத் தொனிக்கின்றன

மனுக்குலத்தின் சீர்கேடும் தீமையும் இப்போது உச்சத்தை எட்டியுள்ளன. கர்த்தர் திரும்பி வருவதைக் குறித்த வேதாகம தீர்க்கதரிசனங்கள் மெய்யாகவே நிறைவேறியுள்ளன. உலகம் முழுவதும் பேரழிவுகள் எப்போதையும் விட கடுமையானதாகி வருகின்றன: பூமியதிர்ச்சிகள், வாதைகள், பஞ்சம் மற்றும் யுத்தம் ஆகியவை அடிக்கடி நிகழும் நிகழ்வுகளாகிவிட்டன, அரிய நிகழ்வுகள் வானத்தில் தோன்றியுள்ளன. கர்த்தர் திரும்பி வரும் நாட்கள் வந்துவிட்டன, அவர் ஏற்கனவே திரும்பி வந்துவிட்டார் என்ற ஒரு உணர்வு பல பக்தியுள்ள கிறிஸ்தவர்களிடம் உள்ளது …

குறிப்புக்கான வேதாகம வசனங்கள்

"நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது. லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது. மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்" (லூக்கா 17:26-30).

"ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்" (மத்தேயு 24:7-8).

"வானங்களிலும் பூமியிலும் இரத்தம், அக்கினி மற்றும் புகைஸ்தம்பங்கள் ஆகிய அதிசயங்களை காண்பிப்பேன். யேகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாள் வருவதற்கு முன் சூரியன் இருளாகவும் சந்திரன் இரத்தமாகவும் மாறும்" (யோவேல் 2:30-31).

"அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம் போலாயிற்று. அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது" (வெளிப்படுத்தல் 6:12-13).

2கர்த்தராகிய இயேசு திரும்பி வரும் இரண்டு வழிகள்

கர்த்தர் திரும்பி வருவதைப் பற்றிய வேதாகம தீர்க்கதரிசனங்களில் அவர் மேகங்கள்மேல் வெளிப்படையாக வருவார் என்பது மட்டுமின்றி, அவர் ஒரு திருடன் வருகிறவிதமாய் இரகசியமாக வருவார் என்பதும் அடங்கும். அப்படியானால், இந்த தீர்க்கதரிசனங்கள் இரண்டும் எவ்வாறு நிறைவேறும்? கர்த்தர் மேகங்கள்மேல் வருவார் என்று மட்டுமே நாம் காத்திருந்து, அவர் ஒரு திருடன் வருகிறவிதமாய் வருவார் என்ற தீர்க்கதரிசனத்தை கவனிக்காமல்போனால், கர்த்தருடைய வருகையை நம்மால் வரவேற்க முடியுமா?

குறிப்புக்கான வேதாகம வசனங்கள்

"அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்" (லூக்கா 12:40).

"இதோ, திருடனைப்போல் வருகிறேன்" (வெளிப்படுத்தல் 16:15).

"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்" (வெளிப்படுத்தல் 3:20).

"நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று" (மத்தேயு 25:6).

"மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார். அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது" (லூக்கா 17:24-25).

"இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்" (வெளிப்படுத்தல் 1:7).

"அப்பொழுது மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்" (மத்தேயு 24:30).

3சத்தியத்தை வெளிப்படுத்தவும், தேவனுடைய வீட்டிலிருந்து தொடங்கி நியாயத்தீர்ப்பின் கிரியைச் செய்யவும் இரட்சகர் ஏற்கெனவே இரகசியமாக வந்துள்ளார்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கர்த்தராகிய இயேசு தாம் திரும்பி வருவதைக் குறித்து முன்னறிவித்தார். இப்போது கர்த்தர் திரும்பி வருவதைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் மெய்யாகவே நிறைவேறியுள்ளன. நாம் நீண்டகாலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த நமது இரட்சகரும் கர்த்தருமாகிய இயேசு இரகசியமாக வந்துள்ளார். அவர்தான் கடைசி நாட்களின் கிறிஸ்துவும், சர்வவல்லமையுள்ள தேவனும் ஆவார். தேவனுடைய வீட்டிலிருந்து தொடங்கி நியாயந்தீர்க்கும் கிரியையை சர்வவல்லமையுள்ள தேவன் செய்து, தேவனுடைய ஆறாயிரம் ஆண்டுகால நிர்வாகத் திட்டத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தியுள்ளார் மற்றும் மனுக்குலத்தை சுத்திகரிக்கவும் இரட்சிக்கவும் சகல சத்தியங்களையும் வெளிப்படுத்தியுள்ளார். தேவனுடைய பரிசுத்த மற்றும் நீதியான சாராம்சத்தையும், அத்துடன் எந்தவொரு இடறலையும் சகித்துக்கொள்ளாத அவருடைய மகத்துவமான மற்றும் கோபாக்கினையான மனநிலையையும் மனிதர்களாகிய நம்மிடம் அவர் வெளிப்படுத்தியுள்ளார். மனிதர்களை தங்களுடைய சீர்கேடான மனநிலைகளிலிருந்து முழுமையாக இரட்சிப்பதற்காகவும், சாத்தானுடைய ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க அவர்களுக்கு உதவுவதற்காகவும், பேரழிவிற்கு முன் ஜெயங்கொள்கிறவர்கள் குழு ஒன்றை உருவாக்குவதற்காகவும், இறுதியில் மனுக்குலத்தை அவர்களுடைய அழகான சென்றடையும் இடத்திற்கு கொண்டு வருவதற்காகவும் அவர் இதைச் செய்துள்ளார்.

குறிப்புக்கான வேதாகம வசனங்கள்

"இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்" (யோவான் 16:12-13).

"ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது" (வெளிப்படுத்தல் 2:29).

"ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்" (யோவான் 12:47-48).

"நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது" (1 பேதுரு 4:17).

"பின்பு வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளைவந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள் என்று கூறினான்" (வெளிப்படுத்தல் 14:6-7).

4கர்த்தர் கதவைத் தட்டுகிறார்—புத்தியுள்ள கன்னிகையாக இருந்து, அவர் திரும்பி வருவதை வரவேற்றிடுங்கள்

வெளிப்படுத்துதல் புத்தகம் முன்னறிவிக்கிறது, "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்" (வெளிப்படுத்தல் 3:20). கர்த்தராகிய இயேசு சொன்னார்: "என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன்" (யோவான் 10:27). கடைசி நாட்களில், தேவன் வார்த்தைகளை வெளிப்படுத்துவதன் மூலம் மனுக்குலத்தின் கதவைத் தட்டி, தனது ஆடுகளைத் தேடுகிறார் என்பது தெளிவாகிறது. தேவனை மெய்யாகவே விசுவாசித்து, சத்தியத்திற்காக வாஞ்சிக்கிற அந்த புத்தியுள்ள கன்னிகைகளாலேயே எந்த வல்லமையின் தடையுமின்றி கடைசி நாட்களில் தேவன் தோன்றுவது மற்றும் அவருடைய கிரியை ஆகியவற்றைத் தேடவும் ஆராயவும் முடியும், இவ்வாறு அவர்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டு கர்த்தரை வரவேற்றுள்ளனர். இவர்கள் மட்டுமே தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக எழுப்பப்பட்டு, கர்த்தருடன் உன்னதமான விருந்தில் பங்கெடுப்பதற்கு தகுதியுள்ளவர்கள்.

குறிப்புக்கான வேதாகம வசனங்கள்

"அப்பொழுது பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப்புறப்பட்ட பத்துக்கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை. புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள். புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள். புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாணவீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது" (மத்தேயு 25:1-10).

"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்" (வெளிப்படுத்தல் 3:20).

"ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது" (வெளிப்படுத்தல் 2:29).

"என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது" (யோவான் 10:27).

"கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்" (மத்தேயு 7:7-8).

இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகையின் 6 தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியுள்ளன

இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகையின் 6 தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியுள்ளன

வேதாகமத்தின் கடைசிக் கால அடையாளங்கள் தோன்றியுள்ளன: இயேசுவின் வருகையை எவ்வாறு வரவேற்பது

வேதாகமத்தின் கடைசிக் கால அடையாளங்கள் தோன்றியுள்ளன: இயேசுவின் வருகையை எவ்வாறு வரவேற்பது

தொடர்புடைய காணொளிகள்

மேலும் தலைப்புகள்

மெய்க்கிறிஸ்துவையும் கள்ளக்கிறிஸ்துக்களையும் கண்டறிந்து கர்த்தர் திரும்பி வருவதை வரவேற்றல்
கர்த்தர் திரும்பி வருவதை வரவேற்பதில் திருத்தப்பட வேண்டிய பிழைகள்
மெய்யான வழியை ஆராயும்போது தேவனுடைய சத்தத்தை மட்டுமே கேளுங்கள்; நீங்கள் சாத்தானுடைய வதந்திகளையும் பொய்களையும் கேட்கக்கூடாது
நீங்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டிருக்கின்றீர்களா?