1கடைசி நாட்களில் கர்த்தர் திரும்பி வருவதை வரவேற்பவர்களுக்கு தோமாவின் விசுவாசத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்த எச்சரிக்கை

கர்த்தரைக் காணும் வரை தோமாவிசுவாசம் கொண்டிருக்கவில்லை, இதனால் அவன் கர்த்தராகிய இயேசுவினால் கண்டிக்கப்பட்டான் என்று வேதாகமம் பதிவு செய்கிறது: "நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்" (யோவான் 20:29). கடைசி நாட்களில் கர்த்தரை வரவேற்பவர்களுக்கு கர்த்தராகிய இயேசுவிடமிருந்து வரும் இந்த வார்த்தைகளில் உள்ள எச்சரிக்கை என்ன? கர்த்தர் மேகத்தின்மேல் வருவார் என்ற தீர்க்கதரிசனத்தை பலர் பற்றிக்கொண்டு, அதேநேரத்தில் கர்த்தர் இரகசியமாக வருவார் என்ற தீர்க்கதரிசனங்களை புறக்கணிக்கின்றனர். கர்த்தர் ஏற்கனவே மாம்சத்தில் திரும்பி வந்திருக்கிறார் என்பதற்கான எந்த சாட்சியங்களையும் அவர்கள் நம்ப மறுக்கின்றனர் மற்றும் அவர் ஒரு மேகத்தின்மேல் வருவதைக் காணும்போது மட்டுமே அவர் திரும்பி வந்துள்ளார் என்பதை நம்புவதை மட்டுமே வலியுறுத்துகின்றனர். இது தோமாவின் தவறை மீண்டும் மீண்டும் செய்ய அவர்களுக்கு வாய்ப்பை உருவாக்கவில்லையா?

குறிப்புக்கான வேதாகம வசனங்கள்

"மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான். மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்" (யோவான் 20:25-27).

"அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்" (யோவான் 20:29).

"இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்" (வெளிப்படுத்தல் 1:7).

2கர்த்தரை வரவேற்பதற்கான சரியான பாதை

கர்த்தரை வரவேற்கும் காரியம் என்று வரும்போது, தோமாவினுடைய தோல்வியின் பாடத்தை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் விசுவாசிப்பதற்கு முன்பு அவர் ஒரு மேகத்தின்மேல் வருவதைக் காண நம்மால் காத்திருக்க முடியாது. அப்படியானால், தேவனை நம்மால் எப்படி வரவேற்க முடியும்? கர்த்தராகிய இயேசு மிகவும் தெளிவாக நம்மிடம் கூறினார்: "நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று" (மத்தேயு 25:6). வெளிப்படுத்துதல் புத்தகம் முன்னறிவிக்கிறது, "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்" (வெளிப்படுத்தல் 3:20). கர்த்தரை வரவேற்பதற்கு முக்கியமானது தேவனுடைய சத்தத்தைக் கேட்பதுதான் என்பதை நாம் இங்கே காணலாம். இதுவே அவரை வரவேற்பதற்கான ஒரே வழியாகும். கர்த்தர் திரும்பி வந்துள்ளார் என்று யாராவது சாட்சி பகர்வதைக் கேட்கும்போது, நாம் தேடவும், ஆராயவும் வேண்டும். மேலும், தேவனுடைய சத்தத்தை நாம் அடையாளம் காணுகிற தருணத்தில், நாம் அதை ஏற்றுக்கொண்டு கீழ்ப்படிய வேண்டும். அது கர்த்தரை வரவேற்பது அல்லவா?

குறிப்புக்கான வேதாகம வசனங்கள்

"நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார்" (யோவான் 20:29).

"நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்" (மத்தேயு 24:44).

"இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்" (வெளிப்படுத்தல் 16:15).

"இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்" (யோவான் 16:12-13).

"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்" (வெளிப்படுத்தல் 3:20).

"நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று" (மத்தேயு 25:6).

"அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாணவீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது" (மத்தேயு 25:10).

"என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது" (யோவான் 10:27).

"ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்" (வெளிப்படுத்தல் 2:7).

தொடர்புடைய காணொளிகள்

மேலும் தலைப்புகள்

மெய்யான வழியை ஆராயும்போது தேவனுடைய சத்தத்தை மட்டுமே கேளுங்கள்; நீங்கள் சாத்தானுடைய வதந்திகளையும் பொய்களையும் கேட்கக்கூடாது
மெய்க்கிறிஸ்துவையும் கள்ளக்கிறிஸ்துக்களையும் கண்டறிந்து கர்த்தர் திரும்பி வருவதை வரவேற்றல்
நீங்கள் தேவனுடைய சத்தத்தைக் கேட்டிருக்கின்றீர்களா?
இரட்சகர் திரும்பியுள்ளார்