1கள்ளக்கிறிஸ்துக்களுக்கு நாம் எப்போதும் பாதுகாப்பாக இருந்தால், தேவன் திரும்பி வருவதை நம்மால் வரவேற்க முடியுமா?

கடைசி நாட்களில் தாம் தோன்றி தமது கிரியைக் செய்வதற்காக திரும்பி வரும்போது, ஜனங்களை வஞ்சிக்க கள்ளக்கிறிஸ்துக்களும், கள்ளத்தீர்க்கதரிசிகளும் தோன்றுவார்கள் என்று கர்த்தராகிய இயேசு ஒருமுறை தீர்க்கதரிசனம் உரைத்தார். இப்போது கடைசி நாட்கள் அவற்றின் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும், சத்தியத்தை வெளிப்படுத்தவும், தேவனுடைய வீட்டில் தொடங்கி நியாயத்தீர்ப்பின் கிரியையைச் செய்யவும் கர்த்தராகிய இயேசு நீண்ட காலத்திற்கு முன்பே மாம்சத்தில் திரும்பி வந்திருக்கிறார். கள்ளக்கிறிஸ்துக்களால் தவறாக வழிநடத்தப்பட்டுவிடுவோமோ என்று இன்னும் சிலர் அஞ்சுகின்றனர், ஆகையால் அவர்கள் தொடர்ந்து எதிர்மறையாகவும் பாதுகாப்பாகவும் இருக்கின்றனர். கடைசி நாட்களில் தேவன் தோன்றுவதையும், அவருடைய கிரயையையும் தேடுவதற்கோ அல்லது ஆராய்வதற்கோ துணியவில்லை, மிகவும் முக்கியமாக கள்ளக்கிறிஸ்துக்களை பாதுகாக்கின்றனர். இருப்பினும், இதைச் செய்வதன் மூலம், கர்த்தர் திரும்பி வருவதை அவர்களால் எவ்வாறு வரவேற்க முடியும்?

குறிப்புக்கான வேதாகம வசனங்கள்

"கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்" (மத்தேயு 7:7).

"பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங்கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்" (1 யோவான் 7:7).

"ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்" (ரோமர் 10:17).

2மெய்க்கிறிஸ்துவுக்கும் கள்ளக்கிறிஸ்துக்களுக்கும் இடையிலான வேறுபாட்டினைக் கண்டறிதல்

கர்த்தராகிய இயேசு திரும்பி வருவதை நாம் வரவேற்க விரும்பினால், மெய்க்கிறிஸ்துவுக்கும் கள்ளக்கிறிஸ்துக்களுக்கும் இடையிலான வேறுபாட்டை எவ்வாறு கண்டறிவது என்பதை நாம் அறிந்துகொள்வது மிக முக்கியமானதாகும், ஏனென்றால் இதுதான் நம்மால் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக நிற்க முடியுமா இல்லையா என்பதில் நேரடி தொடர்பைக் கொண்டுள்ளது. இந்த பகுத்தறிவு நமக்கு இல்லையென்றால், கள்ளக்கிறிஸ்துக்களால் நாம் எளிதில் வஞ்சிக்கப்படுவோம் மற்றும் கிறிஸ்துவின் வருகையை மறுதலிப்போம் மற்றும் நிந்திப்போம். இறுதியாக, நாம் கர்த்தரால் கைவிடப்பட்ட புத்தியில்லாத கன்னிகைகளாக மாறி, பரலோகராஜ்யத்திற்குள் செல்லும் வாய்ப்பை இழப்போம். அப்படியானல் மெய்க்கிறிஸ்துவுக்கும் கள்ளக்கிறிஸ்துக்களுக்கும் இடையிலான வேறுபாட்டை நம்மால் எப்படிச் சொல்ல முடியும்?

குறிப்புக்கான வேதாகம வசனங்கள்

"அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்" (யோவான் 14:6).

"இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்" (யோவான் 16:12-13).

"ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்" (யோவான் 12:47-48).

"இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்" (மத்தேயு 24:4-5).

"ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்" (மத்தேயு 24:24).

3தேவனுடைய சத்தத்தைக் கேட்டு, தேவன் திரும்பி வருவதை வரவேற்றிடுங்கள்

கிறிஸ்து மாம்சத்திலுள்ள தேவன். அவர் ஒரு தெய்வீக சாராம்சத்தைக் கொண்டிருக்கிறார். அவரால் சத்தியத்தை வெளிப்படுத்தவும், எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் தேவனுடைய சத்தத்தை வெளிப்படுத்தவும் முடியும். ஆகையால், கர்த்தர் திரும்பி வருவதை வரவேற்பதற்கு முக்கியமானது என்னவென்றால் தேவனுடைய சத்தத்தை எவ்வாறு கேட்பது என்பதை அறிந்துகொள்வதாகும். கர்த்தர் திரும்பி வந்துள்ளார் என்று யாராவது சாட்சி கொடுப்பதைக் கேட்கும்போது, நாம் புத்தியுள்ள கன்னிகைகளாக இருந்து, அதைத் தேடவும் ஆராயவும் முயற்சி செய்ய வேண்டும், அதுதான் தேவனுடைய சத்தம் என்று நாம் உணர்ந்துகொள்கிற வேளையில், நாம் அதை ஏற்றுக்கொண்டு பின்பற்ற வேண்டும். இவ்விதமாகவே நம்மால் தேவனை வரவேற்று அவருடன் விருந்தில் கலந்துகொள்ள முடியும்.

குறிப்புக்கான வேதாகம வசனங்கள்

"இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்" (வெளிப்படுத்தல் 3:20).

"நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று" (மத்தேயு 25:6).

"என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது" (யோவான் 10:27).

"ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்" (வெளிப்படுத்தல் 2:7).

மெய்க்கிறிஸ்துவையும் கள்ளக்கிறிஸ்துக்களையும் கண்டறிந்து கர்த்தர் திரும்பி வருவதை வரவேற்றல்

அதிகாரபூர்வ இணையதளம்