00:00 00:00
00:00
00:00

ஜீவனுக்கான வழி என்பது யாரும் வைத்திருக்கக்கூடிய ஏதோ ஒன்றல்ல, யாரும் எளிதில் அடையக்கூடிய ஒன்றும் அல்ல. ஏனென்றால், ஜீவனானது தேவனிடமிருந்து மாத்திரமே வர இயலும். அதாவது, ஜீவனின் சாராம்சத்தை தேவன் மாத்திரமே வைத்திருக்கிறார், மேலும் தேவனிடம் மாத்திரமே ஜீவனுக்கான வழி உள்ளது. ஆகையால், தேவன் மாத்திரமே ஜீவனின் பிறப்பிடமாகவும், ஜீவத்தண்ணீரின் எப்போதும் பாய்ந்தோடும் ஊற்றாகவும் விளங்குகிறார். தேவன் உலகைச் சிருஷ்டித்தது முதலே, வாழ்க்கையின் முக்கிய ஆற்றல் தொடர்பான பல கிரியைகளைச் செய்துள்ளார், மனுஷனுக்கு ஜீவனைக் கொண்டுவரும் பல கிரியைகளைச் செய்துள்ளார், மேலும் மனுஷன் ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்காக ஒரு பெரிய விலைக்கிரயத்தைச் செலுத்தியுள்ளார். ஏனென்றால், தேவன்தாமே நித்திய ஜீவனாக இருக்கிறார், மேலும் தேவன்தாமே மனிதன் உயிர்த்தெழுவதற்கான வழியாவார். தேவன் ஒருபோதும் மனிதனுடைய இருதயத்திலிருந்து விலகி இருப்பதில்லை. அவர் எப்பொழுதும் மனுஷர்கள் மத்தியிலேயே வாசம்பண்ணுகிறார். அவர் மனுஷனுடைய வாழ்க்கைக்கு உந்துசக்தியாகவும், மனித இருப்புக்கான வேராகவும், பிறப்புக்குப் பிறகு மனுஷனுடைய ஜீவியத்தின் வளமான ஆதாரமாகவும் விளங்கி வருகிறார். அவர் மனுஷனை மறுபடியும் பிறக்கச் செய்கிறார், மேலும் அவனது ஒவ்வொரு பாத்திரத்திலும் உறுதியுடன் வாழ அவனுக்கு உதவுகிறார். அவரது வல்லமைக்கும் அவரது அழிக்கமுடியாத ஜீவ ஆற்றலுக்கும் நன்றி, மனுஷன் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறான், அதில் முழுவதும் தேவனுடைய ஜீவனின் வல்லமையானது மனுஷனுடைய ஜீவியத்தின் முக்கிய ஆதாரமாகத் திகழ்ந்து வருகிறது, மேலும் எந்தச் சாதாரண மனுஷனும் செலுத்தாத விலைக்கிரயத்தை தேவன் செலுத்தியுள்ளார். தேவனுடைய ஜீவ வல்லமை எந்த வல்லமையையும் மேற்கொள்ள இயலும்; மேலும், இது எந்த வல்லமையையும் விஞ்சுகிறது. அவரது ஜீவன் நித்தியமானது, அவருடைய வல்லமை இயற்கைக்கு அப்பாற்பட்டது. அவரது ஜீவ ஆற்றலை எந்தவொரு சிருஷ்டியாலும் அல்லது எதிரி வல்லமையாலும் வெற்றிகொள்ளப்பட முடியாது. காலம் அல்லது இடத்தைப் பொருட்படுத்தாமல் தேவனுடைய ஜீவ வல்லமையானது இருக்கிறது மற்றும் அதன் அற்புதமான பிரகாசத்தைப் பிரகாசிக்கிறது. வானமும் பூமியும் மாபெரும் மாற்றங்களுக்கு உட்படலாம், ஆனால் தேவனுடைய ஜீவன் சதாகாலங்களிலும் மாறாததாக இருக்கிறது. சகல காரியங்களும் கடந்து போகலாம், தேவனே சகல காரியங்களும் இருப்பதற்கான ஆதாரமாகவும், அவை இருப்பதற்கான வேராகவும் இருப்பதனால், தேவனுடைய ஜீவன் இன்னும் நிலைத்திருக்கும். மனுஷனுடைய ஜீவன் தேவனிடமிருந்து பிறக்கிறது. வானம் இருப்பதற்கு தேவனே காரணம், பூமி இருப்பது தேவனுடைய ஜீவனின் வல்லமையிலிருந்து உருவாகிறது. ஜீவனுள்ள எந்தவொரு பொருளும் தேவனுடைய ராஜ்யபாரத்தை விஞ்ச இயலாது, மேலும் ஜீவனுள்ள எதுவும் தேவனுடைய அதிகாரத்தின் ஆதிக்கத்தைத் தவிர்க்க முடியாது. இவ்விதமாக, ஒவ்வொருவரும் தாங்கள் யார் என்பதைப் பொருட்படுத்தாமல், தேவனுடைய ஆதிக்கத்தின் கீழ் அடிபணிய வேண்டும். ஒவ்வொருவரும் தேவனுடைய கட்டளைக்குக் கீழ் வாழ வேண்டும். அவருடைய கரங்களிலிருந்து யாரும் தப்பிக்க இயலாது.

ஒருவேளை நீ இப்போது ஜீவனை அடைய விருப்பப்படலாம் அல்லது ஒருவேளை நீ சத்தியத்தைப் அடைய விருப்பப்படலாம். எது எப்படியிருந்தாலும், நீ தேவனைக் கண்டுபிடிக்க விரும்புகிறாய், நீ நம்பக்கூடிய, உனக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கக்கூடிய தேவனைக் கண்டுபிடிக்க விருப்பப்படுகிறாய். நீ நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள விருப்பப்பட்டால், நீ முதலில் நித்திய ஜீவனின் பிறப்பிடத்தைப் புரிந்துகொள்ள வேண்டும், மேலும் தேவன் எங்கே இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். தேவன் மாத்திரமே மாறாத ஜீவனாக இருக்கிறார் என்றும், தேவனிடம் மாத்திரமே ஜீவனுக்கான வழி உள்ளது என்றும் நான் ஏற்கனவே கூறியுள்ளேன். தேவன் மாறாத ஜீவனாக இருப்பதனால், அவரே நித்திய ஜீவனாக இருக்கிறார்; தேவன் மாத்திரமே ஜீவனுக்கான வழியாக இருப்பதனால், தேவனே நித்திய ஜீவனுக்கான வழியாக இருக்கிறார். இவ்வாறு இருப்பதனால், தேவன் எங்கே இருக்கிறார் என்பதையும், இந்த நித்திய ஜீவனுக்கான வழியை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பதையும் நீ முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இப்போது இந்த இரண்டு பகுதிகளைக் குறித்தும் தனித்தனியாக ஐக்கியத்தில் ஈடுபடுவோம்.

நீ உண்மையிலேயே நித்திய ஜீவனுக்கான வழியைப் பெற்றுக்கொள்ளப் விருப்பப்பட்டால், அதைத் தேடுவதில் நீ வாஞ்சையாக இருந்தால், முதலில் இந்தக் கேள்விக்குப் பதிலளி: தேவன் இன்று எங்கே இருக்கிறார்? “தேவன் பரலோகத்தில் வாசம் பண்ணுகிறார், நிச்சயமாக அவர் உன் வீட்டில் வாசம் பண்ணமாட்டார், இல்லையா?” என்று நீ ஒருவேளை பதிலளிக்கலாம். தேவன் வெளிப்படையாக எல்லாவற்றிலும் வாசம் பண்ணுகிறார் என்று நீ ஒருவேளை சொல்லலாம். அல்லது தேவன் ஒவ்வொரு நபரின் இருதயத்திலும் வாசம் பண்ணுகிறார், அல்லது தேவன் ஆவிக்குரிய உலகில் இருக்கிறார் என்று நீ சொல்லலாம். நான் இவற்றில் எதையும் மறுக்கவில்லை, ஆனால் நான் பிரச்சனையைத் தெளிவுபடுத்த வேண்டும். தேவன் மனுஷனுடைய இருதயத்தில் வாசம் பண்ணுகிறார் என்று சொல்வது முற்றிலும் சரியல்ல, ஆனால் அது முற்றிலும் தவறும் அல்ல. ஏனென்றால், தேவனுடைய விசுவாசிகளுக்கு மத்தியில், மெய்யான விசுவாசம் கொண்டவர்களும் இருக்கிறார்கள், பொய்யான விசுவாசம் கொண்டவர்களும் இருக்கிறார்கள், தேவன் அங்கீகரிக்கிறவர்களும் இருக்கிறார்கள், அவர் அங்கீகரிக்காதவர்களும் இருக்கிறார்கள், அவரைப் பிரியப்படுத்துபவர்களும் இருக்கிறார்கள், அவர் வெறுக்கிறவர்களும் இருக்கிறார்கள், அவர் பரிபூரணமாக்குகிறவர்களும் இருக்கிறார்கள், அவர் அகற்றுகிறவர்களும் இருக்கிறார்கள். ஆகையால், ஒரு சிலரின் இருதயங்களிலேயே தேவன் வாசம் பண்ணுகிறார் என்று நான் சொல்கிறேன், இவர்கள் சந்தேகத்திற்கிடமின்றி தேவனை மெய்யாகவே விசுவாசிப்பவர்களும், தேவன் அங்கீகரிப்பவர்களும், அவரைப் பிரியப்படுத்துபவர்களும் மற்றும் அவர் பரிபூரணமாக்குபவர்களும் ஆக இருக்கிறார்கள். அவர்கள் தான் தேவனால் வழிநடத்தப்படுகிறவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தேவனால் வழிநடத்தப்படுவதால், நித்திய ஜீவனுக்கான தேவனுடைய வழியை ஏற்கனவே கேள்விப்பட்டவர்களும் பார்த்தவர்களுமாக இருக்கிறார்கள். தேவன் மீதான விசுவாசத்தைப் பொய்யாகக் கொண்டிருக்கிறவர்களும், தேவனால் அங்கீகரிக்கப்படாதவர்களும், தேவனால் வெறுக்கப்படுபவர்களும், தேவனால் அகற்றப்படுபவர்களும் தேவனால் புறக்கணிக்கப்படுவார்கள், ஜீவனுக்கான வழியில்லாமல் இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் மற்றும் தேவன் எங்கே இருக்கிறார் என்பதை அறியாமல் இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதற்கு நேர்மாறாக, யாருடைய இருதயங்களில் தேவன் வாசம் பண்ணுகிறாரோ அவர்களுக்கு அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியும். அவர்களுக்குத்தான் தேவன் நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்கிறார், அவர்கள்தான் தேவனைப் பின்பற்றுகிற ஜனங்களாக இருக்கிறார்கள். தேவன் எங்கே இருக்கிறார் என்று இப்போது உனக்குத் தெரியுமா? தேவன் மனிதனின் இருதயத்திலும் மனிதனின் பக்கத்திலும் இருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் ஆவிக்குரிய உலகில் மட்டுமின்றி, மனிதன் வாழும் பூமியின் மீதும் இன்னும் அதிகமாக வாசம் பண்ணுகிறார். ஆகையால் கடைசி நாட்களின் வருகை தேவனுடைய கிரியையைப் புதிய எல்லைக்குள் கொண்டு வந்துள்ளது. சகலத்தின் மீதும் தேவன் ராஜ்யபாரத்தைக் கொண்டிருக்கிறார், மேலும் அவர் மனிதனுடைய இருதயத்தில் முக்கிய ஆதாரமாக இருக்கிறார். மேலும், அவர் மனிதர்களுக்கு மத்தியில் வாசம் பண்ணுகிறார். இவ்விதமாக மாத்திரமே அவர் மனுக்குலத்திற்கு ஜீவனுக்கான வழியைக் கொண்டுவர இயலும், மேலும் மனிதனை ஜீவனுக்கான வழியில் கொண்டுவர இயலும். மனுஷன் ஜீவனுக்கான வழியைப் பெறுவதற்காகவும், மேலும் மனுஷன் ஜீவிப்பதற்காகவும் தேவன் பூமிக்கு வந்து, மனுஷர்களுக்கு மத்தியில் வாசம் பண்ணுகிறார். அதே நேரத்தில், தேவன் மனுஷர் மத்தியில் அவர் செய்யும் தமது நிர்வாகத்த்துடன் ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கு சகலத்திற்கும் எல்லாவற்றையும் கட்டளையிடுகிறார். ஆகையால், தேவன் பரலோகத்திலும் மனுஷருடைய இருதயத்திலும் வாசம் பண்ணுகிறார் என்ற போதனையை மாத்திரமே நீ ஏற்றுக்கொண்டு, மனுஷர்களுக்கு மத்தியில் தேவன் வாசம் பண்ணுகிறார் என்ற சத்தியத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், நீ ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், ஒருபோதும் சத்தியத்திற்கான வழியைப் பெற்றுக்கொள்ள மாட்டாய்.

தேவனே ஜீவனும் சத்தியமுமாக இருக்கிறார், அவருடைய ஜீவனும் சத்தியமும் ஒன்றாக இருக்கின்றன. சத்தியத்தைப் பெற்றுக்கொள்ளத் திராணியில்லாதவர்கள் ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். சத்தியத்தின் வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் உதவி ஆகியவை இல்லாமல், நீ எழுத்துக்களையும், போதனைகளையும், எல்லாவற்றிற்கும் மேலாக, மரணத்தையும் மாத்திரமே பெற்றுக்கொள்வாய். தேவனுடைய ஜீவன் சதாகாலங்களிலும் உள்ளது, மேலும் அவருடைய சத்தியமும் ஜீவனும் ஒன்றாகவே இருக்கின்றன. உன்னால் சத்தியத்தின் பிறப்பிடத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை என்றால், ஜீவனின் ஊட்டத்தை நீ பெற்றுக்கொள்ள மாட்டாய்; வாழ்வின் ஏற்பாடுகளை உன்னால் பெற்றுக்கொள்ள இயலவில்லை என்றால், உன்னிடம் நிச்சயமாக எந்தச் சத்தியமும் இருக்காது. ஆகையால், கற்பனைகளையும் கருத்துக்களையும் தவிர, உனது சரீரம் முழுவதும் துர்நாற்றம் வீசும் மாம்சமாக இருக்குமே ஒழிய வேறு எதுவுமாக இருக்காது. புத்தகங்களின் வார்த்தைகள் ஜீவனாகக் கருதப்படாது என்பதையும், வரலாற்றுப் பதிவுகளைச் சத்தியமாகத் தொழுதுகொள்ள முடியாது என்பதையும், கடந்த கால விதிமுறைகளை தற்போது தேவனால் பேசப்படும் வார்த்தைகளாக எடுத்துக்கொள்ள இயலாது என்பதையும் அறிந்துகொள். தேவன் பூமிக்கு வந்து மனுஷர்களுக்கு மத்தியில் வாழும்போது தேவன் வெளிப்படுத்தியது மாத்திரமே சத்தியமாகவும், ஜீவனாகவும், தேவனுடைய சித்தமாகவும் மற்றும் அவருடைய தற்போதைய கிரியை செய்யும் முறையாகவும் இருக்கிறது. கடந்த காலங்கள் முதல் இன்றுவரை தேவன் பேசிய வார்த்தைகளின் பதிவுகளை நீ பயன்படுத்தினால், அது உன்னை ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக்குகிறது. மேலும் வரலாற்றுப் பாரம்பரியத்தில் நிபுணனாக உன்னை விவரிப்பதே சிறந்த வழியாகும். ஏனென்றால், தேவன் கடந்த காலங்களில் செய்த கிரியையின் அடையாளங்களை நீ எப்போதும் விசுவாசிக்கிறாய், அவர் முன்பு மனுஷர்களுக்கு மத்தியில் கிரியை செய்தபோது விடப்பட்ட தேவனுடைய நிழலை மாத்திரமே விசுவாசிக்கிறாய், மேலும் முந்தைய காலங்களில் தேவன் தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்குக் கொடுத்த வழியை மாத்திரமே விசுவாசிக்கிறாய். இன்று தேவனுடைய கிரியையின் வழிகாட்டுதலை நீ விசுவாசிக்கவில்லை, இன்று தேவனுடைய மகிமையான முகத்தை நீ விசுவாசிக்கவில்லை, தற்போது தேவன் வெளிப்படுத்திய சத்தியத்தின் வழியை நீ விசுவாசிக்கவில்லை. ஆகையால் நீ நிச்சயமாகவே நிஜத்துடன் முற்றிலும் தொடர்பில்லாத ஒரு பகல் கனவு காண்கிறவனாக இருக்கிறாய். இப்போது மனுஷனுக்கு ஜீவனைக் கொடுக்க இயலாத வார்த்தைகளையே நீ பிடித்துக்கொண்டிருந்தால், நீ நம்பிக்கையற்ற ஒரு செத்துப்போன மரக்கட்டையாக[அ] இருக்கிறாய். ஏனென்றால் நீ மிகவும் பழமைவாதியாகவும், மிகவும் பிடிவாதமானவனாகவும், பகுத்தறிவுக்கு இடமளிக்காதவனாகவும் இருக்கிறாய்!

மாம்சமான தேவன் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார், ஆகையால் ஜனங்களுக்குச் சத்தியத்தைக் கொடுக்கக்கூடிய கிறிஸ்து தேவன் என்று அழைக்கப்படுகிறார். மனிதனால் அடைய முடியாதவையாகிய தேவனின் சாராம்சம் அவரிடம் இருப்பதாலும், தேவனுடைய மனநிலையை அவர் கொண்டிருப்பதாலும், அவருடைய கிரியையில் ஞானம் இருப்பதாலும், இதைப் பற்றி அதிகமாக எதுவுமில்லை. தங்களைக் கிறிஸ்து என்று அழைத்தாலும், தேவனுடைய கிரியையைச் செய்ய முடியாதவர்கள் ஏமாற்றுக்காரர்கள். கிறிஸ்து பூமியில் தேவனுடைய வெளிப்பாடாக மட்டுமின்றி, அவர் மனுஷர்களுக்கு மத்தியில் தனது கிரியையைச் செய்து முடிப்பதனால் தேவனால் நம்பப்பட்ட குறிப்பிட்ட மாம்சமாகவும் இருக்கிறார். இந்த மாம்சத்தை எந்தவொரு மனிதனாலும் அகற்ற முடியாது, ஆனால் பூமியில் தேவனுடைய கிரியையைப் போதுமான அளவு தாங்கக்கூடிய, மற்றும் தேவனுடைய மனநிலையை வெளிப்படுத்தவும், தேவனை நன்கு பிரதிநிதித்துவப்படுத்தவும், மனுஷனுக்கு ஜீவனைக் கொடுக்கக்கூடிய ஒரு மாம்சமாக இருக்கிறது. இன்று இல்லாவிட்டாலும் ஒரு நாள், கிறிஸ்துவைப் போலப் பாசாங்கு செய்பவர்கள் அனைவரும் விழுந்துபோவார்கள், ஏனென்றால் அவர்கள் கிறிஸ்து என்று சொல்லிக் கொண்டாலும், அவர்களிடம் கிறிஸ்துவின் சாராம்சம் எதுவுமில்லை. ஆகையால் கிறிஸ்துவின் நம்பகத்தன்மையை மனுஷனால் வரையறுக்க இயலாது, ஆனால் தேவனால் பதிலளிக்கப்பட்டு முடிவு செய்யப்படுகிறது என்று சொல்கிறேன். இவ்விதமாக, நீ உண்மையிலேயே ஜீவனுக்கான வழியைத் தேட விருப்பப்பட்டால், தேவன் பூமிக்கு வந்தே மனுஷனுக்கு ஜீவனுக்கான வழியைக் கொடுக்கும் கிரியைச் செய்கிறார் என்பதை நீ முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும், மேலும் கடைசி நாட்களில்தான் அவர் பூமிக்கு வந்து மனுஷனுக்கு ஜீவனின் வழியைக் கொடுக்கிறார் என்பதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும். இது கடந்த காலத்தில் அல்ல; இது இன்று தான் நடக்கிறது.

கடைசி நாட்களின் கிறிஸ்து ஜீவனைக் கொண்டுவருகிறார், மேலும் சத்தியத்தின் நீடித்த மற்றும் நித்திய வழியைக் கொண்டுவருகிறார். இந்தச் சத்தியம்தான் மனுஷன் ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் வழியாகும், மேலும் இதுதான் மனுஷன் தேவனை அறிந்துகொள்ளும் மற்றும் தேவனால் அங்கீகரிக்கப்படும் ஒரே வழியாகும். கடைசி நாட்களில் கிறிஸ்து தந்தருளிய ஜீவனுக்கான வழியை நீ தேடவில்லை என்றால், நீ ஒருபோதும் இயேசுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், பரலோக ராஜ்யத்தின் வாசலில் நுழைய ஒருபோதும் தகுதி பெறமாட்டாய், ஏனென்றால் நீ ஒரு கைப்பாவையாகவும் வரலாற்றுக் கைதியாகவும் இருக்கிறாய். விதிமுறைகளாலும் எழுத்துக்களாலும், கட்டுப்படுத்தப்பட்டவர்களாலும், வரலாற்றால் விலங்கிடப்பட்டவர்களாலும் ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது ஜீவனுக்கான நிரந்தர வழியைப் பெற்றுக்கொள்ளவோ இயலாது. ஏனென்றால், சிங்காசனத்திலிருந்து பாயும் ஜீவத்தண்ணீருக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கலங்கலான தண்ணீரே அவர்களிடம் உள்ளது. ஜீவத்தண்ணீர் வழங்கப்படாதவர்கள் என்றென்றும் சடலங்களாகவும், சாத்தானின் விளையாட்டுப் பொருட்களாகவும், நரகத்தின் புத்திரர்களாகவுமே இருப்பார்கள். அப்படியானால், அவர்களால் எவ்வாறு தேவனைப் பார்க்க இயலும்? நீ கடந்த காலத்தை மாத்திரமே பற்றிக்கொண்டிருக்க முயற்சி செய்து, அசையாமல் நிற்பதன் மூலம் காரியங்களை அப்படியே மாற்றாமல் வைத்திருக்க மாத்திரமே முயற்சி செய்து, இது வரையுள்ள நிலையை மாற்றவும் வரலாற்றை விட்டுவிடவும் முயற்சி செய்யவில்லை என்றால், நீ எப்போதும் தேவனுக்கு விரோதமாக இருக்க மாட்டாயா? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகள் ஆர்ப்பரிக்கும் அலைகளையும், உருளும் இடிகளையும் போலப் பரந்ததாகவும், வல்லமை பொருந்தியவையாகவும் இருக்கின்றன, ஆனாலும் நீ உனது மதியீனத்தைப் பற்றிப்பிடித்துக்கொண்டு, எதுவும் செய்யாமல் அழிவை எதிர்பார்த்து செயலற்ற முறையில் அமர்ந்திருக்கிறாய். இவ்விதத்தில், ஆட்டுக்குட்டியானவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் ஒருவனாக நீ எவ்வாறு கருதப்படுவாய்? நீ பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கும் தேவன் எப்போதும் புதியவராக இருக்கிறார், அவர் ஒருபோதும் பழமையானவர் அல்ல என்பதை எவ்வாறு உன்னால் நியாயப்படுத்த இயலும்? உனது மஞ்சளான புத்தகங்களின் வார்த்தைகள் உன்னை எவ்வாறு ஒரு புது யுகத்திற்குள் உன்னைக் கொண்டு செல்ல இயலும்? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகளைத் தேடுவதற்கு அவை எவ்வாறு உன்னை வழிநடத்த இயலும்? அவை எவ்வாறு உன்னைப் பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலும்? உன் கரங்களில் நீ பிடித்துக் கொண்டிருப்பவை ஜீவனைக் கொடுக்கத் திராணியுள்ள சத்தியங்கள் அல்ல, ஆனால் அவை தற்காலிக ஆறுதலளிக்கும் எழுத்துக்களாகும். நீ வாசிக்கும் வேத வசனங்கள் உன் நாவை மாத்திரமே வளப்படுத்த இயலும், அவை மனித ஜீவனையும், உன்னைப் பரிபூரணத்திற்கு வழிநடத்தக்கூடிய வழிகளையும் நீ அறிந்துகொள்ள உதவும் தத்துவத்தின் வார்த்தைகளாக இருப்பதில்லை. இந்த முரண்பாடு பிரதிபலிப்புக்கான காரணத்தை உனக்குக் கொடுப்பதில்லையா? அதற்குள் உள்ள இரகசியங்களை அது உனக்கு உணர்த்தவில்லையா? நீயாகவே உன்னைப் பரலோகத்திற்குச் கொண்டு சென்று தேவனை நேரடியாகச் சந்திக்கத் தகுதியுள்ளவனா? தேவன் வராமலே, தேவனுடன் குடும்ப சந்தோஷத்தை அனுபவிக்க உன்னை நீயே பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலுமா? நீ இன்னும் கனவு கண்டு கொண்டிருக்கிறாயா? அப்படியானால், நீ கனவு காண்பதை நிறுத்திவிட்டு, இப்போது யார் கிரியை செய்கிறார் என்று பார், கடைசி நாட்களில் மனிதனை இரட்சிக்கும் பணியை இப்போது யார் செய்கிறார் என்று பார். நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ ஒருபோதும் சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள மாட்டாய்.

கிறிஸ்து பேசும் சத்தியத்தை நம்பாமல் ஜீவனைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர், பூமியின் மேல் மிகவும் முட்டாள்தனமான ஜனங்களாவர், கிறிஸ்து கொண்டுவரும் ஜீவனின் வழியை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கற்பனையில் தொலைந்து போகிறார்கள். ஆகையால், கடைசி நாட்களின் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தேவனால் என்றென்றும் வெறுக்கப்படுவார்கள் என்று சொல்கிறேன். கிறிஸ்து தான் கடைசி நாட்களில் ராஜ்யத்திற்குள் செல்வதற்கான மனிதனின் நுழைவாயில், அவரைச் சந்திக்கக்கூடியவர்கள் யாருமில்லை. கிறிஸ்துவின் மூலமாக அல்லாமல் தேவனால் யாரும் பரிபூரணமாக்கப்பட மாட்டார்கள். நீ தேவனை விசுவாசிக்கிறாய், ஆகையால் நீ அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு அவருடைய வழிக்குக் கீழ்ப்படிய வேண்டும். சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள இயலாமலும், வாழ்வின் ஏற்பாட்டை ஏற்றுக்கொள்ள இயலாமலும் இருக்கும்போது, ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்வது பற்றி மட்டுமே உன்னால் சிந்திக்க இயலாது. கிறிஸ்து தன்னை மெய்யாகவே விசுவாசிக்கிற அனைவருக்கும் ஜீவனைக் கொடுப்பதற்காகவே கடைசி நாட்களில் வருகிறார். அவருடைய கிரியை பழைய யுகத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, புதிய யுகத்திற்குள் நுழைவதற்காகவே செய்யப்படுகிறது, மேலும் அவருடைய கிரியையானது புதிய யுகத்திற்குள் பிரவேசிக்கும் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டிய வழியாகும். உன்னால் அவரை ஏற்றுக்கொள்ள முடியாமல், அதற்குப் பதிலாக அவரை நிந்திக்கவோ, தூஷிக்கவோ அல்லது துன்புறுத்தவோ கூட செய்தால், நீ நித்தியமாக எரிக்கப்படுவாய், ஒருபோதும் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க மாட்டாய். இந்தக் கிறிஸ்து தாமே பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடாகவும், தேவனுடைய வெளிப்பாடாகவும், பூமியில் தமது கிரியையைச் செய்யத் தேவன் நம்பி ஒப்படைக்கப்பட்டவராகவும் இருக்கிறார். ஆகையால், கடைசி நாட்களில் கிறிஸ்துவால் செய்யப்பட்ட அனைத்தையும் உன்னால் ஏற்றுக்கொள்ள இயலாவிட்டால், நீ பரிசுத்த ஆவியானவரை தூஷிக்கிறாய் என்று சொல்கிறேன். பரிசுத்த ஆவியானவரை நிந்திக்கிறவர்களுக்குக் கிடைக்கும் தண்டனை அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்ததே. கடைசி நாட்களின் கிறிஸ்துவை நீ எதிர்த்தால், கடைசி நாட்களின் கிறிஸ்துவை நீ வெறுத்து ஒதுக்கினால், அதற்கான பின்விளைவுகளைஉன் சார்பாகத் தாங்கிக்கொள்ள வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்பதையும் உனக்குச் சொல்கிறேன். மேலும், இந்த நாள் முதல் தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள உனக்கு வேறொரு வாய்ப்பும் கிடைக்காது; நீ உன்னைச் சரிக்கட்ட முயற்சி செய்தாலும், நீ தேவனுடைய முகத்தை ஒருபோதும் மீண்டும் பார்க்கமாட்டாய். நீ எதிர்ப்பது ஒரு மனிதன் அல்ல, நீ வெறுத்து ஒதுக்குவது ஒரு பலவீனமான நபரை அல்ல, மாறாக கிறிஸ்துவையே அப்படிச் செய்கிறாய். இதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்று உனக்குத் தெரியுமா? நீ சிறு தவறு செய்யாமல், மிகவும் வெறுக்கத்தக்க ஒரு குற்றத்தைச் செய்திருப்பாய். ஆகையால், சத்தியத்திற்கு முன்னால் உன் நச்சுப்பற்களைக் காட்ட வேண்டாம், அல்லது கவனக்குறைவான பரியாசங்களைச் செய்ய வேண்டாம் என்று எல்லோருக்கும் அறிவுறுத்துகிறேன், ஏனென்றால் சத்தியத்தால் மட்டுமே உனக்கு ஜீவனைக் கொண்டு வர இயலும், மேலும் சத்தியத்தைத் தவிர வேறு எதுவும் உன்னை மறுபடியும் பிறக்கச் செய்யவும், தேவனுடைய முகத்தை மீண்டும் பார்க்க வைக்கவும் உதவாது.

அடிக்குறிப்பு:

அ. ஒரு செத்துப்போன மரக்கட்டை: “உதவிக்கு அப்பாற்பட்டது” என்னும் அர்த்தம் கொண்ட ஒரு சீன முதுமொழி.

மேலும் படிக்க

மேலும் தலைப்புகள்