Christian Song | கடைசி நாட்களின் கிறிஸ்து தேவனுடைய நிர்வாகத் திட்டத்தின் இரகசியத்தை வெளிப்படுத்துகிறார் (Tamil Subtitles)

மார்ச் 25, 2021

தேவனின் ஆறாயிரம் ஆண்டுகாலத்

திட்டத்தில் உள்ள கிரியையின் தரிசனங்களைப் பொறுத்தமட்டில்

ஒருவராலும் அதனுடைய நுண்ணறிவைப் பெறமுடியாது

அவைகள் மனிதனுக்கு இரகசியங்களாக இருக்கின்றன.

மனுஷன் வேதாகமத்தைப் பற்றி எவ்வளவு பெரிய அறிவைக் கொண்டிருந்தாலும்,

அது வெறும் வார்த்தைகளே தவிர வேறொன்றுமில்லை,

ஏனென்றால் மனுஷனுக்கு அதன் சாராம்சம் புரிவதில்லை.

இந்த ஆறாயிரம் ஆண்டுகால கிரியை

எல்லா தீர்க்கதரிசனங்களையும் விட அதிக இரகசியமானது.

இது சிருஷ்டிப்பு முதல் இன்றுவரை மிகப் பெரிய இரகசியமாகவே இருக்கிறது,

உலகின் யுகங்கள் முழுவதிலும் உள்ள தீர்க்கதரிசிகளில் ஒருவராலும் இதைப்

புரிந்துகொள்ள முடியவில்லை,

ஏனென்றால் இந்த மறைபொருள் இறுதி யுகத்தில் மட்டுமே வெளிப்படுத்தப்படுகிறது.

வேதாகமத்தைப் படிப்பதால்,

மனுஷன் சில சத்தியங்களைப் புரிந்து கொள்ளலாம்,

சில வார்த்தைகளை விளக்கலாம்,

அல்லது சில அதிகாரங்களை பகுப்பாய்வு செய்யலாம்,

ஆனால் அதன்மூலம் அந்த வார்த்தைகளிலுள்ள அர்த்தத்தை வெளிக்கொணர முடியாது,

ஏனென்றால் எல்லா மனுஷரும் செத்த வார்த்தைகளை தான் காண்கிறார்கள்,

யேகோவா அல்லது இயேசுவினுடைய கிரியையைக் காண்பதில்லை.

இந்த கிரியையின் மறைபொருளை கட்டவிழ்க்க மனுஷனுக்கு வழியே இல்லை.

ஆறாயிரம் ஆண்டுகாலத் திட்டத்தின் இரகசியம் மிகப்பெரியது,

இது மனுஷனுக்குப் புரியாத பெரும் புதிராக இருக்கிறது,

இது மிகவும் ஆழமாக மறைக்கப்பட்டதாக இருக்கிறது.

தேவனின் சித்தத்தை ஒருவராலும் புரிந்துகொள்ள முடியாது

அவர் தாமே வெளிப்படுத்தி

விளக்காத பட்சத்தில் ஒருவராலும் புரிந்து கொள்ள முடியாது,

இல்லையெனில், அவை எப்போதும் புரியாத புதிராகவே இருக்கும்.

மதங்களில் இருப்பவர்களைப் பொருட்படுத்தாதீர்கள்;

இன்று உங்களுக்கு சொல்லப்படாவிட்டால்,

நீங்கள் அதைப் புரிந்து கொள்ள முடியாமற்ப் போகும்.

இந்த ஆறாயிரம் ஆண்டுகால கிரியை

எல்லா தீர்க்கதரிசனங்களையும் விட அதிக இரகசியமானது.

இது சிருஷ்டிப்பு முதல் இன்றுவரை மிகப் பெரிய இரகசியமாகவே இருக்கிறது,

உலகின் யுகங்கள் முழுவதிலும் உள்ள தீர்க்கதரிசிகளில் ஒருவராலும் இதைப்

புரிந்துகொள்ள முடியவில்லை,

ஏனென்றால் இந்த மறைபொருள் இறுதி யுகத்தில் மட்டுமே வெளிப்படுத்தப்படுகிறது.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

Leave a Reply

பகிர்க

ரத்து செய்க