கிறிஸ்தவ பாடல் 2021 | மாம்சமான தேவன் மனிதனாகவும் தேவனாகவும் இருக்கிறார் (Tamil Subtitles)
ஜூன் 9, 2021
"மாம்சமாதல்" என்பது தேவன் மாம்சத்தில் தோன்றுவதாகும்.
மனித சரீரத்தில் மனிதர்களிடையே தேவன் கிரியை செய்கிறார்.
ஆகவே, மாம்சமான தேவன் சாதாரண மனித மாம்சம்
உடையவராக இருக்க வேண்டும்.
தேவன் மாம்சமாதல் பொருள் தேவன் மாம்சத்தில்
வாழ்கிறார் மற்றும் கிரியை செய்கிறார் என்பதாகும்.
அவருடைய சாராம்சத்தில் அவர் மனிதனாகிறார்.
மனிதத்தன்மை இல்லாமல் மாம்சம் இருக்க முடியாது.
அது இல்லாமல் ஒருவரும் மனிதர் அல்ல.
தேவன் சரீரத்தை எடுக்கும்போது,
அவருடைய மனிதத்தன்மை என்பது உள்ளார்ந்த குணமாகும்.
தேவன் மாம்சமாகிறபோது அவர் முற்றிலும் தெய்வீகத்தன்மையுள்ளவர்,
மனிதரல்ல என்று சொல்லவே கூடாது.
அப்படிச் சொல்வது தேவதூஷனமாகும், மேலும்
மாம்சமாதலின் சத்தியத்தை மீறுகிறதாய் இருக்கிறது.
தேவன் மாம்சமாக மாறுவதால்,
அவருடைய சாரம்சமானது மனிதத்தன்மை மற்றும்
தெய்வீகத்தன்மையின் கலவையாக இருக்கிறது.
இந்தக் கலவையானது தேவன் தாமே என்று,
அதாவது பூமியிலுள்ள தேவன் என்றழைக்கப்படுகிறார்.
தெய்வீகத்தன்மையில் செய்யப்பட்ட தேவனின் கிரியை
அவரது மனிதத்தன்மைக்குள் மறைக்கப்பட்டிருக்கிறது.
மனிதனாகவும் தேவனாகவும் அவருடைய கிரியையைச்
செய்வது அவருடைய மாம்சமாகும்.
தேவன் மனிதனாகிறபோது, மனிதனாகவும்
தேவனாகவும் ஒரு சரீரத்தில் இருக்கிறார்,
அதனால் எந்த மனிதனுக்கும் மேலானவராக இருக்கிறார்.
அவரைப் போன்ற புறம்பான ஒரு மனித தோற்றமுள்ள அனைவரிலும்,
மனிதத்தன்மையைக் கொண்ட அனைவரிலும்,
அவர் ஒருவர் மட்டுமே மாம்சமாகிய தேவனாக இருக்கிறார்.
மற்ற அனைவரும் மனிதர்களாகவே இருக்கிறார்கள்.
தேவன் மாம்சமாக மாறுவதால்,
அவருடைய சாரம்சமானது மனிதத்தன்மை மற்றும்
தெய்வீகத்தன்மையின் கலவையாக இருக்கிறது.
இந்தக் கலவையானது தேவன் தாமே என்று,
அதாவது பூமியிலுள்ள தேவன் என்றழைக்கப்படுகிறார்.
சிருஷ்டிக்கப்பட்ட மனிதர்கள் யாவருக்கும் மனிதத்தன்மை மட்டுமே இருக்கிறது,
அதே நேரத்தில் மாம்சமாகிய தேவன் மட்டுமே,
மனிதத்தன்மை மற்றும் தெய்வீகத்தன்மையும் கொண்டிருக்கிறார்.
"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்