கிறிஸ்தவ பாடல் | தேவனின் அருமையைக் கண்டறிய அவருடைய கிரியையை அநுபவியுங்கள் (Tamil Subtitles)
ஜூன் 17, 2021
தேவனின் சாராம்சம் வெறுமனே மனிதன் நம்புவதற்காக மட்டுமல்ல,
ஆனால், அது மனிதனால் நேசிக்கப்படுவதற்காகவாகும்.
ஆனால் தேவனை விசுவாசிக்கிறவர்களில் பலருக்கு
இது இன்னும் புரியாமலே இருக்கிறது.
தேவனின் அருமை அவருடைய கிரியையில் வெளிப்படுத்தப்படுகிறது.
ஜனங்கள் அவருடைய கிரியையை அனுபவிக்கும் போது மட்டுமே
அவர்களால் அவருடைய அமையைக் கண்டுகொள்ள முடியும்.
தேவனின் அருமை மெய்யான அநுபவத்தில் உணரப்படுகிறது.
நிஜ வாழ்க்கையில் அதைக் கடைபிடிக்காமல்,
ஒருவராலும் அதைக் கண்டுபிடிக்க முடியாது.
ஜனங்கள் தேவனை நேசிக்கத் துணிவு கொள்வதும் இல்லை,
அவரை நேசிக்க முயற்சிப்பதும் இல்லை.
தேவன் அருமையானவர் என்பதைக் குறித்து அவர்கள் ஒருபோதும் கண்டுபிடித்ததில்லை
அல்லது தேவன் மனிதனை நேசிக்கிறார் என்றும் கண்டுபிடித்ததில்லை,
அவர் மனிதனால் நேசிக்கப்பட வேண்டிய தேவன்.
தேவனைப் பற்றி நேசிக்க அநேகம் இருக்கிறது,
அவருடன் ஐக்கியப்படாமல் ஜனங்களால் அதைக் கண்டுபிடிக்க இயலாது.
தேவன் பூமிக்கு வரும்போது,
அவருடைய மெய்யான கிரியைகளையும் அவருடைய அருமையையும் மனிதன் காண முடியும்,
மேலும் அவருடைய மெய்யான மற்றும் இயல்பான மனநிலையை காண முடிகிறது.
இவை அனைத்தும் பரலோகத்தில் உள்ள தேவனைக்குறித்த அறிவை விட
பல மடங்கு உண்மையானவை ஆகும்.
தேவனைப் பற்றி நேசிக்க அநேகம் இருக்கிறது.
தேவனைப் பற்றி நேசிக்க அநேகம் இருக்கிறது.
பரலோகத்திலுள்ள தேவனை மனிதன் எவ்வளவு
நேசிக்கிறான் என்பதைப் பொருட்படுத்தாமல்,
அது மனிதனின் கருத்துக்களால் நிறைந்துள்ளது மற்றும் அது உண்மையானது அல்ல.
பூமியில் அவர்கள் தேவன்மீது எவ்வளவு குறைந்த அன்பு
வைத்திருந்தாலும் அது இன்னும் மெய்யாயிருக்கிறது.
தேவன் தமது மெய்யான கிரியையின் மூலம் ஜனங்கள்
அவரை அறிந்துகொள்ளச் செய்கிறார்.
இந்த அறிவின் மூலம் அவர் அவர்களின் அன்பைப் பெறுகிறார்.
மனிதனை நேசிக்க வைப்பதற்காக, தேவன் மனிதர்களிடையே வருகிறார்,
அவர்களை அவரது யதார்த்தத்தை அனுபவிக்கும்படி செய்கிறார்.
இது பேதுருவைப் போன்றது, அவர் இயேசுவோடு வாழ்ந்திருக்காவிட்டால்,
அவனால் இயேசுவை நேசிப்பது கூடாத காரியமாய் போயிருக்கும்.
ஆகவே, இயேசுவுடனான ஐக்கியத்தின் அடிப்படையில்
இயேசுவிடம் அவர் கொண்டிருந்த விசுவாசமும் கட்டப்பட்டது.
ஜனங்கள் தேவனை நேசிக்கத் துணிவு கொள்வதும் இல்லை,
அவரை நேசிக்க முயற்சிப்பதும் இல்லை.
தேவன் அருமையானவர் என்பதைக் குறித்து அவர்கள் ஒருபோதும் கண்டுபிடித்ததில்லை
அல்லது தேவன் மனிதனை நேசிக்கிறார் என்றும் கண்டுபிடித்ததில்லை,
அவர் மனிதனால் நேசிக்கப்பட வேண்டிய தேவன்.
தேவனைப் பற்றி நேசிக்க அநேகம் இருக்கிறது,
அவருடன் ஐக்கியப்படாமல் ஜனங்களால் அதைக் கண்டுபிடிக்க இயலாது.
தேவன் பூமிக்கு வரும்போது,
அவருடைய மெய்யான கிரியைகளையும் அவருடைய அருமையையும் மனிதன் காண முடியும்,
மேலும் அவருடைய மெய்யான மற்றும் இயல்பான மனநிலையை காண முடிகிறது.
இவை அனைத்தும் பரலோகத்தில் உள்ள தேவனைக்குறித்த அறிவை விட
பல மடங்கு உண்மையானவை ஆகும்.
தேவனைப் பற்றி நேசிக்க அநேகம் இருக்கிறது.
தேவனைப் பற்றி நேசிக்க அநேகம் இருக்கிறது.
தேவன் மாம்சமாக மாறவில்லை என்றால்,
அவருடைய கிரியையை அனுபவிக்க முடியாமல் போயிருந்திருக்கும்,
எனவே தேவன் மீதான மனிதனின் அன்பு பொய் மற்றும்
கற்பனையால் கறைபடுத்தப்பட்டிருக்கும்.
பரலோகத்தில் தேவனுடைய அன்பு
பூமியிலுள்ள தேவன் மீதான அன்பைப் போல உண்மையானதல்ல,
பரலோகத்திலுள்ள தேவனைப்பற்றிய அறிவு
அவர்களின் கற்பனைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
சரீரப்பிரகாரமாக காண்பதைக் கொண்டல்ல
அல்லது மனிதன் எதை அநுபவித்து இருக்கிறான் என்பதையும் கொண்டல்ல.
"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து
நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?
பிற காணொளி வகைகள்