கிறிஸ்தவ பாடல் | மனிதனின் தேவனுடைய தண்டனை நாள் சமீபித்திருக்கிறது (Tamil Subtitles)

ஜூன் 19, 2021

கொடூரமான பாவங்களைச் செய்ததினால் பலர் இளைப்பாறுதலின்றி,

அமைதியற்றவர்களாகவும் உணருகிறார்கள்.

பலர் ஒரு நற்கிரியையும் செய்யாததினால்,

தங்களைக்குறித்து வெட்கமடைந்திருக்கிறார்கள்.

இன்னும் பலர் தங்கள் பாவங்களுக்காக

மனஸ்தாபப்படுவதை விடுத்து தேவனின் மனநிலையைச் சோதிக்கும்படி இன்னும்

தங்கள் அருவருப்புகளில் மோசத்திலிருந்து அதிக மோசத்திற்குக் கடந்து செல்கிறார்கள்.

தேவன் அவரது வீட்டில் தரித்திருக்கிற

துன்மார்க்கரை விட்டுவைப்பதில்லை.

ஏனெனில் மனிதனின் தண்டனைக்குரிய நாள் சமீபமாயிருக்கிறது.

அவருக்கென்று சொந்தத் திட்டமிருப்பதால், அவருக்கென்று சொந்தத் திட்டமிருப்பதால்,

தேவன் இந்த தீய ஆத்துமாக்களை அவசரத்தில் புறம்பே தள்ளுவதில்லை.

ஒரு குறிப்பிட்ட மனிதனின் செயல்களுக்காக தேவன் கவலைக் கொள்வதோ

அல்லது அதில் கவனம் செலுத்துவதோ இல்லை.

மாறாக, அவர் விரும்புகிற காரியங்களை அவர் செய்ய வேண்டிய கிரியையை

அவர் செய்கிறார்.

குறித்த நேரங்களில், அவர் திட்டமிட்டபடியே

ஒரு நொடி தாமதமாகவோ அல்லது விரைவாகவோ இல்லாமல்

எளிதாக, சீராக அவரது கிரியை தொடருகிறது.

தேவன் அவரது வீட்டில் தரித்திருக்கிற

துன்மார்க்கரை விட்டுவைப்பதில்லை.

ஏனெனில் மனிதனின் தண்டனைக்குரிய நாள் சமீபமாயிருக்கிறது.

அவருக்கென்று சொந்தத் திட்டமிருப்பதால், அவருக்கென்று சொந்தத் திட்டமிருப்பதால்,

தேவன் இந்த தீய ஆத்துமாக்களை அவசரத்தில் புறம்பே தள்ளுவதில்லை.

தேவனின் கிரியையின் ஒவ்வொரு படியிலும் அவர் அவர்களது முகஸ்துதியையும்,

பொய்யான தாழ்ச்சியையும் வெறுப்பதினால் சிலர் புறந்தள்ளப்படுகின்றனர்.

தேவனால் வெறுக்கப்படுக்கிறவர்கள் சகலரும்

அவரால் நிச்சயமாகவே கைவிடப்படுவார்கள்.

தேவன் அவரது வீட்டில் தரித்திருக்கிற

துன்மார்க்கரை விட்டுவைப்பதில்லை.

ஏனெனில் மனிதனின் தண்டனைக்குரிய நாள் சமீபமாயிருக்கிறது.

அவருக்கென்று சொந்தத் திட்டமிருப்பதால், அவருக்கென்று சொந்தத் திட்டமிருப்பதால்,

தேவன் இந்த தீய ஆத்துமாக்களை அவசரத்தில் புறம்பே தள்ளுவதில்லை.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க