Christian Song | கடைசி நாட்களின் தேவ அவதாரமானவர் வார்த்தைகளால் மனிதனை பரிபூரணமாக்குகிறார் (Tamil Subtitles)

மார்ச் 25, 2021

முக்கியமாக தேவன் தம்முடைய வார்த்தைகளை பேசுவதற்கு பூமிக்கு வந்துள்ளார்.

நீ ஐக்கியப்படுவது தேவனுடைய வார்த்தையுடனே,

நீ பார்ப்பது தேவனுடைய வார்த்தையே, நீ கேட்பது தேவனுடைய வார்த்தையே,

நீ கடைப்பிடிப்பது தேவனுடைய வார்த்தையே,

நீ அனுபவிப்பது தேவனுடைய வார்த்தையே,

இந்த தேவ அவதாரமானவர் மனிதனை பரிபூரணமாக்க இந்த வார்த்தையை முக்கியமாக பயன்படுத்துகிறார்.

அவர் அறிகுறிகளையும் அதிசயங்களையும் காட்டுவதில்லை,

குறிப்பாக கடந்த காலத்தில் இயேசு செய்த கிரியையைச் செய்யவதில்லை.

அவர்கள் தேவனாயிருந்தாலும், மற்றும் இருவரும் மாம்சமாக இருந்தாலும்,

அவர்களுடைய ஊழியங்கள் ஒன்றல்ல.

கடைசி நாட்களில் தேவனால் செய்யப்படும் கிரியை

முதன்மையாக ஒவ்வொரு நபரையும் பரிபூரணமாக்குவதற்கும் மனிதனை வழிநடத்துவதற்கும்

அவருடைய வார்த்தையைப் பயன்படுத்துவதாகும்.

உன்னை தண்டிக்க அவர் உண்மைகளைப் பயன்படுத்துவதில்லை.

முதன்மையாக “மாம்சத்தில் தோன்றும் வார்த்தையின்” கிரியையை நிறைவு செய்வதற்காகவும்,

வார்த்தையைப் பயன்படுத்தி மனிதனை பரிபூரணமாக்குவதற்கும்,

வார்த்தையால் நடத்தப்படுவதையும் வார்த்தையால் செம்மைப்படுத்துவதையும்

மனிதனை ஏற்றுக்கொள்ளும்படி செய்யவும், இன்று, தேவன் மாம்சமானார்.

அவருடைய வார்த்தைகளில் அவர் உன்னை வாய்ப்புகளில் பெருகச் செய்து,

வாழ்க்கையில் பெருகச் செய்கிறார்.

அவருடைய வார்த்தைகளில் நீ அவருடைய கிரியைகளையும் செயல்களையும் காணலாம்.

உன்னை தண்டிக்கவும் சுத்திகரிக்கவும் தேவன் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார்,

இதனால், நீ கஷ்டங்களை அனுபவித்தால், அதுவும் தேவனுடைய வார்த்தையினாலேயே ஆகும்.

இன்று, தேவன் உண்மைகளால் அல்ல, வார்த்தைகளால் செயல்படுகிறார்.

அவருடைய வார்த்தை உன் மீது வந்த பின்னரே

பரிசுத்த ஆவியானவர் உனக்குள் செயல்பட்டு

உன்னை வலியை அனுபவிக்கவோ அல்லது இனிமையாக உணரவோ செய்ய முடியும்.

தேவனுடைய வார்த்தை மட்டுமே உன்னை யதார்த்தத்திற்குள் கொண்டு வர முடியும்,

மேலும் தேவனுடைய வார்த்தையால் மட்டுமே உன்னை பரிபூரணமாக்க முடியும்.

கடைசி நாட்களில் தேவனால் செய்யப்படும் கிரியை

முதன்மையாக ஒவ்வொரு நபரையும் பரிபூரணமாக்குவதற்கும் மனிதனை வழிநடத்துவதற்கும்

அவருடைய வார்த்தையைப் பயன்படுத்துவதாகும்.

உன்னை தண்டிக்க அவர் உண்மைகளைப் பயன்படுத்துவதில்லை.

சிலர் தேவனை எதிர்க்கும் நேரங்களும் உண்டு.

தேவன் உனக்கு மிகுந்த அசவுகரியத்தை ஏற்படுத்துவதில்லை,

உன் சரீரம் தண்டிக்கப்படுவதில்லை, நீ கஷ்டங்களை அனுபவிப்பதில்லை.

ஆனால் அவருடைய வார்த்தை உன் மீது வந்து, உன்னை செம்மைப்படுத்தியவுடன்,

அதை உன்னால் தாங்க முடியாது.

கடைசி நாட்களில் தேவனால் செய்யப்படும் கிரியை

முதன்மையாக ஒவ்வொரு நபரையும் பரிபூரணமாக்குவதற்கும் மனிதனை வழிநடத்துவதற்கும்

அவருடைய வார்த்தையைப் பயன்படுத்துவதாகும்.

உன்னை தண்டிக்க அவர் உண்மைகளைப் பயன்படுத்துவதில்லை.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க