Christian Song | மனிதருக்குக் கொண்டு வரும்@தேவனின் கிரியை மற்றும் வார்த்தைகள்@அனைத்து ஜீவிதமும் ஆகும் (Tamil Subtitles)

மார்ச் 25, 2021

தேவன் பழைய காரியங்களுடன் ஒட்டிக்கொள்வதில்லை அல்லது பலரும் பயன்படுத்தின பாதையில் நடப்பதில்லை.

அவர் கிரியை செய்யும்போதும், பேசும்போதும்,

ஜனங்கள் கற்பனை செய்யும் அளவிற்கு கட்டுப்பாடாய் இருப்பதில்லை.

தேவனில், அனைத்தும் சுதந்திரமானவை, விடுவிக்கப்பட்டவை, அதில் எந்த கட்டுப்பாடும் இல்லை,

தடைகளும் இல்லை, அவர் மனுக்குலத்திற்கு அளிப்பது சுதந்திரமும் விடுதலையும் ஆகும்.

அவர் ஒரு ஜீவனுள்ள தேவன், அவர் உண்மையாகவே, மெய்யாகவே இருக்கிற தேவன்.

அவர் ஒரு கைப்பொம்மையோ, களிமண் உருவமோ அல்ல, ஜனங்கள் புனிதமெனப் பாதுகாக்கும்,

ஆராதிக்கும் விக்கிரகங்களிலிருந்து அவர் முற்றிலும் வேறுபட்டவர்.

அவர் ஜீவனுள்ளவர், உயிர்த்துடிப்பு உள்ளவர்.

மேலும் அவருடைய வார்த்தைகளும், கிரியையும் மனுக்குலத்திற்கு ஜீவனையும் வெளிச்சத்தையும்,

எல்லா சுதந்திரத்தையும், விடுதலையையும் கொண்டுவரும்,

ஏனென்றால் அவர் சத்தியத்தையும், ஜீவனையும், வழியையும் கொண்டிருக்கிறார்.

அவர் தன்னுடைய எந்த கிரியையிலும், எந்த காரியத்தாலும் கட்டுப்படுத்தப்படுவதில்லை.

ஏனென்றால் அவர் சத்தியத்தையும், ஜீவனையும், வழியையும் கொண்டிருக்கிறார்.

அவர் தன்னுடைய எந்த கிரியையிலும், எந்த காரியத்தாலும் கட்டுப்படுத்தப்படுவதில்லை.

ஜனங்கள் என்ன சொன்னாலும்,

அவருடைய புதிய கிரியையை அவர்கள் எப்படிப் பார்த்தாலும் அல்லது மதிப்பிட்டாலும்,

அவர் எந்த ஒரு தடுமாற்றமுமின்றி தனது கிரியையைச் செய்து முடிப்பார்.

அவருடைய கிரியை மற்றும் வார்த்தைகளைப் பொறுத்தவரை,

யாருடைய கருத்துகளைப் பற்றியோ, குறைகூறுதலைப் பற்றியோ,

அல்லது அவருடைய புதிய கிரியைக்கு எதிரான அவர்களுடைய கடுமையான எதிர்ப்பையோ தடைகளையோ

பற்றிக்கூட அவர் கவலைப்பட மாட்டார்.

தேவன் செய்கிறதை அளவிடவோ அல்லது வரையறுக்கவோ,

அவருடைய கிரியையை இழிவுபடுத்தவோ, தடுத்து நிறுத்தவோ, அல்லது நாசப்படுத்தவோ,

அனைத்து சிருஷ்டிகளிலும் எந்த ஒருவராலும் மனிதனுடைய பகுத்தறிவையோ

அல்லது மனிதனுடைய கற்பனையையோ, அறிவையோ அல்லது அறநெறியையோ பயன்படுத்த முடியாது.

அவருடைய கிரியையிலும், அவர் செய்வதிலும் எந்த தடையும் இல்லை.

அது எந்த ஒரு மனிதனாலும், நிகழ்வினாலும், காரியத்தினாலும், கட்டுப்படுத்தப்படவுமாட்டாது,

எந்தவொரு விரோதமான வல்லமைகளாலும் தடுத்து நிறுத்தப்படவுமாட்டாது.

அவருடைய புதிய கிரியையைப் பொறுத்தவரை, அவர் எப்போதும் ஜெயம்பெறும் ராஜா,

எந்த ஒரு விரோதமான வல்லமைகளும், மனுக்குலத்தின் அனைத்து மாறுபட்ட மதக்கருத்துக்களும்,

மூடநம்பிக்கைகளும் அவருடைய பாதபடியின்கீழ் நசுக்கப்படுகின்றன.

அவருடைய எந்த புதிய கட்ட கிரியையை அவர் செய்கிறார் என்பது முக்கியமல்ல,

அது நிச்சயமாக மனுக்குலத்தின் மத்தியில் வளர்ச்சியுற்று, விரிவாக்கப்படும்,

மேலும் அவருடைய பெரிதான கிரியை நிறைவடையும் வரையிலும்,

அது நிச்சயமாக முழு பிரபஞ்சத்திலும் தடையின்றி செய்யப்படும்.

இது தேவனுடைய சர்வவல்லமையும் ஞானமும், அவருடைய அதிகாரமும் வல்லமையும் ஆகும்.

தேவனிடத்தில் எந்த தடைகளும் இல்லை.

தேவன் தம்முடைய வார்த்தைகளிலும் கிரியையிலும் கொள்கைகளைக் கொண்டு இருக்கிறார், ஆனால்

அதில் தடைகள் எதுவும் இல்லை, ஏனென்றால் தேவனே சத்தியமும், வழியும், ஜீவனுமாய் இருக்கிறார்.

"ஆட்டுக்குட்டியானவரைப் பின்தொடர்ந்து புதிய பாடல்களைப் பாடுங்கள்" என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

மேலும் பார்க்க

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

பகிர்க

ரத்து செய்க