IV. கிருபையின் காலத்து இரட்சிப்பு மற்றும் ராஜ்யத்தின் காலத்து இரட்சிப்பு பற்றிய சத்தியம்

1. அந்த நேரத்தில், எல்லா மனுஷரையும் மீட்பதற்கான கிரியையாக இயேசுவின் கிரியை இருந்தது. அவரை விசுவாசித்த அனைவரின் பாவங்களும் மன்னிக்கப்பட்டன; நீ அவரை விசுவாசித்த வரை, அவர் உன்னை இரட்சித்தார்; நீ அவரை விசுவாசித்தால், இனிமேல் உனக்குள் பாவம் இருக்காது, நீ உன் பாவங்களிலிருந்து விடுபட்டுவிட்டாய் என்று அர்த்தம். இதுதான் இரட்சிக்கப்படுவதையும், விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுவதையும் குறிக்கிறது. ஆயினும், விசுவாசித்தவர்களில், கலகக்காரர்களும், தேவனை எதிர்ப்பவர்களும் இருந்தார்கள். அவர்களையும் மெதுவாக அகற்ற வேண்டியதிருந்தது. இரட்சிப்பு என்பதற்கு மனுஷன் இயேசுவினால் முழுமையாக ஆதாயப்படுத்தப்பட்டான் என்று அர்த்தமல்ல, ஆனால் அந்த மனுஷனிடம் இனி பாவமில்லை என்றும், அவன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன என்றும் அர்த்தமாகிறது. நீ விசுவாசித்தால், இனி நீ ஒருபோதும் பாவம் செய்தவனாக இருக்கமாட்டாய்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியை குறித்த கண்ணோட்டம் (2)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

2. மனிதகுலம் கர்த்தராகிய இயேசுவை இரட்சகராகவும், அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிருந்தது. பெயரளவில், மனிதனின் பாவங்கள் அவன் இரட்சிப்பை அடைவதற்கும் தேவனுக்கு முன்பாக வருவதற்கும் ஒரு தடையாக இருக்கவில்லை, மேலும் ஒருபோதும் சாத்தான் மனிதனைக் குற்றம் சாட்டும் திறனில்லாமல் போனான். ஏனென்றால், தேவனே உண்மையான கிரியையைச் செய்திருந்தார், பாவ மாம்சத்தின் தோற்றமும் முன்னனுபவமும் ஆனார், தேவனே பாவநிவாரணபலியாக இருந்தார். இந்த வழியில், மனிதன் சிலுவையிலிருந்து இறங்கி, தேவனுடைய மாம்சத்தின் மூலம், அதாவது பாவ மாம்சத்தின் சாயல் மூலம் மீட்கப்பட்டு இரட்சிக்கப்பட்டான்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய நிர்வகித்தலுக்கு மத்தியில் மட்டுமே மனிதனால் இரட்சிக்கப்பட முடியும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

3. மனுஷனின் சரீரம் சாத்தானுக்குரியது, அது கலகத்தனமான மனநிலையால் நிறைந்துள்ளது, அது வருந்தத்தக்க அசிங்கமானது; மேலும் அது அசுத்தமான ஒன்று. ஜனங்கள் சரீர இன்பத்தை அனுபவிக்க அதிக அளவில் இச்சிக்கிறார்கள், மாம்சத்தின் வெளிப்பாடுகள் மிக அதிகம் உள்ளன; இதனால்தான் தேவன் மனுஷனின் மாம்சத்தை குறிப்பிட்ட அளவிற்கு வெறுக்கிறார். சாத்தானின் அசுத்தமான, சீர்கேடு நிறைந்த விஷயங்களை ஜனங்கள் தூக்கி எறியும்போது, அவர்கள் தேவனுடைய இரட்சிப்பைப் பெறுகிறார்கள். ஆனால் அவர்கள் இன்னும் அசுத்தத்திலிருந்தும் சீர்கேட்டிலிருந்தும் தங்களைத் திருப்பிக்கொள்ளவில்லை என்றால், அவர்கள் இன்னும் சாத்தானின் ஆளுகையின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஜனங்களிடம் காணப்படுகிற, சூழ்ச்சி, வஞ்சகம் மற்றும் மாறுபாடு இவை அனைத்தும் சாத்தானுடையவை. சாத்தானின் இந்த விஷயங்களிலிருந்து உன்னை விடுவிப்பதே, தேவனுடைய இரட்சிப்பு. தேவனுடைய கிரியை தவறாக இருக்க முடியாது; ஜனங்களை அந்தகாரத்திலிருந்து இரட்சிக்க இவை அனைத்தும் செய்யப்பட்டன. நீ ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு விசுவாசித்து, மாம்ச சீர்கேட்டிலிருந்து உன்னை விலக்கி, மேலும் இந்த சீர்கேட்டால் ஒருபோதும் கட்டப்படாதிருந்தால், நீ இரட்சிக்கப்பட்டிருக்க மாட்டாயா? நீ சாத்தானின் ஆளுகையின் கீழ் வாழும்போது, நீ தேவனை வெளிப்படுத்த இயலாது, நீ ஒரு அழுக்கைப் போல இருக்கிறாய். எனவே தேவனுடைய சுதந்திரத்தைப் பெற முடியாது. நீ சுத்திகரிக்கப்பட்டுப் பரிபூரணப்படுத்தப்பட்டவுடன், நீ பரிசுத்தமாக இருப்பாய், நீ ஒரு இயல்பான மனுஷனாக இருப்பாய், மேலும் நீ தேவனால் ஆசீர்வதிக்கப்பட்டு தேவனுக்கு மகிழ்ச்சி தருபவனாக இருப்பாய்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “பயிற்சி (2)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

4. தேவனுக்குள்ளாக இரட்சிக்கப்பட்டவர்கள் தேவனுடைய சோதனைகளுக்கு ஆளானவர்களும் சாத்தானால் எண்ணற்ற முறை சோதிக்கப்பட்டு தாக்கப்பட்டவர்களும் ஆவர். தேவனுக்குள்ளாக இரட்சிக்கப்பட்டவர்கள் தேவனுடைய சித்தத்தையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்துக்கொள்கிறார்கள். தேவனுடைய ராஜரீகத்தையும் ஏற்பாடுகளையும் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் தேவனுக்குப் பயப்படுவதையும் சாத்தானுடைய சோதனையின் மத்தியில் தீமையைத் தவிர்ப்பதையும் கைவிட மாட்டார்கள். தேவனுக்குள்ளாக இரட்சிக்கப்படுபவர்களுக்கு நேர்மை இருக்கிறது. அவர்கள் கனிவானவர்கள். அன்புக்கும் வெறுப்புக்கும் இடையில் வேறுபடுகிறார்கள். அவர்களுக்கு நீதியின் உணர்வு இருக்கிறது. பகுத்தறிவு இருக்கிறது. அவர்கள் தேவனைக் கவனித்து, தேவனுடையதை பொக்கிஷமாகக் காக்கிறார்கள். அத்தகையவர்கள் சாத்தானால் பிணைக்கப்படுவதில்லை, உளவு பார்க்கப்படுவதில்லை, குற்றம் சாட்டப்படுவதில்லை அல்லது துஷ்பிரயோகம் செய்யப்படுவதில்லை. அவர்கள் முற்றிலும் விடுதலையாக இருக்கிறார்கள். அவர்கள் முற்றிலும் விடுவிக்கப்பட்டு விடுதலையாக இருக்கிறார்கள்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் II” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

5. ஒருவர் தனது கடமையை நிறைவேற்றும் போது தேவனைத் திருப்திப்படுத்த முடியுமானால், ஒருவருடைய வார்த்தைகளும் செயல்களும் சரியாக இருந்தால், சத்தியத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் சத்தியத்தின் யதார்த்தத்திற்குள் பிரவேசிக்க முடியுமானால், அப்போதுதான் ஒருவர் தேவனால் பரிபூரணப்படுத்தப்பட்ட நபராக இருக்கிறார். தேவனுடைய கிரியையும் வார்த்தைகளும் இத்தகைய ஜனங்களுக்கு முற்றிலும் பயனுள்ளதாக இருந்தன என்று சொல்லலாம், தேவனுடைய வார்த்தைகள் அவர்கள் ஜீவனாகி விட்டன, அவர்கள் சத்தியத்தைப் பெற்றிருக்கின்றனர், மேலும் அவர்களால் தேவனுடைய வார்த்தைகளுக்கு ஏற்ப ஜீவிக்க முடிகிறது. இதன் பிறகு, அவர்களுடைய மாம்சத்தின் சுபாவம், அதாவது, அவர்களுடைய உண்மையான இருப்பின் அஸ்திபாரம் அசைந்து விழுந்து அழிந்து விடும். ஜனங்கள் தேவனுடைய வார்த்தைகளைத் தங்களுடைய ஜீவனாகக் கொண்ட பிறகு, அவர்கள் புதிய ஜனங்களாக மாறுவார்கள். தேவனுடைய வார்த்தைகள் அவர்களுடைய ஜீவனாக மாறினால், தேவனுடைய கிரியையைக் குறித்த தரிசனம், மனுக்குலத்தின் மீதான அவருடைய கோரிக்கைகள், மனுஷருக்கான அவருடைய வெளிப்பாடுகள் மற்றும் அவர்கள் கையாளும்படி தேவன் கோரும் மெய் ஜீவனுக்கான தரநிலைகள் அவர்களின் ஜீவனாக மாறினால், அவர்கள் இந்த வார்த்தைகள் மற்றும் சத்தியங்களுக்கு ஏற்ப ஜீவித்தால், அப்போது அவர்கள் தேவனுடைய வார்த்தைகளால் பரிபூரணமாக்கப்படுகின்றனர். இதுபோன்றவர்கள் மறுபடியும் பிறக்கின்றனர், மேலும் தேவனுடைய வார்த்தைகளின் மூலமாக புதியவர்களாகியிருக்கின்றனர்.

“கடைசிக்கால கிறிஸ்துவின் உரையாடல்கள்” யில் உள்ள “பேதுருவின் பாதையில் நடப்பது எப்படி” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

6. இயேசு மனுஷரிடையே அதிகக் கிரியை செய்த போதிலும், அவர் எல்லா மனுஷருக்கான மீட்பை மட்டுமே முடித்து மனுஷனின் பாவநிவாரணப்பலியாக மாறினார்; அவர் மனுஷனின் சீர்கெட்ட மனநிலையிலிருந்து அவனை விடுவிக்கவில்லை. சாத்தானின் ஆதிக்கத்லிருந்து மனுஷனை முழுமையாக இரட்சிக்க, இயேசு பாவநிவாரணப்பலியாக மாறி, மனுஷனின் பாவங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், சாத்தானால் சீர்கெட்டுப்போன மனநிலையிலிருந்து மனுஷனை முற்றிலுமாக விடுவிக்க தேவன் இன்னும் பெரிய கிரியைகளையும் செய்ய வேண்டும். ஆகவே, இப்போது மனுஷன் அவனது பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டதால், மனுஷனைப் புதிய யுகத்திற்கு வழிநடத்திச் செல்ல தேவன் மாம்சத்திற்குத் திரும்பி, ஆக்கினைத்தீர்ப்பு மற்றும் நியாயத்தீர்ப்புக்கான கிரியையைத் தொடங்கினார். இந்தக் கிரியை மனுஷனை ஓர் உயர்ந்த ராஜ்யத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அவருடைய ஆதிக்கத்தின் கீழ் கீழ்ப்படிகிற அனைவரும் உயர்ந்த சத்தியத்தை அனுபவித்து அதிக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். அவர்கள் உண்மையிலேயே வெளிச்சத்தில் வாழ்வார்கள், அவர்கள் சத்தியத்தையும், வழியையும், ஜீவனையும் பெறுவார்கள்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” என்பதன் முகவுரையிலிருந்து எடுக்கப்பட்டது

7. இயேசு தமது கிரியையைச் செய்துகொண்டிருந்த நேரத்தில், அவரைப் பற்றிய மனுஷனின் அறிவு தெளிவற்றதாகவும் விளங்காததாகவும் இருந்தது. மனுஷன் எப்போதும் அவரை தாவீதின் குமாரன் என்று நம்பினான், அவரை ஒரு பெரிய தீர்க்கதரிசி என்று அறிவித்தான், மனுஷனின் பாவங்களை மீட்டெடுத்த கிருபையுள்ள தேவன் என்று விசுவாசித்தான். சிலர், தங்கள் விசுவாசத்தின் பலத்தில், அவருடைய ஆடையின் விளிம்பைத் தொடுவதிலிருந்தே குணமடைந்தார்கள்; குருடர்களால் பார்க்க முடிந்தது, இறந்தவர்களைக் கூட உயிர்ப்பிக்க முடிந்தது. இருப்பினும், மனுஷன் தனக்குள்ளேயே ஆழமாக வேரூன்றியிருக்கும் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை, அதை எப்படி அகற்றுவது என்றும் அவனுக்குத் தெரியவில்லை. மாம்சத்தின் அமைதி மற்றும் மகிழ்ச்சி, ஒரு உறுப்பினரின் விசுவாசம் ஒரு முழு குடும்பத்திற்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவருதல், நோயைக் குணப்படுத்துதல் போன்ற பல கிருபைகளை மனுஷன் பெற்றான். மீதமுள்ளவை மனுஷனின் நல்ல செயல்களும் அவனுடைய தெய்வீகத் தோற்றமும்தான்; இவற்றின் அடிப்படையில் யாராவது ஜீவிக்க முடிந்தால், அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசுவாசிகளாகக் கருதப்பட்டனர். இந்த வகையான விசுவாசிகளால் மட்டுமே மரித்த பிறகு பரலோகத்தில் பிரவேசிக்க முடியும், அதாவது அவர்கள் இரட்சிக்கப்பட்டார்கள் என்று அர்த்தம். ஆனால், அவர்களின் வாழ்நாளில், இந்த ஜனங்கள் ஜீவ வழியைப் புரிந்து கொள்ளவே இல்லை. அவர்கள் செய்ததெல்லாம், பாவங்களைச் செய்வதும், பின்னர் தங்கள் மனநிலையை மாற்றுவதற்கான பாதை இல்லாமல் ஒரு நிலையான சுழற்சியில் தங்கள் பாவங்களை ஒப்புக்கொள்வதும் மட்டுமே ஆகும்: கிருபையின் யுகத்தில் மனுஷனின் நிலை இப்படித்தான் இருந்தது. மனுஷன் முழுமையான இரட்சிப்பைப் பெற்றிருக்கிறானா? இல்லை! ஆகையால், கிரியையின் அந்தக் கட்டம் முடிந்த பின்னும், சிட்சை மற்றும் நியாயத்தீர்ப்பின் கிரியை மீதமிருந்தது. வார்த்தையின் மூலம் மனுஷனைச் சுத்தமாக்குவதற்கும், அதன் மூலம் அவன் பின்பற்ற வேண்டிய ஒரு பாதையை அவனுக்கு அளிப்பதற்குமான கட்டம் இதுவாகும். இந்தக் கட்டத்திலும் பிசாசுகளை விரட்டுவதைத் தொடர்ந்தால் அது பலனளிப்பதாகவோ அல்லது அர்த்தமுள்ளதாகவோ இருக்காது, ஏனென்றால் அது மனுஷனின் பாவச் சுபாவங்களை அழிக்கத் தவறிவிடும், மேலும் மனுஷன் தனது பாவங்களுக்கு மன்னிப்பு கேட்பதை நிறுத்திவிடுவான். பாவநிவாரணபலியின் மூலம், மனுஷனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, ஏனென்றால் சிலுவையில் அறையப்படும் கிரியை ஏற்கனவே முடிந்துவிட்டது, தேவனும் சாத்தானை வென்றுவிட்டார். ஆனால் மனுஷனின் சீர்கெட்ட மனநிலை அவனுக்குள் இன்னும் இருக்கிறது, மனுஷனால் இன்னும் பாவம் செய்து தேவனை எதிர்க்க முடியும், தேவன் மனுஷகுலத்தை ஆதாயப்படுத்தியிருக்கவில்லை. அதனால்தான் இந்த கிரியையின் போது மனுஷனின் சீர்கெட்ட மனநிலையை வெளிப்படுத்த தேவன் இந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறார், இது சரியான பாதைக்கு ஏற்ப அவனை நடக்க வைக்கிறது. இந்தக் கட்டம் முந்தையதை விட மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது, பலனளிப்பதாகவும் இருக்கிறது, ஏனென்றால் வார்த்தை மனுஷனின் ஜீவனை நேரடியாக வழங்குகிறது மற்றும் மனுஷனின் மனநிலையையும் முழுமையாகப் புதுப்பிக்க உதவுகிறது; இது ஒரு முழுமையான கட்டத்தின் கிரியையாகும். ஆகையால், கடைசிக் காலத்திற்கான மாம்சமாகிய தேவன், மாம்சமாகிய தேவனின் முக்கியத்துவத்தை நிறைவுசெய்திருக்கிறார், மற்றும் மனுஷனின் இரட்சிப்பிற்கான தேவனின் ஆளுகைத் திட்டத்தையும் முழுமையாக முடித்துவிட்டிருக்கிறார்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

8. மனுஷன் தன் பாவங்களிலிருந்து மீட்கப்பட்டு, மன்னிக்கப்பட்டிருந்தாலும், தேவன் மனுஷனுடைய மீறுதல்களை நினைவில் வைத்திருக்கவில்லை மற்றும் அவனுடைய மீறுதல்களுக்கு ஏற்ப அவனை நடத்தவில்லை என்று மட்டுமே கருத முடியும். ஆனாலும், மாம்ச சரீரத்தில் வாழும் மனுஷன் பாவத்திலிருந்து விடுவிக்கப்படாதபோது, அவனால் தொடர்ந்து பாவம் செய்து, அவனது சீர்கேடான சாத்தானுக்குரிய மனநிலையை மட்டுமே முடிவில்லாமல் வெளிப்படுத்த முடிகிறது. இதுதான் பாவம் செய்தல் மற்றும் மன்னிக்கப்படுதல் என்ற முடிவில்லாத சுழற்சி முறையில் மனுஷன் வாழும் வாழ்க்கையாகும். மனுஷகுலத்தின் பெரும்பான்மையானவர்கள் மாலை வேளையில் பாவ அறிக்கை செய்வதற்காகவே பகல்பொழுதில் பாவம் செய்கிறார்கள். இவ்விதமாக, பாவநிவாரணமானது மனுஷனுக்கு என்றென்றும் பயனுள்ளதாக இருந்தாலும், அது மனுஷனை பாவத்திலிருந்து இரட்சிக்க இயலாது. மனுஷன் இன்னும் ஒரு சீர்கேடான மனநிலையையே கொண்டிருப்பதனால், இரட்சிப்பின் கிரியையில் பாதி மாத்திரமே முடிவடைந்துள்ளது.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

9. உங்களைப் போன்ற ஒரு பாவி, இப்போது மீட்கப்பட்டு, மாற்றப்படவில்லை அல்லது தேவனால் பரிபூரணப்படுத்தப்படவில்லை என்றால், நீ தேவனின் இருதயத்திற்குப் பின் செல்ல முடியுமா? நீ இன்னும் உன் பழைய சுயத்திலேயே இருக்கிறாய், இயேசுவால் இரட்சிக்கப்பட்டாய் என்பதும், தேவனின் இரட்சிப்பின் காரணமாக நீ பாவியாகக் கருதப்படுவதில்லை என்பதும் உண்மைதான், ஆனால் இது நீ பாவமற்றவன் மற்றும் தூயமையற்றவன் என்பதை நிரூபிக்காது. நீ மாற்றப்பட்டிருக்காவிட்டால், நீ எவ்வாறு புனிதராக இருக்க முடியும்? நீ உள்ளுக்குள் தூய்மையற்றவனாகவும், சுயநலவாதியாவும், இழிவானவனாகவும் இருக்கிறாய், ஆனாலும் நீ இன்னும் இயேசுவோடு இறங்கி வர வேண்டும் என்று விரும்புகிறாய்; உன்னால் எப்படி மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்க முடியும்! தேவன் மீதான உன் விசுவாசத்தின் ஒரு படியை நீ தவறவிட்டாய். நீ வெறுமனே மீட்கப்பட்டிருக்கிறாய், ஆனால் நீ மாற்றப்படவில்லை. நீ தேவனின் இருதயத்திற்குப் பின் செல்ல, உன்னை மாற்றும் மற்றும் தூய்மைப்படுத்தும் கிரியையை தேவன் தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டும். நீ மீட்கப்பட்டு மட்டும் இருந்தால், நீ புனிதத்தை அடைந்திட முடியாதவனாய் இருப்பாய். இந்த வழியில் நீ தேவனின் நன்மையான ஆசீர்வாதங்களில் பங்கெடுக்க தகுதியற்றவனாக இருப்பாய், ஏனென்றால் மனிதனை நிர்வகிக்கும் தேவனின் கிரியையில் நீ ஒரு படி தவறவிட்டுவிட்டாய், இது மாற்றுவதற்கும் பரிபூரணாமாக்குவதற்கும் முக்கிய படியாகும். நீ இப்போதுதான் மீட்கப்பட்டிருக்கிற ஒரு பாவியாவாய், ஆகையால் தேவனின் சுதந்தரத்தை நேரடியாகச் சுதந்தரிக்க முடியாது.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “பட்டங்களையும் அடையாளத்தையும் குறித்து” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

10. நோயைக் குணப்படுத்துவதன் மூலமும், பிசாசுகளை விரட்டுவதன் மூலமும் மனுஷனை அவனது பாவங்களிலிருந்து முழுமையாக இரட்சிக்க முடியாது, மேலும் அடையாளங்களையும் அதிசயங்களையும் வெளிப்படுத்துவதன் மூலமும் அவனை முழுமையாக பரிபூரணப்படுத்த முடியாது. நோயைக் குணப்படுத்துவதற்கும், பிசாசுகளை விரட்டுவதற்குமான அதிகாரம் மனுஷனுக்கு கிருபையை மட்டுமே தருகிறது, ஆனால் மனுஷனின் மாம்சம் இன்னும் சாத்தானுக்குத்தான் சொந்தமாக இருக்கிறது, மேலும் சீர்கெட்ட சாத்தானின் மனநிலை இன்னும் மனுஷனுக்குள்தான் இருக்கிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சுத்திகரிக்கப்படாதவை இன்னும் பாவத்திற்கும் அசுத்தத்திற்கும் உரியதாகவே இருக்கின்றன. வார்த்தையின் மூலம் மனுஷன் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே அவனால் தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டு பரிசுத்தமாக்கப்பட முடியும். பிசாசுகள் மனுஷனிடமிருந்து விரட்டப்பட்டு, அவன் மீட்கப்பட்டபோது, இதன் பொருள் அவன் சாத்தானின் பிடிகளிலிருந்து விலக்கப்பட்டு தேவனிடம் திரும்பினான் என்பதாகும். இருப்பினும், தேவனால் சுத்திகரிக்கப்படாமல் அல்லது மாற்றப்படாமல் இருந்தால் அவன் சீர்கெட்ட மனுஷனாகவே இருப்பான். மனுஷனுக்குள் இன்னும் அசுத்தம், எதிர்ப்பு மற்றும் கலகத்தன்மை ஆகியவை இருக்கின்றன; மனுஷன் தேவனுடைய மீட்பின் மூலமாக மட்டுமே அவரிடம் திரும்பியிருக்கிறான், ஆனால் அவனுக்கு தேவனைப் பற்றிய சிறிதளவு அறிவும் இருப்பதில்லை, அவரை எதிர்க்கவும் துரோகம் செய்யவும் வல்லவனாகவே இருக்கிறான். மனுஷன் மீட்கப்படுவதற்கு முன்பு, சாத்தானின் பல விஷங்கள் அவனுக்குள் ஏற்கனவே நடப்பட்டிருந்தன, மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாத்தானால் சீர்கெட்டுப்போன பின், தேவனை எதிர்க்கும் ஒரு இயல்பான சுபாவம் அவனுக்குள் இருந்துவருகிறது. ஆகையால், மனுஷன் மீட்கப்பட்டபோது, அது மீட்பைத் தவிர வேறொன்றுமாக இருக்கவில்லை, அதில் மனுஷன் அதிக விலைக்கு வாங்கப்படுகிறான், ஆனால் அவனுக்குள் இருக்கும் விஷத்தன்மையுள்ள சுபாவம் அகற்றப்பட்டிருக்கவில்லை. மிகவும் சீர்கெட்டுப்போன மனுஷன், தேவனுக்கு ஊழியம் செய்ய தகுதியானவனாக மாறும் முன்பு ஒரு மாற்றத்திற்கு ஆளாக வேண்டும். இந்த சிட்சை மற்றும் ஆக்கினைத்தீர்ப்பின் கிரியையின் மூலம், மனுஷன் தனக்குள் இருக்கும் இழிவான மற்றும் சீர்கெட்ட சாரத்தை முழுமையாக அறிந்துகொள்வான், மேலும் அவனால் முழுமையாக மாறவும், சுத்தமாக மாறவும் முடியும். இவ்வாறாக மட்டுமே மனுஷன் தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக வரத் தகுதியானவனாக மாற முடியும். இந்நாளில் செய்யப்படும் அனைத்து கிரியைகளும் மனுஷனை சுத்திகரிக்கவும் மற்றும் மாற்றவுமே மேற்கொள்ளப்படுகின்றன; வார்த்தையினாலான நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் மூலமாகவும், சுத்திகரிப்பு மூலமாகவும், மனுஷன் தனது சீர்கேட்டைப் புறந்தள்ளி, தன்னை தூய்மையாகிக்கொள்ள முடியும். கிரியையின் இந்தக் கட்டத்தை இரட்சிப்பிற்கான கிரியையாகக் கருதுவதற்குப் பதிலாக, சுத்திகரிப்பிற்கான கிரியை என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

11. வார்த்தைகளைப் பேசுவதே கடைசிக் காலத்தின் கிரியையாகும். வார்த்தைகளின் மூலம் கூட மனுஷனில் பெரிய மாற்றங்களைச் செய்யலாம். இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் இந்த ஜனங்களில் இப்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கிருபையின் யுகத்தில் அடையாளங்களையும் அதிசயங்களையும் ஏற்றுக்கொண்டதால் அந்த ஜனங்களுக்கு ஏற்பட்ட மாற்றங்களை விட மிக அதிகமாக இருக்கிறது. ஏனென்றால், கிருபையின் யுகத்தில், கைகளை வைப்பதன் மூலமும் ஜெபம் செய்வதன் மூலமும் மனுஷனிடமிருந்து பிசாசுகள் விரட்டப்பட்டன, ஆனால் மனுஷனுக்குள் இருந்த சீர்கெட்ட மனநிலை இன்னும் அப்படியே இருந்தது. மனுஷன் நோயிலிருந்து குணப்படுத்தப்பட்டு, அவன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன, ஆனால் மனுஷனுக்குள் இருக்கும் சீர்கெட்ட சாத்தானின் மனநிலையிலிருந்து எவ்வாறு அவன் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டால், இந்தக் கிரியையை இனிமேல் தான் செயல்படுத்தப்பட வேண்டியதாக இருக்கும். மனுஷன் அவனது விசுவாசத்திற்காக இரட்சிக்கப்பட்டான், அவன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன, ஆனால் மனுஷனின் பாவ இயல்பு அழிக்கப்படவில்லை, அது இன்னும் அவனுக்குள் இருக்கிறது. மனுஷனின் பாவங்கள் மாம்சமான தேவன் மூலம் மன்னிக்கப்பட்டன, ஆனால் இதற்கு மனுஷனுக்குள் இனியும் பாவம் இருக்காது என்று அர்த்தமல்ல. மனுஷனின் பாவங்களைப் பாவ நிவாரணப்பலி மூலம் மன்னிக்க முடியும், ஆனால் எப்படி மனுஷனை இனிமேல் பாவம் செய்ய வைக்க முடியாதோ, எப்படி அவனுடைய பாவ இயல்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டு மாற்றப்படலாமோ, அதேபோல் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க அவனுக்கு வழி இல்லை. மனுஷனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன, இதற்குத் தேவனின் சிலுவையில் அறையப்பட்ட கிரியையே காரணமாகும், ஆனால் மனுஷன் தனது பழைய சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையிலேயே தொடர்ந்து ஜீவித்தான். இது அவ்வாறு இருப்பதால், மனுஷன் அவனது சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையிலிருந்து முற்றிலுமாக இரட்சிக்கப்பட வேண்டும், இதனால் அவனுடைய பாவ இயல்பு முற்றிலுமாக அழிக்கப்பட்டு, மீண்டும் ஒருபோதும் உருவாகாது, இதன் மூலம் மனுஷனின் மனநிலையை மாற்ற முடியும். இதற்கு ஜீவ வளர்ச்சியின் பாதையை மனுஷன் புரிந்து கொள்ள வேண்டும், ஜீவ வழியைப் புரிந்து கொள்ள வேண்டும், மேலும் அவனது மனநிலையை மாற்றுவதற்கான வழியை அவன் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், இந்தப் பாதைக்கு ஏற்ப மனுஷன் செயல்பட வேண்டும், இதனால் அவனது மனநிலை படிப்படியாக மாற்றப்பட்டு, வெளிச்சத்தின் பிரகாசத்தின் கீழ் ஜீவித்து, அவன் செய்யும் அனைத்தும் தேவனின் விருப்பத்திற்கு ஏற்ப இருந்து, அவன் தனது சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலையை அகற்றி, சாத்தானின் அந்தகார ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, அதன் மூலம் பாவத்திலிருந்து முழுமையாக வெளியேறுவான். அப்போதுதான் மனுஷன் முழுமையான இரட்சிப்பைப் பெறுவான்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

12. தேவன் மக்களை ஆதாயப்படுத்தும் போது, அவர் மிக மிக முக்கியமாக நடைமுறை தேவனுடைய வார்த்தைகளையும் வாக்குகளையும் மக்களின் குறைபாடுகளை தீர்ப்பதற்கும், அவர்களுடைய கலகக்கார மனநிலையைக் கண்டறிவதற்கும் வெளிப்படுத்துவதற்கும் ஒரு வழியாகப் பயன்படுத்துகிறார், இதனால் அவர்களுக்குத் தேவையானதைப் பெறச் செய்கிறார் மற்றும் தேவன் மனிதர் மத்தியில் வந்துவிட்டார் என்பதைக் காண்பிக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, நடைமுறை தேவனால் செய்யப்படும் கிரியை என்னவென்றால், அவர் ஒவ்வொருவரையும் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து இரட்சித்து, அவர்களை அசுத்தமான தேசத்திலிருந்து அழைத்துச் செல்கிறார், மேலும் அவர்களுடைய சீர்கேடான மனநிலையை நீக்குகிறார். நடைமுறை தேவனால் ஆதாயப்படுத்தப்படுவதன் மிக ஆழமான முக்கியத்துவம் என்னவென்றால், நடைமுறை தேவனை ஒரு முன்மாதிரியாகவும், உதாரணமாகவும் எடுத்துக்கொண்டு சாதாரண மனிதத் தன்மையில் வாழ வேண்டும், நடைமுறை தேவனுடைய வார்த்தைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப சிறிதளவு விலகலோ அல்லது மாறுபாடோ இல்லாமல் நடக்க வேண்டும், அவர் சொல்கிற வழியில் நடக்க வேண்டும் மற்றும் அவர் கேட்பதை நிறைவேற்ற வேண்டும். இவ்விதமாக, நீங்கள் தேவனால் ஆதாயப்படுத்தப்பட்டிருப்பீர்கள்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “நடைமுறை தேவனும் தேவன்தான் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

13. தேவன் யாரையெல்லாம் பெறுகிறாரோ, அவர்களெல்லாம் அவருக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தவர்கள் ஆவர்; அவர்கள் சாத்தானால் சீர்கெட்டுப்போனவர்கள், ஆனால் தேவனின் தற்போதையக் கிரியையால் இரட்சிக்கப்பட்டு ஜெயங்கொண்டவர்கள், இன்னல்களைச் சகித்தவர்கள், இறுதியில், தேவனால் முற்றிலுமாகப் பெற்றுக் கொண்டவர்கள், சாத்தானின் ஆதிக்கத்தின் கீழ் இனியும் வாழாதவர்கள், அநீதியிலிருந்து விடுபட்டுக் கொண்டவர்கள், பரிசுத்த தன்மையுடன் வாழத் தயாராக இருப்பவர்கள்—அத்தகையவர்கள் பரிசுத்தமானவர்கள்; அவர்கள் உண்மையில் பரிசுத்தவான்கள்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “இன்றைய நாள் வரை மனிதகுலம் முழுவதும் எவ்வாறு வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

14. தேவன் ஜனங்களை பரிபூரணமாக்கும்போது, அவர் அவர்களைச் சுத்திகரிக்கிறார். அவர்கள் எவ்வளவு பரிசுத்தமானவர்களாக இருக்கிறார்களோ, தேவனால் அந்த அளவிற்குப் பரிபூரணமாக்கப்படுகிறார்கள். உனக்குள் இருக்கும் தீட்டான குணம், கலகத்தனம், எதிர்ப்பு மற்றும் மாம்சத்தின் விஷயங்கள் ஆகியவை வெளியேற்றப்படும் போது, நீ சுத்திகரிக்கப்படும் போது, நீ தேவனால் நேசிக்கப்படுவாய் (வேறுவிதமாகக் கூறினால், நீ ஒரு பரிசுத்தவானாக இருப்பாய்); நீ தேவனால் பரிபூரணமாக்கப்பட்டு பரிசுத்தவானாக மாறும் போது, நீ ஆயிரம் வருட அரசாட்சியில் இருப்பாய்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “‘ஆயிரம் வருட அரசாட்சி வந்துவிட்டது’ என்பதைப் பற்றிய ஒரு சுருக்கமான பேச்சு” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

15. மனிதன் சுத்திகரிக்கப்பட்ட பிறகு, அவன் பாவ இயல்பு இல்லாதவனாக இருப்பான், ஏனென்றால் தேவன் சாத்தானைத் தோற்கடித்திருப்பார், அதாவது விரோத சக்திகளால் எந்தவிதமான ஆக்கிரமிப்பும் இருக்காது, மனிதனின் மாம்சத்தைத் தாக்கக்கூடிய விரோத சக்திகள் எதுவும் இருக்காது. ஆகவே மனிதன் சுதந்திரமாகவும் பரிசுத்தமாகவும் இருப்பான்—அவன் நித்தியத்திற்குள் நுழைந்திருப்பான்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

16. கடைசி நாட்களில்—அதாவது, இறுதி கிரியையான சுத்திகரித்தலின் போது—தேவனுடைய நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சிப்பின் கிரியையின் போது உறுதியாக நிற்கக் கூடியவர்களே, தேவனோடு கூட இறுதி இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பவர்கள் ஆவார்கள்; இவ்வாறிருக்க, இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கும் யாவரும் சாத்தானின் கட்டை உடைத்து விடுதலை ஆனவர்கள் மேலும் அவரது இறுதிக் கிரியையான சுத்திகரிப்பிற்கு உட்பட்டு தேவனால் ஆதாயம் செய்யப்பட்டவர்கள் ஆவார்கள். தேவனால் இறுதியாக ஆதாயம் செய்யப்படக் கூடிய இந்த மனிதர்கள் இறுதி இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள். தேவனின் கிரியையான சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்பின் நோக்கம் என்னவென்றால் முக்கியமாக இறுதி இளைப்பாறுதலுக்காக மனுக்குலத்தை சுத்திகரிப்பதற்காகும்; இத்தகைய சுத்திகரிப்பு இல்லையென்றால், மனுக்குலத்தில் ஒவ்வொருவரையும் வகையின்படி பல்வேறு வகையாக வகைப்படுத்தவோ அல்லது இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்கவோ முடியாது. இந்தக் கிரியையே இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பதற்கு மனுக்குலத்துக்கான ஒரே பாதையாகும். தேவனின் கிரியையான சுத்திகரிப்பு மட்டுமே மனிதர்களை அவர்களின் அநீதியை நீக்கி சுத்திகரிக்கும், மேலும் சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்பு என்ற அவரது கிரியை மட்டுமே மனுக்குலத்தின் கீழ்ப்படியாமைக் கூறுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து அதன் மூலம் இரட்சிக்கப்படக் கூடாதவர்களில் இருந்து இரட்சிக்கப்படுபவர்களையும், மீந்திருக்காதவர்களில் இருந்து மீந்திருப்பவர்களையும் பிரித்தெடுக்க முடியும். இந்தக் கிரியை முடிவடையும் போது, மீந்திருக்க அனுமதிக்கப்படும் ஜனங்கள் சுத்திகரிக்கப்படுவார்கள் மேலும் பூமியில் ஒரு மிக அற்புதமான இரண்டாம் மனித வாழ்க்கையை அனுபவித்து மகிழ மனுக்குலத்தின் ஓர் உயரிய நிலைக்குள் பிரவேசிப்பார்கள்; வேறு வார்த்தைகளில் கூறப்போனால், அவர்கள் தங்கள் மானுட இளைப்பாறுதல் நாளைத் தொடங்குவார்கள், மேலும் தேவனோடு ஒன்றாக வாழ்வார்கள். மீந்திருக்க அனுமதிக்கப்படாதவர்களின் உண்மை நிலை சிட்சித்தல் மற்றும் நியாயத்தீர்ப்புக்குப் பின் முற்றிலுமாக வெளிப்படுத்தப்படும், அதன் பின்னர் அவர்கள் சாத்தானைப் போல அழிக்கப்படுவார்கள், பூமியில் மேலும் வாழ அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த வகையான ஜனங்களை எதிர்கால மனுக்குலம் ஒருபோதும் சேர்த்துக் கொள்ளாது; இறுதி இளைப்பாறுதல் நிலத்தில் இத்தகைய ஜனங்கள் பிரவேசிக்கத் தகுதியற்றவர்கள், மேலும் அவர்கள் தேவனும் மனுக்குலமும் பங்கேற்கும் இளைப்பாறுதல் நாளில் இணையத் தகுதி அற்றவர்கள், ஏனெனில் அவர்கள் தண்டனைக்கு இலக்கான பொல்லாத, அநீதியான ஜனங்கள். அவர்கள் ஒரு தடவை மீட்டெடுக்கப்பட்டார்கள், மற்றும் அவர்கள் நியாயம் தீர்க்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள்; அவர்களும் ஒருகாலத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தவர்களே. இருப்பினும், கடைசி நாள் வரும்போது, அவர்கள் இன்னும் தங்கள் பொல்லாப்பாலும் தங்கள் கீழ்ப்படியாமையின் விளைவாலும் இரட்சிக்கப்பட இயலாமையாலும் அழித்தொழிக்கப்படலாம்; எதிர்கால உலகில் இருப்பதற்கு அவர்கள் ஒருபோதும் வரமாட்டார்கள், மேலும் எதிர்கால மனுக்குலத்தின் மத்தியில் ஒருபோதும் வாழ மாட்டார்கள்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனும் மனிதனும் ஒன்றாக இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

17. தேவனின் 6,000 ஆண்டுக்கால நிர்வாகக் கிரியை மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: நியாயப்பிரமாணத்தின் காலம், கிருபையின் காலம் மற்றும் ராஜ்யத்தின் காலம். இந்த மூன்று கட்ட கிரியைகள் அனைத்தும் மனுக்குலத்தின் இரட்சிப்பின் பொருட்டு, அதாவது சாத்தானால் கடுமையாகச் சீர்கெட்டுவிட்ட மனுக்குலத்தின் இரட்சிப்புக்காகவேயாகும். ஆயினும், அதே சமயம், அவை மேலும் தேவன் சாத்தானுடன் யுத்தம் செய்வதற்குமானவையாகும். இவ்வாறு, இரட்சிப்பின் கிரியை மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்படுவது போல, சாத்தானுடனான யுத்தமும் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் தேவனுடைய கிரியையின் இந்த இரண்டு அம்சங்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுகின்றன. சாத்தானுடனான போர் உண்மையில் மனுக்குலத்தின் இரட்சிப்பின் பொருட்டானது ஆகும், மனுக்குலத்தின் இரட்சிப்பின் கிரியை ஒரே கட்டத்தில் வெற்றிகரமாக முடிக்கப்படக்கூடிய ஒன்றல்ல என்பதால், சாத்தானுடனான யுத்தமும் கட்டங்கள் மற்றும் காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, மேலும் மனிதனின் தேவைகளுக்கேற்பவும், சாத்தான் அவனுக்குச் செய்துள்ள சீர்கேட்டின் அளவுக்கு ஏற்பவும் யுத்தம் நடத்தப்படுகிறது. … மனிதனுடைய இரட்சிப்பின் கிரியைக்கு மூன்று கட்டங்கள் உள்ளன, அதாவது சாத்தானை முழுவதுமாக தோற்கடிப்பதற்காகச் சாத்தானுடனான யுத்தம் மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சாத்தானுடனான யுத்தத்தின் முழு கிரியையின் உள்ளார்ந்த சத்தியம் என்னவென்றால், அதன் விளைவுகள் பல படிநிலைகளிலான கிரியை மூலம் அடையப்படுகின்றன: அவை மனிதனுக்குக் கிருபையை கொடுப்பது, மனிதனின் பாவநிவாரணபலியாக மாறுதல், மனிதனின் பாவங்களை மன்னித்தல், மனிதனை ஜெயிப்பது, மனிதனைப் பரிபூரணமாக்குவது. உண்மையில், சாத்தானுடனான யுத்தம் என்பது சாத்தானுக்கு எதிராக ஆயுதங்களை எடுப்பது அல்ல, மாறாக மனிதனின் இரட்சிப்பு, மனிதனின் ஜீவிதம் பற்றிய கிரியை, தேவனுக்குச் சாட்சியம் அளிக்கும்படி மனிதனின் மனநிலையை மாற்றுவது ஆகியவையாகும். இப்படித்தான் சாத்தான் தோற்கடிக்கப்படுகிறான். மனிதனின் சீர்கெட்ட மனநிலையை மாற்றுவதன் மூலம் சாத்தான் தோற்கடிக்கப்படுகிறான். சாத்தான் தோற்கடிக்கப்பட்டிருக்கும்போது, அதாவது மனிதன் முற்றிலுமாக இரட்சிக்கப்பட்டிருக்கும்போது, பின்னர் அவமானப்படுத்தப்பட்ட சாத்தான் முற்றிலுமாக கட்டப்படுவான், இந்த வழியில் மனிதன் பரிபூரணமாக இரட்சிக்கப்பட்டிருப்பான். இவ்வாறு, மனிதனின் இரட்சிப்பின் சாராம்சமானது சாத்தானுக்கு எதிரான யுத்தமாகும், இந்த யுத்தம் முதன்மையாக மனிதனின் இரட்சிப்பில் பிரதிபலிக்கிறது. மனிதனை ஜெயங்கொள்ளும் கடைசி நாட்களின் கட்டம், சாத்தானுடனான யுத்தத்தின் கடைசிக் கட்டமாகும், மேலும் இது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் முழுமையான இரட்சிப்பின் கிரியையாகும். மனிதன் ஜெயங்கொள்ளப்படுவதன் உள்ளார்ந்த அர்த்தம், அவன் ஜெயங்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, சாத்தானின் பண்புருவத்தை—சாத்தானால் சீர்கெட்ட மனிதனை—சிருஷ்டிகரிடம் திருப்பித் தருவதேயாகும், இதன் மூலம் அவன் சாத்தானைக் கைவிட்டு முழுமையாக தேவனிடம் திரும்புவான். இந்த வழியில், மனிதன் முழுமையாக இரட்சிக்கப்பட்டிருப்பான். எனவே, ஜெயங்கொள்ளும் கிரியை என்பது சாத்தானுக்கு எதிரான யுத்தத்தின் கடைசிக் கிரியை மற்றும் சாத்தானின் தோல்வியின் பொருட்டு தேவனின் நிர்வாகத்தின் இறுதிக் கட்டமாகும். இந்தக் கிரியை இல்லாமல், மனிதனின் முழு இரட்சிப்பும் இறுதியில் சாத்தியமற்றதாகும், சாத்தானின் முழுதளவான தோல்வியும்கூட சாத்தியமற்றதாகும், மனுக்குலம் ஒருபோதும் அற்புதமான சென்றடையும் இடத்துக்குள் பிரவேசிக்க முடியாது, அல்லது சாத்தானின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியாது. இதன் விளைவாக, சாத்தானுடனான யுத்தம் முடிவடைவதற்கு முன்னர் மனிதனின் இரட்சிப்பின் கிரியையை முடிக்க முடியாது, ஏனென்றால் தேவனின் நிர்வாகக் கிரியையின் உட்கருத்து மனுக்குலத்தின் இரட்சிப்புக்கானதாகும். ஆரம்பக்கால மனுக்குலம் தேவனின் கைகளில் இருந்தது, ஆனால் சாத்தானின் சோதனை மற்றும் சீர்கேட்டின் காரணமாக, மனிதன் சாத்தானால் கட்டப்பட்டு தீயவனின் கைகளில் விழுந்தான். இவ்வாறு, சாத்தான், தேவனின் நிர்வாகக் கிரியையில் தோற்கடிக்கப்பட வேண்டிய பொருளாக ஆனான். ஏனென்றால், சாத்தான் மனிதனைத் தன்னிடம் எடுத்துக்கொண்டான், மனிதன் எல்லா நிர்வாகத்தையும் நிறைவேற்ற தேவன் பயன்படுத்தும் மூலதனம் என்பதால், மனிதன் இரட்சிக்கப்பட வேண்டுமென்றால், அவன் சாத்தானின் கைகளிலிருந்து பறிக்கப்பட வேண்டும், அதாவது சாத்தானால் சிறைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்ட பின்னர் மனிதன் மீட்டெடுக்கப்பட வேண்டும். ஆகவே, மனிதனின் பழைய மனநிலையின் மாற்றங்கள், மனிதனின் அசலான ஆராயும் உணர்வை மீட்டெடுக்கும் மாற்றங்கள் மூலம் சாத்தானைத் தோற்கடிக்க வேண்டும். இந்த வழியில், சிறைபிடிக்கப்பட்ட மனிதனைச் சாத்தானின் கைகளிலிருந்து மீண்டும் பறிக்க முடியும். மனிதன் சாத்தானின் ஆதிக்கத்திலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டால், சாத்தான் வெட்கப்படுவான், மனிதன் இறுதியில் திரும்பப் பெறப்படுவான், சாத்தான் தோற்கடிக்கப்படுவான். மனிதன் சாத்தானின் அந்தகார ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டதால், மனிதன் இந்த முழு யுத்தத்திலும் கொள்ளைப் பொருளாக மாறுவான், யுத்தம் முடிந்தவுடன் தண்டிக்கப்பட வேண்டிய பொருளாகச் சாத்தான் மாறுவான், அதன் பிறகு மனிதகுலத்தின் இரட்சிப்பின் முழுக்கிரியையும் முடிந்துவிடும்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மனிதனின் இயல்பான வாழ்க்கையை மீட்டெடுத்தல் மற்றும் அவனை போய்ச்சேர வேண்டிய ஒரு அற்புதமான இடத்திற்கு அழைத்துச் செல்லுதல்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

18. மனுஷனை பாவத்திலிருந்து மீட்கவே தேவன் முதன் முதலில் மாம்சமாகினார், இயேசுவின் மாம்ச சரீரத்தின் மூலம் அவனை மீட்க மாம்சமாகினார், அதாவது அவர் மனுஷனை சிலுவையிலிருந்து இரட்சித்தார், ஆனாலும் சீர்கெட்ட சாத்தானுக்குரிய மனநிலை இன்னும் மனுஷனுக்குள்தான் இருந்தது. தேவன் இரண்டாவதாக மாம்சமாகியது பாவநிவாரணப்பலியாக ஊழியம் செய்ய அல்ல, மாறாகப் பாவத்திலிருந்து மீட்கப்பட்டவர்களை முழுமையாக இரட்சிக்கவே ஆகும். மன்னிக்கப்பட்டவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு முழுமையாகச் சுத்திகரிக்கப்படுவதற்காகவும், மற்றும் மாற்றப்பட்ட மனநிலையை அடைவதன் மூலம் சாத்தானின் அந்தகார ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, தேவனின் சிங்காசனத்திற்கு முன்பாக திரும்புவதற்காகவும் இது செய்யப்படுகிறது. இவ்வாறாக மட்டுமே மனுஷனை முழுமையாகப் பரிசுத்தப்படுத்த முடியும். நியாயப்பிரமாணத்தின் யுகம் முடிவுக்கு வந்தபின், கிருபையின் யுகத்திலிருந்து, தேவன் இரட்சிப்பின் கிரியையைத் தொடங்கினார், இது கடைசிக் காலம் வரை தொடர்கிறது, மனுஷ இனத்தை அவர்களின் கலகத்தன்மைக்காக அவர்களை நியாயத்தீர்ப்பு மற்றும் சிட்சைக்கு உட்படுத்தி, அவர் மனுஷகுலத்தை முழுமையாகச் சுத்திகரிப்பார். அப்போதுதான் தேவன் தம்முடைய இரட்சிப்பின் கிரியையை முடித்துவிட்டு ஓய்வெடுப்பார்.

“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது

முந்தைய: III. தேவனுடைய நாமம் பற்றிய சத்தியம்

அடுத்த: V. கர்த்தராகிய இயேசுவின் மீட்பின் கிரியை உண்மையிலேயே காலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் கிரியையா?

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

தொடர்புடைய உள்ளடக்கம்

பிற்சேர்க்கை 1 தேவன் தோன்றுதல் ஒரு புதிய காலத்தைத் துவக்கியிருக்கிறது

தேவனுடைய ஆறாயிரம் ஆண்டு நிர்வாகத் திட்டம் முடிவுக்கு வருகிறது, அவர் தோன்றுதலைத் தேடுகிறவர்கள் அனைவருக்கும் ராஜ்யத்தின் கதவு ஏற்கனவே...

அனுபவம் பற்றியவை

பேதுரு நூற்றுக்கணக்கான சோதனைகளைத் தன்னுடைய அனுபவங்கள் முழுவதிலும் சந்தித்தான். இன்றைய ஜனங்கள் “சோதனை” என்னும் சொல்லைத் தெரிந்திருந்தும்,...

கிறிஸ்து நியாயத்தீர்ப்பின் கிரியையை சத்தியத்துடன் செய்கிறார்

யாவரையும் அவரவரின் வகையின்படி பிரித்து, தேவனுடைய நிர்வாகத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதுதான் கடைசிநாட்களின் கிரியையாயிருக்கிறது,...

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக