பரிசுத்த ஆவியானவரின் கிரியையும் சாத்தானின் கிரியையும்

ஆவியானவர் பற்றிய விவரங்களை ஒருவர் எவ்வாறு புரிந்துகொள்கிறார்? பரிசுத்த ஆவியானவர் மனுஷனுக்குள் எவ்வாறு கிரியை செய்கிறார்? சாத்தான் மனுஷனுக்குள் எவ்வாறு கிரியை செய்கிறான்? பொல்லாத ஆவிகள் மனுஷனுக்குள் எவ்வாறு கிரியை செய்கின்றன? வெளிப்படுத்துதல்கள் என்னவாக உள்ளன? உனக்கு ஏதேனும் சம்பவிக்கும்போது, அது பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வருகின்றதா, மற்றும் நீ அதற்குக் கீழ்ப்படிய வேண்டுமா அல்லது அதைப் புறக்கணிக்க வேண்டுமா? மக்களின் உண்மை நடைமுறையில், மக்கள் எவ்வித வேறுபாடுமின்றிப் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வருகின்றது என்று நம்புவதே மனிதனுடைய மனவிருப்பத்திலிருந்து உதிக்கிறது. சில விஷயங்கள் பொல்லாத ஆவிகளிடமிருந்து வருகின்றன, இருப்பினும் அவை பரிசுத்த ஆவியானவரிடத்திலிருந்து வந்திருப்பதாக மக்கள் இன்னமும் நினைக்கின்றனர், மற்றும் சில வேளைகளில் பரிசுத்த ஆவியானவர் மக்களுக்கு உள்ளாக இருந்து வழிநடத்துகிறார், ஆயினும் உண்மையில் அந்த வழிகாட்டுதல் பரிசுத்த ஆவியின் அறிவூட்டுதலாக இருக்கின்ற போது, இப்படிப்பட்ட வழிகாட்டுதல் சாத்தானிடமிருந்து வருகின்றது என்று மக்கள் பயப்படுகிறார்கள், எனவே கீழ்ப்படியத் துணியாது இருக்கின்றனர். இவ்வாறாக, வேறுபடுத்துதலை ஒருவர் நடைமுறைப்படுத்தாவிட்டால், அவர் தமது நடைமுறை அனுபவத்தை அனுபவிக்க வழியெதுவும் இல்லை; வேறுபடுத்துதல் இல்லாமல், ஜீவனை ஆதாயப்படுத்த வழியெதுவும் இல்லை. பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு கிரியை செய்கின்றார்? பொல்லாத ஆவிகள் எவ்வாறு கிரியை செய்கின்றன? மனிதனின் மனவிருப்பத்திலிருந்து வருகிறது என்ன? பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலிலும் அறிவூட்டுதலிலும் இருந்து பிறக்கிறது என்ன? மனிதனுக்குள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் மாதிரிகளை நீ புரிந்து கொண்டால், பின்பு உன் அன்றாட வாழ்க்கையிலும், உன் நடைமுறை அனுபவங்களின்போதும், உன் அறிவை வளர்த்துக் கொள்ளவும், வித்தியாசங்களை அறிந்துகொள்ளவும் முடியும்; நீ தேவனை அறிந்து கொள்வாய், உன்னால் சாத்தானைப் புரிந்துகொள்ளவும் அவனைப் பகுத்தறியவும் முடியும்; உன் கீழ்ப்படிதலிலோ அல்லது நாட்டத்திலோ நீ குழப்பமடைய மாட்டாய், மற்றும் உன் சிந்தனைகள் தெளிவான நிலையில், பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்குக் கீழ்ப்படிகிற ஒருவனாக நீ இருப்பாய்.

செயல்திறனுள்ள வழிகாட்டுதலும், நேர்மறையான அறிவூட்டுதலுமே பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இருக்கின்றது. இது ஜனங்களைச் செயலற்றவர்களாக இருக்க அனுமதிக்கிறதில்லை. இது அவர்களுக்கு ஆறுதலைக் கொண்டுவருகிறது, அவர்களுக்கு விசுவாசத்தையும் மன உறுதியையும் தருகிறது, மற்றும் அவர்களை தேவனால் பரிபூரணமாக்கப்படுவதற்கு நாட அவர்களுக்கு உதவுகிறது. பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்யும்போது, ஜனங்கள் செயல்துடிப்புடன் பிரவேசிக்கக்கூடியவர்களாய் இருக்கின்றார்கள்; அவர்கள் செயலற்றவர்களாகவோ அல்லது கட்டாயப்படுத்தப்பட்டவர்களாகவோ இருப்பதில்லை, ஆனால் தங்கள் சுயமுயற்சியில் செயல்படுகின்றனர். பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்கிறபோது, மக்கள் மகிழ்ச்சியாகவும் மனவிருப்பத்துடனும் இருக்கின்றனர், அவர்கள் கீழ்ப்படியும் மனவிருப்பத்துடனும் தங்களையே தாழ்த்துவதற்கு சந்தோஷத்துடனும் இருக்கின்றனர். அவர்கள் உள்ளாக வேதனையுடனும், நொறுங்கக்கூடியவர்களாகவும் இருந்தாலும், ஒத்துழைக்கத் தீர்மானம் கொண்டுள்ளனர். அவர்கள் சந்தோஷத்துடனே உபத்திரவப்படுகின்றார்கள், அவர்கள் கீழ்ப்படியக்கூடியவர்களாய் இருக்கின்றார்கள், மற்றும் மனிதனின் மனவிருப்பத்தினால் கறைப்படாதவர்களாயும், மனித சிந்தனையினால் கறைப்படாதவர்களாயும், மற்றும் உறுதியாகவே அவர்கள் மனித இச்சைகள் மற்றும் நோக்கங்கள் ஆகியவற்றினால் கறைப்படாதவர்களாயும் இருக்கின்றனர். மக்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அனுபவிக்கும்போது, அவர்கள் விசேஷமாக உள்ளாகப் பரிசுத்தவான்களாய் இருக்கின்றனர். பரிசுத்த ஆவியானவரின் கிரியையினால் ஆட்கொள்ளப்பட்டிருப்பவர்கள் தேவனுடைய அன்பை வெளிக்காட்டி வாழ்ந்து மற்றும் தங்கள் சகோதரர்களையும் சகோதரிகளையும் அன்புகூருகின்றார்கள்; தேவனைப் பிரியப்படுத்தும் விஷயங்களில் அவர்கள் பிரியமாயிருக்கின்றார்கள் மற்றும் தேவன் அருவருக்கிற விஷயங்களை அவர்களும் அருவருக்கின்றார்கள். பரிசுத்த ஆவியானவருடைய கிரியையினால் தொடப்பட்டுள்ள மக்கள் சாதாரண மனிதத்தன்மையைப் பெற்றுள்ளனர், மற்றும் அவர்கள் சத்தியத்தை நிலையாக நாடித்தேடுகின்றார்கள் மற்றும் மனிதத்தன்மை உடையவர்களாய் இருக்கின்றார்கள். பரிசுத்த ஆவியானவர் ஜனங்களுக்குள் கிரியை செய்யும்போது, அவர்களின் நிலை மென்மேலும் மேன்மையாகிறது, மற்றும் அவர்களுடைய மனிதத்தன்மை மேலும் மேலும் சாதாரணமாகிறது, மற்றும் அவர்களின் சில ஒத்துழைப்புகள் மதியீனமானதாக இருந்தாலும், அவர்களின் நோக்கங்கள் சரியானவைகளாய் இருக்கின்றன, அவர்களின் பிரவேசம் நேர்மறையானதாக உள்ளது, அவர்கள் இடையூறுக்குக் காரணமாயிருக்க முயற்சி செய்வதில்லை, மற்றும் அவர்களுக்குள் கொடுங்குணம் எதுவும் இருப்பதில்லை. பரிசுத்த ஆவியானவரின் கிரியை இயல்பானது மற்றும் உண்மையானது, பரிசுத்த ஆவியானவர் மனிதனின் இயல்பான வாழ்க்கைச் சட்டங்களின்படி மனிதனுக்குள் கிரியை செய்கிறார், மற்றும் சாதாரண ஜனங்களின் உண்மையான நாட்டத்திற்கு ஏற்ப அவர் ஜனங்களுக்கு அறிவூட்டுதலையும் வழிகாட்டுதலையும் செயல்படுத்துகின்றார். பரிசுத்த ஆவியானவர் மக்களிடையே கிரியை செய்யும்போது, சாதாரண மக்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களை வழிநடத்தி அறிவூட்டுகின்றார். அவர்களுடைய தேவைகளுக்கு ஏற்றவகையில் அவர்களுக்கு அவர் வழங்குகின்றார், மற்றும் அவர்கள் எதில் குறைவுபடுகின்றார்களோ அதிலும், அவர்களின் குறைவுகளின் படியேயும் அவர் நேர்மறையாக அவர்களை வழிநடத்தி அவர்களுக்கு அறிவூட்டுகின்றார். நிஜ வாழ்வில் மக்களுக்கு அறிவூட்டுவதும் வழிநடத்துவதுமே பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக உள்ளது; அவர்கள் தங்களின் நிஜவாழ்வில் தேவனுடைய வார்த்தைகளை அனுபவித்தால் மாத்திரமே அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் காணக்கூடியவர்களாய் இருப்பார்கள். ஜனங்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில், ஒரு நேர்மறையான நிலையில் இருக்கின்றார்கள் என்றால், மற்றும் அவர்கள் ஆவிக்குரிய வகையில் ஒரு சாதாரண வாழ்க்கையைக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையினால் ஆட்கொள்ளப்பட்டு இருக்கின்றார்கள். அத்தகைய நிலையில், அவர்கள் தேவனுடைய வார்த்தைகளைப் புசித்துக் குடிக்கும்போது, அவர்கள் விசுவாசம் கொண்டிருக்கின்றார்கள்; அவர்கள் ஜெபிக்கும்போது, அவர்கள் ஏவப்படுகின்றார்கள்; அவர்கள் ஏதாவது சிலவற்றிற்கு எதிராக வரும்போது, அவர்கள் செயலற்றவர்களாக இருப்பதில்லை; விஷயங்கள் நடக்கும்போது, அவற்றில் அவர்கள் கற்றுக்கொள்ளும்படியாகத் தேவன் அவர்களிடத்தில் கேட்டுக்கொள்ளும் பாடங்களை அவ்விஷயங்களுக்குள் அவர்கள் காணக்கூடியவர்களாய் இருக்கின்றனர். அவர்கள் செயலற்றவர்களாகவோ அல்லது பலவீனமானவர்களாகவோ இருப்பதில்லை, அவர்கள் உண்மையான சிரமங்களைக் கொண்டிருந்தாலும், தேவனுடைய ஏற்பாடுகள் யாவற்றிற்கும் கீழ்ப்படிய அவர்கள் மனவிருப்பத்துடன் இருக்கின்றார்கள்.

பரிசுத்த ஆவியானவருடைய கிரியையினால் என்ன பலன்கள் கிடைக்கப்பெறுகின்றன? நீ மதியீனமாயிருக்கலாம், மற்றும் நீ பகுத்தறிவற்று இருக்கலாம், ஆனால் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்தால், உன்னில் விசுவாசம் இருக்கும், மற்றும் நீ தேவனிடத்தில் போதிய அளவு அன்புகூர முடியாது என்று எப்பொழுதுமே உணருவாய். எவ்வளவு பெரிய கஷ்டங்கள் உன்முன் இருப்பினும் அவற்றைப் பொருட்படுத்தாமல் ஒத்துழைக்க, நீ மனவிருப்பத்துடன் இருப்பாய். காரியங்கள் உனக்கு வாய்க்கும், அவை தேவனிடமிருந்து வருகின்றனவா அல்லது சாத்தானிடமிருந்து வருகின்றனவா என்பது உனக்குத் தெளிவாக தெரியாது, ஆனால் உன்னால் காத்திருக்க முடியும், மற்றும் நீ செயலற்றோ அல்லது கவனக்குறைவாகவோ இருக்க மாட்டாய். இது பரிசுத்த ஆவியானவரின் சாதாரணக் கிரியையாக இருக்கின்றது. பரிசுத்த ஆவியானவர் உனக்குள்ளாகக் கிரியை செய்யும்போது, நீ இன்னும் உண்மையான சிரமங்களை எதிர்கொள்ளுகிறாய்: சில நேரங்களில் நீ கண்ணீர் சிந்துமளவிற்குக் கொண்டு வரப்படுவாய், மற்றும் சில நேரங்களில் நீ ஜெயங்கொள்ள இயலாத விஷயங்கள் இருக்கும், ஆனால் இவை யாவும் பரிசுத்த ஆவியானவரின் சாதாரணக் கிரியையின் ஒரு கட்டமாக மட்டுமே இருக்கின்றது. நீ அந்தச் சிரமங்களை ஜெயங்கொள்ளவில்லை என்றாலும், அந்த நேரத்தில் நீ பலவீனமாகவும், முறையீடுகள் நிறைந்தும் இருந்தபோதிலும், பின்னர் நீ முழு விசுவாசத்துடன் தேவனை இன்னமும் அன்புகூரக்கூடும். உன் செயலற்ற தன்மை, சாதாரண அனுபவங்களைப் பெறுவதிலிருந்து உன்னைத் தடைசெய்ய முடியாது, மற்றும் பிறர் என்ன சொல்கின்றார்கள், மற்றும் பிறர் உன்னை எவ்வாறு தாக்குகின்றார்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், நீ இன்னும் தேவனை அன்புகூரக்கூடும். ஜெபத்தின்போது, நீ எப்பொழுதுமே, கடந்த காலத்தில் தேவனுக்கு அதிகமாய்க் கடன்பட்டிருந்ததாக உணருகிறாய், மற்றும் இதுபோன்ற விஷயங்களை மீண்டும் எதிர்கொள்ளும் போதெல்லாம் தேவனைத் திருப்திப்படுத்தவும், மாம்சத்தைக் கைவிடவும் நீ தீர்மானம் செய்கிறாய். பரிசுத்த ஆவியானவரின் கிரியை உனக்குள் இருக்கின்றது என்பதை இந்த பெலன் காண்பிக்கிறது. இது பரிசுத்த ஆவியானவரின் கிரியையினுடைய இயல்பான நிலையாக உள்ளது.

சாத்தானிடமிருந்து வரும் கிரியை என்ன? சாத்தானிடமிருந்து வரும் கிரியையில், ஜனங்களுக்குள்ளாக இருக்கும் தரிசனங்கள் தெளிவற்றவை; ஜனங்கள் சாதாரண மனிதத்தன்மை அற்றவர்களாய் இருக்கின்றார்கள், அவர்களின் செயல்களுக்குப் பின்னால் உள்ள நோக்கங்கள் தவறானவை, மற்றும் அவர்கள் தேவனை அன்புகூர விரும்பினாலும், அவர்களுக்குள்ளாக எப்போதும் குற்றச்சாட்டுகள் உள்ளன, மற்றும் இந்தக் குற்றச்சாட்டுகளும் எண்ணங்களும் அவர்களுக்குள் நிலையான குறுக்கீட்டிற்குக் காரணமாகின்றன, அவர்களின் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு முரணாக நின்று, அவர்கள் சாதாரண நிலையில் தேவனுக்கு முன்பாக வருவதைத் தடுக்கின்றன. அதாவது, சாத்தானின் கிரியை ஜனங்களுக்குள் செய்யப்பட்டவுடன், அவர்களுடைய இருதயங்கள் தேவனுக்கு முன்பாக சமாதானத்துடன் இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஜனங்கள் தங்களை என்ன செய்வதென்று அறியாதிருக்கின்றார்கள்—ஜனங்கள் ஒன்றுகூடுவதைக் காணும்போது, அவர்கள் புறம்பாக ஓடிப்போக விரும்புகின்றார்கள், மற்றும் பிறர் ஜெபிக்கும்போது அவர்கள் தங்கள் கண்களை மூட இயலாதவர்களாக இருக்கின்றார்கள். பொல்லாத ஆவிகளின் கிரியை மனுஷனுக்கும் தேவனுக்கும் இடையிலான இயல்பான உறவைச் சேதப்படுத்துகிறது, மற்றும் ஜனங்களின் முந்தைய தரிசனங்களை அல்லது அவர்களின் முந்தைய வாழ்க்கைப் பிரவேசப் பாதையைச் சீர்குலைக்கிறது; அவர்களுடைய இருதயங்களில் அவர்கள் ஒருபோதும் தேவனிடத்தில் கிட்டிச்சேர இயலாது, மேலும் அவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும் அவர்களைத் திணற வைக்கும் விஷயங்கள் எப்போதும் நடக்கின்றன. அவர்களுடைய இருதயங்கள் சமாதானத்தைக் கண்டறிய இயலாது, மற்றும் தேவனிடத்தில் அன்புக்கூர எந்தப் பலமும் இன்றி மற்றும் அவர்களின் ஆவிகள் மூழ்கும்படி அவர்கள் விடப்படுகின்றார்கள். இப்படிப்பட்டவை சாத்தானின் கிரியையினுடைய வெளிப்பாடுகளாக இருக்கின்றன. சாத்தானின் கிரியையினுடைய வெளிப்பாடுகள்: உன்னுடைய தரையில் நின்று சாட்சியாக நிற்க முடியாதிருத்தல், நீ தேவனுக்கு முன்பாக தவறு செய்கிறவனாகவும், தேவனுக்கு உண்மையற்றவனாகவும் ஆகுதல். சாத்தான் தலையிடும்போது, உனக்குள்ளாக தேவனை நோக்கியிருக்கும் அன்பு மற்றும் பற்றுறுதியை நீ இழக்கின்றாய், தேவனுடனான சாதாரண உறவு அகற்றப்பட்டவனாகின்றாய், நீ சத்தியத்தையோ அல்லது உனது மேம்பாட்டையோ பின்தொடர்வதில்லை; நீ பின்வாங்குகின்றாய் மற்றும் செயலற்றவனாகின்றாய், நீ உன்னைச் சீராட்டுகின்றாய், பாவம் பரவுதலுக்கு இலவச ஆளுகையை நீ தருகின்றாய் மற்றும் பாவத்தைப் பற்றி வெறுப்பு நிறைந்து இருக்கிறதில்லை; மேலும், சாத்தானின் குறுக்கீடு உன்னைக் கரைக்கின்றது; இது உனக்குள் தேவனின் தொடுகை மறையக் காரணமாகிறது மற்றும் நீ தேவனைப்பற்றி குறைகூறவும் அவரை எதிர்க்கவும் வைத்து, தேவனிடத்தில் நீ கேள்வி கேட்கும்படி உன்னை வழிநடத்துகின்றது; நீ தேவனைக் கைவிட்டுவிடும் ஆபத்தும்கூட இருக்கின்றது. இவையாவும் சாத்தானிடமிருந்து வருகின்றன.

உன் அன்றாட வாழ்க்கையில் உனக்குச் சில விஷயங்கள் நடக்கும்போது, அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையிலிருந்து வந்ததா அல்லது சாத்தானின் கிரியையிலிருந்து வந்ததா என்பதை நீ எவ்வாறு வேறுபடுத்த வேண்டும்? ஜனங்களின் நிலைமைகள் இயல்பானதாக இருக்கும்போது, அவர்களின் ஆவிக்குரிய வாழ்வும் அவர்களின் மாம்சப்பிரகாரமான வாழ்வும் இயல்பானவைகளாக இருக்கின்றன மற்றும் அவர்களின் பகுத்தறிவு இயல்பானதாயும் முறையானதாயும் இருக்கின்றது. அவர்கள் இந்த நிலையில் இருக்கும்போது, அவர்கள் அனுபவிப்பது மற்றும் தங்களுக்குள் தெரிந்துகொள்வது எவையோ அவை பொதுவாகப் பரிசுத்த ஆவியானவரால் தொடப்பட்டிருத்தலில் இருந்து வந்ததாகக் கூறப்படமுடியும் (மனதினால் அறியும் திறன்கள் கொண்டிருத்தல் அல்லது தேவனுடைய வார்த்தைகளை அவர்கள் புசித்து மற்றும் குடிக்கும்போது சில எளிய அறிவு கொண்டிருத்தல், அல்லது சில விஷயங்களில் உண்மை நிறைந்தவர்களாயிருப்பது, அல்லது சில விஷயங்களில் தேவனை அன்புகூருவதற்குப் பலம் கொண்டிருப்பது—இவை யாவையும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வருகின்றன). மனுஷனுக்குள் பரிசுத்த ஆவியானவரின் கிரியை விசேஷமாகச் சாதாரணமானதாய் இருக்கின்றது; மனுஷன் அதை உணர முடியாமல் இருக்கிறான், அது உண்மையில் பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இருந்தாலும், அது மனுஷன் மூலமாக வருவதாகவே தோன்றுகிறது. அன்றாட வாழ்க்கையில், பரிசுத்த ஆவியானவர் பெரியதாகவும் சிறியதாகவும் ஒவ்வொருவருக்குள்ளாகவும் கிரியை செய்கிறார், மற்றும் இந்தக் கிரியையின் அளவு மட்டுமே மாறுபடுவதாக உள்ளது. ஜனங்களில் சிலர் நல்ல திறமையுடன் இருக்கின்றார்கள், அவர்கள் விஷயங்களை விரைவாக புரிந்துகொள்கின்றார்கள், பரிசுத்த ஆவியானவரின் அறிவூட்டுதல் அவர்களுக்குள் விசேஷமாகப் பெரிதாயிருக்கின்றது. அதேவேளையில், சிலர் குறைவான திறமையுடன் இருக்கின்றார்கள், அவர்களுக்கு விஷயங்களைப் புரிந்துகொள்ள அதிக நேரம் ஆகிறது, ஆனாலும் பரிசுத்த ஆவியானவர் அவர்களை உள்ளாகத் தொடுகின்றார் மற்றும் அவர்களும்கூட தேவனுக்கு உண்மைத்தன்மையுடன் இருப்பதை அடையக்கூடியவர்கள் ஆகின்றனர்—தேவனைத் தேடுகின்ற எல்லாருக்குள்ளும் பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்கின்றார். அன்றாட வாழ்க்கையில், மக்கள் தேவனை எதிர்க்காமல் அல்லது அவருக்கு எதிராகக் கலகம் செய்யாமல் இருக்கும்போது, தேவனுடைய நிர்வாகத்திற்கு முரணான காரியங்களைச் செய்யாமல் இருக்கும்போது, மற்றும் தேவனுடைய கிரியையில் தலையிடாமல் இருக்கும்போது, அவர்கள் ஒவ்வொருவருக்குள்ளாகவும் தேவனுடைய ஆவியானவர் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ கிரியை செய்கின்றார்; அவர்களை அவர் தொட்டு, அவர்களுக்கு அறிவூட்டி, அவர்களுக்கு விசுவாசத்தைத் தருகின்றார், அவர்களுக்கு பெலன் தருகின்றார், சோம்பேறியாகவோ அல்லது மாம்சத்தின் சந்தோஷங்களை இச்சிக்கின்றவர்களாகவோ இராமல், சத்தியத்தைக் கடைபிடிக்க மனவிருப்பம் கொண்டவர்களாகவும், தேவனுடைய வார்த்தைகளுக்காக ஏங்கியிருப்பவர்களாகவும் இருக்கும் நிலைக்குள் செயல்முனைப்புடன் பிரவேசிப்பதற்கு அவர்களை இயக்குகின்றார். இந்தக் கிரியை யாவையும் பரிசுத்த ஆவியானவரிடமிருந்து வருகிறது.

ஜனங்களின் நிலை சாதாரணமானதாக இல்லாதபோது, அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் கைவிடப்படுகின்றார்கள்; அவர்களுடைய மனதில் அவர்கள் குறைகூறும் வாய்ப்புள்ளவர்களாய் இருக்கின்றனர், அவர்களுடைய நோக்கங்கள் தவறானவைகளாக இருக்கின்றன, அவர்கள் சோம்பேறிகளாக இருக்கின்றார்கள், அவர்கள் மாம்ச இச்சைக்கு இடம் கொடுக்கின்றார்கள், அவர்களுடைய இருதயங்கள் சத்தியத்திற்கு எதிராகக் கலகம் செய்கின்றன. இவை யாவும் சாத்தானிடமிருந்து வருகின்றன. ஜனங்களின் நிலைமைகள் சாதாரணமானவையாக இராதபோது, அவர்கள் உட்புறம் இருளாயிருக்கும்போது, மற்றும் அவர்கள் தங்களின் சாதாரண அறிவை இழந்திருக்கிறபோது, பரிசுத்த ஆவியானவரால் கைவிடப்பட்டு, தேவனைத் தங்களுக்குள் உணர முடியாதவர்களாய் இருக்கின்றனர், சாத்தான் அவர்களுக்குள் கிரியை செய்யும்போது, இதுதான் நடக்கின்றது. ஜனங்கள் எப்பொழுதுமே தங்களுக்குள் பலம் கொண்டவர்களாகவும், எப்பொழுதும் தேவனை அன்புகூருபவர்களாகவும் இருந்தால், பொதுவாக, அவர்களுக்கு காரியங்கள் நடக்கும்போது, அந்த காரியங்கள் பரிசுத்த ஆவியானவரிடத்திலிருந்து வருகின்றன, அவர்கள் யாரைச் சந்தித்தாலும், சந்திப்பு என்பது தேவனுடைய ஏற்பாடுகளின் விளைவாக உள்ளது. அதாவது நீ ஒரு சாதாரணமான நிலையில் இருக்கும்போது, நீ பரிசுத்த ஆவியானவரின் மாபெரும் கிரியைக்குள்ளாக இருக்கும்போது, சாத்தான் உன்னை அசைப்பது சாத்தியமில்லை. இதன் அடிப்படையில், எல்லாம் பரிசுத்த ஆவியானவரிடத்திலிருந்து வருகிறது என்று கூற முடியும், நீ தவறான எண்ணங்கள் கொண்டிருந்தாலும், உன்னால் அவற்றைத் துறக்க முடிகிறது, மற்றும் நீ அவற்றைப் பின்பற்றுவதில்லை. இவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையிலிருந்து வருகிறது. சாத்தான் தலையிடுகின்ற சூழ்நிலைகள் யாவை? உன் நிலைமைகள் இயல்பானவையாக இராதபோது, நீ தேவனால் தொடப்பட்டிராதபோது மற்றும் நீ தேவனுடைய கிரியை இல்லாமல் இருக்கும்போது, நீ உட்புறத்தில் வறண்டு, தரிசாக இருக்கும்போது, நீ தேவனிடத்தில் ஜெபித்து ஆனால் ஒன்றையும் பெற்றுக்கொள்ளாதபோது, மற்றும் நீ தேவனுடைய வார்த்தைகளைப் புசித்தும் குடித்தும் அறிவூட்டப்பட்டிராதபோது அல்லது ஒளியூட்டப்பட்டிராதபோது, உனக்குள் கிரியை செய்வது சாத்தானுக்குச் சுலபமாய் இருக்கின்றது. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், நீ பரிசுத்த ஆவியானவரால் கைவிடப்பட்டு, நீ தேவனை உணர முடியாமல் இருக்கும்போது, சாத்தானின் சோதனையிலிருந்து வரும் பல விஷயங்கள் உனக்கு நடக்கின்றன. பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்வது போலவே, சாத்தானும் எல்லா நேரத்திலும் கிரியை செய்துகொண்டிருக்கின்றான். பரிசுத்த ஆவியானவர் மனிதனின் உட்புறத்தைத் தொடுகிறார், அதே நேரத்தில் சாத்தான் மனிதனுக்குள் தலையிடுகிறான். இருப்பினும், பரிசுத்த ஆவியானவரின் கிரியை தலையாய இடத்தைப் பிடிக்கின்றது, மற்றும் ஜனங்களில் சாதாரண நிலைமைகள் யாருக்கு உள்ளனவோ, அவர்கள் ஜெயங்கொள்ளக்கூடும்; இது சாத்தானின் கிரியையின்மீது பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் வெற்றியாக இருக்கின்றது. பரிசுத்த ஆவியானவர் கிரியை செய்கையில், ஜனங்களுக்குள் சீர்கேடான மனநிலை ஒன்று இன்னமும் நிலவுகின்றது. ஆயினும், பரிசுத்த ஆவியானவரின் கிரியையின்போது, ஜனங்கள் தங்களுடைய கலகம்பண்ணும் தன்மை, நோக்கங்கள் மற்றும் ஒழுக்கக்கேடு ஆகியவற்றைக் கண்டறிதல் சுலபமாக இருக்கின்றது. அதன்பின்புதான் ஜனங்கள் வருத்தப்படுகின்றார்கள் மற்றும் மனந்திரும்புவதற்கான விருப்பத்தில் வளருகின்றார்கள். அவ்விதமாகவே, அவர்களின் கலகமான மற்றும் சீர்கேடான மனநிலைகள் தேவனுடைய கிரியைக்குள்ளிருந்து புறம்பே படிப்படியாகத் தள்ளப்படுகின்றன. பரிசுத்த ஆவியானவரின் கிரியை விசேஷமாகச் சாதாரணமானதாக இருக்கின்றது; அவர் மக்களுக்குள்ளாகக் கிரியை செய்கையில், அவர்கள் இன்னமும் தொல்லைகளைக் கொண்டிருக்கின்றார்கள், அவர்கள் இன்னும் அழுகின்றார்கள், அவர்கள் இன்னமும் பாடுகளை அனுபவிக்கின்றார்கள், அவர்கள் இன்னும் பலவீனமாக இருக்கின்றார்கள் மற்றும் அவர்களுக்கு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை, இருப்பினும் இந்த நிலையில் அவர்கள் பின்வாங்கிப்போகாமல் தங்களைத் தாங்களே தடுக்க முடிகிறது, மற்றும் அவர்களால் தேவனை அன்புகூர முடிகிறது, அவர்கள் அழுது துயரம் அடைந்திருந்தாலும், அவர்கள் இன்னும் தேவனைத் துதிக்ககூடியவர்களாக இருக்கின்றனர்; பரிசுத்த ஆவியானவரின் கிரியை விசேஷமாகச் சாதாரணமானதாக இருக்கின்றது, சிறிதளவு கூட இயற்கைக்கு அப்பாற்பட்டது அல்ல. பரிசுத்த ஆவியானவர் கிரியைசெய்யத் தொடங்கியவுடன், ஜனங்களின் நிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன மற்றும் அவர்களுக்குக் கணிசமான விஷயங்கள் அகற்றப்படுகின்றன என்று ஜனங்களில் பெரும்பான்மையானவர்கள் நம்புகின்றார்கள். இத்தகைய நம்பிக்கைகள் தவறானவையாக இருக்கின்றன. பரிசுத்த ஆவியானவர் மனுஷனுக்குள்ளாகக் கிரியை செய்யும்போது, மனுஷனின் செயலற்ற விஷயங்கள் இன்னும் அவனுக்குள் இருக்கின்றன, அவனுடைய வளர்ச்சியும் அப்படியே இருக்கின்றது, ஆனால் அவன் பரிசுத்த ஆவியானவரின் அறிவூட்டுதலையும் ஒளியூட்டுதலையும் பெறுகின்றான், எனவே அவனது நிலை அதிகம் செயல்துடிப்பு உடையதாகின்றது, அவனுக்குள்ளாக இருக்கின்ற நிலைமைகள் சாதாரணமாகின்றன, மற்றும் அவன் விரைவாக மாற்றம் அடைகின்றான். ஜனங்களின் உண்மையான அனுபவங்களில், அவர்கள் முதன்மையாகப் பரிசுத்த ஆவியானவர் அல்லது சாத்தானின் கிரியையை அனுபவிக்கிறார்கள், மற்றும் அவர்களால் இந்த நிலைகளைப் புரிந்து கொள்ள முடியாவிட்டால், வேறுபடுத்திப் பார்க்க முடியாவிட்டால், பின்பு உண்மையான அனுபவங்களில் நுழைவது கேள்விக்குப் புறம்பானதாக இருக்கின்றது, மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் எதுவும் கூறுவதற்கில்லை. இப்படிப்பட்ட விஷயங்களின் மூலமாக காணக்கூடியவர்களாய் இருத்தலே தேவனுடைய் கிரியையை அனுபவிக்கும் திறவுகோலாக இருக்கின்றது; இவ்வாறு, இதை அனுபவித்தல் அவர்களுக்குச் சுலபமானதாக இருக்கும்.

பரிசுத்த ஆவியானவரின் கிரியையானது ஜனங்களை நேர்மறையான முன்னேற்றத்தை அடைய அனுமதிக்கிறது, அதேசமயம் சாத்தானின் கிரியையானது அவர்களை எதிர்மறையாகவும், பின்வாங்கவும், தேவனுக்கு விரோதமாக கலகம்பண்ணவும் எதிர்க்கவும், தேவன் மீதான விசுவாசத்தை இழக்கவும், தன் கடமையைச் செய்வதில் மிகவும் பலவீனமாகவும் ஆக்குகிறது. பரிசுத்த ஆவியானவரின் அறிவூட்டலில் இருந்து வெளிப்படும் ஒவ்வொரு விஷயமும் மிகவும் இயற்கையானதாய் இருக்கின்றது; இது உன்மீது வலிந்து திணிக்கப்படுவதில்லை. நீ அதற்குக் கீழ்ப்படிந்தால், நீ சமாதானம் பெற்றிருப்பாய்; நீ அவ்வாறு செய்யாவிட்டால், பிற்பாடு நீ கடிந்துகொள்ளப்படுவாய். பரிசுத்த ஆவியானவரின் அறிவூட்டுதலுடன், நீ செய்யும் எதுவும் இடையூறு செய்யப்படவோ அல்லது கட்டாயப் படுத்தப்படவோ மாட்டாது; நீ விடுவிக்கப்படுவாய், உன் செயல்களில் பயிற்சி பெற ஒரு பாதை இருக்கும், மற்றும் நீ எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் ஆளாகமாட்டாய், ஆனால் தேவனுடைய சித்தத்தின்படி செயல்படக் கூடியவனாய் இருப்பாய். சாத்தானின் கிரியையானது நீ பல விஷயங்களில் குறுக்கிடக் காரணமாகின்றது; இது உன்னை ஜெபிக்க மனவிருப்பம் அற்றவனாக்குகிறது, தேவனுடைய வார்த்தைகளைப் புசிக்கவும் பானம்பண்ணவும் உன்னை மிகவும் சோம்பேறியாக்குகின்றது, மற்றும் சபை வாழ்வை வாழ மனவிருப்பம் அற்றவனாக்குகின்றது, மற்றும் ஆவிக்குரிய வாழ்விலிருந்து உன்னை அந்நியப்படுத்துகின்றது. பரிசுத்த ஆவியானவரின் கிரியை உன் அன்றாட வாழ்க்கையில் குறுக்கிடுவதில்லை மற்றும் உன் சாதாரண ஆவிக்குரிய வாழ்வில் குறுக்கிடுவதில்லை. நீ பல விஷயங்களை அவை நிகழும் வேளையில் பகுத்தறிய இயலாதிருக்கின்றாய், ஆயினும் சில நாட்களுக்குப் பின்பு, உன் இருதயம் மிகுந்த பிரகாசமாகவும் உன் மனம் மிகுந்த தெளிவாகவும் ஆகின்றது. ஆவியானவரின் விஷயங்களைப் பற்றி நீ கொஞ்சம் உணர்ந்தறிதலைக் கொண்டிருக்கின்றாய், மற்றும் ஓர் எண்ணம் தேவனிடத்திலிருந்தா அல்லது சாத்தானிடத்திலிருந்தா, எவரிடமிருந்து வந்துள்ளது என்பதை நீ மெதுவாகப் பகுத்தறிய முடியும். உன்னைச் சில விஷயங்கள் தெளிவாகவே தேவனை எதிர்க்கவும் மற்றும் தேவனுக்கு எதிராகக் கலகம் செய்யவும் வைக்கின்றன, அல்லது தேவனுடைய வார்த்தைகளைக் கடைபிடிப்பதில் இருந்து உன்னைத் தடுக்கின்றன; இந்த விஷயங்கள் யாவும் சாத்தானிடமிருந்து வருகின்றன. சில விஷயங்கள் வெளிப்படையானவைகளாய் இருப்பதில்லை, மற்றும் அவை என்னவென்று இந்த நேரத்தில் உன்னால் சொல்ல முடியாது; பின்னர், நீ அவற்றின் வெளிப்பாடுகளைக் காணலாம், மற்றும் அதன்பின்னர் பகுத்துணருதலைச் செயல்படுத்தலாம். எந்த விஷயங்கள் சாத்தானிடமிருந்து வருகின்றன மற்றும் எவை பரிசுத்த ஆவியானவரால் ஆணையிடப்படுகின்றன என்பதை நீ தெளிவாகப் பகுத்துணர முடிந்தால், அதன்பின்பு நீ அவ்வளவு சுலபமாய் உன் அனுபவங்களில் வழிதவறிச் செல்லும்படி வழிநடத்தப்பட மாட்டாய். சில நேரங்களில், உன் நிலை நன்றாக இராதபோது, அதன்பின்பு நீ உன்னைச் செயல்துடிப்பற்ற நிலையில் இருந்து வெளியே கொண்டுவரும் குறிப்பிட்ட சிந்தனைகளைக் கொண்டிருப்பாய். உன் நிலை சாதகமற்றதாக இருக்கும்போது கூட, உன் சில எண்ணங்கள் பரிசுத்த ஆவியானவரிடத்திலிருந்து வரக்கூடும் என்பதை இது காண்பிக்கிறது. நீ செயல்துடிப்பற்றவனாக இருக்கும்போது, உன் எண்ணங்கள் அனைத்தும் சாத்தானால் அனுப்பப்படுகின்றன; அது உண்மையாக இருந்தால், நீ எப்போது ஒரு நேர்மறையான நிலைக்கு மாற முடியும்? ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு செயல்துடிப்பற்ற நிலையில் இருந்ததால், உன்னைப் பரிபூரணப்படுத்தப் பரிசுத்த ஆவியானவர் ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறார்; அவர் உன்னைத் தொடுகிறார் மற்றும் உன்னைச் செயலற்ற நிலையில் இருந்து வெளிக்கொண்டு வருகின்றார், மேலும் நீ ஒரு இயல்பான நிலைக்குள் நுழைகிறாய்.

பரிசுத்த ஆவியானவரின் கிரியை என்னவாக இருக்கின்றது மற்றும் சாத்தானின் கிரியை என்னவாக இருக்கின்றது என்பதை அறிந்துகொள்வதினால், நீ இவற்றை, உன் அனுபவங்களின் போது உன் சொந்த நிலையுடன் ஒப்பிடமுடியும், மற்றும் இந்த வழியில் உன் அனுபவங்களின் கொள்கையுடன் தொடர்புடைய இன்னும் அதிகமான பல சத்தியங்கள் இருக்கும். கொள்கையைப் பற்றிய இந்த சத்தியங்களை புரிந்துகொண்டதினால், நீ உனது உண்மை நிலையை வெற்றிகொள்ளக் கூடியவனாக இருப்பாய், ஜனங்கள் மற்றும் நிகழ்வுகளிடையே வேறுபடுத்திக் காணக்கூடியவனாக நீ இருப்பாய், மற்றும் நீ பரிசுத்த ஆவியானவரின் கிரியையைப் பெற்றுக் கொள்வதில் இவ்வளவு முயற்சியைச் செலவழிக்க வேண்டியதில்லை. நிச்சயமாக, இது உன் நோக்கங்கள் சரியாக இருப்பதற்கும், தேடுவதற்கும் பயிற்சி செய்வதற்குமான உன் விருப்பத்தைச் சார்ந்துள்ளது. இது போன்ற மொழி—கொள்கைகளுடன் தொடர்புடைய மொழி—உன் அனுபவங்களில் இடம்பெற வேண்டும். இது இல்லாமல், உன் அனுபவங்கள் சாத்தானின் குறுக்கீடு மற்றும் மதியீனமான அறிவு ஆகியவற்றினால் நிறைந்ததாக இருக்கும். பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு கிரியை செய்கின்றார் என்பதை நீ புரிந்துகொள்ளவில்லை என்றால், தேவனிடம் எப்படி ஜெபிப்பது அல்லது நீ எப்படி பிரவேசிக்க வேண்டும் என்பது உனக்குப் புரியவில்லை, சாத்தான் எவ்வாறு மக்களை வஞ்சிக்கவும் தடை செய்யவும் கிரியை செய்கின்றான் என்பதை நீ புரிந்துகொள்ளவில்லை என்றால், சாத்தானை நிராகரித்து உங்கள் சாட்சியில் உறுதியாக நிற்பது எப்படி என்று உங்களுக்குத் தெரியாது. பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு செயல்படுகின்றார், சாத்தான் எவ்வாறு செயலாற்றுகின்றான் என்பவை ஜனங்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும், மேலும், இவை தேவனிடத்தில் ஜனங்களுக்கு இருக்கும் விசுவாசத்தில் அனுபவிக்கப்பட வேண்டிய விஷயங்கள் ஆகும்.

முந்தைய: தேவனை நேசிப்பவர்கள் என்றென்றும் அவருடைய வெளிச்சத்திற்குள் வாழ்வார்கள்

அடுத்த: சத்தியத்தைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு ஓர் எச்சரிக்கை

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக