I. எது பெரியது: தேவனா அல்லது வேதாகமமா? தேவனுக்கும் வேதாகமத்துக்கும் இடையிலான உறவு என்ன?
1. பல வருடங்களாக, ஜனங்களின் பாரம்பரிய நம்பிக்கை முறை (உலகின் மூன்று பெரிய மதங்களில் ஒன்றான கிறிஸ்தவத்தினுடையது) வேதாகமத்தை வாசிப்பதாக இருந்து வருகிறது; வேதாகமத்திலிருந்து வெளியேறுவது என்பது கர்த்தர் மீதான நம்பிக்கை என்று ஆகிவிடாது, வேதாகமத்திலிருந்து வெளியேறுவது மதங்களுக்கு எதிரான கொள்கையும் வழக்கத்திற்கு மாறான நம்பிக்கையுமாக இருக்கிறது. ஜனங்கள் மற்ற புத்தகங்களைப் படிக்கும்போதும், இந்தப் புத்தகங்களின் அஸ்திபாரம் வேதாகமத்தைக் குறித்த விளக்கமாக இருக்க வேண்டும். அதாவது, நீ கர்த்தரை விசுவாசித்தால், நீ வேதாகமத்தை வாசிக்க வேண்டும். வேதாகமத்திற்கு வெளியே வேதாகமத்திற்கு தொடர்பில்லாத எந்த புத்தகத்தையும் நீ ஆராதிக்கக்கூடாது. நீ அவ்வாறு செய்தாயானால், நீ தேவனுக்குத் துரோகஞ்செய்கிறாய். வேதாகமம் இருந்த காலம் முதல், கர்த்தர் மீதான ஜனங்களின் நம்பிக்கையானது வேதாகமத்தின் மீதான நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஜனங்கள் கர்த்தரை விசுவாசிக்கிறார்கள் என்று சொல்வதற்குப் பதிலாக, அவர்கள் வேதாகமத்தை விசுவாசிக்கிறார்கள் என்று சொல்வது சிறந்தது. அவர்கள் வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்திருக்கின்றனர் என்று சொல்வதைக் காட்டிலும், அவர்கள் வேதாகமத்தின் மீது விசுவாசம் வைக்க ஆரம்பித்திருக்கின்றனர் என்று சொல்வது சிறந்தது. அவர்கள் கர்த்தருக்கு முன்பாகத் திரும்பியிருக்கின்றனர் என்று சொல்வதைக் காட்டிலும், அவர்கள் வேதாகமத்திற்கு முன்பாக திரும்பியிருக்கின்றனர் என்று சொல்வது சிறந்ததாக இருக்கும். இவ்வாறு, ஜனங்கள் வேதாகமத்தை தேவனைப் போலவே இருப்பதாகவும், ஜீவ இரத்தம் போலவே இருப்பதாகவும், அதை இழந்தால் தங்கள் ஜீவனையே இழப்பது போலவும் கருதி அதை ஆராதிக்கின்றனர். ஜனங்கள் வேதாகமத்தை தேவனைப் போலவே உயர்வானதாக இருப்பதாகவும் பார்க்கின்றனர், அதை தேவனைக் காட்டிலும் உயர்வானதாகப் பார்ப்பவர்களும் இருக்கின்றனர். ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியை இல்லாமல் இருந்தால், அவர்களால் தேவனை உணர முடியவில்லை என்றால், அவர்களால் தொடர்ந்து ஜீவிக்க முடியும். ஆனால் அவர்கள் வேதாகமத்தை இழந்ததும் அல்லது வேதாகமத்திலுள்ள பிரபலமான அதிகாரங்களை அல்லது வாக்கியங்களை இழந்தால், அது அவர்களுக்கு தங்கள் ஜீவனையே இழப்பது போலவே இருக்கிறது. ஆகையால், அவர்கள் கர்த்தரை விசுவாசிக்க ஆரம்பித்ததுமே, அவர்கள் வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்து, அதை மனப்பாடம் செய்கின்றனர். வேதாமத்தில் அவர்களால் எவ்வளவு அதிகமாக மனப்பாடம் செய்ய முடிகிறதோ, அவ்வளவு அதிகமாக அவர்கள் கர்த்தரை நேசிக்கிறார்கள் மற்றும் மாபெரும் விசுவாசம் கொண்டிருக்கிறார்கள் என்பதை இது நிரூபிக்கிறது. வேதாகமத்தை வாசித்து, அதை அடுத்தவர்களிடம் பேசக்கூடியவர்கள் எல்லோரும் நல்ல சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் இருக்கின்றனர். இத்தனை வருடங்களாக, கர்த்தர் மீதான ஜனங்களின் விசுவாசமும் நம்பிக்கையும் வேதாகமம் குறித்த அவர்களுடைய புரிதலின் அளவிற்கு ஏற்பவே அளவிடப்பட்டு வருகின்றன. பெரும்பாலானவர்களுக்கு தாங்கள் ஏன் தேவனை விசுவாசிக்க வேண்டும், தேவனை எவ்வாறு விசுவாசிக்க வேண்டும் என்று எதுவும் தெரிவதில்லை, ஆனால் வேதாகமத்தின் அதிகாரங்களைப் புரிந்துகொள்ளவதற்கான குறிப்புகளை கண்மூடித்தனமாக தேடுகின்றனர். ஜனங்கள் ஒருபோதும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் வழிகாட்டுதலைப் பின்தொடர்ந்தே இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் வேதாகமத்தைத் தீவிரமாக வாசித்து ஆராய்ந்ததைத் தவிர வேறு எதுவும் செய்ததில்லை. பரிசுத்த ஆவியானவரின் புதிய கிரியையை வேதாகமத்திற்கு வெளியே ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை. வேதாகமத்திலிருந்து ஒருவரும் வெளியேறவுமில்லை, அவர்கள் அவ்வாறு செய்யத் துணிவு கொள்ளவுமில்லை. ஜனங்கள் வேதாகமத்தை இத்தனை வருடங்களாக படித்து, பல விளக்கங்களுடன் வந்துள்ளனர், அதற்காகத் தங்கள் கடின உழைப்பைத் தந்துள்ளனர். வேதாகமத்தைக் குறித்த பல கருத்து வேறுபாடுகளையும் அவர்கள் கொண்டுள்ளனர், இதை வைத்து முடிவில்லாமல் விவாதிக்கின்றனர், இதன்மூலம் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பல்வேறு மதப்பிரிவுகள் இன்று உருவாக்கப்பட்டுள்ளன. அவர்கள் எல்லோரும் வேதாகமத்தில் உள்ள சில விசேஷித்த விளக்கங்களை அல்லது மிகவும் ஆழமான இரகசியங்களைக் கண்டுபிடிக்க விரும்புகின்றனர், அவர்கள் அதை ஆராய விரும்புகின்றனர், மேலும் இஸ்ரவேலில் யேகோவாவின் கிரியைக் குறித்த பின்னணியையோ அல்லது யூதேயாவில் இயேசுவின் கிரியைக் குறித்த பின்னணியையோ அல்லது வேறு ஒருவருக்கும் தெரியாத அதிக இரகசியங்களையோ கண்டுபிடிக்க விரும்புகின்றனர். கருத்து மற்றும் விசுவாசம் ஆகியவற்றில் ஒன்றே வேதாகமம் குறித்த ஜனங்களின் அணுகுமுறையாக இருக்கிறது. வேதாகமத்திலுள்ள சம்பவத்தையோ அல்லது சாராம்சத்தையோ பற்றி ஒருவரும் முற்றிலும் தெளிவாக அறிந்திருக்க முடியாது. ஆகையால், வேதாகமம் என்று வரும்போது ஜனங்கள் இன்றும் வேதாகமத்தைப் பற்றி விவரிக்க முடியாத அதிசய உணர்வைக் கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் அதைப் பற்றி மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர் மற்றும் அதில் அதிக விசுவாசம் வைத்திருக்கின்றனர். இன்று, எல்லோருமே வேதாகமத்தில் கடைசி நாட்களின் கிரியையைக் குறித்த தீர்க்கதரிசனங்களைக் கண்டறிய விரும்புகின்றனர். மேலும், கடைசி நாட்களில் தேவன் என்ன கிரியை செய்கிறார், கடைசி நாட்களுக்கான என்னென்ன அடையாளங்கள் உள்ளன என்பதைக் கண்டுபிடிக்க அவர்கள் விரும்புகின்றனர். இவ்வாறு, அவர்கள் வேதாகமத்தை ஆராதிப்பது மிகவும் தீவிரமாகிறது. மேலும், கடைசி நாட்கள் நெருங்க நெருங்க, வேதாகமத்தைக் குறித்த, குறிப்பாக கடைசி நாட்களைக் குறித்த தீர்க்கதரிசனங்கள் மீது அதிக கண்மூடித்தனமான நம்பிக்கையை வைக்கின்றனர். வேதாகமத்தின் மீது அத்தகைய கண்மூடித்தனமான விசுவாசத்தை, வேதாகமத்தின் மீது அத்தகைய நம்பிக்கையை கொண்டிருப்பதனால், அவர்கள் பரிசுத்த ஆவியானவரின் கிரியையை நாடுவதில் எந்த விருப்பத்தையும் கொண்டிருப்பதில்லை ஜனங்கள் தங்களுடைய கருத்துக்களில் வேதாகமத்தால் மட்டுமே பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் கொண்டுவர முடியும் என்றும், வேதாகமத்தில் மட்டுமே தேவனுடைய தேவனுடைய அடிச்சுவடுகளைக் கண்டுபிடிக்க முடியும் என்றும், வேதாகமத்தில் மட்டுமே தேவனுடைய கிரியையைக் குறித்த இரகசியங்கள் மறைந்துள்ளன என்றும், வேதாகமத்தைத் தவிர வேறு எந்த புத்தகங்களாலோ அல்லது நபர்களாலோ தேவனைப் பற்றிய அனைத்தையும் மற்றும் அவருடைய கிரியை முழுவதையும் தெளிவுபடுத்த முடியாது என்றும், வேதாகமத்தால்தான் பரலோகத்தின் கிரியையை பூமிக்கு கொண்டுவர முடியும் என்றும், வேதாகமத்தால்தான் காலங்களை ஆரம்பித்தும் முடித்தும் வைக்க முடியும் என்றும் நம்புகின்றனர். இந்தக் கருத்துக்களைக் கொண்டிருப்பதானால், பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தேடுவதற்கு ஜனங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை. ஆகையால், கடந்த காலங்களில் வேதாகமம் ஜனங்களுக்கு எவ்வளவு உதவியாக இருந்திருந்தாலும், அது தேவனுடைய சமீபத்திய கிரியைக்கு ஒரு தடையாகவே மாறியுள்ளது. வேதாகமம் இல்லாமல், வேறு இடங்களிலும் ஜனங்களால் தேவனுடைய அடிச்சுவடுகளைத் தேட முடியும். ஆனாலும் இன்று, அவருடைய அடிச்சுவடுகள் வேதாகமத்தால் உள்ளடக்கி வைக்கப்பட்டுள்ளன, அவருடைய சமீபத்திய கிரியைகளை விரிவுபடுத்துவது இரண்டு மடங்கு கடினமாகவும், மலையளவு பெரிய போராட்டமாகவும் மாறியுள்ளது. வேதாகமத்தின் பிரபலமான அதிகாரங்களும் வசனங்களும் மற்றும் வேதாகமத்தின் பல்வேறு தீர்க்கதரிசனங்களும் தான் இதற்கெல்லாம் காரணமாகும். வேதாகமம் ஜனங்களுடைய மனதில் ஒரு விக்கிரகமாக மாறியுள்ளது, அவர்களுடைய மூளையில் அது ஒரு புதிராக மாறியுள்ளது. மேலும், வேதாகமத்திற்கு வெளியேயும் தேவனால் கிரியை செய்ய முடியும் என்று நம்புவதற்கு அவர்களால் முடியவில்லை, தேவனை வேதாகமத்திற்கு வெளியேயும் காண முடியும் என்பதை ஜனங்களால் நம்ப முடிவதில்லை, இறுதி கிரியையின்போது தேவன் வேதாகமத்திலிருந்து வெளியேறி புதியதாக ஆரம்பிக்க முடியும் என்பதையும் அவர்களால் நம்ப முடிவதில்லை. இது ஜனங்களால் நினைத்துப் பார்க்க முடியாததாகும். அவர்களால் அதை நம்பவும் முடியவில்லை, அவர்களால் அதை கற்பனை செய்துபார்க்கவும் முடியவில்லை. தேவனுடைய புதிய கிரியையை ஜனங்கள் ஏற்றுக்கொள்வதற்கு வேதாகமம் ஒரு பெரிய தடையாகவும், இந்த புதிய கிரியையை தேவன் விரிவுபடுத்துவதில் சிரமமாகவும் மாறியுள்ளது.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “வேதாகமத்தைக் குறித்து (1)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
2. இன்று, ஜனங்கள் வேதாகமத்தை தேவன் என்றும், தேவனே வேதாகமமாக இருக்கிறார் என்றும் நம்புகின்றனர். ஆகவே, வேதாகமத்தின் எல்லா வார்த்தைகளும் தேவன் மட்டுமே பேசிய வார்த்தைகள் என்றும், இவை அனைத்தும் தேவனால் சொல்லப்பட்டவை என்றும் அவர்கள் நம்புகின்றனர். பழைய மற்றும் புதிய ஏற்பாட்டின் அறுபத்தாறு புத்தகங்கள் யாவுமே மனிதர்களால் எழுதப்பட்டவை என்றாலும், இவை அனைத்தும் தேவனுடைய ஏவுதலினால் வழங்கப்பட்டவை என்றும், பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடுகளின் பதிவு என்றும் தேவனை விசுவாசிப்பவர்கள் கூட நினைக்கின்றனர். இது மனிதனின் தவறான புரிதலாகும், இது உண்மைகளுடன் முற்றிலும் ஒத்துப்போகவில்லை. உண்மையிலேயே, தீர்க்கதரிசன புத்தகங்களைத் தவிர, பழைய ஏற்பாட்டின் பெரும்பகுதி ஒரு வரலாற்றுப் பதிவாகும். புதிய ஏற்பாட்டின் சில நிருபங்கள் ஜனங்களுடைய அனுபவங்களிலிருந்து வருகின்றன. மேலும், சில பரிசுத்த ஆவியின் அறிவொளியிலிருந்து வருகின்றன. உதாரணமாக, பவுலின் நிருபங்கள் ஒரு மனிதனுடைய கிரியையிலிருந்து தோன்றியவையாகும். இவை அனைத்தும் பரிசுத்த ஆவியானவரின் அறிவொளியின் விளைவாகும். இவை சபைகளுக்காக எழுதப்பட்டவையாகும், மேலும் இவை சபைகளைச் சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கு அறிவுரை மற்றும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளாக இருந்தன. இவை பரிசுத்த ஆவியானவரால் பேசப்பட்ட வார்த்தைகள் அல்ல, பவுலால் பரிசுத்த ஆவியானவரின் சார்பாகப் பேச முடியவில்லை, அவன் ஒரு தீர்க்கதரிசியும் அல்ல, யோவான் கண்ட தரிசனங்களையும் அவன் பார்க்கவில்லை. அவனது நிருபங்கள் எபேசு, பிலதெல்பியா, கலாத்தியா மற்றும் பிற சபைகளுக்கே எழுதப்பட்டவையாகும். … பவுல் போன்றவர்களின் நிருபங்கள் அல்லது வார்த்தைகளை ஜனங்கள் பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடுகளாகவே பார்த்து, அவற்றை தேவனாகவே ஆராதித்தால், அவர்களை மிகவும் கண்மூடித்தனமானவர்கள் என்று மட்டுமே கூற முடியும். மிகவும் கடுமையாகப் பேசுவதென்றால், இது தேவதூஷணமாக மட்டுமே இருக்காதா? தேவனுடைய சார்பாக ஒரு மனிதனால் எவ்வாறு பேச முடியும்? அவனுடைய நிருபங்களின் பதிவுகளுக்கும் அவன் பேசிய வார்த்தைகளுக்கும் முன்பாக ஜனங்களால் எவ்வாறு அவற்றை ஒரு புனித நூல் அல்லது பரலோக புத்தகம் போல வணங்க முடிகிறது? ஒரு மனிதனால் தேவனுடைய வார்த்தைகளைச் சாதாரணமாக உச்சரிக்க முடியுமா? தேவனுடைய சார்பாக ஒரு மனிதனால் எவ்வாறு பேச முடியும்?
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “வேதாகமத்தைக் குறித்து (3)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
3. தேவனின் புதிய கிரியை எதுவாக இருந்த போதிலும், அது தீர்க்கதரிசனங்களால் உறுதிப்படுத்தப்பட வேண்டும், மேலும் அத்தகைய கிரியையின் ஒவ்வொரு கட்டத்திலும், “உத்தம” இருதயத்துடன் அவரைப் பின்பற்றும் அனைவருக்கும் வெளிப்பாடுகள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்; அப்படி இல்லை என்றால், அத்தகைய கிரியைகள் தேவனின் கிரியைகளாக இருக்க முடியாது என்று நம்பும் மேலதிகமானோரும் உள்ளனர்; தேவனை அறிந்துகொள்ளுவது என்பது மனிதனுக்கு ஏற்கெனவே ஓர் எளிமையான காரியம் அல்ல. மனிதனின் மூட இருதயத்தோடு கூடுதலாக அவனது சுய-முக்கியத்துவம் மற்றும் அகம்பாவம் என்னும் கலக சுபாவத்தின் காரணமாக தேவனின் புதிய கிரியையை ஏற்றுக்கொள்ளுவது அவனுக்கு இன்னும் கடினமானதாக இருக்கிறது. தேவனின் புதிய கிரியையை மனிதன் கவனமாக ஆராய்வதுமில்லை, அதைத் தாழ்மையோடு ஏற்றுக்கொள்ளுவதும் இல்லை; அதற்குப் பதிலாக, அவன் தேவனிடம் இருந்து வெளிப்பாடுகளுக்காகவும் வழிகாட்டுதலுக்காகவும் காத்திருந்து ஓர் அலட்சியமான மனப்போங்கை கடைபிடிக்கிறான். இது தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்து அவரை எதிர்ப்பவர்களின் நடத்தை அல்லவா? இத்தகைய மக்கள் தேவனின் அங்கீகாரத்தை எவ்வாறு பெற முடியும்?
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தன் எண்ணங்களில் தேவனுக்கு எல்லைவகுத்துவிட்ட மனிதனால் எவ்வாறு தேவனின் வெளிப்பாடுகளைப் பெறமுடியும்?” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
4. இயேசுவின் காலத்தில், பரிசுத்த ஆவியானவர் அந்த நேரத்தில் தம்மை வழிநடத்தியதற்கு ஏற்ப இயேசு யூதர்களையும், அவரைப் பின்பற்றிய அனைவரையும் வழிநடத்தினார். அவர் வேதாகமத்தை தாம் செய்தவற்றுக்கு அடிப்படையாக எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் தமது கிரியைக்கு ஏற்ப பேசினார். அவர் வேதாகமம் சொன்னதைக் கவனிக்கவில்லை, தம்மைப் பின்பற்றுபவர்களை வழிநடத்துவதற்கான வழியையும் அவர் வேதாகமத்தில் தேடவில்லை. அவர் கிரியை செய்ய ஆரம்பித்ததில் இருந்தே, அவர் மனந்திரும்புதலின் வழியைப் பரப்பினார். இந்த மனந்திரும்புதல் என்ற வார்த்தையானது பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்களில் முற்றிலும் குறிப்பிடப்படவில்லை. அவர் வேதாகமத்தின் படி செயல்படவில்லை என்பது மட்டுமின்றி, அவர் ஒரு புதிய பாதையை வழிநடத்தி, புதிய கிரியையைச் செய்தார். அவர் பிரசங்கித்தபோது அவர் ஒருபோதும் வேதாகமத்தைக் குறிப்பிடவில்லை. நியாயப்பிரமாணக் காலத்தின் போது, பிணியாளிகளை குணப்படுத்தும், பிசாசுகளைத் துரத்தும் அவருடைய அற்புதங்களை ஒருவராலும் செய்ய முடியவில்லை. ஆகையால், அவருடைய கிரியையும், அவருடைய போதனைகளும், அவருடைய வார்த்தைகளின் அதிகாரமும் வல்லமையும் நியாயப்பிரமாணக் காலத்திலுள்ள எந்தவொரு மனிதனுக்கும் அப்பாற்பட்டதாக இருந்தன. இயேசு தமது புதிய கிரியையை மட்டுமே செய்தார். அவர் வேதாகமத்தைப் பயன்படுத்துவதைப் பலரும் கண்டித்தபோதிலும், அவரை சிலுவையில் அறைவதற்குப் பழைய ஏற்பாட்டைப் பயன்படுத்தியபோதிலும், அவருடைய கிரியை பழைய ஏற்பாட்டை மிஞ்சியது. இது அப்படி இல்லையென்றால், ஜனங்கள் ஏன் அவரை சிலுவையில் அறைந்தார்கள்? அவருடைய போதனையும், பிணியாளிகளைக் குணப்படுத்தும் பிசாசுகளைத் துரத்தும் அவருடைய திறனையும் பற்றிப் பழைய ஏற்பாட்டில் எதுவும் சொல்லாததானால்தானே அல்லவா? ஒரு புதிய பாதையை வழிநடத்துவதற்காகவே அவருடைய கிரியை செய்யப்பட்டது, அது வேண்டுமென்றே வேதாகமத்திற்கு எதிராக சண்டை போடுவதற்காகவோ அல்லது பழைய ஏற்பாட்டை வேண்டுமென்றே புறந்தள்ளுவதற்காகவோ அல்ல. தமது ஊழியத்தைச் செய்யவும், தமக்காக ஏங்குகிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிறவர்களுக்கும் புதிய கிரியையைக் கொண்டு வருவதற்காகவும் மட்டுமே அவர் வந்தார். அவர் பழைய ஏற்பாட்டை விளக்கவோ அல்லது அதன் கிரியையை ஆதரிக்கவோ வரவில்லை. நியாயப்பிரமாண காலத்தை தொடர்ந்து வளர அனுமதிப்பதற்காக அவருடைய கிரியை செய்யப்படவில்லை. ஏனென்றால், அவருடைய கிரியை வேதாகமத்தை அதன் அடிப்படையாகக் கொண்டிருந்ததா என்பதைக் கருத்தில் கொள்ளவில்லை. இயேசு தாம் செய்ய வேண்டிய கிரியையைச் செய்ய மட்டுமே வந்தார். ஆகவே, அவர் பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசனங்களை விளக்கவுமில்லை, பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணக் காலத்தின் வார்த்தைகளின்படி அவர் கிரியை செய்யவுமில்லை. அவர் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருப்பதை புறக்கணித்தார், அது தமது கிரியையுடன் ஒத்திருக்கிறதா இல்லையா என்று அவர் கவலைப்படவில்லை, மற்றவர்கள் தமது கிரியையைப் பற்றி என்ன அறிந்திருக்கிறார்கள் அல்லது அவர்கள் அதை எவ்வாறு கண்டித்தார்கள் என்பது குறித்தும் கவலைப்படவில்லை. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளின் முன்னறிவிப்பை பலர் கண்டித்தபோதிலும், அவர் செய்ய வேண்டிய கிரியையை மட்டுமே அவர் செய்து வந்தார். அவருடைய கிரியையில் எந்த அடிப்படையும் இல்லாதது போல ஜனங்களுக்கு தோன்றியது. மேலும், அது பழைய ஏற்பாட்டின் பதிவுகளுடன் பெரிதும் முரண்பட்டதாக இருந்தது. இது மனிதனின் தவறாக இருக்கவில்லையா? தேவனுடைய கிரியையில் உபதேசம் பயன்படுத்தப்பட வேண்டுமா? தீர்க்கதரிசிகளுடைய முன்னறிவிப்பின்படி தேவன் கிரியை செய்ய வேண்டுமா? இறுதியாக, எது பெரியது: தேவனா அல்லது வேதாகமமா? தேவன் ஏன் வேதாகமத்தின்படி கிரியை செய்ய வேண்டும்? வேதாகமத்தை மிஞ்சுவதற்கு தேவனுக்கு உரிமை இல்லை என்று ஆகிவிட முடியுமா? தேவன் வேதாகமத்திலிருந்து வெளியேறி வேறு கிரியையைச் செய்ய முடியாதா? இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஏன் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவில்லை? பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளின்படி அவர் ஓய்வுநாளின் வெளிச்சத்தில் நடந்திருந்தால், இயேசு வந்த பிறகு அவர் ஏன் ஓய்வுநாளைக் கடைபிடிக்காமல், கால்களைக் கழுவினார், முக்காடிட்டுக் கொண்டார், அப்பத்தைப் பிட்டார், திராட்சரசம் பருகினார்? இவை அனைத்தும் பழைய ஏற்பாட்டுக் கட்டளைகளில் இல்லாதவை அல்லவா? இயேசு பழைய ஏற்பாட்டை மதித்திருந்தால், அவர் ஏன் இந்த உபதேசங்களை மீறினார்? தேவனா அல்லது வேதாகமமா எது முதலில் வந்தது என்பதை நீ அறிந்துகொள்ள வேண்டும்! ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கும் அவரால் வேதாகமத்தின் ஆண்டவராக இருக்க முடியாதா?
… ஆகவேதான், அவர் கூறினார்: “நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.” ஆகையால், அவர் நிறைவேற்றியவற்றிற்கு ஏற்ப, பல உபதேசங்கள் மீறப்பட்டன. ஓய்வுநாளில் அவர் சீஷர்களை பயிர்வழியே அழைத்துச் சென்றபோது, அவர்கள் கதிர்களைக் கொய்து சாப்பிட்டார்கள். அவர் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்காமல், “மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார்.” என்று சொன்னார். அந்த நேரத்தில், இஸ்ரவேலரின் விதிமுறைகளின்படி, ஓய்வுநாளைக் கடைப்பிடிக்காத எவரும் கல்லெறிந்து கொல்லப்படுவார்கள். ஆனாலும், இயேசு ஆலயத்திற்குள் செல்லவுமில்லை, ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவுமில்லை. பழைய ஏற்பாட்டுக் காலத்தின்போது அவருடைய கிரியையானது யேகோவாவால் செய்யப்படவில்லை. இவ்வாறு, இயேசு செய்த கிரியையானது பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தையும் மிஞ்சியது, அது அதைவிட உயர்ந்ததாக இருந்தது, நியாயப்பிரமாணத்தின்படி செய்யப்படவில்லை. கிருபையின் காலத்தின்போது, இயேசு பழைய ஏற்பாட்டு நியாயப்பிரமாணத்தின்படி கிரியை செய்யவில்லை, அந்த உபதேசங்களை ஏற்கனவே மீறியிருந்தார். ஆனால் இஸ்ரவேலர் வேதாகமத்தைத் தீவிரமாக பற்றிப்பிடித்துக்கொண்டு இயேசுவைக் கடிந்துகொண்டனர், இது இயேசுவின் கிரியையை மறுக்கவில்லையா? இன்று, மதவாத உலகமும் வேதாகமத்தைத் தீவிரமாய்ப் பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கிறது. “வேதாகமம் ஒரு புனித நூல், அதைக் கட்டாயம் படிக்க வேண்டும்” என்று சிலர் கூறுகின்றனர். “தேவனுடைய கிரியை என்றென்றும் ஆதரிக்கப்பட வேண்டும், பழைய ஏற்பாடு என்பது இஸ்ரவேலர்களுடனான தேவனுடைய உடன்படிக்கையாக இருக்கிறது, அதை புறந்தள்ள முடியாது, ஓய்வுநாள் எப்போதும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்!” என்று சிலர் கூறுகின்றனர். அவர்கள் கேலிக்குரியவர்கள் அல்லவா? இயேசு ஏன் ஓய்வுநாளைக் கடைப்பிடிக்கவில்லை? அவர் பாவம் செய்தாரா? இதுபோன்ற காரியங்களை யாரால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்?
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “வேதாகமத்தைக் குறித்து (1)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
5. அந்த நேரத்தில் இயேசுவின் வெளிப்பாடுகளும் கிரியைகளும் கோட்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை, பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தின் கிரியைக்கு ஏற்ப அவர் தனது கிரியையைச் செய்யவில்லை. இது கிருபையின் காலத்தில் செய்யப்பட வேண்டிய கிரியைக்கு ஏற்றாற்போல் மேற்கொள்ளப்பட்டது. அவர் கொண்டு வந்திருந்த கிரியையின்படி, அவருடைய சொந்தத் திட்டத்தின்படி, அவருடைய ஊழியத்தின்படி பிரயாசப்பட்டார். அவர் பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தின்படி கிரியை செய்யவில்லை. அவர் செய்த எதுவும் பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தின்படி இல்லை, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நிறைவேற்றுவதற்காக அவர் கிரியை புரிய வரவில்லை. தேவனின் கிரியையின் ஒவ்வொரு கட்டமும் பண்டைய தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தவைகளை நிறைவேற்றுவதற்காக வெளிப்படையாகச் செய்யப்படவில்லை, மேலும் அவர் கோட்பாட்டைக் கடைப்பிடிக்கவோ அல்லது பண்டைய தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தவைகளை வேண்டுமென்றே உணரவோ வரவில்லை. ஆயினும் அவருடைய கிரியைகள் பண்டைய தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தவைகளைப் பாழாக்கவில்லை, அவர் முன்பு செய்திருந்த கிரியையையும் இடையூறு செய்யவில்லை. எந்தவொரு கோட்பாட்டையும் பின்பற்றாமல் அதற்குப் பதிலாக அவரே செய்ய வேண்டிய கிரியையைச் செய்வது என்பது அவருடைய கிரியையின் முக்கிய அம்சமாகும். அவர் ஒரு தீர்க்கதரிசியோ அல்லது ஞானதிருஷ்டிக்காரரோ அல்ல, ஆனால் அவர் செய்யவேண்டிய கிரியையைச் செய்ய உண்மையாக வந்தவர், அவர் தனது புதிய யுகத்தைத் தொடங்கவும், அவருடைய புதிய கிரியையைச் செய்யவும் வந்தார். நிச்சயமாக, இயேசு தம்முடைய கிரியையைச் செய்ய வந்தபோது, பழைய ஏற்பாட்டில் பண்டைய தீர்க்கதரிசிகள் பேசிய அநேக வார்த்தைகளையும் அவர் நிறைவேற்றினார். இன்றைய கிரியையும் பழைய ஏற்பாட்டின் பண்டைய தீர்க்கதரிசிகள் முன்னறிவித்தவைகளையும் நிறைவேற்றியுள்ளது. “மஞ்சள் நிற பழைய பஞ்சாங்கத்தை” நான் வைத்திருப்பதில்லை என்பது போன்றதுதான் இது, அவ்வளவுதான். ஏனென்றால், நான் செய்யவேண்டிய கிரியைகள் அதிகம் உள்ளன, நான் உங்களிடம் பேச வேண்டிய அநேக வார்த்தைகள் உள்ளன, இந்தக் கிரியையும் இந்த வார்த்தைகளும் வேதாகமத்தின் பத்திகளை விளக்குவதை விட மிக முக்கியத்துவம் வாய்ந்தவை, ஏனென்றால் இதுபோன்ற கிரியைக்கு பெரியதான முக்கியத்துவம் அல்லது மதிப்பு உங்களுக்கு இல்லை, அது உங்களுக்கு உதவ முடியாது, அல்லது உங்களை மாற்ற முடியாது. வேதாகமத்திலிருந்து எந்தவொரு பத்தியையும் நிறைவேற்றுவதற்காக புதிய கிரியையைச் செய்ய நான் விரும்புகிறதில்லை. வேதாகமத்தின் பண்டைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நிறைவேற்ற மட்டுமே தேவன் பூமிக்கு வந்திருந்தால், யார் பெரியவர், மனுஷனாக அவதரித்த தேவனா அல்லது அந்தப் பண்டைய தீர்க்கதரிசிகளா? எல்லாவற்றிற்கும் மேலாக, தீர்க்கதரிசிகள் தேவனுக்குப் பொறுப்பானவர்களா, அல்லது தேவன் தீர்க்கதரிசிகளுக்குப் பொறுப்பானவரா? இந்த வார்த்தைகளை நீ எவ்வாறு விளக்குகிறாய்?
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “பட்டங்களையும் அடையாளத்தையும் குறித்து” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
6. தேவனுடைய கிரியை எப்போதும் முன்னோக்கியே நகர்கிறது, மேலும் அவருடைய கிரியையின் நோக்கம் மாறாவிட்டாலும், அவர் கிரியை செய்யும் முறை தொடர்ந்து மாறுகிறது, அதாவது தேவனைப் பின்பற்றுகிறவர்களும்கூட தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறார்கள். தேவன் அதிகமான கிரியையைச் செய்யச்செய்ய, தேவனைப் பற்றிய அறிவு மனிதனுக்கு முழுமையாகிறது. தேவனின் கிரியையின் விளைவாக மனிதனின் மனநிலையிலும் அதற்கேற்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன. இருப்பினும், தேவனுடைய கிரியை எப்போதும் மாறிக்கொண்டு இருப்பதால், பரிசுத்த ஆவியானவரின் கிரியையை அறியாதவர்கள், மேலும் சத்தியத்தை அறியாத அந்த மூடத்தனமான மக்கள் தேவனை எதிர்ப்பவர்களாகின்றனர். தேவனின் கிரியை ஒருபோதும் மனிதனின் எண்ணங்களுக்கு ஏற்ப இருப்பதில்லை, ஏனெனில் அவரது கிரியை எப்போதும் புதியதே தவிர ஒருபோதும் பழையதல்ல, மற்றும் அவர் ஒருபோதும் பழைய கிரியையைத் திருப்பிச் செய்வதில்லை, ஆனால் மாறாக முன்னெப்போதும் செய்யப்படாத கிரியையுடன் முன்னோக்கிச் செல்கிறார். தேவன் தாம் செய்த அதே கிரியையைத் திருப்பிச் செய்வதில்லை என்பதாலும், மனிதன் எப்போதும் தேவன் கடந்த காலத்தில் செய்த கிரியையை வைத்தே அவரது தற்போதைய கிரியையை மதிப்பிடுவதினாலும், புதிய காலத்தின் கிரியையின் ஒவ்வொரு கட்டத்தையும் நிறைவேற்றுவது தேவனுக்கு மிகவும் கடினமாகிவிட்டது. மனிதனுக்கோ மிக அதிக அளவிலான கஷ்டங்கள்! அவன் தனது சிந்தனைகளில் மிகவும் பழமைவாதியாக இருக்கிறான்! தேவனின் கிரியையை எவரும் அறியவில்லை, ஆனால் ஒவ்வொருவரும் அதற்கு எல்லைவகுக்கின்றனர். தேவனை விட்டு விலகும் போது மனிதன் ஜீவன், சத்தியம் மற்றும் தேவ ஆசீர்வாதங்களை இழக்கிறான், ஆனால் அவன் ஜீவன் அல்லது சத்தியத்தை ஏற்காவிட்டால், மனுக்குலத்திற்கு ப் பெரும் ஆசீர்வாதங்களில் மிகக் குறைவானவற்றையே தேவன் வழங்குகிறார். எல்லா மனிதர்களும் தேவனை அடையவே விரும்புகின்றனர், ஆனால் தேவனின் கிரியைகளில் எந்த ஒரு மாற்றத்தையும் அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. தேவனின் புதிய கிரியையை ஏற்காதவர்கள் தேவனின் கிரியை மாறாதது என்றும் அது என்றென்றும் நிலைமாறாமல் இருக்கும் என்றும் நம்புகின்றனர். அவர்களது நம்பிக்கையின்படி, நித்திய இரட்சிப்பை அடையத் தேவையானதெல்லாம் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிப்பது மட்டுமே, மேலும் அவர்கள் மனந்திரும்பி தங்கள் பாவத்தை அறிக்கையிட்டு விட்டாலே தேவனின் சித்தம் எப்போதும் நிறைவேறிவிடும். நியாயப்பிரமாணத்தின் கீழ் இருக்கும் தேவனும், மனிதனுக்காகச் சிலுவையில் அறையப்பட்ட தேவனும் மட்டுமே தேவனாக இருக்க முடியும் என்று அவர்கள் எண்ணம் கொண்டுள்ளனர்; வேதாகமத்தை தேவன் மிஞ்சக் கூடாது மற்றும் மிஞ்ச முடியாது என்பதும் கூட அவர்களது எண்ணம் ஆகும். சரியாகச் சொல்லப்போனால், இந்த எண்ணங்களே அவர்களைப் பழைய நியாயப்பிரமாணங்களுடன் பிணைத்து செத்த விதிகளுடன் சேர்த்துவைத்து அறைந்துள்ளன.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தன் எண்ணங்களில் தேவனுக்கு எல்லைவகுத்துவிட்ட மனிதனால் எவ்வாறு தேவனின் வெளிப்பாடுகளைப் பெறமுடியும்?” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
7. யூதர்கள் யாவரும் பழைய ஏற்பாட்டைப் படித்து ஒரு முன்னணையில் ஓர் ஆண் குழந்தை பிறக்கும் என்ற ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை அறிந்திருந்தார்கள். இந்தத் தீர்க்கதரிசனத்தை முற்றிலுமாக அறிந்திருந்த பின்னும் அவர்கள் ஏன் இயேசுவைத் துன்பப்படுத்தினார்கள்? அது அவர்களது கலக சுபாவத்தினாலும் பரிசுத்த ஆவியானவரின் கிரியையைக் குறித்த அறியாமையினாலும் அல்லவா? அக்காலத்தில், தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட ஆண் பிள்ளையைப் பற்றி தாங்கள் அறிந்திருந்ததை விடவும் இயேசுவின் கிரியை வேறாக இருப்பதாக பரிசேயர்கள் நம்பினார்கள், மேலும் மனிதனாகப் பிறந்த தேவனுடைய கிரியை வேதாகமத்தோடு இணக்கமானதாக இல்லை என்பதால் இன்று மக்கள் தேவனை நிராகரிக்கிறார்கள். தேவனிடத்தில் அவர்களுடைய கலகப்புத்தியின் சாராம்சம் ஒரேமதிரியாக இருக்கிறதல்லவா? பரிசுத்த ஆவியானவரின் அனைத்துக் கிரியைகளையும் உன்னால் கேள்விகேட்காமல் ஏற்றுக்கொள்ள முடியுமா? அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இருந்தால் அதுவே சரியான நீரோட்டம் ஆகும், மேலும் எந்த ஒரு சந்தேகமும் இன்றி நீ அதை ஏற்றுக்கொள்ள வேண்டும்; எதை ஏற்க வேண்டும் என்பதை நீ தேர்ந்தெடுக்கக் கூடாது. நீ தேவனுக்குள் நுண்ணறிவைப் பெற்று அவரைக் குறித்து அதிக கவனமாக இருந்தால், இது தேவையற்றதாக இருந்திருக்கும் அல்லவா? நீ வேதாகமத்தில் இருந்து இன்னும் அதிக ஆதாரத்தைத் தேட வேண்டும்; அது பரிசுத்த ஆவியானவரின் கிரியையாக இருந்தால், நீ அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும், ஏனெனில் நீ தேவனைப் பின்பற்றவே அவரை நம்புகிறாய், மேலும் அவரை நீ சோதித்தறியக் கூடாது. நான் உன்னுடைய தேவன் என்பதை நிரூபிக்க மேலும் ஆதாரங்களை நீ தேடக் கூடாது, ஆனால் நான் உனக்குப் பயனுள்ளவராக இருக்கிறேனா என்பதை உய்த்துணர்ந்து கொள்ளும் திறனுடையவனாக நீ இருக்கவேண்டும்—இதுவே மிகவும் முக்கியமானதாகும். நீ வேதாகமத்துக்குள் மறுக்கமுடியாத சான்றுகளைக் கண்டறிந்தாலும், அது உன்னை என் முன் முழுமையாகக் கொண்டுவர முடியாது. நீ வேதாகமத்தின் வரையறைக்குள்ளேயே வாழ்கிறாய், எனக்கு முன் அல்ல; என்னை அறிந்துகொள்ள வேதாகமம் உனக்கு உதவமுடியாது, என் பேரில் உனக்குள்ள அன்பையும் அதனால் ஆழப்படுத்த முடியாது. … தேவனின் கிரியைக்கு ஒவ்வொரு காலத்திலும் தெளிவான எல்லைகள் உள்ளன; அவர் நடப்புக் காலத்தின் கிரியையை மட்டுமே செய்கிறார், மற்றும் கிரியையின் அடுத்த கட்டத்தை அவர் ஒருபோதும் முன்கூட்டியே ஆற்றுவதில்லை. இவ்வாறே ஒவ்வொரு காலத்தினுடைய அவரது பிரதிநிதித்துவக் கிரியையை முன்னுக்குக் கொண்டுவர முடியும். இயேசு கடைசி நாட்களின் அடையாளங்களைப் பற்றி, எவ்வாறு பொறுமையாக இருப்பது என்பது பற்றி, மற்றும் எவ்வாறு இரட்சிக்கப்படுவது என்பது பற்றி, எவ்வாறு மனந்திரும்பி பாவ அறிக்கை செய்வது என்பது பற்றி மற்றும் எவ்வாறு சிலுவையை எடுத்துக்கொண்டு பாடுகளை சகிப்பது என்பது பற்றி மட்டுமே பேசினார்; கடைசி நாட்களில் எவ்வாறு மனிதன் வருகைக்குள் பிரவேசிக்க வேண்டும் என்றோ அல்லது அவன் எவ்வாறு தேவ சித்தத்தைத் திருப்தி செய்ய முயலவேண்டும் என்றோ ஒருபோதும் அவர் பேசவில்லை. இவ்வாறிருக்க, தேவனின் கடைசி நாட்களின் கிரியையை வேதாகமத்தில் தேடுவது என்பது வேடிக்கையாக இருக்கிறது அல்லவா? வேதாகமத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டு இருப்பதால் மட்டுமே உன்னால் என்ன காண முடியும்? ஒரு வேத விளக்கவுரையாளராக இருந்தாலும் சரி அல்லது ஒரு போதகராக இருந்தாலும் சரி, இன்றைக்கான கிரியையை முன்கூட்டியே யாரால் கண்டிருக்க முடியும்?
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தன் எண்ணங்களில் தேவனுக்கு எல்லைவகுத்துவிட்ட மனிதனால் எவ்வாறு தேவனின் வெளிப்பாடுகளைப் பெறமுடியும்?” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
8. யூத பரிசேயர்கள் இயேசுவைக் கண்டிக்க மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் பயன்படுத்தினர். அவர்கள் அந்தக் கால இயேசுவோடு இணக்கத்தைத் தேடவில்லை, ஆனால் எழுத்துக்களுக்கான நியாயப்பிரமாணத்தை விடாமுயற்சியுடன் பின்பற்றினார்கள், பழைய ஏற்பாட்டின் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றவில்லை என்றும் மேசியாவாக இல்லை என்றும் அவரைக் குற்றம் சாட்டும் அளவிற்குச் சென்று, அவர்கள் இறுதியில் குற்றமற்ற இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். அவர்களின் சாராம்சம் என்ன? அவர்கள் சத்தியத்துக்கு இணக்கமாய் இருக்கும் வழியைத் தேடவில்லை அல்லவா? எனது சித்தத்திற்கு அல்லது எனது கிரியையின் படிகள் மற்றும் வழிமுறைகளுக்குச் செவிசாய்க்கும்போது அவர்கள் வேதத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் பற்று வைத்திருந்தனர். அவர்கள் சத்தியத்தை நாடிய ஜனங்கள் அல்ல, மாறாக வார்த்தைகளைத் திடமாகப் பற்றிக்கொண்ட ஜனங்கள்; அவர்கள் தேவனை விசுவாசிக்கும் ஜனங்கள் அல்ல, வேதத்தை விசுவாசிப்பவர்கள். அடிப்படையில், அவர்கள் வேதத்தின் கண்காணிப்பாளர்கள். வேதாகமத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்கும், வேதாகமத்தின் கெளரவத்தை நிலைநிறுத்துவதற்கும், வேதாகமத்தின் நற்பெயரைப் பாதுகாப்பதற்கும், அவர்கள் இரக்கமுள்ள இயேசுவைச் சிலுவையில் அறையும் அளவுக்குச் சென்றார்கள். வேதாகமத்தைப் பாதுகாப்பதற்காகவும், வேதாகமத்தின் ஒவ்வொரு வார்த்தையின் நிலையையும் ஜனங்களின் இதயங்களில் பேணுவதற்காகவும் மட்டுமே அவர்கள் இவ்வாறு செய்தனர். ஆகவே, வேதத்தின் கோட்பாட்டிற்கு இணங்காத இயேசுவிற்கு மரண தண்டனையைக் கொடுப்பதற்காக அவர்கள் தங்கள் எதிர்காலத்தையும் பாவநிவாரணத்தையும் கைவிட விரும்பினர். அவர்கள் அனைவரும் வேதத்தின் ஒவ்வொரு வார்த்தையின் சேவகர்கள் இல்லையா?
இன்றைய ஜனங்கள் எவ்வாறு இருக்கின்றனர்? கிறிஸ்து சத்தியத்தை வெளிப்படுத்த வந்திருக்கிறார், ஆனாலும் அவர்கள் பரலோகத்திற்குள் நுழைந்து கிருபையைப் பெறக்கூடும் என்பதால் அவரை இந்த உலகத்திலிருந்து துரத்துவார்கள். வேதாகமத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அவர்கள் சத்தியத்தின் வருகையை முற்றிலுமாக மறுப்பார்கள், மேலும் வேதாகமத்தின் நித்திய இருப்பை உறுதி செய்வதற்காக, மாம்சத்திற்குத் திரும்பிய கிறிஸ்துவை மீண்டும் சிலுவையில் அறைவார்கள். … மனுஷன் வார்த்தைகளுக்கு இணக்கமாய் இருக்கும் தன்மையையும் வேதாகமத்திற்கு இணக்கமாய் இருக்கும் தன்மையையும் தேடுகிறான், ஆனாலும் சத்தியத்துக்கு இணக்கமாய் இருக்கும் வழியைத் தேட ஒருவர் கூட என் முன்னால் வருவதில்லை. மனுஷன் பரலோகத்தில் என்னைப் பார்க்கிறான், பரலோகத்தில் எனது பிரசன்னத்திற்குக் குறிப்பாக அக்கறை செலுத்துகிறான், ஆனாலும் மாம்சத்தில் இருக்கும் என்னைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை, ஏனென்றால் மனுஷர்களிடையே வாழும் நான் அதிக முக்கியத்துவம் இல்லாதவன். வேதாகமத்தின் வார்த்தைகளுடன் மட்டுமே இணக்கமாய் இருக்க நாடுகிறவர்கள் மற்றும் தெளிவற்ற தேவனுடன் மட்டுமே இணக்கமாய் இருக்க நாடுபவர்கள் எனது பார்வைக்கு மோசமானவர்கள். ஏனென்றால், அவர்கள் இறந்த வார்த்தைகளையும், சொல்லப்படாத பொக்கிஷங்களை அவர்களுக்கு வழங்கக்கூடிய தேவனையுமே ஆராதிக்கின்றனர்; அவர்கள் மனுஷனின் தயவில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஓர் இல்லாத தேவனை ஆராதிக்கின்றனர். அப்படியானால், அத்தகையவர்கள் என்னிடமிருந்து என்ன பெற முடியும்? மனுஷன் வெறுமனே வார்த்தைகளுக்கு மிகவும் தாழ்ந்தவன். எனக்கு விரோதமாய் இருப்பவர்கள், என்னிடம் வரம்பற்ற கோரிக்கைகளை முன்வைப்பவர்கள், சத்தியத்தின் மீது அன்பு இல்லாதவர்கள், என்னை நோக்கிக் கலகம் செய்பவர்கள்—அவர்களால் என்னுடன் எவ்வாறு இணக்கமாய் இருக்க முடியும்?
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “நீங்கள் கிறிஸ்துவுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியை நாட வேண்டும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
9. என்னுடன் இணக்கமாய் இருப்பதாகச் சொல்பவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அத்தகையவர்கள் அனைவரும் குழப்பமான விக்கிரகங்களை வணங்குகிறார்கள். அவர்கள் எனது பெயரை பரிசுத்தமானதாக ஒப்புக் கொண்டாலும், அவர்கள் எனக்கு முரணான ஒரு பாதையில் நடக்கிறார்கள், அவர்களுடைய வார்த்தைகள் ஆணவமும் தன்னம்பிக்கையும் நிறைந்ததாக உள்ளன. ஏனென்றால், அடிப்படையிலேயே, அவர்கள் அனைவரும் எனக்கு எதிரானவர்கள், எனக்கு இணக்கமாய் இராதவர்கள். ஒவ்வொரு நாளும், அவர்கள் வேதாகமத்தில் எனது அடிச்சுவடுகளை நாடுகிறார்கள், சீரற்ற முறையில் “பொருத்தமான” பத்திகளைக் கண்டுபிடித்து, அவர்கள் முடிவில்லாமல் வாசித்து, வேதங்களாக மனப்பாடம் செய்கிறார்கள். என்னுடன் எவ்வாறு இணக்கமாய் இருக்க வேண்டுமென்பதோ அல்லது எனக்கு எதிராக இருப்பதன் பொருள் என்ன என்பதோ அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் வெறுமனே வேதத்தைக் கண்மூடித்தனமாக வாசிக்கிறார்கள். வேதாகமத்துக்குள், அவர்கள் இதுவரை கண்டிராத, அவர்களால் பார்க்க இயலாத ஒரு வரையறையற்ற தேவனைக் கட்டுப்படுத்துகிறார்கள், மற்றும் அதனை ஓய்வு நேரத்தில் பார்ப்பதற்காக வெளியே எடுக்கிறார்கள். அவர்கள் நான் இருப்பதை வேதாகமத்தின் எல்லைக்குள் மட்டுமே விசுவாசிக்கிறார்கள், அவர்கள் என்னை வேதாகமத்துடன் ஒப்பிடுகிறார்கள்; வேதாகமம் இல்லாமல் நான் இல்லை, நான் இல்லாமல் வேதாகமம் இல்லை. அவர்கள் எனது பிரசன்னத்துக்கோ அல்லது கிரியைகளுக்கோ செவிசாய்ப்பதில்லை, மாறாக வேதத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் தீவிரமான மற்றும் சிறப்பான கவனம் செலுத்துகிறார்கள். வேதத்தால் முன்னறிவிக்கப்பட்டிருந்தாலொழிய நான் செய்ய விரும்பும் எதையும் நான் செய்யக்கூடாது என்று இன்னும் பலர் நம்புகிறார்கள். அவர்கள் வேதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நான் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் அளவிடுவதற்கும் என்னை நிந்திப்பதற்கும் அவர்கள் வேதாகமத்தின் வசனங்களைப் பயன்படுத்தும் அளவிற்கு, வார்த்தைகளையும் வெளிப்பாடுகளையும் மிக முக்கியமானதாகக் கருதுகிறார்கள் என்று கூறலாம். அவர்கள் தேடுவது என்னுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியையோ அல்லது சத்தியத்திற்கு இணக்கமாய் இருப்பதற்கான வழியையோ அல்ல, ஆனால், வேதாகமத்தின் வார்த்தைகளுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியைத் தேடுகிறார்கள், மற்றும் அவர்கள் வேதாகமத்திற்கு இணங்காத எதையும் விதிவிலக்கு இல்லாமல், எனது கிரியை அல்ல என்று அவர்கள் நம்புகிறார்கள். அத்தகையவர்கள் பரிசேயர்களின் கடமைப்பட்ட சந்ததியினர் அல்லவா?
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “நீங்கள் கிறிஸ்துவுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியை நாட வேண்டும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
10. வேதாகமத்தின் வார்த்தைகளில் மட்டுமே அக்கறை கொண்டிருப்பவர்களும், சத்தியத்திலோ அல்லது எனது அடிச்சுவடுகளைத் தேடுவதிலோ அக்கறை காட்டாதவர்கள் எனக்கு எதிரானவர்கள், ஏனென்றால் அவர்கள் என்னை வேதாகமத்தின்படி மட்டுப்படுத்துகிறார்கள், என்னை வேதாகமத்திற்குள் கட்டுப்படுத்துகிறார்கள், அதனால் தீவிரமாக என்னை நோக்கி தூஷிக்கிறார்கள். அத்தகையவர்கள் எனக்கு முன்னால் எப்படி வருவார்கள்? அவர்கள் எனது கிரியைகளையோ, எனது சித்தத்தையோ, எனது சத்தியத்தையோ கவனிக்கவில்லை, மாறாக எழுத்துகளில், அதாவது கொல்லும் எழுத்துகளில் பற்று வைத்துள்ளனர். அத்தகையவர்கள் என்னுடன் எவ்வாறு இணக்கமாய் இருக்க முடியும்?
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “நீங்கள் கிறிஸ்துவுடன் இணக்கமாய் இருப்பதற்கான வழியை நாட வேண்டும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
11. வேதாகமம் என்பது இஸ்ரவேலில் தேவன் செய்த கிரியை பற்றிய ஒரு வரலாற்றுப் பதிவாகும். மேலும், இது பழங்கால தீர்க்கதரிசிகளின் பல முன்னறிவிப்புகளையும், அக்காலத்தில் யேகோவாவின் கிரியையில் அவருடைய சில வெளிப்பாடுகளையும் ஆவணப்படுத்துகிறது. ஆகவேதான், ஜனங்கள் எல்லோரும் இப்புத்தகத்தை பரிசுத்தமாகவே பார்க்கின்றனர் (ஏனென்றால் தேவன் பரிசுத்தமானவராகவும், மகத்துவமானவராகவும் இருக்கிறார்). நிச்சயமாகவே, இவை அனைத்தும் யேகோவா மீதான அவர்களுடைய பயபக்தி, தேவன் மீதான போற்றுதலினால் உண்டான விளைவாகும். தேவனுடைய சிருஷ்டிப்புகள் தங்கள் சிருஷ்டிகரை அதிகமாக ஆராதிப்பதினாலும், வணங்குவதினாலும், ஜனங்கள் இப்புத்தகத்தை இவ்வாறு குறிப்பிடுகின்றனர். மேலும், இப்புத்தகத்தை ஒரு பரலோகப் புத்தகம் என்று அழைப்பவர்களும் உள்ளனர். உண்மையிலே, இது ஒரு மனிதப் பதிவு மட்டுமேயாகும். இது யேகோவாவால் தனிப்பட்ட முறையில் பெயரிடப்படவுமில்லை, யேகோவா தனிப்பட்ட முறையில் அதன் உருவாக்கத்திற்கு வழிகாட்டவுமில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், இப்புத்தகத்தின் ஆசிரியர் மனிதனே தவிர தேவன் அல்ல. பரிசுத்த வேதாகமம் என்பது மனிதனால் கொடுக்கப்பட்ட மரியாதைக்குரிய தலைப்பு மட்டுமேயாகும். யேகோவாவும் இயேசுவும் ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்த பிறகு இந்த தலைப்பானது அவர்களால் முடிவு செய்யப்படவில்லை. இது ஒரு மனிதக் கருத்தே தவிர வேறில்லை. இப்புத்தகம் யேகோவாவாலும் எழுதப்படவில்லை, இயேசுவாலும் எழுதப்படவில்லை. அதற்குப் பதிலாகப், பல பழங்கால தீர்க்கதரிசிகள், அப்போஸ்தலர்கள் மற்றும் ஞானதிருஷ்டிக்காரர்கள் ஆகியோரால் வழங்கப்பட்ட விவரங்களாகும், இவை பழங்கால எழுத்துக்களின் புத்தகமாக பிற்கால தலைமுறையினரால் தொகுக்கப்பட்டன. இது குறிப்பாக ஜனங்களுக்குப் பரிசுத்தமான புத்தகமாகத் தோன்றுகிறது. இப்புத்தகத்தில் எதிர்கால தலைமுறையினரால் வெளிப்படுத்தப்படக் காத்திருக்கும் பல புரிந்துகொள்ள முடியாத மற்றும் ஆழமான இரகசியங்கள் உள்ளன என்று அவர்கள் நம்புகின்றனர்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “வேதாகமத்தைக் குறித்து (4)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
12. பழைய ஏற்பாடானது நியாயப்பிரமாண காலத்தில் தேவன் செய்த கிரியையாகும். நியாயப்பிரமாண காலத்தில் யேகோவா செய்த எல்லா கிரியைகளையும், அவருடைய சிருஷ்டிப்பின் கிரியையையும் வேதாகமத்தின் பழைய ஏற்பாடு பதிவு செய்கிறது. இவையனைத்தும் யேகோவா செய்த கிரியையைப் பதிவு செய்கின்றன. மேலும், இது இறுதியாக மல்கியா புத்தகத்துடன் யேகோவா செய்த கிரியையின் கணக்குகளை முடிக்கிறது. தேவன் செய்த இரண்டு கிரியைகளை பழைய ஏற்பாடு பதிவு செய்கிறது: ஒன்று சிருஷ்டிப்பின் கிரியையாகும், மற்றொன்று நியாயப்பிரமாணத்தின் கட்டளையாகும். இரண்டுமே யேகோவாவால் செய்யப்பட்ட கிரியையாக இருந்தன. நியாயப்பிரமாணத்தின் காலமானது யேகோவா தேவனின் நாமத்தில் செய்யப்பட்ட கிரியையைக் குறிக்கிறது. இது முக்கியமாக யேகோவா நாமத்தினால் செய்யப்பட்ட முழு கிரியையாகும். இவ்வாறு, பழைய ஏற்பாடு யேகோவா செய்த கிரியையைப் பதிவு செய்கிறது, புதிய ஏற்பாடு பிரதானமாக இயேசுவின் நாமத்தினால் செய்யப்பட்ட இயேசுவின் கிரியையைப் பதிவு செய்கிறது. இயேசுவின் நாமத்தின் முக்கியத்துவமும், அவர் செய்த கிரியையும் பெரும்பாலும் புதிய ஏற்பாட்டிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. பழைய ஏற்பாட்டுக் காலத்தின்போது, யேகோவா இஸ்ரவேலில் ஆலயத்தையும் பலிபீடத்தையும் கட்டினார். பூமியில் இஸ்ரவேலரின் ஜீவிதத்தை வழிநடத்தி, அவர்கள் தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனங்கள், பூமியில் தாம் தெரிந்துகொண்ட முதல் ஜனக்கூட்டம், தமது இருதயத்திற்கு ஏற்ற ஜனங்கள், தாம் தனிப்பட்ட முறையில் வழிநடத்திய முதல் ஜனக்கூட்டம் என்பதை நிரூபித்தார். இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களும் யேகோவா முதலில் தெரிந்துகொள்ளப்பட்வையாக இருந்தன. ஆதலால், நியாயப்பிரமாண காலத்தில் யேகோவாவின் கிரியை முடிவடையும் வரையிலும் அவர் எப்போதும் அவர்களிடமே கிரியை செய்தார். இரண்டாம் கட்ட கிரியையானது புதிய ஏற்பாட்டுக் கிருபையின் காலத்தின் கிரியையாக இருந்தன. மேலும், இது யூத ஜனங்களுக்கு மத்தியிலும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுக்கு மத்தியிலும் செய்யப்பட்டது. இயேசு மாம்சமாகிய தேவனாக இருந்ததனால் இக்கிரியையின் எல்லை சிறியதாக இருந்தது. இயேசு யூதேயா தேசம் முழுவதும் மட்டுமே கிரியை செய்தார், மூன்றரை ஆண்டுகள் மட்டுமே கிரியை செய்தார். இதனால், புதிய ஏற்பாட்டில் பதிவுசெய்யப்பட்டவை பழைய ஏற்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள கிரியையின் அளவை விட மிஞ்சியதாக இருக்க முடியவில்லை. கிருபையின் காலத்தைச் சேர்ந்த இயேசுவின் கிரியையானது முக்கியமாக நான்கு சுவிசேஷங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிருபையின் காலத்தைச் சேர்ந்த ஜனங்கள் நடந்த பாதையானது அவர்களுடைய வாழ்வின் மனநிலையில் காணப்பட்ட மிகவும் மேலோட்டமான மாற்றங்களுக்குரியதாக இருந்தது, இவற்றில் பெரும்பாலானவை நிருபங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “வேதாகமத்தைக் குறித்து (1)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
13. இயேசு சிலுவையில் அறையப்பட்டு இருபது முதல் முப்பது ஆண்டுகள் சென்ற பிறகே புதிய ஏற்பாட்டின் சுவிசேஷப் புத்தகங்கள் பதிவு செய்யப்பட்டன. இதற்கு முன்பு, இஸ்ரவேல் ஜனங்கள் பழைய ஏற்பாட்டை மட்டுமே வாசித்தனர். அதாவது, கிருபையின் காலத்தின் துவக்கத்தில் ஜனங்கள் பழைய ஏற்பாட்டை வாசித்தனர். புதிய ஏற்பாடானது கிருபையின் காலத்தின் போதே தோன்றியது. இயேசு கிரியை செய்தபோது புதிய ஏற்பாடு கிடையாது. அவர் உயிர்த்தெழுப்பப்பட்டு பரலோகத்திற்கு ஏறிச் சென்ற பிறகே ஜனங்கள் அவருடைய கிரியையைப் பதிவு செய்தனர். அதன்பிறகுதான் நான்கு சுவிசேஷங்களும் வந்தன, அத்துடன் பவுல் மற்றும் பேதுருவின் நிருபங்களும், வெளிப்படுத்துதல் புத்தகமும் வந்தன. இயேசு பரலோகத்திற்கு ஏறிச் சென்று முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக, அடுத்தடுத்த தலைமுறையினர் இந்த ஆவணங்களைத் தேடியெடுத்துத் தொகுத்தனர், அதன்பிறகுதான் வேதாகமத்தின் புதிய ஏற்பாடு வந்தது. இந்தக் கிரியை முடிந்த பிறகுதான் புதிய ஏற்பாடு வந்தது. இதற்கு முன்பு அது காணப்படவில்லை. … அவர்களுடைய கல்வி நிலை மற்றும் மனிதத் திறனுக்கு ஏற்ப அவர்கள் பதிவு செய்தது இருந்தது என்று கூறலாம். அவர்கள் பதிவுசெய்தது மனிதர்களின் அனுபவங்களாகவே இருந்தது. ஒவ்வொன்றும் தனது சொந்தப் பதிவு செய்யும் முறையையும் அறிவையும் கொண்டிருந்தன, மேலும் ஒவ்வொரு பதிவும் வேறுபட்டதாக இருந்தது. ஆகவே, நீ வேதாகமத்தை தேவனாக ஆராதித்தால், நீ மிகவும் புத்தியீனனாகவும், முட்டாள்தனமானவனாகவும் இருப்பாய்!
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “வேதாகமத்தைக் குறித்து (3)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
14. வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விஷயங்கள் குறைவானவை; அவற்றால் தேவனின் கிரியையை முழுமையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது. நான்கு சுவிசேஷங்களிலும் நூற்றுக்கும் குறைவான அதிகாரங்களே உள்ளன, அவற்றில் இயேசு அத்தி மரத்தை சபிப்பது, பேதுரு மூன்று முறை கர்த்தரை மறுதலித்தது, இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்ததைத் தொடர்ந்து சீஷர்களுக்கு காட்சியளித்தது, உபவாசத்தைப் பற்றி போதித்தது, ஜெபத்தைப் பற்றி போதித்தது, விவாகரத்து பற்றி போதித்தது, இயேசுவின் பிறப்பு மற்றும் பரம்பரை, இயேசு தமது சீஷர்களை நியமித்தது மற்றும் பல என இதுபோன்ற வரையறுக்கப்பட்ட நிகழ்வுகள் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. இருப்பினும், மனுஷன் அவற்றைப் பொக்கிஷங்களாக மதிப்பிடுகிறான், இன்றைய கிரியைகளை அவற்றிற்க்கு எதிராக ஒப்பிடுகிறான். இயேசு தம் ஜீவிதத்தில் செய்த எல்லாக் கிரியைகளும் இவ்வளவுதான் என்று அவர்கள் விசுவாசிக்கிறார்கள், ஏதோ தேவன் இதை மட்டுமே செய்ய வல்லவர், அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாதவர் என்பதைப் போல. இது அபத்தமானது இல்லையா?
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மாம்சமாகியதன் மறைபொருள் (1)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
15. வேதாகமத்தை வாசிப்பதன் மூலம் பிற புத்தகங்களில் காண முடியாத பல வாழ்க்கை முறைகளையும் ஜனங்களால் பெற முடியும். இவ்வழிகள் கடந்த காலங்களில் தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்கள் அனுபவித்த பரிசுத்த ஆவியானவரின் கிரியையின் வாழ்க்கை முறைகளாக இருக்கின்றன. பல வார்த்தைகள் விலையேறப்பெற்றவையாக இருக்கின்றன, மேலும் இவற்றால் ஜனங்களுக்குத் தேவையானவற்றை வழங்க முடியும். ஆகவே, ஜனங்கள் எல்லோரும் வேதாகமத்தை வாசிக்க விரும்புகின்றனர். வேதாகமத்தில் அநேக காரியங்கள் மறைந்துள்ளதால், அதைப் பற்றிய ஜனங்களுடைய பார்வைகள் சிறந்த ஆவிக்குரிய நபர்களின் எழுத்துக்களைப் போல இல்லை. வேதாகமம் என்பது பழைய மற்றும் புதிய காலத்தில் யேகோவாவிற்கும் இயேசுவிற்கும் ஊழியம் செய்தவர்களின் அனுபவங்கள் மற்றும் அறிவின் பதிவு மற்றும் தொகுப்பு ஆகும், ஆகவே பிற்கால தலைமுறையினரால் அதிக அறிவொளி, வெளிச்சம் மற்றும் அதன்படி நடக்கும் பாதைகளைப் பெறுவதற்கான பாதைகளைப் பெற முடிகிறது. எந்தவொரு பெரிய ஆவிக்குரிய நபரின் எழுத்துக்களையும் விட வேதாகமம் உயர்ந்ததாக இருப்பதற்கான காரணம் என்னவென்றால், அவர்களுடைய எழுத்துக்கள் அனைத்தும் வேதாகமத்திலிருந்து எடுக்கப்பட்டவையாகும், அவர்களுடைய அனுபவங்கள் அனைத்தும் வேதாகமத்திலிருந்து வந்தவையாகும், அவை அனைத்தும் வேதாகமத்தையே விளக்குகின்றன. ஆகவே, எந்தவொரு பெரிய ஆவிக்குரிய நபரின் புத்தகங்களிலிருந்தும் ஜனங்களால் ஏற்பாட்டைப் பெற முடியும் என்கிறபோதிலும், அவர்கள் இன்னும் வேதாகமத்தையே ஆராதிக்கின்றனர். ஏனென்றால், அது அவர்களுக்கு மிகவும் உயர்ந்ததாகவும் ஆழமானதாகவும் தெரிகிறது! பவுலின் நிருபங்கள் மற்றும் பேதுருவின் நிருபங்கள் போன்ற ஜீவ வார்த்தைகளின் சில புத்தகங்களை வேதாகமம் ஒன்றாகக் கொண்டுவருகின்றபோதிலும், இந்த புத்தகங்களால் ஜனங்களுக்கு வழங்கவும் உதவவும் முடியும் என்கிறபோதிலும், இப்புத்தகங்கள் இன்னும் காலாவதியானவையாகவும், இன்னும் பழங்காலத்திற்குரியவையாகவும் இருக்கின்றன. இவை எவ்வளவு நல்லவையாக இருந்தாலும், இவை ஒரு காலத்திற்கு மட்டுமே பொருத்தமானவையே தவிர, நித்தியகாலத்திற்கும் அல்ல. தேவனுடைய கிரியை எப்போதுமே வளர்ந்து கொண்டே இருக்கிறது. பவுல் மற்றும் பேதுருவின் காலத்திற்குள் மட்டுமே இதை நிறுத்திவிட முடியாது அல்லது இயேசு சிலுவையில் அறையப்பட்ட கிருபையின் காலத்திலேயே எப்போதும் நிலைத்திருக்க முடியாது. ஆகவே, இப்புத்தகங்கள் கிருபையின் காலத்திற்கு மட்டுமே பொருத்தமானவையே தவிர, கடைசி நாட்களின் ராஜ்ய காலத்திற்கு அல்ல. இவற்றால் கிருபையின் காலத்தின் விசுவாசிகளுக்கு மட்டுமே வழங்க முடியும், ராஜ்ய காலத்தின் பரிசுத்தவான்களுக்கு அல்ல. இவை எவ்வளவு நல்லவையாக இருந்தாலும், இவை இன்னும் காலாவதியானவையாகவே இருக்கின்றன. யேகோவாவினுடைய சிருஷ்டிப்பின் கிரியையும் அல்லது இஸ்ரவேலில் அவர் செய்த கிரியையும் இதுதான்: இந்தக் கிரியை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அது இன்னும் காலாவதியாகிவிடும், அது கடந்து செல்லும் நேரம் வரும். தேவனுடைய கிரியையும் இதேதான்: இது மிகப் பெரியது, ஆனால் இது முடிவடையும் காலம் வரும். இது சிருஷ்டிப்பின் கிரியைக்கு மத்தியிலோ, சிலுவையில் அறையப்படுதலுக்கு மத்தியிலோ எப்போதும் நிலைத்திருக்க முடியாது. சிலுவையில் அறையப்பட்ட கிரியையானது எவ்வளவு நம்பகமானதாக இருந்தாலும், சாத்தானைத் தோற்கடிப்பதில் அது எவ்வளவு பயனுள்ளதாக இருந்தாலும், எல்லாவற்றிற்கும் மேலாகக், கிரியை என்பது இன்னும் கிரியைதான் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, காலங்கள் என்பவை இன்னும் காலங்கள்தான். கிரியை எப்போதும் ஒரே அஸ்திபாரத்தில் இருக்க முடியாது, அல்லது காலங்களை ஒருபோதும் மாற்ற முடியாது. ஏனென்றால், சிருஷ்டிப்பு என்பது இருந்தது, கடைசி நாட்கள் என்பதும் இருக்க வேண்டும். இது தவிர்க்க முடியாதது! ஆகவே, இன்று புதிய ஏற்பாட்டிலுள்ள ஜீவ வார்த்தைகள், அதாவது அப்போஸ்தலர்களின் நிருபங்களும் நான்கு சுவிசேஷங்களும், வரலாற்றுப் புத்தகங்களாக மாறியுள்ளன. இவை பழைய பஞ்சாங்கங்களாக மாறியுள்ளன, பழைய பஞ்சாங்கங்களால் எப்படி ஜனங்களைப் புதிய காலத்திற்கு அழைத்துச் செல்ல முடியும்? இந்த பஞ்சாங்கங்கள் மக்களுக்கு ஜீவனை வழங்குவதில் எவ்வளவு திறனுள்ளவையாக இருந்தாலும், ஜனங்களைச் சிலுவைக்கு நேராக வழிநடத்த எவ்வளவு திறனுள்ளவையாக இருந்தாலும், இவை காலாவதியானவை அல்லவா? இவை மதிப்பில்லாதவை அல்லவா?
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “வேதாகமத்தைக் குறித்து (4)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
16. இது தேவனுடைய கிரியைக் குறித்த வரலாற்றுப் பதிவே தவிர வேறொன்றுமில்லை. இது தேவனுடைய முந்தைய இரண்டு கட்ட கிரியைகளுக்கான ஓர் ஏற்பாடாகும் மேலும், இது தேவனுடைய கிரியையின் நோக்கங்களைப் பற்றிய எந்தப் புரிதலையும் உனக்குத் தராது. வேதாகமமானது நியாயப்பிரமாண காலம் மற்றும் கிருபையின் காலம் ஆகியவற்றின்போது தேவன் செய்த இரண்டு கட்ட கிரியைகளையே ஆவணப்படுத்துகிறது என்பதை வேதாகமத்தை வாசித்திருக்கும் எல்லோரும் அறிவர். சிருஷ்டிப்பின் காலம் முதல் நியாயப்பிரமாண காலத்தின் முடிவு வரையிலுள்ள இஸ்ரவேலின் வரலாறு மற்றும் யேகோவாவின் கிரியை ஆகியவற்றையே பழைய ஏற்பாடு பதிவு செய்கிறது. நான்கு சுவிசேஷங்களிலும் காணப்படும் இயேசு பூமியில் செய்த கிரியையும் அத்துடன் பவுலின் கிரியையையும் புதிய ஏற்பாடு பதிவு செய்கிறது, இவை வரலாற்றுப் பதிவுகள்தான் அல்லவா? கடந்த கால காரியங்களை இன்றைக்கு கொண்டுவருவது அவற்றை வரலாறாக்குகிறது. அவை எவ்வளவு உண்மையானதாக அல்லது நிஜமானதாக இருந்தாலும், அவை இன்னும் வரலாறாகவே இருக்கின்றன. வரலாற்றால் நிகழ்காலத்தைப் பற்றி பேச முடியாது, ஏனென்றால் தேவன் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதில்லை! ஆகவே, நீ வேதாகமத்தை மட்டுமே புரிந்துகொண்டு, தேவன் இன்று செய்ய விரும்பும் கிரியையைப் புரிந்துகொள்ளவில்லை என்றால், மேலும் நீ தேவனை விசுவாசித்து, பரிசுத்த ஆவியானவரின் கிரியையைத் தேடவில்லை என்றால், தேவனைத் தேடுவது என்றால் என்ன என்பதன் அர்த்தம் உனக்குப் புரியவில்லை. இஸ்ரவேலின் வரலாற்றை வாசிப்பதற்காகவும், வானத்தையும் பூமியையும் தேவன் சிருஷ்டித்த எல்லா வரலாற்றையும் ஆய்வு செய்வதற்காகவும் நீ வேதாகமத்தை வாசித்தால், நீ தேவனை விசுவாசிக்கவில்லை. ஆனால் இன்று, நீ தேவனை விசுவாசித்து, ஜீவனைப் பின்தொடர்ந்தால், மேலும் நீ தேவனைப் பற்றிய அறிவைப் பின்தொடர்ந்து, மரித்துப்போன எழுத்துக்களையும் கோட்பாடுகளையும் அல்லது வரலாறு பற்றிய புரிதலையும் பின்தொடரவில்லை என்றால், நீ இன்றைய தேவனுடைய சித்தத்தை நாட வேண்டும் மற்றும் நீ பரிசுத்த ஆவியானவருடைய கிரியையின் வழிகாட்டுதலை நாட வேண்டும். நீ ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இருந்திருந்தால், உன்னால் வேதாகமத்தை வாசித்திருக்க முடியும், ஆனால் உன்னால் முடியாது, நீ தேவனை விசுவாசிக்கிற ஒருவன், மேலும் நீ தேவனுடைய இன்றைய சித்தத்தைச் சிறப்பாகத் தேடியிருக்கிறாய்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “வேதாகமத்தைக் குறித்து (4)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
17. நீ நியாயப்பிரமாண காலத்தின் கிரியையைக் காண விரும்பினால் மற்றும் இஸ்ரவேலர் யேகோவாவின் வழியை எவ்வாறு பின்பற்றினார்கள் என்பதையும் காண விரும்பினால், நீ பழைய ஏற்பாட்டை வாசிக்க வேண்டும். நீ கிருபையின் காலத்துக் கிரியையைப் புரிந்துகொள்ள விரும்பினால், நீ புதிய ஏற்பாட்டை வாசிக்க வேண்டும். ஆனால் கடைசி நாட்களின் கிரியையை நீ எவ்வாறு காண்கிறாய்? இன்றைய தேவனுடைய தலைமைத்துவத்தை நீ ஏற்றுக்கொண்டு, இன்றைய கிரியைக்குள் பிரவேசிக்க வேண்டும். ஏனென்றால், இது புதிய கிரியையாகும், இதை ஒருவரும் இதற்கு முன்பு வேதாகமத்தில் பதிவு செய்ததில்லை. இன்று, தேவன் மாம்சமாகி, சீனாவில் தெரிந்துகொள்ளப்பட்ட மற்றவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். தேவன் இந்த ஜனங்களில் கிரியை செய்கிறார், அவர் பூமியில் தமது கிரியையிலிருந்து தொடர்கிறார் மற்றும் கிருபையின் காலத்துக் கிரியையிலிருந்து தொடர்கிறார். இன்றைய கிரியையானது மனிதன் ஒருபோதும் நடந்திராத ஒரு பாதையாகும், ஒருவரும் கண்டிராத ஒரு வழியாகும். இது இதற்கு முன்பு செய்யப்பட்டிராத கிரியையாகும், இது பூமியில் தேவனுடைய சமீபத்திய கிரியையாகும். ஆகையால், இதற்கு முன் செய்யப்பட்டிராத கிரியை என்பது வரலாறு அல்ல, ஏனென்றால் நிகழ்காலம் நிகழ்காலமாகவே இருக்கிறது, இது இன்னும் கடந்த காலமாக வேண்டியதிருக்கிறது. தேவன் பூமியிலும், இஸ்ரவேலுக்கு வெளியேயும் பெரிதான, புதிய கிரியைகளைச் செய்திருக்கிறார், இது ஏற்கனவே இஸ்ரவேலின் எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டது, தீர்க்கதரிசிகளின் முன்னறிவிப்புக்கு அப்பாற்பட்டது, இது தீர்க்கதரிசனங்களுக்கு வெளியே செய்யப்பட்ட புதிய மற்றும் அற்புதமான கிரியை, இஸ்ரவேலுக்கு அப்பால் செய்யபட்ட புதிய கிரியை மற்றும் ஜனங்கள் உணரவோ கற்பனை செய்து பார்க்கவோ முடியாத கிரியை என்பது ஜனங்களுக்குத் தெரிவதில்லை. இதுபோன்ற கிரியையின் தெளிவான பதிவுகளை வேதாகமத்தால் எவ்வாறு கொண்டிருக்க முடியும்? இன்றைய கிரியையின் ஒவ்வொரு சிறு பகுதியையும் விட்டுவிடாமல் முன்கூட்டியே யார் பதிவு செய்திருக்க முடியும்? விதியை மீறும் இந்த வல்லமையான, ஞானமான கிரியையை அந்த புராதானமான பழைய புத்தகத்தில் யார் பதிவு செய்திருக்க முடியும்? இன்றைய கிரியை என்பது வரலாறு அல்ல. அதுபோல, நீ இன்றைய புதிய பாதையில் நடக்க விரும்பினால், நீ வேதாகமத்திலிருந்து வெளியேற வேண்டும். நீ வேதாகமத்திலுள்ள தீர்க்கதரிசன அல்லது வரலாற்றுப் புத்தகங்களுக்கு அப்பால் செல்ல வேண்டும். அப்போதுதான் உன்னால் புதிய பாதையில் சரியாக நடக்க முடியும், அப்போதுதான் உன்னால் புதிய உலகிற்குள்ளும் புதிய கிரியைக்குள்ளும் பிரவேசிக்க முடியும். நீ ஏன் இன்று வேதாகமத்தை வாசிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறாய், வேதாகமத்திலிருந்து தனியாக வேறொரு கிரியை ஏன் இருக்கிறது, தேவன் ஏன் புதிய, மிகவும் விரிவான நடைமுறையை வேதாகமத்தில் தேடுவதில்லை, அதற்குப் பதிலாக வேதாகமத்திற்கு வெளியே அதிக வல்லமையான கிரியை இருக்கிறது என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியதெல்லாம் இதுதான்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “வேதாகமத்தைக் குறித்து (1)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
18. தேவனைப் பொறுத்தவரை, அவர் செய்ய விரும்பும் மிகுதியான புதிய கிரியைக்கும், அவர் சொல்ல விரும்பும் புதிய வார்த்தைகளுக்கும், ஒரு புதிய தொடக்கத்தைக் கொண்டிருப்பது ஏற்புடையதே. அவர் புதியதாக ஒன்றைத் தொடங்கும்போது, அவர் தனது முந்தைய கிரியையைக் குறிப்பிடுவதுமில்லை, செய்து முடிக்கும்படி அதைத் தொடர்வதுமில்லை. ஏனென்றால் தேவனுக்கு அவருடைய கிரியையில் அவருடைய கொள்கைகள் இருக்கிறது. அவர் எப்போது மனுக்குலத்தை அவருடைய கிரியையின் புதிய கட்டத்திற்குள் கொண்டுவர விரும்புகிறாரோ, எப்போது அவருடைய கிரியை ஒரு உயர்ந்த கட்டத்திற்குள் நுழையுமோ, அப்போது அவர் தன்னுடைய புதிய கிரியையைத் தொடங்க விரும்புகிறார். ஜனங்கள் பழைய பழமொழிகளின்படி அல்லது விதிமுறைகளின்படி தொடர்ந்து செயல்பட்டால் அல்லது அவற்றைத் தொடர்ந்து பிடித்துக்கொண்டால், அவர் அதை நினைவில் கொள்ளவோ, அங்கீகரிக்கவோ மாட்டார். ஏனென்றால் அவர் ஏற்கனவே புதிய கிரியைகளைக் கொண்டுவந்திருக்கிறார், மேலும் அவர் தன்னுடைய கிரியையின் புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளார். அவர் புதிய கிரியையைத் தொடங்கும்போது, முற்றிலும் புதிய சாயலில், முற்றிலும் புதிய கோணத்திலிருந்து, முற்றிலும் புதிய வழியில் ஜனங்களுக்குத் தோன்றுகிறார். இதனால் ஜனங்கள் அவருடைய மனநிலையின் வெவ்வேறு அம்சங்களையும், அவரிடம் உள்ளதையும், அவர் யாராய் இருக்கிறார் என்பதையும் காணலாம். இது அவருடைய புதிய கிரியையில் அவரது குறிக்கோள்களில் ஒன்றாகும். தேவன் பழைய காரியங்களுடன் ஒட்டிக்கொள்வதில்லை அல்லது பலரும் பயன்படுத்தின பாதையில் நடப்பதில்லை. அவர் கிரியை செய்யும்போதும், பேசும்போதும், ஜனங்கள் கற்பனை செய்யும் அளவிற்குக் கட்டுப்பாடாய் இருப்பதில்லை. தேவனில், அனைத்தும் சுதந்திரமானவை, விடுவிக்கப்பட்டவை, அதில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை, தடைகளும் இல்லை, அவர் மனுக்குலத்திற்கு அளிப்பது சுதந்திரமும் விடுதலையும் ஆகும். அவர் ஒரு ஜீவனுள்ள தேவன், அவர் உண்மையாகவே, மெய்யாகவே இருக்கிற தேவன். அவர் ஒரு கைப்பொம்மையோ, களிமண் உருவமோ அல்ல, ஜனங்கள் புனிதமெனப் பாதுகாக்கும், ஆராதிக்கும் விக்கிரகங்களிலிருந்து அவர் முற்றிலும் வேறுபட்டவர். அவர் ஜீவனுள்ளவர், உயிர்த்துடிப்பு உள்ளவர். மேலும் அவருடைய வார்த்தைகளும், கிரியையும் மனுக்குலத்திற்கு ஜீவனையும் வெளிச்சத்தையும், எல்லா சுதந்திரத்தையும், விடுதலையையும் கொண்டுவரும், ஏனென்றால் அவர் சத்தியத்தையும், ஜீவனையும், வழியையும் கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய எந்தக் கிரியையிலும், எந்தக் காரியத்தாலும் கட்டுப்படுத்தப்படுவதில்லை.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தேவனுடைய கிரியையும், தேவனுடைய மனநிலையும், தேவனும் III” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
19. இயேசுவின் கிரியையும் தகர்ந்து போய்விட்டது என்று இன்று நான் கூறுவது போலவே கிருபையின் காலத்தில் யேகோவாவின் கிரியை தகர்ந்து போய்விட்டது என்று இயேசு கூறினார். கிருபையின் காலம் இல்லாமல் இருந்து நியாயப்பிரமாணத்தின் காலம் மட்டுமே இருந்திருந்தால், இயேசு சிலுவையில் அறையப்பட்டிருக்க மாட்டார் மேலும் அனைத்து மனுக்குலத்தையும் இரட்சித்திருக்கவும் மாட்டார். நியாயப்பிரமாணத்தின் காலம் மட்டுமே இருந்திருந்தால், மனுக்குலம் இன்றளவும் வந்தடைந்திருக்க முடியாது. வரலாறு முன்னோக்கி நகர்கிறது, மேலும் வரலாறு என்பது தேவனின் கிரியையின் இயற்கைச் சட்டம் அல்லவா? பிரபஞ்சம் முழுவதிலும் அவர் மனிதனை நிர்வகிப்பது பற்றிய ஒரு சித்தரிப்பு அல்லவா இது? வரலாறு முன்னோக்கி நகர்கிறது, மேலும் தேவனின் கிரியையும் அவ்வாறே முன்னோக்கி நகர்கிறது. தேவ சித்தம் தொடர்ந்து மாறுகிறது. அவரால் ஆறாயிரம் ஆண்டுகளாகக் கிரியை என்னும் ஒற்றைக் கட்டத்திலேயே நிலைத்திருக்க முடியாது, ஏனெனில் ஒவ்வொருவரும் அறிந்திருப்பது போல, தேவன் எப்போதுமே புதியவராக இருக்கிறார், மேலும் அவர் ஒருபோதும் பழையவர் அல்ல, மற்றும் சிலுவையில் அறையப்பட்டது போல ஒருமுறை, இருமுறை, மூன்று முறைகள்…. என அவர் தொடர்ந்து அறையப்பட்டு அவ்விதமான கிரியையை அவரால் ஆற்ற முடியாது, அவ்வாறு சிந்திப்பதே கேலிக்குரியதாக இருக்கும். தேவன் தொடர்ந்து ஒரே கிரியையை செய்துகொண்டே இருப்பதில்லை; நான் எவ்வாறு உங்களிடம் புதிய வார்த்தைகளைப் பேசியும் ஒவ்வொரு நாளும் புதிய கிரியையைச் செய்கிறேனோ அதுபோல அவருடைய கிரியையும் எப்போதும் மாறிக்கொண்டிருக்கிறது மற்றும் எப்போதும் புதிதானது. இதுதான் நான் செய்யும் கிரியை, மற்றும் எது முக்கியம் என்றால் “புதிது” மற்றும் “அற்புதமானது” என்ற வார்த்தைகளே.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “தன் எண்ணங்களில் தேவனுக்கு எல்லைவகுத்துவிட்ட மனிதனால் எவ்வாறு தேவனின் வெளிப்பாடுகளைப் பெறமுடியும்?” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
20. உயர்ந்த வழி இருக்கும்போது, அந்தத் தாழ்ந்த, காலாவதியான வழியை ஏன் படிக்க வேண்டும்? புதிய வார்த்தைகளும் புதிய கிரியையும் இருக்கும்போது, பழைய வரலாற்றுப் பதிவுகளுக்கு மத்தியில் ஏன் ஜீவிக்க வேண்டும்? புதிய வார்த்தைகளை உனக்கு வழங்க முடியும், இதுவே புதிய கிரியை என்பதை நிரூபிக்கிறது. பழைய பதிவுகளால் உனக்கு மனநிறைவூட்டவோ அல்லது உனது தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்யவோ முடியாது, அவை வரலாறே தவிர, இப்போதைய கிரியை அல்ல என்பதை நிரூபிக்கின்றன. மிகவும் உயர்ந்த வழியே புத்தம்புதிய கிரியையாகும். மேலும், புதிய கிரியையைக் கொண்ட கடந்த காலத்தின் வழி எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், அது ஜனங்கள் திரும்பிப் பார்க்கிறார்கள் என்ற வரலாறாக மட்டுமே இருக்கிறது. மேலும், அதன் மதிப்பு குறிப்பாக இருந்தாலும், அது இன்னும் பழைய வழிதான். இது “புனித நூலில்” பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பழைய வழி என்பது வரலாறுதான். “புனித நூலில்” அது குறித்த எந்தப் பதிவும் இல்லையென்றாலும், புதிய வழியே இன்றைக்குரியதாக இருக்கிறது. இந்த வழியால் உன்னை இரட்சிக்க முடியும். மேலும், இந்த வழியால் உன்னை மாற்ற முடியும். ஏனென்றால், இது பரிசுத்த ஆவியானவரின் கிரியையாகும்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “வேதாகமத்தைக் குறித்து (1)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
21. தேவனே ஜீவனும் சத்தியமுமாக இருக்கிறார், அவருடைய ஜீவனும் சத்தியமும் ஒன்றாக இருக்கின்றன. சத்தியத்தைப் பெற்றுக்கொள்ளத் திராணியில்லாதவர்கள் ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். சத்தியத்தின் வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் உதவி ஆகியவை இல்லாமல், நீ எழுத்துக்களையும், போதனைகளையும், எல்லாவற்றிற்கும் மேலாக, மரணத்தையும் மாத்திரமே பெற்றுக்கொள்வாய். தேவனுடைய ஜீவன் சதாகாலங்களிலும் உள்ளது, மேலும் அவருடைய சத்தியமும் ஜீவனும் ஒன்றாகவே இருக்கின்றன. உன்னால் சத்தியத்தின் பிறப்பிடத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை என்றால், ஜீவனின் ஊட்டத்தை நீ பெற்றுக்கொள்ள மாட்டாய்; வாழ்வின் ஏற்பாடுகளை உன்னால் பெற்றுக்கொள்ள இயலவில்லை என்றால், உன்னிடம் நிச்சயமாக எந்தச் சத்தியமும் இருக்காது. ஆகையால், கற்பனைகளையும் கருத்துக்களையும் தவிர, உனது சரீரம் முழுவதும் துர்நாற்றம் வீசும் மாம்சமாக இருக்குமே ஒழிய வேறு எதுவுமாக இருக்காது. புத்தகங்களின் வார்த்தைகள் ஜீவனாகக் கருதப்படாது என்பதையும், வரலாற்றுப் பதிவுகளைச் சத்தியமாகத் தொழுதுகொள்ள முடியாது என்பதையும், கடந்த கால விதிமுறைகளை தற்போது தேவனால் பேசப்படும் வார்த்தைகளாக எடுத்துக்கொள்ள இயலாது என்பதையும் அறிந்துகொள். தேவன் பூமிக்கு வந்து மனுஷர்களுக்கு மத்தியில் வாழும்போது தேவன் வெளிப்படுத்தியது மாத்திரமே சத்தியமாகவும், ஜீவனாகவும், தேவனுடைய சித்தமாகவும் மற்றும் அவருடைய தற்போதைய கிரியை செய்யும் முறையாகவும் இருக்கிறது. கடந்த காலங்கள் முதல் இன்றுவரை தேவன் பேசிய வார்த்தைகளின் பதிவுகளை நீ பயன்படுத்தினால், அது உன்னை ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக்குகிறது. மேலும் வரலாற்றுப் பாரம்பரியத்தில் நிபுணனாக உன்னை விவரிப்பதே சிறந்த வழியாகும். ஏனென்றால், தேவன் கடந்த காலங்களில் செய்த கிரியையின் அடையாளங்களை நீ எப்போதும் விசுவாசிக்கிறாய், அவர் முன்பு மனுஷர்களுக்கு மத்தியில் கிரியை செய்தபோது விடப்பட்ட தேவனுடைய நிழலை மாத்திரமே விசுவாசிக்கிறாய், மேலும் முந்தைய காலங்களில் தேவன் தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்குக் கொடுத்த வழியை மாத்திரமே விசுவாசிக்கிறாய். இன்று தேவனுடைய கிரியையின் வழிகாட்டுதலை நீ விசுவாசிக்கவில்லை, இன்று தேவனுடைய மகிமையான முகத்தை நீ விசுவாசிக்கவில்லை, தற்போது தேவன் வெளிப்படுத்திய சத்தியத்தின் வழியை நீ விசுவாசிக்கவில்லை. ஆகையால் நீ நிச்சயமாகவே நிஜத்துடன் முற்றிலும் தொடர்பில்லாத ஒரு பகல் கனவு காண்கிறவனாக இருக்கிறாய். இப்போது மனுஷனுக்கு ஜீவனைக் கொடுக்க இயலாத வார்த்தைகளையே நீ பிடித்துக்கொண்டிருந்தால், நீ நம்பிக்கையற்ற ஒரு செத்துப்போன மரக்கட்டையாக[அ] இருக்கிறாய். ஏனென்றால் நீ மிகவும் பழமைவாதியாகவும், மிகவும் பிடிவாதமானவனாகவும், பகுத்தறிவுக்கு இடமளிக்காதவனாகவும் இருக்கிறாய்!
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
அடிக்குறிப்பு:
அ. ஒரு செத்துப்போன மரக்கட்டை: “உதவிக்கு அப்பாற்பட்டது” என்னும் அர்த்தம் கொண்ட ஒரு சீன முதுமொழி.
22. கடைசி நாட்களின் கிறிஸ்து ஜீவனைக் கொண்டுவருகிறார், மேலும் சத்தியத்தின் நீடித்த மற்றும் நித்திய வழியைக் கொண்டுவருகிறார். இந்தச் சத்தியம்தான் மனுஷன் ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் வழியாகும், மேலும் இதுதான் மனுஷன் தேவனை அறிந்துகொள்ளும் மற்றும் தேவனால் அங்கீகரிக்கப்படும் ஒரே வழியாகும். கடைசி நாட்களில் கிறிஸ்து தந்தருளிய ஜீவனுக்கான வழியை நீ தேடவில்லை என்றால், நீ ஒருபோதும் இயேசுவின் அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், பரலோக ராஜ்யத்தின் வாசலில் நுழைய ஒருபோதும் தகுதி பெறமாட்டாய், ஏனென்றால் நீ ஒரு கைப்பாவையாகவும் வரலாற்றுக் கைதியாகவும் இருக்கிறாய். விதிமுறைகளாலும் எழுத்துக்களாலும், கட்டுப்படுத்தப்பட்டவர்களாலும், வரலாற்றால் விலங்கிடப்பட்டவர்களாலும் ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது ஜீவனுக்கான நிரந்தர வழியைப் பெற்றுக்கொள்ளவோ இயலாது. ஏனென்றால், சிங்காசனத்திலிருந்து பாயும் ஜீவத்தண்ணீருக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான வருடங்களாக தேங்கிக்கிடக்கும் கலங்கலான தண்ணீரே அவர்களிடம் உள்ளது. ஜீவத்தண்ணீர் வழங்கப்படாதவர்கள் என்றென்றும் சடலங்களாகவும், சாத்தானின் விளையாட்டுப் பொருட்களாகவும், நரகத்தின் புத்திரர்களாகவுமே இருப்பார்கள். அப்படியானால், அவர்களால் எவ்வாறு தேவனைப் பார்க்க இயலும்? நீ கடந்த காலத்தை மாத்திரமே பற்றிக்கொண்டிருக்க முயற்சி செய்து, அசையாமல் நிற்பதன் மூலம் காரியங்களை அப்படியே மாற்றாமல் வைத்திருக்க மாத்திரமே முயற்சி செய்து, இது வரையுள்ள நிலையை மாற்றவும் வரலாற்றை விட்டுவிடவும் முயற்சி செய்யவில்லை என்றால், நீ எப்போதும் தேவனுக்கு விரோதமாக இருக்க மாட்டாயா? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகள் ஆர்ப்பரிக்கும் அலைகளையும், உருளும் இடிகளையும் போலப் பரந்ததாகவும், வல்லமை பொருந்தியவையாகவும் இருக்கின்றன, ஆனாலும் நீ உனது மதியீனத்தைப் பற்றிப்பிடித்துக்கொண்டு, எதுவும் செய்யாமல் அழிவை எதிர்பார்த்து செயலற்ற முறையில் அமர்ந்திருக்கிறாய். இவ்விதத்தில், ஆட்டுக்குட்டியானவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றும் ஒருவனாக நீ எவ்வாறு கருதப்படுவாய்? நீ பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கும் தேவன் எப்போதும் புதியவராக இருக்கிறார், அவர் ஒருபோதும் பழமையானவர் அல்ல என்பதை எவ்வாறு உன்னால் நியாயப்படுத்த இயலும்? உனது மஞ்சளான புத்தகங்களின் வார்த்தைகள் உன்னை எவ்வாறு ஒரு புது யுகத்திற்குள் உன்னைக் கொண்டு செல்ல இயலும்? தேவனுடைய கிரியையின் நடவடிக்கைகளைத் தேடுவதற்கு அவை எவ்வாறு உன்னை வழிநடத்த இயலும்? அவை எவ்வாறு உன்னைப் பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலும்? உன் கரங்களில் நீ பிடித்துக் கொண்டிருப்பவை ஜீவனைக் கொடுக்கத் திராணியுள்ள சத்தியங்கள் அல்ல, ஆனால் அவை தற்காலிக ஆறுதலளிக்கும் எழுத்துக்களாகும். நீ வாசிக்கும் வேத வசனங்கள் உன் நாவை மாத்திரமே வளப்படுத்த இயலும், அவை மனித ஜீவனையும், உன்னைப் பரிபூரணத்திற்கு வழிநடத்தக்கூடிய வழிகளையும் நீ அறிந்துகொள்ள உதவும் தத்துவத்தின் வார்த்தைகளாக இருப்பதில்லை. இந்த முரண்பாடு பிரதிபலிப்புக்கான காரணத்தை உனக்குக் கொடுப்பதில்லையா? அதற்குள் உள்ள இரகசியங்களை அது உனக்கு உணர்த்தவில்லையா? நீயாகவே உன்னைப் பரலோகத்திற்குச் கொண்டு சென்று தேவனை நேரடியாகச் சந்திக்கத் தகுதியுள்ளவனா? தேவன் வராமலே, தேவனுடன் குடும்ப சந்தோஷத்தை அனுபவிக்க உன்னை நீயே பரலோகத்திற்குக் கொண்டு செல்ல இயலுமா? நீ இன்னும் கனவு கண்டு கொண்டிருக்கிறாயா? அப்படியானால், நீ கனவு காண்பதை நிறுத்திவிட்டு, இப்போது யார் கிரியை செய்கிறார் என்று பார், கடைசி நாட்களில் மனிதனை இரட்சிக்கும் பணியை இப்போது யார் செய்கிறார் என்று பார். நீ அவ்வாறு செய்யாவிட்டால், நீ ஒருபோதும் சத்தியத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டாய், ஒருபோதும் ஜீவனைப் பெற்றுக்கொள்ள மாட்டாய்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “கடைசி நாட்களின் கிறிஸ்துவால் மாத்திரமே மனுஷனுக்கு நித்திய ஜீவனுக்கான வழியைக் கொடுக்க இயலும்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
23. தேவன் அசையாத களிமண் சிலையாக இருக்கிறார் என்பது போல அவரை மதிப்பிடவும் வரையறுக்கவும் உங்கள் சொந்தக் கருத்துகளைப் பயன்படுத்தினால், நீங்கள் வேதாகமத்தின் எல்லைக்குள் தேவனை முழுவதுமாக வரையறுத்து, ஒரு குறிப்பிட்ட வேலை வரம்பிற்குள் அவரை அடக்கி வைத்தால், நீங்கள் தேவனை நிந்திக்கிறீர்கள் என்பதை இது காட்டுகிறது. ஏனென்றால், பழைய ஏற்பாட்டின் காலத்தில் இருந்த யூதர்கள், தேவனை அவர்கள் தங்கள் இருதயங்களில் வைத்திருக்கும் ஓர் உருமாறாத சிலையாக வைத்திருந்தார்கள், தேவனை மேசியா என்று மட்டுமே அழைக்க முடியும், மேசியா என்று அழைக்கப்படுபவர் மட்டுமே தேவனாக இருக்க முடியும் என்றும், தேவனை ஒரு (உயிரற்ற) களிமண் சிலை போலக் கருதி அவருக்கு மனிதகுலம் ஊழியம் செய்து வணங்கியதால், அவர்கள் அந்தக் காலத்தில் வந்த இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள், அவருக்கு மரண தண்டனை அளித்தார்கள். குற்றமற்ற இயேசு இவ்வாறு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். எந்தவொரு குற்றத்திற்கும் தேவன் பாத்திரமற்றவர், ஆனாலும் மனுஷன் அவரைக் காப்பாற்ற மறுத்து, அவருக்கு மரண தண்டனை விதிக்கும்படி வற்புறுத்தினான், அதனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டார். தேவன் எப்போதும் மாறாதவர் என்று மனுஷன் எப்போதும் விசுவாசிக்கிறான், வேதாகமம் என்ற ஒரே ஒரு புத்தகத்தின் அடிப்படையில் அவரை வரையறுக்கிறான், தேவனின் ஆளுகையைப் பற்றி மனுஷனுக்கு ஒரு முழுமையான புரிதல் இருப்பதைப் போலவும், தேவன் செய்யும் எல்லாவற்றையும் மனுஷன் தன் உள்ளங்கையில் வைத்திருப்பதைப் போலவும் விசுவாசிக்கிறான். ஜனங்கள் மிகவும் புத்தியீனமானவர்கள், மிகவும் ஆணவக்காரர்கள், அவர்கள் அனைவருக்கும் மிகைப்படுத்திக் கூறும் ஓர் இயல்பான திறமை உள்ளது. தேவனைப் பற்றிய உங்கள் அறிவு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், நீங்கள் தேவனை அறியவில்லை என்றும், நீங்கள் தேவனை மிகவும் எதிர்க்கும் ஒருவர் என்றும், தேவனை நிந்திக்கிறீர்கள் என்றும் நான் இன்னும் சொல்கிறேன், ஏனென்றால் நீங்கள் தேவனின் செயலுக்குக் கீழ்ப்படிந்து, தேவனால் பரிபூரணப்படுத்தப்பட்ட பாதையில் நடக்கவும் முற்றிலும் திரணியில்லாதவர்கள்.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “துன்மார்க்கன் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவான்” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது
24. இந்த ஆறாயிரம் ஆண்டுக்கால ஆளுகைத் திட்டத்தினுடைய கிரியைகளின் தரிசனங்களைப் பொறுத்தவரை, யாராலும் நுண்ணறிவு அல்லது புரிதலைப் பெற முடியாது, இந்தத் தரிசனங்கள் கடைசிவரை புதிராகவே இருக்கும். கடைசிக் காலத்தில், ராஜ்யத்தின் யுகத்தை முன்னெடுப்பதற்காக வார்த்தையின் கிரியை மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது, ஆனால் அது சகல யுகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக இல்லை. கடைசிக் காலம் என்பது கடைசிக் காலத்தை விடவும், ராஜ்யத்தின் யுகத்தை விடவும் பெரியதாக இல்லை, மேலும் அது கிருபையின் யுகம் அல்லது நியாயப்பிரமாணத்தின் யுகத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அதாவது கடைசிக் காலத்தில், ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டத்தில் உள்ள அனைத்து கிரியைகளும் உங்களுக்கு வெளிப்படுத்தப்படுகின்றன. இதுவே மறைபொருளின் வெளிப்பாடாகும். இந்த வகையான மறைபொருள் எந்த மனுஷனாலும் வெளிப்படுத்த முடியாத ஒன்றாகும். மனுஷனுக்கு வேதாகமத்தைப் பற்றி எவ்வளவு பெரிய புரிதல் இருந்தாலும், அது அவனுக்கு வெறும் வார்த்தைகளே தவிர வேறொன்றுமில்லை, ஏனென்றால் மனுஷனுக்கு வேதாகமத்தின் சாராம்சம் புரிவதில்லை. வேதாகமத்தைப் படிப்பதால், மனுஷன் சில சத்தியங்களைப் புரிந்து கொள்ளலாம், சில வார்த்தைகளை விளக்கலாம், அல்லது சில பிரபலமான பத்திகளையும் அத்தியாயங்களையும் தனது சிறிய ஆய்வுக்கு உட்படுத்தலாம், ஆனால் அந்த வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தை அவனால் ஒருபோதும் பிரித்தெடுக்க முடியாது, ஏனென்றால் எல்லா மனுஷரும் மரித்துப்போன வார்த்தைகளைத்தான் காண்கிறார்கள், யேகோவா மற்றும் இயேசுவினுடைய கிரியையின் காட்சிகளை அல்ல, மேலும் இந்தக் கிரியையின் மறைபொருளை கட்டவிழ்க்க மனுஷனுக்கு வழியே இல்லை. எனவே, ஆறாயிரம் ஆண்டுகால ஆளுகைத் திட்டத்தின் மறைபொருளே மிகப் பெரிய மறைபொருளாகும், இது மிகவும் ஆழமாக மறைக்கப்பட்டதாகவும் மற்றும் முற்றிலும் மனுஷனுக்குப் புரியாததாகவும் இருக்கிறது. தேவன் அதை மனுஷனுக்கு விளக்கி வெளிப்படுத்தாவிட்டால், தேவனின் விருப்பத்தை யாரும் நேரடியாகப் புரிந்து கொள்ள முடியாது; இல்லையெனில், இந்த விஷயங்கள் எப்போதும் மனுஷனுக்கு புதிராகவே இருக்கும், என்றென்றும் மூடிமறைக்கப்பட்ட மறைபொருட்களாகவே இருக்கும். மத உலகில் இருப்பவர்களைப் பொருட்படுத்தாதீர்கள்; இன்று உங்களுக்குச் சொல்லப்படாவிட்டால், நீங்கள் அதைப் புரிந்து கொள்ள மாட்டீர்கள். இந்த ஆறாயிரம் ஆண்டுகாலக் கிரியை தீர்க்கதரிசிகளின் எல்லா தீர்க்கதரிசனங்களையும் விட மறைபொருள் மிக்கது. இது சிருஷ்டிப்பு முதல் இன்றுவரை மிகப் பெரிய மறைபொருளாக இருக்கிறது, மேலும் யுகங்கள் முழுவதிலும் உள்ள தீர்க்கதரிசிகளில் எவராலும் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை, ஏனென்றால் இந்த மறைபொருள் இறுதி யுகத்தில் மட்டுமே வெளிப்படுத்தப்படுகிறது, இதற்கு முன்னர் ஒருபோதும் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இந்த மறைபொருளை நீங்கள் புரிந்து கொள்ள முடிந்தால், அதை உங்களால் முழுமையாகப் பெற முடிந்தால், எல்லா மத நபர்களும் இந்த மறைபொருளால் வெல்லப்படுவார்கள். இது மட்டுமே தரிசனங்களில் மிகப்பெரியது; இதையே மனுஷன் புரிந்துகொள்ள மிகவும் ஆவலுடன் இருக்கிறான், ஆனால் அது அவனுக்கு மிகவும் தெளிவாகத் தெரியவில்லை.
“மாம்சத்தில் தோன்றுகிற வார்த்தை” யில் உள்ள “மாம்சமாகியதன் மறைபொருள் (4)” என்பதிலிருந்து எடுக்கப்பட்டது