மனிதன் கற்பனை செய்வதைப் போலவே தேவனுடைய கிரியை எளிமையானதா?

தேவனை விசுவாசிக்கின்ற நீங்கள் ஒவ்வொருவரும் இந்த இறுதி நாட்களில் தேவனுடைய கிரியையையும் இன்று அவர் உங்களில் நடப்பிக்கிற அவரது திட்டத்தின் செயலையும் பெற்றுக்கொண்டதன் மூலம் நீங்கள் அடைந்த பெரிதான உயர்வையும் இரட்சிப்பையும் நீங்கள் உண்மையில் எவ்வாறு பெற்றுக்கொண்டீர்கள் என்பதைக் குறித்துப் பெருமைப்பட வேண்டும். இந்த பிரபஞ்சம் முழுவதிலும் தேவன் செய்கின்ற அவரது ஊழியத்தின் தனித்த கவனமாக இந்த ஜனக்கூட்டத்தை உருவாக்கியுள்ளார். அவர் தனது இதயத்தின் இரத்தம் முழுவதையும் உங்களுக்காகப் பலியாகச் செலுத்தியுள்ளார், இந்தப் பிரபஞ்சம் முழுவதும் ஆவியானவர் செய்த எல்லாக் கிரியையையும் மீட்டு உங்களிடம் கொடுத்துள்ளார். அதனாலேயே நீங்கள் பாக்கியம் பெற்றவர்கள். மேலும் அவர் தனது மகிமையை அவர் தேர்ந்தெடுத்த ஜனமான இஸ்ரவேல் மக்களிடமிருந்து எடுத்து உங்களிடம் கொடுத்துள்ளார். அவர் தனது திட்டத்தின் நோக்கத்தை முழுமையாக இந்த ஜனக்கூட்டத்தின் மூலமாகவே வெளிப்படுத்துவார். எனவே தேவனின் சுதந்தரத்தைப் பெறப்போகின்றவர்கள் நீங்களே, அது மாத்திரமல்ல தேவனின் மகிமைக்கான வாரிசுகளும் நீங்களே. உங்களுக்கு ஒருவேளை “அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.” என்ற வசனம் நினைவுக்கு வரலாம். நீங்கள் அனைவரும் இந்த வார்த்தைகளை இதற்கு முன்பு கேட்டிருப்பீர்கள், ஆனால் நீங்கள் எவருமே அதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. இன்று உங்களுக்கு அதன் உண்மையான முக்கியத்துவத்தைக் குறித்து ஆழமான ஒரு தெளிவு உள்ளது. இந்த வார்த்தைகள் தேவனால் இறுதி நாட்களில் நிறைவேற்றப்படும், மேலும்தன் தேசத்தில் சுருண்டு கிடக்கும் அந்த சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தால் கொடூரமாகத் துன்புறுத்தப்பட்டவர்களிடம் அது நிறைவேறும். அந்தச் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் தேவனைத் துன்புறுத்துகின்றது, அது தேவனின் எதிரியாக இருக்கின்றது, எனவே இந்தத் தேசத்தில் தேவனை விசுவாசிக்கின்றவர்கள் யாவரும் அவமானத்திற்கும் ஒடுக்குமுறைக்கும் உட்படுத்தப்படுவார்கள், இதன் மூலம் இந்த வார்த்தைகள் இந்த ஜனக்கூட்டமாகிய உங்களிடத்தில் நிறைவேறுகின்றது. ஏனென்றால் அது தேவனை எதிர்க்கின்ற ஒரு தேசத்திலேயே இறங்கியிருக்கின்றது. தேவனின் அனைத்து கிரியைகளும் மிகப்பெரிய இடையூறுகளைச் சந்திக்கின்ற காரணத்தால் அவரின் வார்த்தைகளை நிறைவேற்ற அதிகக் காலம் எடுத்துக்கொள்கிறது, அந்தப்படியே மக்கள் தேவ வார்த்தையின் மூலம் சுத்திகரிக்கப்படுகின்றார்கள், இதுவும் பாடுகள் அனுபவிப்பதன் ஒரு பங்காகும். அந்தச் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் இருக்கின்ற தேசத்தில் தனது கிரியையை நடப்பிப்பது தேவனுக்கு மிகக் கடினமாகும், ஆனால் இந்தக் கடினத்தினூடாகவே தனது ஒரு கட்டக் கிரியையைத் தேவன் செய்கின்றார், அது அவரது ஞானத்தையும் அதிசயமான கிரியைகளையும் வெளிப்படுத்துவதோடு இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்த மக்கள் கூட்டத்தை முழுமையாக்குவதுமாகும். மக்களின் பாடுகளினூடாகவும், அவர்களின் திறமையினூடாகவும் அனைத்து சாத்தானுக்கேதுவான மனநிலைக்கு ஊடாகவுமே தேவன் தனது தூய்மைப்படுத்துதல் மற்றும் ஆதாயப்படுத்துதல் பணியைச் செய்கிறார். இதன் மூலம் அவர் மகிமையடைந்து அவரது செயல்களுக்குச் சாட்சி பகர்கின்ற ஜனங்களை அவர் ஆதாயப்படுத்திக்கொள்வார். தேவன் இந்த மக்கள் கூட்டத்திற்கு செய்த அனைத்து தியாகங்களின் முழுமையான முக்கியத்துவம் என்னவெனில் தேவன் தனது ஆதாயப்படுத்தல் கிரியையை அவரை எதிர்க்கின்றவர்களினூடாகாவே செய்கின்றார், அதனூடாகவே தேவனின் மகத்தான வல்லமை வெளிப்படும். இதை வேறுவிதமாய்ச் சொன்னால், தூய்மை இல்லாத தேசத்தில் வாழ்கின்ற மக்கள் மாத்திரமே தேவனின் கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ள பாத்திரராய் இருக்கின்றார்கள், மேலும் இது மாத்திரமே தேவனின் மகத்தான வல்லமையை முன்னிலைப்படுத்திக் காட்டக்கூடியது. அதனாலேயே இது தூய்மையற்ற தேசத்திலிருந்து வந்தது, இவ்வாறான ஒரு தேசத்தில் வாழ்கின்ற மக்களிடமிருந்தே தேவனின் மகிமை பெறப்படுகின்றது. இதுவே தேவனின் சித்தம். இயேசுவும் இவ்வாறான ஒரு கட்டத்திலேயே கிரியை செய்தார்: அவரைத் துன்புறுத்திய பரிசேயர் முன்னாலேயே அவர் மகிமையை அடைய முடியும். பரிசேயரின் துன்புறுத்தலோ யூதாசின் காட்டிக்கொடுத்தலோ இல்லாமல் போய் இருந்தால், இயேசு ஏளனத்திற்கும் அவதூறுக்கும் ஆளாகியிருக்கமாட்டார், அதைவிட அவர் மிக நிச்சயமாகச் சிலுவையில் அறையப்பட்டிருக்கமாட்டார், அதனாலே அவர் மகிமையடைந்திருக்கமாட்டார். எங்கே தேவன் ஒவ்வொரு காலத்திலும் கிரியை செய்கின்றாரோ, அவர் எங்கே தனது கிரியையை மாம்சத்தில் செய்கின்றாரோ, அங்கேயே அவர் தனது மகிமையையும் அவர் ஆதாயப்படுத்த எண்ணுகின்றவர்களையும் பெறுகின்றார். தேவனின் கிரியைக்கான திட்டமும் அதற்கான அவரின் நிர்வகித்தலும் இதுவே.

பல்லாயிர வருட தேவனுடைய திட்டத்தில், இரு பகுதிக் கிரியைகள் மாம்சத்தில் செய்யப்படுகின்றன: முதலாவது கிரியை சிலுவையில் அறையப்படுதல், அதற்காக அவர் மகிமையை அடைகிறார், அடுத்தது கடைசி நாட்களின் ஆதாயப்படுத்துதல் மற்றும் பரிபூரணப்படுத்துதல் கிரியையாகும், அதற்காகவும் அவர் மகிமையை அடைகிறார். இதுவே தேவனின் நிர்வகித்தல். எனவே உங்களுக்குக் கொடுக்கப்பட்ட தேவனின் கிரியையையோ அவரது கட்டளையையோ எளிதான விஷயமாகக் கருத வேண்டாம். நீங்கள் எல்லோரும் தேவனுடைய மகத்துவமான நித்திய மகிமைக்கான சுதந்திரவாளியாக உள்ளீர்கள். அவரது மகிமையின் இரு பகுதிகளில் ஒன்று உங்களில் வெளிப்படுகின்றது, தேவனுடைய மகிமையின் ஒரு பங்கு முழுமையும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது, இது உங்கள் சுதந்தரமாக இருக்கலாம். இது தேவன் உங்களை உயர்த்துவதாகும், மேலும் இந்தத் திட்டம் அவர் நீண்ட காலத்திற்கு முன்பே முன்குறித்ததொன்றாகும். அந்தச் சிவப்பான பெரிய வலுசர்ப்பம் இருக்கின்ற தேசத்தில் தேவன் செய்த கிரியைகளின் மகத்துவத்தைப் பார்த்தால், அந்தச் செயல்கள் வேறு எங்கேயும் செய்யப்பட்டிருந்தால் அது எப்பொழுதோ மிகுந்த கனி கொடுத்து மக்களால் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். மேலுமாக இயேசுவின் கிரியை ஒரு முன்னுதாரணமாக இருக்கின்றபடியால் இந்தக் கிரியையானது மேற்கில் இருக்கின்ற தேவனை விசுவாசிக்கின்ற குருமாருக்கு ஏற்றுக்கொள்ள மிக மிக இலகுவாக இருக்கும். இதனாலேயே தேவனால் மகிமையை அடையும் கிரியையின் இந்தக் கட்டத்தை வேறெங்கும் அடைய முடியாதுள்ளது. கிரியையானது மக்களின் முழு ஆதரவைப்பெற்று தேசங்களால் அங்கீகரிக்கப்படும் போது, தேவனுடைய மகிமையால் நிலைத்து நிற்க முடியாது. இந்த நிலத்தில் இந்தக் கட்ட கிரியை நடைபெற வேண்டியதற்கான மாபெரும் முக்கியத்துவம் இதுவே. உங்களில் ஒருவராகிலும் நியாயப்பிரமாணத்தால் பாதுகாக்கப்படப்போவதில்லை, மாறாக நீங்கள் நியாயப்பிரமாணத்தால் அனுமதிக்கப்படுகிறீர்கள். இன்னும் கடினமான காரியம் என்னவென்றால் ஜனங்கள் உங்களைப் புரிந்துகொள்ளமாட்டார்கள்: அது உங்கள் உறவினரோ, பெற்றோரோ, உங்கள் நண்பர்களோ உங்களுடன் வேலை செய்பவர்களோ, யாராக இருந்தாலும் அவர்கள் உங்களைப் புரிந்துகொள்ளப்போவதில்லை. நீங்கள் தேவனால் கைவிடப்படும் போது உங்களால் பூமியில் தொடர்ந்து வாழ இயலாது, இருப்பினும் மக்களால் தேவனைவிட்டு விலகி இருப்பதை நினைத்துப் பார்க்க முடியாது, இதுவே தேவன் மக்களை ஜெயங்கொள்ளுவதன் முக்கியத்துவமும் தேவனின் மகிமையுமாகும். நீங்கள் இன்று சுதந்தரித்தக் காரியங்கள் யுகம் முழுவதும் வாழ்ந்த அப்போஸ்தலர்களையும், தீர்க்கதரிசிகளையும், ஏன் மோசே மற்றும் பேதுருவைப் பார்க்கிலும் மகத்தானது. ஆசீர்வாதங்களை உங்களால் ஓரிரு நாட்களில் பெற முடியாது, அதைப் பெரிய தியாகத்தின் ஊடாகச் சம்பாதிக்க வேண்டும். இன்னும் விரிவாகச் சொன்னால், சுத்திகரிக்கப்பட்ட அன்பையும், ஆழமான விசுவாசத்தையும், நாம் அடைய வேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கும் பல சத்தியங்களையும், நீதிக்காகப் பயமின்றி போராடுகின்ற மனதையும், தேவன் மீது மரணபரியந்தம் தொடர்ந்து அன்பையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். உங்களிடம் உறுதி இருக்க வேண்டும், உங்கள் வாழ்வின் மனநிலையில் மாற்றம் வர வேண்டும், உங்கள் சீர்கேடு குணமாக்கப்பட வேண்டும். எந்தக் குறைகூறுதலும் இல்லாமல் தேவனின் எல்லா வழிநடத்துதலையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், அத்துடன் மரண பரியந்தம் வரைக்கும் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் அடைய வேண்டியது இதுவே, இதுவே தேவனின் கிரியையின் இறுதி நோக்கம். இதையே தேவன் இந்த மக்கள் கூட்டத்திடம் எதிர்பார்க்கின்றார். அவர் உங்களுக்கு கொடுக்கின்றபடியால், அவர் நிச்சயம் உங்களிடம் எதிர்பார்ப்பதோடு உங்களுக்குக் கொடுத்ததன் பிரகாரம் அவர் கேட்பார். எனவே தேவன் செய்கின்ற அனைத்துக் கிரியைகளுக்கும் காரணமுண்டு, இது ஏன் தேவன் மீண்டும் மீண்டும் உயர் தரங்கள் மற்றும் கடுமையான தேவைகளைக் கொண்ட கிரியைகளைச் செய்கின்றார் என்பதைக் காண்பிக்கின்றது. இந்தக் காரணத்தினாலேயே நீங்கள் தேவன் மேல் கொண்டுள்ள விசுவாசத்தால் நிரம்பியிருக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்லுவதென்றால், தேவனுடைய எல்லாக் கிரியைகளும் நீங்கள் அவரின் சுதந்தரிப்பைப் பெற்றுக்கொள்ளப் பாத்திரராய் இருக்கும்பொருட்டு உங்கள் நிமித்தமே செய்யப்படுகின்றது. இந்தக் காரியம் குறிப்பாக தேவனின் சுய மகிமைக்காக செய்யப்படுவதில்லை, ஆனால் இது உங்களின் இரட்சிப்பிற்காகவும் இந்தத் தூய்மையற்ற தேசத்தில் பயங்கரமாகத் துன்புறுத்தப்பட்ட மக்கள் கூட்டத்தைப் பூரணப்படுத்தவும் செய்யப்படுகின்றது. நீங்கள் தேவனின் சித்தத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். இதைக் குறித்து எந்தவொரு விழிப்புணர்வற்ற ஜனங்களுக்குச் சொல்லுகின்ற ஒரு புத்திமதி என்னவென்றால் தேவனைச் சோதிக்கவோ அவரை இனியும் எதிர்க்கவோ வேண்டாம். எந்த மனிதனுமே அனுபவிக்காத பாடுகளை தேவன் அனுபவித்துள்ளார், அத்தோடு மனிதனுக்குப் பதில் அவர் பெரிதான அவமானத்தையும் அனுபவித்துவிட்டார். உங்களால் வேறு எதை விட முடியவில்லை? தேவனின் சித்தத்தைவிட முக்கியமான காரியம் எதுவாக இருக்கும்? தேவனின் அன்பைப் பார்க்கிலும் எது உயர்ந்ததாக இருக்கும்? தேவன் தனது கிரியையை இந்த அசுத்தமான தேசத்தில் செய்வது ஏற்கனவே கடினமான ஒன்றாக இருக்கும் போது; மனிதன் தெரிந்துகொண்டே வேண்டுமென்று நெறிதவறி நடக்கும் போது, தேவனின் பணியில் தாமதம் ஏற்படும். சுருக்கமாகச் சொன்னால், இது யாருக்கும் நல்லதல்ல, இது யாருக்கும் நன்மை பயக்காது. தேவன் நேரத்தின் வரையறைக்குள் இருப்பவரல்ல; அவரது செயலும் அவரது மகிமையுமே முதலிடம் பெறுகின்றது. எனவே அவர் தனது செயலுக்காக, அது எவ்வளவு காலம் எடுத்தாலும், அதற்கான எந்தக் கிரயத்தையும் அவர் செலுத்துவார். தேவனின் குணாதிசயம் இதுவே. தனது பணி முடியும் வரைக்கும் அவர் ஓய்வதில்லை. அவர் தனது மகிமையின் இரண்டாம் பகுதியைப் பெற்ற பின்னரே அவரது பணி முடிவிற்கு வரும். இந்த முழு பிரபஞ்சத்திலேயும் தேவன் தனது மகிமையை அடையும் கிரியையின் இரண்டாம் பகுதியை முடிக்காவிட்டால், அவரது நாள் ஒரு போதும் வராது, அவர் தேர்ந்தெடுத்த ஜனங்களிடமிருந்து அவரது கரம் ஒரு நாளும் விலகாது, அவரது மகிமை ஒரு போதும் இஸ்ரவேல் மேல் இறங்கி வராது, அத்துடன் அவரது திட்டம் ஒரு காலமும் நிறைவேறாது. நீங்கள் தேவனின் சித்தத்தைக் காணக்கூடியவர்களாக இருக்க வேண்டும், அதோடு தேவனின் கிரியையானது வானத்தையும், பூமியையும், சகலத்தையும் சிருஷ்டித்தது போல எளிமையான காரியமல்ல என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் இப்பொழுது இருக்கின்ற கிரியை கறைபட்டவர்களை, உச்ச நிலையில் உணர்வற்றவர்களை உருமாற்றம் செய்வதாகும், அதாவது தேவனால் படைக்கப்பட்ட ஆனால் சாத்தானால் செயல்முறைப்படுத்தப்பட்டவர்களைத் தூய்மையாக்குதலாகும். இந்தக் கிரியை ஆதாம் அல்லது ஏவாளை சிருஷ்டிப்பது அல்ல, இன்னும் கூறினால் இது வெளிச்சத்தின் அல்லது அனைத்துச் செடிகொடிகள் மற்றும் விலங்குகளைச் சிருஷ்டிப்பதற்கும் சற்றும் குறைந்ததல்ல. சாத்தானால் அழுக்காக்கப்பட்ட விஷயங்களை தேவன் சுத்தப்படுத்தி அவற்றைப் புதிதாக்குகின்றார்; அவை அவருக்குச் சொந்தமாகின்றது, அவை அவரின் மகிமையாய் மாறுகின்றது. இது மனிதன் கற்பனை செய்வதைப் போன்ற ஒரு காரியமல்ல, இது வானத்தையும், பூமியையும், சகலத்தையும் சிருஷ்டிப்பது போன்றோ, சாத்தானை பாதாளக்குழிக்குள் தள்ளுவதைப் போன்றோ எளிமையான காரியமல்ல. மாறாக இது மனிதனை மாற்றுகின்ற ஒரு செயல், எதிர்மறையான காரியங்களையும் அவனுக்குச் சொந்தமில்லாத காரியங்களையும் நேர்மறையாகவும் அவருக்குச் சொந்தமாகவும் மாற்றுவதாகும். தேவனின் கிரியையின் இந்தக் கட்டத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மை இதுவே. நீங்கள் இதைப் புரிந்துகொண்டு காரியங்களை எளிமையாக்குவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். தேவனின் கிரியையானது மற்ற சாதாராண வேலைகளைப் போன்றதல்ல. அதன் விந்தையும் ஞானமும் மனிதனின் சிந்தைக்கு எட்டாதவை. தேவன் எல்லா காரியங்களையும் கிரியையின் இந்தக் கட்டத்தில் படைக்கவில்லை, அதேபோல் அவர் அவற்றை அழிப்பதுமில்லை. மாறாக அவர் படைத்த சாத்தானால் களங்கப்படுத்தப்பட்டக் காரியங்களை உருமாற்றி தூய்மையாக்குகின்றார். இவ்விதமாக தேவன் ஒரு பெரிய கிரியையைச் செய்வதற்குப் புறப்படுகின்றார், இதுவே தேவனின் கிரியையின் முக்கிய அம்சமாகும். நீ இந்த வார்த்தைகளில் தேவனின் கிரியை உண்மையிலேயே மிகவும் எளிமையாக உள்ளதைக் காண்கிறாயா?

முந்தைய: தேவனுடைய இன்றைய கிரியையை அறிந்துகொள்ளுதல்

அடுத்த: நீ தேவனை விசுவாசிப்பதினால் சத்தியத்திற்காகவே நீ வாழ வேண்டும்

நமக்கு கஷ்டங்கள் வரும்போது தேவன் மட்டுமே நம் நம்பிக்கை. நீங்கள் தேவன் முன் வந்து நம்பிக்கை பெற அவரை சார்ந்திருக்க தயாராக இருக்கிறீர்களா?

அமைப்புகள்

  • உரை
  • தீம்கள்

அடர் நிறங்கள்

தீம்கள்

எழுத்துருக்கள்

எழுத்துருவின் அளவு

வரிகளுக்கிடையிலான இடைவெளி

வரிகளுக்கிடையிலான இடைவெளி

பக்கத்தின் அகலம்

உள்ளடக்கங்கள்

தேடுக

  • இந்த உரையை தேடுக
  • இந்த புத்தகத்தை தேடுக